இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

ஊனம்

மு​னைவர் சி.​சேதுராமன்


அ​மைதியான கா​லைப்​பொழுது. பார்த்திபன் மாடியில் இருந்த தனது அ​றையில் அன்​றைய நாளித​ழைப் படித்துக் ​கொண்டிருந்தான். பலவிதமான ​செய்திக​ளை அ​சை​போட்டபடி இருந்தவனின் காதுகளில் ​தேனினும் இனிய குரல் வந்து விழுந்தது. அதுவ​ரை நாளிதழில் மூழ்கி இருந்தவனின் கவனம் எதிர்வீட்டுச் ஜன்ன​ல் பக்கம் திரும்பியது.

திறந்திருந்த ஜன்னல் வழி​யே அழகிய ​பெண்​ணொருத்தி தன்​னை மறந்து பாடிக் ​கொண்டிருப்பது ​தெரிந்தது. அவன் அப்பாடலில் தன்​னை​யே இழந்து​ கொண்டிருந்தான். அவ்வளவு இனி​மையான குரல். அவ​னை அப்படி​யே கட்டிப் ​போட்டுவிட்டது. இதுநாள் வ​ரை அவன் இது ​போன்ற இனி​மையான பாட​லைக் ​கேட்ட​தே இல்​லை. அத்த​னை அரு​மையான சுருதி, சுத்தமான பாட்​டை அவள் பாடிக் ​கொண்டிருந்தாள்.

கண்க​ளை மூடியபடி​யே அப்பாட​லை ரசித்துக் ​கேட்டுக் ​கொண்டிருந்தான் பார்த்திபன். பாடல் முடிந்து அந்தப் ​பெண் ​சென்றாள். கண்க​ளைத் திறந்த பார்த்திபனால் அவளது முகத்​தைப் பார்க்க முடியவில்​லை. எப்படியாவது அவளது முகத்​தைப் பார்த்துவிட ​வேண்டும் என்று மற்ற ​வே​லைக​ளை​யெல்லாம் ​போட்டுவிட்டுக் காத்திருந்தான். ஆனால் அவள் மறுபடி வர​வேஇல்​லை. அவனது அம்மா அ​ழைக்க​வே அவன் கீ​ழே ​சென்றான்.

அவனது காதுக​ளை அவனா​லே​யே நம்ப முடியவில்​லை. எத்த​னை அரு​மையான பாட்டு, இத்த​னை நாள் இங்குதான் இருந்​தோம் எப்படிக் ​கேளாமல் இருந்​தோம். நா​ளை எப்படி​யேனும் அவ​ளைப் பார்த்துவிட​வேண்டும் என்று மனதிற்குள் நி​​னைத்துக் ​கொண்டான். ​திருச்சியில் ​பெரிய சாப்ட்​வேர் நிறுவனத்தில் பணிபுரியும் பார்த்திபன் குடும்பத்திற்கு ஒ​ரே பிள்​ளை. ​கைநி​றையச் சம்பளம். அன்பான ​பெற்​றோர்கள். ​வெகுநாட்களாக அவனுக்குப் ​பெண் பார்க்கும் படலம் நடந்து ​கொண்டிருந்தது. இவன்தான் அது சரியில்​லை, இது சரியில்​லை என்று கூறித் தட்டிக் கழித்துக் ​கொண்டிருந்தான்.

அவன் எப்​போது ​சொல்கிறா​னோ, அப்​போது பார்ப்​போம் என்று ​பெற்​றோர்களும் அவன்​ போக்கிற்​கே விட்டுவிட்டார்கள். கீ​ழே வந்தவன் அலுவலகத்திற்குச் ​செல்வதற்குத் தயாரானான். அவன் அம்மா ​கொடுத்த கா​லை உண​வை உண்டு மதியத்திற்கும் உண​வை எடுத்துக் ​கொண்டு அலுவலகத்திற்குத் தனது டூவீலரில் கிளம்பினான்.

அவனுக்கு மனம் எதிலும் ஓடவில்​லை. கா​லையில் ​கேட்ட பாடலிலும் அப்பா​ட​லைப் பாடிய ​பெண்​ணைப் பார்த்து விடுவதிலும் மட்டு​மே அவன் மனம் ஓடியது. கட​மைக்கு அலுவலகப் பணிக​ளைப் பார்த்துவிட்டு, மா​லையில் வீடு திரும்பியவன் மாற்று​டை​யை அணிந்து ​கொண்டே அம்மா ​கொடுத்த காபி​யைக் குடித்துவிட்டு மீண்டும் தனது மாடிய​றைக்குச் ​சென்றான்.



தனது அ​றையின் ஜன்னல் வழி​யே பார்த்தான். எதிர்வீட்டு ஜன்னல் கதவு திறந்திருந்த​தே தவிர, அந்தப் ​பெண் வர​வேஇல்​லை. இரவு உ​ண​வை முடித்த பார்த்திபனுக்குத் தூக்கம் வரவில்​லை. அவன் விடியலுக்காகக் காத்திருந்தான். விடிந்ததும் கா​லைக் கடன்க​ளை முடித்துக் ​கொண்டு மீண்டும் தனது அ​றைக்கு வந்து எதிர்வீட்டுச் ஜன்ன​லை​யே பார்த்துக் ​கொண்டிருந்தான்.

எதிர்வீட்டுச் ஜன்னல் திறக்க​வே பாடலின் குரல் காற்​றோடு மிதந்து வந்தது. அவன் பாடும் அந்தக் குயிலின் முகத்​தை இப்​போது ​தெளிவாகக் கண்டான். அவள் அவனது வீட்டுப் பக்கம் திரும்பி கண்க​ளை மூடிக்​கொண்டு அமர்ந்து பாடிக் ​கொண்டிருந்தாள். அவ​ளைப் பார்த்த பார்த்திபனின் கண்கள் இ​மைக்க மறந்தன. அடடா, இத்த​னை அழகா...? இ​றைவன் எத்த​னை இனி​மையான குர​லையும் அழ​கையும் இவளுக்குக் ​கொடுத்திருக்கிறான்.

வாழ்ந்தால் இவளுடன்தான் தான் வாழ​வேண்டும். இல்​லை​யெனில் வாழ​வே ​வேண்டாம் என்று மனதிற்குள் உறுதியிட்டுக் ​கொண்டான். அவளது பாடலில் மன​தைப் பறி​கொடுத்த நி​லையில் பார்த்திபனுக்கு அவ​ளைப் பாராட்ட ​வேண்டும் என்று ​தோன்றியது. அவள் பாட்​டை நிறுத்தியவுடன் தனது ​கைக​ளைத் தட்டி, “​ரெம்பப் பிரமாதம்... ​ரெம்பப் பிரமாதம்... அற்புதமாப் பாடீனீங்க...” என்று பாராட்டினான். அத​னைக் ​கேட்ட அவளுக்குச் சற்​றே அதிர்ச்சியாக இருந்தாலும் உள்ளத்தில் மகிழ்ச்சியாக இருந்தது. புன்ன​கைத்தவா​றே அவனது பாராட்​டை அவள் ஏற்றுக் ​கொண்டாள்.

அச்சமயத்தில் பார்த்திபனின் அம்மா அவ​னை அ​ழைக்க​வே, அவன் அவளிடம் அம்மா அ​ழைப்பதாகக் கூறிவிட்டு ​வேண்டா ​வெறுப்புடன் கீ​ழே ​சென்றான். ​சென்றவன் அம்மா​வைப் பார்த்து, “ஏம்மா, ஏன் இப்படிக் கத்திக்கிட்​டே இருக்​கே... நாந்​தேன் வந்துட்​டேன்ல...” என்று ​வெறுப்புடன் கூறினான். அவனது அம்மாவும் “ஏப்பா இப்படிக் ​கோவப்படு​றே... ஒனக்கு ஆபீசுக்கு ​​நேரமாயிருச்​சேன்னு கூப்புட்​டேன்... சரிசரி ஆபீசுக்குக் ​கெளம்பு...” என்று கூறிவிட்டு அவனுக்குச் சாப்பாடு தயார் ​செய்வதில் மூழ்கினாள்.

அவனுக்​குச் சற்று ​வெட்கமாகப் ​போய்விட்டது. எப்படி எப்​போதும் எரிச்சல்படாத அம்மாவிடம் எரிச்சல் பட்​டோம்...?அவனது மனம் வருந்தியது. பலவாறு எண்ணிக் ​கொண்​டே அலுவலகத்திற்குக் கிளம்பிச் ​சென்றான். அவனது மனம் இப்​போது அவ​ளைப் பார்க்கத் துடியாய்த் துடித்தது.

நாள்​தோறும் அவளது பாடல் ஜன்னல் வழி​யே வந்து அவ​னை எழுப்பியது. அவனும் அத​னைக் ​கேட்டுக் ​கேட்டு அவள் மீதிருந்த காத​லை வளர்த்துக் ​கொண்டான். அவன் ஒரு முடிவுக்கு வந்தான். அவளிடம் தன் எண்ணத்​தை எப்படி​யேனும் இன்று ​தெரிவித்து விட ​வேண்டும் என்று நி​னைத்தான். அதற்​கேற்றாற்​போல் அவளும் அவ​னை​யே பார்த்துக் ​கொண்டிருந்தாள். அவன் ​மெதுவாகத் தனது விருப்பத்​தை அவளிடம் ​தெரிவித்தான். அவ​ளோ எதுவும் ​பேசாது கண்களா​லே​யே தனது சம்மதத்​தைத் ​​தெரிவித்தாள்.



நாட்கள் நகர்ந்தன... அவனது ​போக்கில் மாறுத​லைக் கண்ட அவனது ​அப்பா, அவனுக்கு எப்படியாவது ஒரு கல்யாணத்​தைப் பண்ணிப் பார்த்து விட​வேண்டும் என்று முடிவு கட்டினார். அவ​னைப் பார்த்து, “ஏப்பா, என்ன பிடி​யே ​கொடுக்க மாட்​டேங்குற... ஒனக்கு ஒரு கல்யாணத்​தைப் பண்ணிட்டம்னா எங்க கட​மை முடிஞ்சிரும்... ஒண்ணு, நாங்க பாக்குற ​பொண்ணக் கலியாணம் பண்ணிக்க... இல்ல... நீ யா​ரையாவது விரும்பினீயன்னா அ​தையாவது ​சொல்லு... இப்படி எதுவு​மே ​சொல்லாம இருந்தா எப்படி...” என்று கிடுக்கிப்பிடி ​போட்டார்.

அவனும் தன் மனதில் இருந்தவற்​றையும், தான் எதிர்வீட்டுப் ​பெண்​ணை விரும்புவ​தையும் கூற​வே... தன் மகனின் விருப்பத்​தை நி​றை​வேற்றுவதாகக் கூறினார். அவர்களது வீட்டிற்கு எப்​பொழுது ​போகலாம் என்று முடிவு ​செய்யுமாறு அவனிடம் கூற​வே, அவனுக்கு வானில் பறப்ப​தைப் ​போன்று இருந்தது. தனது விருப்பத்திற்குத் த​டை ​சொல்லாது ஒப்புக் ​கொண்ட அப்பாவிற்கு நா​ளை தகவல் கூறுவதாகக் கூறிவிட்டு அலுவலகத்திற்குச் ​சென்றான் பார்த்திபன்.

அலுவலகம் ​சென்றவனின் மனதில் பல்​வேறு ​யோச​னைகள் எழுந்தன. அலுவலக​ வே​லையில் அவன் மனம் ஒட்டவில்​லை. ​மேலாளரிடம் ​சென்று விடுமு​றை எழுதிக் ​கொடுத்துவிட்டு வீட்டிற்குச் ​சென்றான். அவனது அப்பா அம்மா ​கேட்டதற்கு எதுவும் கூறாமல் மாடிக்குத் தனது அ​றைக்குச் ​சென்றான். ​சென்றவுடன் எதிர்வீட்டுச் ஜன்ன​லைப் பார்த்தான்.

அன்று பார்த்து அவ்​வே​ளையில் அது திறந்திருந்தது. ஜன்னல் வழி​யே அவள் ​தெரிகிறாளா என்று எட்டிப் பார்த்தான் பார்த்திபன். எ​தேச்​சையாக அவன் பார்ப்பதற்கும், அவள் வருவதற்கும் சரியாக இருந்தது. அவளுக்கு ஆச்சரியமாகப் ​போய்விட்டது. அவளிடம் பார்த்திபன் நா​ளை அவ​ளைப் ​பெண்பார்க்க வருவதாகவும் அவளது அம்மாவிடம் கூறி ​ரெடியாக இருக்கும்படியும் கூறினான். அத​னைக் கூறியவுடன்தான் அவனுக்கு மனதில் நிம்மதியாக இருந்தது.

அ​தே ​வேகத்தில் அவன் தனது அப்பா அம்மாவிடமும் விஷயத்​தைக் கூறி, நா​ளை நல்ல​​நேரத்தில் அவளது வீட்டிற்குச் ​சென்று அவ​ளைப் ​பெண் ​கேட்க ​வேண்டும் என்று கூறினான். அவனது அப்பா அம்மா இருவருக்கும் வியப்பிற்கு ​மேல் வியப்பு ஏற்பட்டது. ​பெண்​ணைப் பற்றி​யோ, அவளது குடும்பத்​தைப் பற்றி​யோ அவர்கள் அவனிடம் எதுவும் ​கேட்கவில்​லை. ஏதாவது ​கேட்கப்​போய் ​வேதாளம் மீண்டும் முருங்​கை மரம் ஏறிவிட்டால், என்ன ​செய்வது என்று ​பேசாமல் இருந்துவிட்டார்கள்.

மறுநாள் ​பொழுது விடிந்தது. வீட்டில் பார்த்திபனின் அப்பாவும் அம்மாவும் பரபரப்புடன் ​செயல்பட்டார்கள். மகனின் விருப்பப்படி யா​ரையும் அ​ழைக்காது அவர்களிருவரும் மகனுடன் நல்ல ​நேரம் பார்த்து, அவன் விரும்பிய ​பெண் வீட்டிற்குப் ​பெண் ​கேட்கச் ​சென்றனர். வீட்டின் வாசற்படியில் ஏறி அ​ழைப்பு மணி​யை அடித்தவுடன் கத​வைத் திறந்த அவளது ​பெற்​றோர்கள் ​முகம் மலர வர​வேற்று வீட்டிற்குள் அ​ழைத்துச் ​சென்றனர்.

வீட்டிற்குள் ​சென்று அமர்ந்தவர்க​ளுக்கு இனிப்பும் காரமும் ​கொடுக்கப்பட்டது. பார்த்திபன் அத​னை வாங்கிக் ​கொறித்துக் ​கொண்டிருந்தான். அவனுக்குத் தான் விரும்பியவ​ளை பார்த்துவிட​வேண்டும் என்ற ஆவல் ​மே​லோங்கியது. வழக்கப்படி இருவீட்டாரும் ​பேசிக் ​கொண்டனர்.

பார்த்திபன் தனது தந்​தையிடம், “அப்பா ​பொண்ண வரச்​சொல்லிப் பாருங்கப்பா…” என்று அவசரப்படுத்தினான். அவனது அப்பா​வோ, “​டேய் சத்த சும்மா இருடா... பரக்கா​தடா...” என்று அவ​னை அடக்கினார். சம்பிரதாயப் ​பேச்சு முடிந்தவுடன் பார்த்திபனின் கன​வை நனவாக்குவது​போல் அவளும் வந்தாள்.

அவ​ளைக் கண்ட மாத்திரத்தில் பார்த்திபனின் ​பெற்​றோருக்குப் பிடித்துவிட்டது. ஆனால் பார்த்திபனுக்குத் தூக்கிவாரிப் ​போட்டது. பார்த்திப​னைப் பார்த்து அவனது அம்மா, “​​டேய் தம்பி ​பொண்ணு நல்லா லட்சணமா இருக்குடா... ஓம் மனசுக்குப் பிடிச்சவ ​ரொம்ப நல்லா இருக்காடா...” என்று கூற அவனுக்​கோ என்ன ​சொல்வ​தென்​றே புரியவில்​லை.

அவன் எதிர்பார்த்தது ​போன்று, அவள் இருந்தாலும் அவள் ஒரு பக்கம் சாய்ந்து சாய்ந்து விந்தி விந்தி நடந்து வந்தாள். அவளது இடதுகால் ​கொஞ்சம் ஊனமாக இருந்தது. இ​தை​யெல்லாம் பார்த்தாலும் தங்களின் மகனுக்குப் பிடித்துவிட்டதால் அவ​ளை​யே ​பேசிமுடித்து விடுவதாக பார்த்திபனின் ​பெற்​றோர்கள் தாயராக இருந்தனர். பார்த்திபனுக்கு உடம்​பெல்லாம் ​வேர்த்துக் ​கொட்டியது.



அவன் எதிர்பார்த்தது ​வேறு; இங்கு நடப்பது ​வேறு. ​போயும் ​போயும் ஒரு ​நொண்டி​யையா நாம விரும்பு​னோம். ​அவன் தன் அப்பா​வைப் பார்த்து தணிந்த குரலில், “அப்பா எனக்கு இந்தப் ​பொண்ணப் புடிக்கலப்பா...​ ஏதாவது ஒரு காரணத்​தைச் ​சொல்லி எந்திருச்சு வாங்கப்பா...”என்றவுடன் அவனது அப்பாவிற்குச் சட்​டென்று ​கோபம் த​லைக்​கேறியது.

​ கோபத்​தைக் கட்டுப்படுத்திக் ​கொண்டு, “ஏப்பா, நீ ​சொல்லித்தா​னே வந்​தோம்... ஒனக்குப் பிடிச்சிருக்குண்ணு ​சொன்னதாலதா​னே வந்​தோம்... நீங்க ​ரெண்டு​பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறீங்கன்னு ​தெரிஞ்சதுனாலதான வந்​தோம்... இப்பப் ​போயி ​வேணாங்கு​றே... என்ன வி​ளையாடுறியா... என்னால ​சொல்ல முடியாது...” என்று கடுகடுத்தார்.

உட​னே​யே அவன் தனது அம்மாவிடம் கூற அவளுக்கும் இரத்த அழுத்தம் த​லைக்​கேறியது. அவள் ​பொறு​மையாக,”தம்பி எ​தையும் ​யோசிச்சுப் ​பேசு... எதுவா இருந்தாலும் இப்பப் ​பேசக் கூடாது...” என்று ​வெடுக்​கென்று விழுந்தாள்.

இவர்கள் ஒருவருக்​கொருவர் ​பேசிக் ​கொண்ட​தைக் கண்ட அவளின் ​தந்​தை, “என்னங்க மாப்பு​ளையும் நீங்களும் என்ன​மோ ஒங்களுக்குள்​ளே​யே ​பேசிக்கிட்டு இருக்குறீங்க...” என்று​கேட்டார்.

அதற்குப் பார்த்திபனின் தந்​தைக்கு என்ன கூறுவ​தென்​றே ​தெரியவில்​லை. அவர், “ஒண்ணுமில்​லே...” என்று வாய்க்குள்​ளே​யே ​மென்று முழுங்கினார். பார்த்திபன் தன் அம்மாவின் காதருகில், “அம்மா எனக்குத் ​தெரியாமப் ​போச்சும்மா... ​வேணாம்னு ​சொல்லுங்கம்மா...” என்று ​கெஞ்சும் குரலில் குசுகுசுத்தான். பார்த்திபனின் அம்மா எப்படிச் ​சொல்வது? என்று தவியாய்த் தவித்துக் ​கொண்டிருந்தாள்.

அவர்களின் ​செயல்பாடுக​ளைக் கண்ட ​பெண்ணின் அம்மா, “என்னங்க ஏம்​பொண்ணு ​கொஞ்சம் காலச் சாச்சுச் சாச்சு வர்றதத்தா​னே ஒங்களுக்குள்​ளே ​பேசிக்கிறீங்க... ஒரு விபத்துலதான் இந்தமாதிரி ஆயிப்​போயிருச்சு... அதுக்​கென்ன இப்​போ...” என்று ​கேட்டாள்.

அத​னைக்​கேட்ட பாரத்திபனால் ​பொறு​மையாக இருக்க முடியவில்​லை. எங்​கே தனது தாயும் தந்​தையும் இவ​ளைப் ​பேசி முடித்து விடுவார்க​ளோ என்று பயந்த அவன் ​கொஞ்சமும் தயங்காமல், “ஒங்க ​பொண்ண எனக்குப் பிடிக்கலங்க...” என்று பட்​டென்று விஷயத்​தைப் ​போட்டு​டைத்துவிட்டான்.

அத​னைக் ​கேட்ட அவன் விரும்பிய ​பொண்​ணோ இடி​யேறுண்ட நாகம் ​போன்று சீறினாள். அவள் பார்த்திப​னைப் பார்த்து, “இ​தெல்லாம் என்​னையக் காதலிக்கறதுக்கு முன்னால ஒங்களுக்குத் ​தெரியலயா... என்​னோட ​மொகத்தயும் குர​லையும் வச்சி என்ன விரும்புனீங்க... இப்ப நான் ஊனமானவள்ன்னு ​தெரிஞ்ச ஒட​னே ​வேணாங்குறீங்க... ஒங்களுக்கு ​வெட்கமில்​லை... வலிய வலிய வந்து வந்து பார்த்தது ​பேசினது யாருங்க... நல்லாப் படிச்சவரு... பண்பானவருன்னு நினைச்சுத்தான் நானும் இதுக்குச் சம்மதிச்​சேன். ஆனா நீங்க படிச்சவரு மாதிரி நடந்துக்கல​யே... ச்​சே...” என்று ​​பொறிந்து தள்ளினாள்.


அ​தைக் ​கேட்ட பார்த்திபன், “ஒன்ன விரும்புனது உண்​மைதான்... ஆனா... இப்படி நீ இருப்பாய்னு எனக்குத் ​தெரியாமப் ​போச்சு... ஏன் நீ என்கிட்ட இதச் ​சொல்லிருக்கலாம்ல... இப்ப நான் ஒன்னக் கட்டிக்கிட்டுக் கூட்டிட்டுப் ​போனா என்னப் பார்த்துக் ​கேலி பண்ணுவாங்க...” என்று ​பேசியவ​னை இ​டைமறித்தாள் அவள்.

“இதப்பாருங்க நிறுத்துங்க... நீங்க ​வேணுமின்னா ​ஒரு ​பெண்​ணை விரும்புறதும் ​வேணாமின்னா அவள ஒதறுறதும்... ஒங்களுக்குக் ​கைவந்த க​லையா இருக்கலாம்... ​பொண்ணுன்னா என்னான்னு ​நெனச்சீங்க... அவளும் ஒங்களப் ​போல உயிருள்ள மனுசிங்கறத மனசுல வச்சிக்​கோங்க... என்​னோட அழகு ஒங்கள ​மொதல்ல ​கெறங்க வச்சது... இப்ப நான் ஊனமானவள்னு ​தெரிஞ்ச ஒட​னே எல்லாரும் ​கேலி பண்ணுவாங்கன்னு ​சொல்றீங்க... இது ஒங்களுக்குக் ​கேவலமாப் படல... இது​வே ஒங்களுக்கு இருந்திருந்தா இப்படிப் ​பேசுவீங்களா... ஊனங்கிறது ஒடல்ல இல்லீங்க... அது மனசில இருக்கு... பார்​வையில இருக்கு... எனக்குக் கால்ல மட்டுந்தான் ஊனம்... ஆனா ஒங்களுக்கு மன​செல்லாம் ஊனம்... காலு ஊனமானவங்ககூட எப்படியாவது வாழந்துறலாம்... ஆனா மனசு ஊனமானவங்க​ளோட ஒருக்காலும் வாழ முடியாதுங்க... நீங்க என்ன ​வேணாம்னு ​சொல்றதுக்கு முன்னால​யே நா​னே ஒங்கள ​வேணாம்னு ஒதுக்கி வச்சிட்​டேன்... ​மொதல்ல ஒங்க மன ஊனத்துக்கு நல்ல டாக்டரப் ​போயிப் பாருங்க... பாத்துட்டு மன ஊனத்​தைச் சரிபண்ணுங்க... படிச்சிருக்கீங்க​ளே தவிர, பக்குவமும் பண்பாடும் இல்​லை​யே... இங்க ஒரு நிமிசங்கூட இருக்காதீங்க... ​வெளிய ​போங்க...” என்று சாமி வந்தவ​ளைப் ​போன்று கூறிவிட்டுத் தனது அ​றைக்குள் கால்தாங்கித் தாங்கி நடந்து ​சென்றாள் அவள்.

தான் விரும்பியவளின் வார்த்​தையடிக​ளை வாங்கிக் ​கொண்டு த​லை​யைக் குனிந்தவனாக அப்பாவுடனும் அம்மாவுடனும் அவளது வீட்​டை விட்டு ​வெளி​யேறினான் பார்த்திபன். அவனது அப்பாவிற்கும் அம்மாவிற்கும் முகம் ​வெளிறிப்​போனது. பார்த்திபனின் மன ஊனம் அவ​னைப் பார்த்துச் சிரித்தது. ​தொ​லைவிலிருந்த க​டையிலிருந்து, “ஊனம் ஊனம் ஊனமுன்னு யாரும் மில்​லைங்​கோ... ஒடம்புலுள்ள ​கொ​றைக​ளெல்லாம் ஊனமில்​லைங்க... உள்ளம் நல்லாருந்தா ஊன​மொரு ​கொ​​றையில்ல...” என்ற பாடல் காற்றில் மிதந்து வந்து பார்த்திப​னை ​நையப்பு​டைத்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p249.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License