இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

நாராயணனின் நண்பர்கள்

தாரமங்கலம் வளவன்


சம்பள கிளார்க் நாராயணன் ஒரு பெண்ணின் போட்டோவை பக்கத்து கிளார்க் மணியிடம் காண்பித்து இளிக்க, அவனும் ஒரு மாதிரி சிரித்தான்.

இருவரும் கல்யாணம் ஆனவர்கள். அந்தப் போட்டோ கண்டிப்பாக நாராயணனின் மனைவி போட்டோவாக இருக்க முடியாது. மேலும் மனைவியின் போட்டோவுக்கு அப்படி ஒரு மாதிரியான சிரிப்பும் வரமுடியாது.

“இது தான் என் ஆளு... பேரு உமா...” என்று கண் சிமிட்டினான் நாராயணன்.

“ஓ... செட் ஆயிடிச்சா...” என்றான் மணி.

“ஆயிடுச்சி..” நாராயணன்.

“உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சிங்கிறத சொன்னியா...”

“முதல்ல கல்யாணம் ஆகலன்னு சொல்லித்தான் ஆரம்பிச்சேன்... அப்புறம் சொல்லிட்டேன்... அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினா... இப்ப என்ன அவளால விட முடியாது... எவ்வளவு நாள் முயற்சி பண்ணினேன் தெரியுமா... கொஞ்ச கொஞ்சமா அவள கவுத்திட்டேன்... ”

“நீ அதிர்ஷ்ட காரன்பா...”

அடுத்த நாள் மதிய வேலை.

ஆபீஸ் கதவருகே ஒரு ஆள், நாற்பது வயது மதிக்கலாம். நின்று கொண்டு நாராயணனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

குனிந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்த நாராயணன், அந்த ஆளைப் பார்த்த உடன் திடுக்கிட்டான். வேண்டுமென்றே மீண்டும் குனிந்துகொண்டு வேலை செய்வது போல நடித்தான்.

அந்த ஆள் போயிருப்பான் என்ற நம்பிக்கையில் நாராயணன் நிமிர்ந்து பார்த்தான். கண்கள் சந்தித்து விட, அந்த ஆள் வெளியே வருமாறு நாராயணனைக் கூப்பிட்டான்.

மற்றவர்கள் இதைக் கவனிக்கிறார்களா என்று சுற்றும்முற்றும் பார்த்தான் நாராயணன்.

“என்ன நாராயணா... யாரு அது...” மணி கேட்க, அதிர்ச்சி அடைந்த நாராயணன்,

“என்னோட மச்சினன்...” என்றான்.

“ஓ... விஷயம் தெரிஞ்சி போயிடுச்சா...” மணி.

”அப்படித்தான் நினைக்கிறேன்...”

“இப்ப என்ன செய்யறது...”

“நீ தான் எனக்கு உதவணும்...”

“கூட வரணுமா...”

“இப்ப வேண்டாம்... தேவைப்பட்டா கூப்பிடறேன்...”

நாராயணன் கிளம்பிப் போனதை மணி கவனித்தான்.

கொஞ்ச நேரம் கழித்துத் தன் சீட்டுக்கு திரும்பி வந்த நாராயணனுக்கு தலையெல்லாம் கலைந்திருந்தது. உடம்பு வியர்த்து இருந்தது.

மச்சினன் அடித்திருப்பானோ...

மணிக்கு மனதுக்குள் சந்தோசம்.

உமாவுக்கு அப்பா கிடையாது... அம்மா தான் பத்து பாத்திரம் தேய்த்துக் கஷ்டப்பட்டு வளர்த்தாள். பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும்தான் அம்மாவால் படிக்க வைக்க முடிந்தது. அந்தப் படிப்புக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவில்லை. காண்டிராக்ட் பேரில் ஒரு சிறிய வேலைதான் கிடைத்தது.



நாராயணனை, உமா ஒரு வருடத்திற்கு முன்தான் அந்த அரசு அலுவலக ஆபீஸ் வாசலில் இருந்த டீக்கடையில் பார்த்தாள்.

தன்னை அவன் ஒரு மாதரி பார்ப்பதாக அவள் நினைத்தாள்.

ஏனோ அவனை அவளுக்குப் பிடித்து விட்டது.

அவனும் அதைக் கண்டுபிடித்து விட்டான்.

இரண்டு மூன்று முறை லேசான புன்முறுவல்.

பிறகு, சினிமா... பார்க்...

தியேட்டரில் அவன் அவளைத் தொட, அவளுக்கு எதிர்க்க வேண்டும் என்று தோன்றவில்லை.

ஒரு நாள்,

“நம்ம கல்யாணம் முடிஞ்சவுடன் ஒரு வீடு பாத்துக்கிட்டுப் போயிடலாம்... இப்ப ஒரு ரூமுல தங்கியிருக்கேன்... என்னோட ரூமுக்கு வாயேன்... என்ன சொல்ற...”

உமாவுக்கு புல்லரிப்பாய் இருந்தது, நாராயணனுடன் வாழப்போகிற வாழ்க்கையை நினைத்து.

ரூமை விட்டு வெளியே வரும் போது, இழக்கக் கூடாததை தான் இழந்து விட்டது தெரிந்தது அவளுக்கு.

முதன் முதலில் அவன் ஏமாற்றுகிறான், பொய் சொல்லுகிறான் என்று அவளுக்கு தெரிய வந்தது, அந்த ரூமைப் பற்றிய உண்மை தெரிந்த போது தான். அந்த ரூம் உண்மையில் அவனது அல்ல, அது ஊருக்கு போயிருக்கும் இன்னனொரு ஆள் உடையது.

பிறகு அவனின் எல்லா ஏமாற்று வேலையும், அவன் ஏற்கனவே திருமணம் ஆனவன் என்பது உட்பட தெரிந்த போது, அவள் வெகு தூரம் வந்து விட்டு இருந்தாள்.

ஒரு நாள் அம்மாவுக்கு எல்லாம் தெரிந்து போக,

“நீ அவனுக்கு வைப்பாட்டியா வாழப் போறியா...” என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.

“எனக்குப் பதில் தெரியலம்மா... ஆன இன்னொருத்தன என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது...”

அம்மா பதில் சொல்லவில்லை.

அடுத்த நாள் உமாவுக்கு விழிப்பு வந்த போது, அருகில் அம்மா தூங்கிக் கொண்டிருந்தாள்.

அம்மா நாலு மணிக்கு எல்லாம் எழுந்து விடுவாளே... இன்று என்ன ஆயிற்று...

பதறிப் போய் அம்மாவை எழுப்ப அவளிடம் இருந்து எந்த சலனமும் இல்லை.

பக்கத்து வீட்டில் பெண்களுக்குக் கார் டிரைவிங் கற்றுக் கொடுக்கும் ஒரு அக்கா இருந்தாள். பெயர் கீதா. அவளுடைய உதவியுடன் ஜி எச் க்கு அம்மாவைக் கொண்டு போனாள்.

அதற்குள் அம்மாவின் உயிர் போய் விட்டது.

போஸ்ட் மார்ட்டம் செய்துதான் கொடுப்போம் என்றார்கள்.

ரிப்போர்ட்டில் விஷம் குடித்து அம்மா இறந்ததாக வந்தது.

பக்கத்து வீட்டு டிரைவிங் ஸ்கூல் இன்ஸ்டிரக்டர் கீதா, உமாவுக்கு இரண்டு நாள் சாப்பாடு போட்டாள். பிறகு அந்தக் கீதா, தன்னுடன் வந்து கார் டிரைவிங் கற்றுக் கொள்ளுமாறும், பிறகு இரண்டு பேரும் சேர்ந்து சொந்தமாய்ப் பெண்களுக்கான ஒரு டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்கலாம் என்றும் உமாவிடம் சொன்னாள்.

கீதாவுடன் ஒரு வாரம் கார் டிரைவிங் கற்றுகொள்ள சென்றாள் உமா. மனம் சரியாக இல்லாததால் அவளால் முழுமையாக கற்றுக் கொள்ள முடியவில்லை.

ஒரு நாள், ஏற்காட்டிற்கு, பிக்னிக் போகலாம் என்று நாராயணன் உமாவைக் கூப்பிட்டான். அவளும் சரி என்றாள்.

பஸ்சில் செல்லப் போவதாய் நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு, நாராயணன் ஒரு காரில் வந்தவுடன் அவளுக்கு சந்தேகம் வந்தது.

வாடகை கார் வைக்க நாராயணனிடம் பணம் ஏது...?



அந்தக் காரில் பின் பக்க சீட்டில் நாராயணனுடன் இன்னுமொரு ஆள் இருப்பதைப் பார்த்து உமாவுக்கு முகம் சுருங்கியது.

நாராயணன் நகர்ந்து சீட்டின் நடுவில் உட்கார்ந்து கொண்டான். அந்த ஆள் கார் கதவின் அந்த ஓரமாக உட்கார்ந்து கொள்ள, உமா இந்த ஓரமாக உட்கார்ந்து கொண்டாள்.

கார் புறப்பட்டது.

டிரைவர் சீட்டில் இருந்தவனுடன் நாராயணன் மரியாதையாக பேசியவுடன், அது வாடகை கார் இல்லை என்பதும், அந்தக் கார், டிரைவர் சீட்டில் இருப்பவனின் காராக இருக்கும் என்றும், அவர்கள் இருவரும் நாராயணனின் அலுவலக நண்பர்கள் என்பதும் புரிந்தது.

நகரத்தைக் கடக்கும் போது, இன்னொருவன் முன்பக்க சீட்டில் ஏறிக் கொண்டான். பிக்னிக்கு போகலாம் என்று தன்னைக் கூப்பிட்டு விட்டு இப்படி நாராயணன் அலுவலக நண்பர்களுடன் காரில் கூட்டிப் போவது கொஞ்சம் கூடப் பிடிக்க வில்லை உமாவுக்கு.

பஸ்சில் போயிருக்கலாம்...

மலைப்பாதையில் கார் ஏற ஆரம்பித்தவுடன் நாராயணனின் கை தன் இடுப்பைத் தடவுவதைத் தெரிந்து கொண்ட உமா...

‘என்ன இது... கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல்’என்று நினைத்துக் கொண்டு நாராயணன் பக்கம் திரும்பியவள் அதிர்ச்சி அடைந்தாள்.

தன் இடுப்பைத் தடவிக் கொண்டு இருப்பது நாராயணன் அல்ல, அடுத்து உட்கார்ந்து கொண்டு இருக்கும் அந்த மனிதன் தான்.

அந்த மனிதன் உமாவின் இடுப்பைத் தடவுவதற்கு வசதியாக, நாராயணன் முன் பக்கமாய் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதும் புரிந்தது.

அந்த மனிதன் தன்னைப் பார்த்து விகாரமாய் சிரிப்பதும், இதைத் தெரிந்து கொண்டே, நாராயணன் வேண்டுமென்றே முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு இருப்பதும் தெரிந்து, நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது.

குமுறி வரும் அழுகையை அடக்கிக் கொண்டாள்.

மலைப்பாதையின் ஒரு இடத்தில் டீ குடிக்க வேண்டும் என்று வண்டியை நிறுத்தினான் டிரைவர் சீட்டில் இருந்தவன்.

காரை விட்டு இறங்கியவள் நாராயணனிடம் அந்த மனிதன் செய்த சேஷ்டையை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது, நாராயணன் உமாவின் காதருகே வந்து,

“கொஞ்சம் இவங்க கிட்ட அட்ஜஸ்ட் பண்ணிக்கோ... இவங்களோட தயவு எனக்கு வேணும்... என்னோட மச்சினன் போலீசு, கேசுன்னு வந்து மிரட்டிட்டு போனான்... அப்புறம் என்னோட வேலையே போயிடும்... இவங்க எனக்கு சப்போர்ட்டா இருக்கேன்னு சொல்லி இருக்காங்க...”

கோபமும், அதைத் தொடர்ந்து அழுகையும் வந்தது. என்ன செய்வது என்று அவளுக்குப் புரியவில்லை.

அம்மாவின் ஞாபகம் வந்தது. இப்படி பாழும் கிணற்றில் விழுந்து விட்டேனே அம்மா... நீ எவ்வளவோ சொன்னாயே... நான் கேட்க வில்லையே...

உன்னையும் சாக அடித்து, என்னையும் இப்படி ஆக்கிக் கொண்டேனே...

அழுகையை அடக்கிக் கொண்டாள். ஏற்காடு வந்து சேர்ந்தது.

காரை விட்டு இறங்கி எங்காவது ஓடி விடலாமா என்று யோசித்தாள்.

பயமாக இருந்தது.

வீட்டிற்குத் திரும்பி விடலாம் என்று அவள் நாராயணனிடம் சொன்னாள்.

நாராயணன் கண்டு கொள்ளவில்லை. அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. வேறு வழியில்லாமல் அவனுடன் நடந்தாள்.

நேரம் கடந்தது. கார் கீழே போக புறப்பட்டது.

காரில் அவள் ஏறப் போன போது, டிரைவர் சீட்டில் இருந்தவன்,

“மேடம்... முன்னாடி சீட்ல வந்து உட்காருங்க... பாக்கறதுக்கு வசதியா இருக்கும்...” என்று பல்லை இளித்துக் கொண்டு சொல்ல, உமா நாராயணன் பக்கம் திரும்பினாள்.

நாராயணன் ‘ சரி... போ...’ என்று பார்வையில் சொன்னான்.

முன் சீட்டுக்கு போவதின் மூலம், பின் சீட்டில், அந்த மனிதன் சீண்டுவதில் இருந்து தப்பிக்கலாம் என்று தோன்ற, சரி என்று டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். ஏற்கனவே அங்கு இருந்தவன் பின் சீட்டுக்குப் போனான்.

அங்கு போன உடன், டிரைவர் சீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பவன் ஒவ்வொரு முறை கியர் மாற்றும் போதும், வேண்டுமென்றே தன் இடுப்பில் அவன் தன் விரலால் விளையாடுவது தெரிந்தது அவளுக்கு.

பின் பக்கம் திரும்பி நாராயணனை அவள் பார்க்க, அவன் வேண்டுமென்றே வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘தூ....’ என்று அவன் முகத்தில் துப்பலாம் என்று தோன்றியது அவளுக்கு.

கார் மலைப் பாதையில் ஒவ்வொரு வளைவுகளாகக் கடந்து போய்க் கொண்டிருந்தது.

உமா காரை ஒரு வளைவில் நிறுத்தச் சொன்னாள். கார் நின்றது.

“எனக்கு அந்த பள்ளத்தைப் பார்க்க வேண்டும்...” என்றாள் உமா.



டிரைவர் சீட்டில் இருந்தவன் ரோடின் ஒரு முனையில் கொண்டு போய் காரை நிறுத்தினான்.

காரை விட்டு கீழே இறங்கினாள் உமா. நாராயணன் உட்பட எல்லோரும் காரை விட்டு இறங்கினார்கள்.

அங்கு நின்று கீழே பார்த்தாள்.

கிடுகிடு பாதாளம். தலை சுற்றும் போலிருந்தது.

ரோடின் விளிம்பில், அந்தக் கிடுகிடு பாதாளத்திற்கு மேல் கார் நின்று கொண்டிருந்தது.

“பாத்திட்டேன்... போதும், போகலாம்...” என்றாள்.

எல்லோரும் திரும்பவும் சீட்டில் உட்காரும் வரை காத்திருந்தாள்.

டிரைவர் சீட்டில் இருப்பவனைப் பார்த்தாள் உமா.

அவன் உமாவைப் பார்த்து வக்கிரமாய்ச் சிரித்தான்.

அவனிடம், “நான் ரிவர்ஸ் எடுத்துக் கொஞ்ச தூரம் ஓட்டறேன். எனக்கு ரிவர்ஸ் எடுக்கிறது சரியா வர்ரதில்லே...” என்றாள்.

அதைக் கேட்ட நாராயணன், “ ஆமா... உமா டிரைவிங் கத்துக்கிறா... டிரைவிங் ஸ்கூல்ல இன்ஸ்டிரக்டர் ஆகப் போறா...” என்றான் மற்றவர்களிடம் பூரிப்புடன்.

“ஓ! அப்படியா... ஓட்டிப் பாருங்க...” என்றார்கள் அவர்கள் இளித்துக் கொண்டே.

டிரைவர் சீட்டில் இருப்பவன் இறங்கி உமா இருந்த சீட்டுக்குப் போய்விட்டான்.

டிரைவர் சீட்டில் போய் உட்கார்ந்த உமா, சாவியைத் திருப்பிக் காரை ஸ்டார்ட் செய்தாள்.

காருக்குள் இருந்த நான்கு ஆண்களும், அவள் ரிவர்ஸ் கியர் போட்டு காரை எப்படி பின்பக்கமாய் எடுக்க போகிறாள் என்று வாயைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவள் ரிவர்ஸ் கியர் போடவில்லை. மாறாக, முதல் கியரைப் போட்டு முன் பக்கமாய் காரை வேகமாகச் செலுத்தினாள்.

அடுத்த நாள் செய்தி தாள்களில் இப்படி ஒரு செய்தி வந்தது.

‘மலைப் பாதையில் கிடு கிடு பாதாளத்தில் கார் விழுந்தது! காரில் இருந்த ஒரு பெண் தவிர நான்கு ஆண்கள் பலி!’

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p244.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License