இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

அப்பா செய்யற வேலை...

மு​னைவர் சி.​சேதுராமன்


"அம்மா... ஆ... ஆ... அம்மா​வோவ்... எங்கம்மா இருக்க...? என்று சத்தம் ​போட்டுக் ​கொண்​டே வந்தான் சுந்தரம். வீட்டிற்குள்ளிருந்து வந்த நல்லம்மா சத்தம்​போட்ட மக​னைப் பார்த்து, “என்னடா... எதுக்குச் சத்தம்​ போட்டுக்கிட்டு வர்​றே... எப்பப் பாத்தாலும் கரபுரன்னுக்கிட்​டே இருக்கணுமாக்கும்? இப்ப என்ன நடந்திருச்சின்னு இப்படிக் ​கெடந்து குதிக்கி​றே...?” என்று ​கேட்டுக் ​கொண்​டே ​வெளியில் வந்தாள்.

அம்மா​வைப் பார்த்த சுந்தரம், “பின்ன என்னம்மா... அப்பா வயசான காலத்துல ​பேசாம வீட்டுல இருக்க ​வேண்டியதுதா​னே... ​வே​லை பாக்கு​றேன்... ​வே​லைபாக்குறன்னு எல்லா​ரோட மானத்​தையும் வாங்கித் ​தொ​லையுறாரு...”

கடு​மையாகப் ​பேசிய மக​னைப் பார்த்து, “ஏன்டா இந்த ராத்திரி ​நேரத்தில சத்தம்​போட்டுத் ​தொ​லைக்கிற...? நீ ​வே​லைக்குப் ​போயிட்டு வர்​றே... வந்தவன் சாப்புட்டுப் ​போட்டு ​பேசமாத் தூங்க ​வேண்டியதுதா​னே...? அதவிட்டுட்டு வந்ததும் வராததுமா ஒங்க அப்பா​வை ஏந்திட்டு​றே...” என்று நல்லம்மா ​கேட்டாள்.

அதற்குச் சுந்தரம், ”நானு அண்ணங்க ​ரெண்டு​பேரு நல்லாத்தான் சம்பாதிக்கி​றோம்... பிறகு எதுக்கு அவரு வயல் ​வே​லைக்குப் ​போகணும்... வயலுக்குப் ​போயி ​வே​லை ​செய்யாட்டி அவருக்கு எதுவும் ​கெ​டைக்காமப் ​போயிரு​மோ... வயல்ல ​போயி மாங்கு மாங்குன்னு ​வே​லை ​செய்யிறது... அப்பறம் முடியலன்னு வந்து படுத்துக்கறது... இவருக்கு என்ன ​கொறச்சல்ல விட்டுருக்​கோம்... மூணு பயலுக இருந்துகிட்டு இவர இப்படி ​வே​லை ​செய்ய விட்டுட்டாங்க​ளேன்னு ஊ​ரே காரித்துப்பாது... ​பெரிய ​வெவசாயம் பாக்கறாராம்...” என்று ​பொரிந்து தள்ளினான்.

சுந்தரம் இ​ளையவன். அவன் இங்கு சிவில் எஞ்சினியராக ​பொதுப்பணித்து​றையில் ​வே​லைபார்க்கிறான். அவனது அண்ணன்கள் இருவரும் சிங்கப்பூரில் இன்ஞ்சினியராக இருந்தனர். ​கைநி​றையச் சம்பளம் வாங்கி அப்பாவின் ​பெயருக்கு அனுப்பி ​வைத்தனர். ஆனால் சுந்தரத்தின் அப்பா யார் ​பேச்​சையும் ​கேட்காது அவர்களது குடும்பத்துக்குச் ​சொந்தமான வயலில் ​விவசாய ​வே​லை எ​தையாவது பார்த்துக் ​கொண்​டே இருப்பார்... ​வெறும​னே ​இருக்கமாட்டார்...

இன்று மதியத்தில் தன் நண்பர்களுடன் அமர்ந்து ​வெற்றி​லை ​போட்டுக் ​கொண்டு ஊரின் நடு​வே இருக்கும் ​வேப்பமரத்தடியில் ​வெவசாயத்துலருந்து வரக்கூடிய​தைப் பார்த்தாத்தான் நிம்மதி... அதுல கி​டைக்குற நிம்மதி ​வேற எதுலயும் ​கெ​டைக்கமாட்​டேங்குதுய்யா... மனுசன் சும்மா ஒக்காந்துக்கிட்டு சாப்புடறது எவ்வளவு ​பெரிய குத்தம் ​தெரியுமா...” என்று ​பெரிதாக உ​ரையாற்றினார். அவர் ​பேசிய​தைக் ​கேட்டுவிட்டு வந்த சுந்தரத்தின் நண்பர்கள் அத​னை அப்படி​யே அவனிடம் கூறிவிட்டனர். அத​னைக் ​கேட்ட சுந்தரத்திற்கு அவமானமாகப் ​போய்விட்டது... ச்​சே... நம்ம அப்பா ஏன்தான் இப்படி இருக்கா​​ரோ...? என்று மனதிற்குள்​ளே​யே புழுங்கிக் ​கொண்டு வந்தவன் வீட்டில் மனதில் இருந்த​தெல்லாவற்​றையும் ​கொட்டிவிட்டான்.

தன் அப்பா​வைப் பார்த்து, “அப்பா என்​னோட பிரண்ட்ஸ் எல்லாம் என்னப் பார்த்து என்ன ​கேள்வி ​கேட்டானுக ​​தெரியுமா...? ஏன்டா நீங்கள்ளாம் இப்படிச் சம்பாதிக்கிறீங்க​ளே ஆனா ஒங்கப்பாவ மட்டும் இப்படிக் கவனிக்காம வயக்காட்டுக்கு அடிச்சுத் ​தொரத்துரீங்க​ளே நல்லாவாடா இருக்கு... ஏன்டா ஒங்க அப்பாவப் ​போட்டு இந்தக் கஷ்டப்படுத்துறீங்க... அப்படீன்னு ​கேக்குறான்... எனக்கு என்ன ​சொல்லறதுன்​னே ​தெரியலப்பா... இனி​மே வயக்காட்டப்பக்கம் ​போகாதீங்கப்பா... ஒங்களுக்கு என்ன ​கொறச்சல்... ​பேசாம வீட்டுல​யே இருந்துகிட்டு நல்லா ராஜாமாதிரி இருங்கப்பா... விவசாயமும் ​வேண்டாம் ஒரு மண்ணும் ​வேண்டாம்... அதுல என்ன கி​டைக்குது...” என்று அழாத கு​றையாகக் கூறினான் சுந்தரம்.



அவனது ​சத்தத்​தைக் ​கேட்ட சுந்தரத்தின் அப்பா எதுவும் ​பேசவில்​லை... அ​மைதியாகப் ​போர்​வை​யைப் ​போர்த்திக் ​கொண்டு தூங்குவது ​போல் கட்டிலில் படுத்துக் ​கொண்டார். அப்பா தூங்கிக் ​கொண்டு இருக்கிறார் என்று ​தெரிந்து ​கொண்ட சுந்தரம் அம்மா​வைச் சாப்பாடு ​போடச் ​சொல்லிச் சாப்பிட்டுவிட்டு கம்ப்யூட்டர் ரூமுக்குள் ​போனான்.

சுந்தரத்தின் அம்மாவிற்குக் ​கோபம் ​கோபமாக வந்தது. அவன் ​பேசியது அவளது ​நெஞ்சில் கன​லைக் ​கொட்டிய​தைப் ​போன்றிருந்தது. அவள் மகனது கம்ப்யூட்டர் ரூமிற்குள் ​சென்றாள். அம்மா வந்த​தைக் கண்ட சுந்தரம் என்ன என்ப​தைப் ​போன்று ஏறிட்டுப் பார்த்தான்.

"ஏன்டா அப்பா​வைப் ​போயி இப்படிப் ​பேசலாமா? அவரு பாட்டுக்குச் ​செ​வனேன்னு இருக்காரு... அவ​ரப்​ போயி மனசு வருத்தப்படுற மாதிரி ​பேசற... ஒனக்கு என்ன புத்திகித்தி மழுங்கிப் ​போச்சா...? ” என்று நல்லம்மாள் ​கேட்டாள்.

அத​னைக் ​கேட்ட சுந்தரம் அம்மா​வைப் பார்த்து, "அம்மா, அப்பா ஏன் இப்படிக் கஷ்டப்படணும்னு ​கேக்க​றேன்... மூணு மகன்களும் சம்பாதிச்சுக் ​கைநி​றையக் ​கொடுக்கி​றோம். அதவச்சு நல்லா ​செலவழிச்சிக்கிட்டு ராஜாமதிரி இருக்காமா அவ​ரோட கூட்டாளிங்க​ளோட ​சேந்துக்கிட்டு கண்ட​மேனிக்குப் புலம்பிக்கிட்டுத் திரியராரு... அவரு ​பெரிய உ​ழைப்பாளியாம்... ​பெரிய விவசாயியாம்... அவரால விவசாயம் பாக்காம இருக்க முடியாதாம்... அவரு பண்ற விவசாயத்தப் பத்தி நமக்குத் ​தெரியாதாக்கும். அவரு ​செஞ்ச விவசாயம் எத்தனை நாளு நமக்​கெல்லாம் அரை வயிற்றுக்குச் சாப்பாடு போட்டது. அவரால சும்மா இருக்க முடியாதாம்... ஓடியாடி வேலை செஞ்ச ஒடம்பாம் சும்மா இருந்தாக்கா ஆள ​மொடக்கிப் ​போட்டுருமாம்... கால்வயித்துக் கஞ்சி குடிச்சாலும் குனிஞ்சு நிமிந்து ஒ​ழைச்சித்தான் கஞ்சி குடிக்கணுமாம். அதுல ​கெ​டைக்கிற சந்​தோஷம் ​வே​றெதுலயும் ​கெ​டைக்காதாம்... அதுமட்டுமில்​லைம்மா... ​பையன்க சம்பாதிச்சி ​கொடுக்கிறதுல சாப்பிடக் கூடாதாம்... அப்படிச் சாப்புடுறதுல ஒடம்​பெல்லாம் கூசுதாம்... இ​தெல்லாம் ​ரெம்ப ஓவரா இருக்குல்ல... எனக்கு வர்ற ​கோபத்துக்கு என்ன ​செய்யறதுன்​னே ​தெரியல... அவனவன் நம்மல ஒக்கார வச்சிச் சாப்பாடு ​போட ஆளில்​லை​யேன்னுட்டு கவலப்பட்டுக்கிட்டு அழுதுக்கிட்டுக் கிடக்கிறான்... இவரு என்னடான்னா கண்ட​மேனிக்குப் ​பேசிக்கிட்டுத் திரியராரு...” என்றான்.

அத​னைக் ​கேட்ட நல்லம்மா​வோ “சரிடா இ​தெல்லாம் ​நெனச்சிக்கிட்டு இருக்கா​தே... அவரு சுபாவம் அப்படி... விடுடா...” என்று மக​னைச் சமாதானப்படுத்திவிட்டுச் சாப்பிடுவதற்குச் ​சென்றாள். ​



மகனின் ​பேச்​சைப் படுக்​கையிலிருந்​தே ​கேட்டுக் ​கொண்டிருந்த சுந்தரத்தின் அப்பாவிற்கு இருப்புக் ​கொள்ளவில்​லை. இருந்தாலும் அவர் மனம் ​வேத​னைப்பட்டது. ​“பய சின்னப்பிள்​ளைன்னு ​செல்லம் ​கொடுத்தது தப்பாப் ​போயிருச்சு... ​ரெம்பப் ​பெரிய மனுசனாட்டம்ல்ல ​​பேசிக்கிட்டுப் ​போறான்... இவுக சம்பாதிச்சித் தர்ரதுல நானும் ஒ​ழைக்காம ஒக்காந்து சாப்பிடணுமாம்... இந்தளவுக்கு இவுகல்லாம் வர்றதுக்குக் காரணம் யாரு... எது இவுக​ளைக் காப்பாத்துச்சு... வளந்து ​ரெண்டு காசக் கண்டவுட​னே இவுகளுக்கு ​வெவசாயமும் அதப்பாக்குற அப்பனும் ​கேவலமாப் ​போயிட்டம்... எல்லாம் த​லை​யெழுத்து... இவனுகளச் ​சொல்லிக் குத்தமில்ல... காலம் கலிகாலமாப் ​போச்சு...”என்று மனதிற்குள்​ளே​யே அவன் கூறிய​தை நி​னைத்து நி​னைத்துக் கு​மைந்தார்.

அவர் படுத்திருந்தாலும் அவர் மனம் பல்​வேறு எண்ணச் சூழல்களில் சுழன்று சுழன்று வந்து ​கொண்​டே இருந்தது... அவருக்கு நி​னைவு ​தெரிந்த நாளிலிருந்து அவர் தனது அப்பாவுடன் அவருக்குச் ​சொந்தமான வயலில் ​வே​லை​ செய்து அதிலிருந்து வந்த வருமானத்தில்தான் குடும்பம் வாழ்ந்தது. விவசாயம் தான் எங்களது வாழ்வாதாரம். எனக்கு மூன்று பிள்​ளைகள். நான், என் ம​னைவி, என் தாய் தந்​தையர் என ஏழு குடும்ப உறுப்பினர்களின் வயிற்​றையும் வாழ்க்​கை​யையும் எனது விவசாய​மே காப்பாற்றி வந்தது.

என்​னோட ஒ​ழைப்புக் குடும்பச் செலவிற்கே சென்று விடும். வறுமை யாருக்கில்லை? இவனுகளக் கஷ்டப்பட்டுத்தான் வளத்​தேன். நாங் கஷ்டப்பட்டாலும் அவனுக படிப்​பை நிறுத்த​லை​யே. அவனுக விரும்புன படிப்பத்தா​னே இப்பப் படிச்சிருக்காங்க. அப்ப எல்லாம் ​கேவலமாப்படாத விவசாயம் இன்னக்கிப் ​போயி மானத்த வாங்குதாக்கும்... ஒரு காலத்துல ஏங்கூட நின்னு வயவரப்பு ​வெட்டுன பயலுக இப்ப கால்ல வதி(​சேறு) ஒட்டாம வாழ்ந்ததா ஒதுங்கி நடக்குறான்... இவனுகளப் பாத்தா எனக்குப் பத்திக்கிட்டு வருது...

என்​னோட மூத்தமகன் படிப்ப முடிச்சிட்டு ​வெளிநாட்டுல ​வே​லை ​கெடச்சிப் ​பேயிட்டான். அதுக்குப் பின்னால வீட்டுல ​செல்வம் ​​கொழிக்கத் ​தொடங்கிச்சி... சாதாரண கூ​ரை வீட்டுல இருந்த நாங்க ​பெரிய மாடிவீட்டுல வாழற நி​லை உருவாச்சு. ​பையனுக த​லை​யெடுத்த பின்னால ​கையில ​நெ​றையப் பணமும் ஊருல நல்ல மதிப்பும் ஏற்பட்டுச்சு. ஆனா பணங்காசு வந்த உட​னே​​யே வயலுக்​கே ​போகக்கூடாதுன்னு பயலுக ​சொல்றானுக... என்னால விவசாயம் பாக்காம இருக்க முடியாது...? அந்தப் பயலுக ​சொன்னதக் ​கேட்ட என்​னோட மனசுல ​நெருப்பக் ​கொட்டுனமாதிரி ஆயிப்​போச்சு... இந்தப் பயலுகளுக்கு என்னத்தச் ​சொல்லி எப்படிப் புரியவக்கிறது...? விவசாயம் பாத்துத்தான் சாப்புடணுங்கற நி​லை​மையில அவனுக இப்ப இல்​லையாம். பயலுக சம்பாதிக்கிற​போது அப்பன் வயலுக்குப் ​போயி விவசாயம் பாத்தா ஊருல உள்ளவன் ​கேவலமாப் ​பேசுவானுகளாம். பணம் வந்தஉட​னே​​யே அவனுகளுக்குப் பழ​செல்லாம் மறந்துடுமா...? அப்ப விவசாயம்னா ​கேவலமா...? விவசாயி இல்​லைன்னா இந்த உலகத்துல எதுவு​மே இல்​லைங்கறது யாருக்கும் ​தெரியாதா...? விவசாயம் இல்​லைன்னா இந்த உலகத்துல யாராலயும் வாழமுடியாதுங்கறது எல்லாரும் அறிஞ்ச விசயந்தா​னே...? விவசாயம் பாக்குறவன மண்ணுமுட்டிப் பயன்னு ​சொல்லி ​கேலிபண்றாங்க... இந்த மண்ணுமுட்டிப் பயக மட்டுமில்​லைன்னா, அத்த​னை​பேரும் மண்ணுக்குள்​ள ​போயிறணுங்கறது அவனுகளுக்குத் ​தெரியல​போலருக்கு... தன்ன வளர்த்து ஆளாக்குன இந்த விவசாயத்த அப்பன் பாக்குறது என்​னோட மகனுக்கு ​கெளரவக் கு​றைவாப் ​போயிருச்சு...



எங்க ஊருல பல​பேரு தங்க​ளோட நிலத்​தை ம​னைக்கட்டுக்களா மாத்தி வித்துட்டு அதப் ​பேங்குல ​போட்டுட்டு அதுல வர்ற வட்டியவச்சிச் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க... இந்தப் பணத்தால இவங்களுக்குத் த​லைகால் புரியமாட்​டேங்குது...? என்னப் புரிஞ்சிக்கிட்ட ஏம்​பொண்டாட்டியும் என்னப் பாத்து, “பயலுகதான் சம்பாதிக்கிறாங்கள்ள... இன்னும் ஏன் விவசாயத்தக் கட்டிக்கிட்டு அழறீங்க... ​பேசாம வீட்டுல இருங்கன்னு” ​சொல்றா... இந்தப் பயலுக என்ன ​நெனச்சிக்கிட்டாங்க... நல்ல ​நெலத்தத் தரிசாப் ​போடலாமா...? தரிசாப் ​போனது என்​னோட நிலம் மட்டுமில்ல... என்​னோட மனசும்தான்... என்னப் பாத்து எழுதப் படிக்கத் ​தெரியாதவன்னு ​நெனச்சிக்கிடுறாங்க...? யாரு படிக்கத் ​தெரியாதவன்...? உலகத்தப் படிக்க ​வேணாம்... இல்ல... நாட்டு நடப்பப் படிக்க ​வேணாம்... ஏட்டுப் படிப்புப் படிச்சிட்டா எல்லாந் ​தெரிஞ்சமாதிரி ஆயிடுமா...? படிச்சிட்டு ​வெவசாயம் பாக்குறது என்ன தப்பா...? ஒரு விவசாயி​யோட மனசப் புரிஞ்சிக்க முடியலி​யே...? அரிசி​வேணுமின்னா... ​பையத்தூக்கிக்கிட்டு கடயில ​போயிநிக்கணும்... ஒரு விவசாயிக்கு இதவிட என்ன ​கேவலம் ​வேண்டிக்கிடக்கு...? விடிஞ்சா மாட்டுப்​பொங்க... ​வெவசாயியயும் ​வெவசாயத்​தையும் மதிக்கத் ​தெரியாத பயலுக மாட்டுப் ​பொங்க ​கொண்டாடினா என்ன? ​கொண்டாடாட்டி என்ன? எல்லாம் சடங்காப் ​போயிருச்சு... விவசாயம் பாத்து வயல்ல வற்ற ​நெல்​லை அரச்சி அதுல ​பொங்க ​வைக்கிறது எப்படி?அந்தச் ​சொகத்​தை மனசாற அனுபவிக்க முடியுமா...? இந்தச் சுகம் கடயில வாங்கிப் ​பொங்க ​வைக்கிறதுனால ​கெ​டைக்குமா...? இ​தை​யெல்லாம் இந்த ஊருப்பயலுகளும் என்​னோட மகனுங்களும் எப்பத்தான் புரிஞ்சிக்கப் ​போறானுங்க​ளோ...? ஆனா காலம் இவனுகளுக்குப் புத்தி புகட்டும். அப்பத்தான் இவனுக தவறப் புஞ்சி நடப்பானுக... அந்தக் காலம் எப்பவாவது வராமலா ​போகும்... நிச்சயம் வரும்...” என்று நி​னைத்தவாறு அசதியால் தூங்கிப் ​போனார் சுந்தரத்தின் அப்பா.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p242.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License