இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

காமம் எனும் காதல் நோய்!

வேந்தன் சரவணன்


அவனைச் சுற்றி ஒரு கூட்டமே உட்கார்ந்திருந்தது.

அவனது பெற்றோரும் உடன்பிறப்புக்களும் முகத்தில் கவலைக்குறிகளுடன் காணப்பட்டனர். அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த பூசாரி கையில் இருந்த உடுக்கையை பலமாக அடித்துக் கொண்டே கேட்டார்.

"யார் நீ?" அவன் பதிலேதும் பேசவில்லை.

"சொல்!. யார் நீ?. எங்கிருந்து வந்தாய்?. எதற்காக வந்தாய்?"

இப்போதும் அவன் பதில் பேசவில்லை. பூசாரி விபூதியை அள்ளி அவனது முகத்தில் வீசினார். விபூதி பட்டதும் அவனது உடல் ஒருமுறை சிலிர்த்தது. ஆனால் ஒரு வார்த்தை வெளிவரவில்லை. பூசாரிக்குக் கோபம் வந்து விட்டது.

"இவ்வளவு கேட்கிறேனே, பதிலேதும் பேச மாட்டாயா?. உன்னை எப்படிப் பேச வைக்கிறேன் பார்!"

பூசாரி வேப்பிலையைக் கையில் எடுத்து அவனது உடம்பில் விளாசத் துவங்கினார். இப்போது அவனுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். இதுவரை மூடியே இருந்த அவனது கண்கள் திறந்தன. அவை பூசாரியை முறைத்துப் பார்த்தன. திடீரென்று அவன் பூசாரியின் வேப்பிலையைப் பிடுங்கி வீசி எறிந்தான். ஆவேசமாய் எழுந்தான். அனைவரும் நடுங்கும் வண்ணம் கர்ஜித்தான்.

"மதிகெட்டவர்களே!. அப்பால் செல்லுங்கள்!"



தன் முன்னால் இருந்த பூசை சாமான்களை எல்லாம் உதைத்துவிட்டு விடுவிடு என்று வாசலை நோக்கி நடந்து வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டான். இவை அத்தனையும் ஒரு நொடிப் பொழுதில் நடந்து விட்டதால் அங்கிருந்த அனைவரும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அப்படியே இருந்தனர். முதலில் சுதாரித்துக் கொண்ட பூசாரி சொன்னார்.

"ஐயா!. கவலைப் படாதீர்கள்! உங்கள் மகனுக்கு எந்தப் பேயும் பிடிக்கவில்லை. ஏனென்றால் அவனுக்குள் ஒரு ஆவி இருந்திருந்தால் எனது கட்டுப்பாட்டை மீறி அவன் வெளியே சென்றிருக்க முடியாது. அவனது உடலிலோ மனதிலோ தான் கோளாறு இருக்கவேண்டும். நீங்கள் எதற்கும் ஒரு நல்ல மருத்துவரை அழைத்துவந்து காட்டுங்கள். நான் சென்று வருகிறேன்."

பூசாரி சொல்லிவிட்டுப் போனபின்னர் மெதுவாக அவனது பெற்றோரை நெருங்கினார் ஒரு முதியவர். அவர் ஒரு ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர் (அனுபவசாலி) என்பது அவரது முகத்தில் தெரிந்தது. தந்தையின் தோள்மீது ஆதரவாய்க் கையை வைத்துக் கொண்டே கேட்டார்.

"என்ன ஆயிற்று உங்கள் மகனுக்கு?. நீங்கள் என்னிடம் சொல்வதற்குத் தயார் என்றால் நான் உங்களுக்கு உதவத் தயாராய் இருக்கிறேன்!"

பின்னால் இருந்து குரல் வரவே திரும்பி அம்முதியவரைப் பார்த்தார் தந்தை. முதியவரின் முகத்தில் வீசிய ஒளி அவருக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இவரிடம் சொன்னால் இந்த இக்கட்டில் இருந்து தன் மகன் விடுபட ஏதாவது வழிபிறக்கும் என்ற நினைப்பில் சொல்ல ஆரம்பித்தார்.



"ஐயா!. உங்களைப் பார்த்தால் ஒரு மகான் போலத் தெரிகிறது. இந்தச் சிக்கலுக்கான தீர்வு தங்களிடத்தில் கிடைக்கும் என்று நம்பிக் கூறுகிறேன். சில நாட்களாக எனது மகனின் போக்கும் செயலும் எங்களுக்கு அதிர்ச்சியைத் தருவதாய் உள்ளன. சரியாக உணவு உண்பதில்லை; உறங்குவதில்லை; மற்ற இளைஞர்களுடன் கூடித் திரிவதில்லை; எவ்வித கேளிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை; எதையோ இழந்தவன் போல ஒரு பித்து பிடித்த நிலையில் காணப்படுகிறான். சில நாட்களுக்கு முன்பு அருகில் இருக்கும் கானகச் சோலைக்குள் ஒருமுறை சென்று வந்தான். அதன்பின்னர் தான் இத்தனை மாற்றங்களும் அவனிடத்தில் உண்டானதாக நான் கருதுகிறேன். ஆனால் அவனது மாற்றங்களுக்கான காரணம் என்னவென்று மட்டும் இன்னும் எனக்குப் புரியவில்லை. சோலையில் அவனுக்கு ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அது பேயின் வேலையோ என்று சந்தேகித்துத் தான் இன்று இந்த ஏற்பாடு செய்திருந்தேன். பேயின் வேலை அல்ல என்று பூசாரி தெளிவாகச் சொல்லிவிட்டார். இனி என்ன செய்வதென்று தெரியவில்லை. தாங்கள் தான் வழி சொல்லவேண்டும்."

அவர் சொல்லி முடித்ததும் முதியவர் கேட்டார்.

"பூசாரி சொன்னது போல ஒரு நல்ல மருத்துவரை அழைத்து வந்து காட்டுங்களேன்!"

"ஐயா!. மருத்துவரிடம் ஏற்கெனவே காட்டியாகி விட்டது. உடம்புக்கு ஏதும் நோய் இல்லை என்று மருத்துவர் கூறிவிட்டார்." - இது தந்தை சொன்ன பதில்.

இப்போது முதியவர் யோசனையில் ஆழ்ந்தார். சற்று நேரத்திற்குப் பின்னர் சொன்னார்.



"உங்கள் மகனுக்குப் பிடித்திருக்கும் நோய் வித்தியாசமானது. இது உடலில் விளைந்த நோய் அல்ல. மனதில் புகுந்த நோய். இது புதுமையானது. இந்த நோய்க்கு "காமம்" என்று பெயர். இளம் பருவ வயதில் இந்த நோய் ஆண் பெண் இருவரையும் தாக்கும். உங்கள் மகன் ஒரு பெண்ணின் மேல் தீராக் காதல் கொண்டுள்ளான். அதுவே இப்போது நோயாக மாறி அவனைப் பாதித்திருக்கிறது."

"காதல் தான் தனது மகனின் மாற்றங்களுக்குக் காரணம்" என்று முதியவர் சொன்னதும் சற்று பயம் தெளிந்தார் தந்தை. உடனே ஒரு சந்தேகம் தோன்ற அவரை நோக்கிக் கேட்டார்.

"ஐயா! என் மகனின் மாற்றத்திற்குக் காதல் தான் காரணம் என்கிறீர்கள். ஆனால் காதல் ஒரு நல்ல உணர்வு தானே. காதல் வயப்பட்ட என் மகன் நல்ல நிலையில் அல்லவா இருக்கவேண்டும். ஏன் அவனது நிலை இவ்வாறு உள்ளது?"

"ஐயா!. காதல் ஒரு நல்ல உணர்வு தான். ஆனால் அது காதலித்த இருவரும் சேர்ந்திருக்கும் வரையில் தான் நல்லதாய் இருக்கும். பிரிந்துவிட்டால் தீயதாய் மாறிவிடும். காதலின் இந்தத் தன்மைக்குப் பெயர் தான் "காமம்" ஆகும். இந்த காமம் ஒரு நோயோ பேயோ அல்ல. இதன் பண்பு எத்தகையது என்றால், ஒரு மேட்டுநிலத்தில் விளைந்திருக்கும் பசும்புல்லை ஒரு பசுமாடு பலமுறை சுற்றிச் சுற்றி வந்து மேய்வது போன்றதாகும். இங்கே உங்கள் மகனின் மனம் தான் பசுமாடு. அவனது காதலி தான் மேட்டு நிலம். அந்த நிலத்தில் விளைந்திருக்கும் பசும்புற்கள் காதல் நினைவுகள் ஆகும். உங்கள் மகனின் மனம் காதல் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டு தனது காதலியையே எப்போதும் சுற்றிச்சுற்றி வருகிறது. காதலியைத் தவிர வேறு நினைவுகள் அவனுக்குத் தோன்றாததே அவனது மாற்றங்களுக்குக் காரணம்."

முதியவர் சொல்லி முடித்ததும் அடுத்த கேள்வியை ஆவலுடன் தொடுத்தார் தந்தை.



"‘அப்படியானால் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு இல்லையா?. என் மகன் திருந்துவதற்கு என்ன தான் வழி?"

இதைக் கேட்டதும் முதியவரின் உடல் ஒருமுறை குலுங்கியது; முகத்தில் பல்வேறு உணர்ச்சிகள் தோன்றி மறைந்தன. சமாளித்துக்கொண்டு நிதானமாய்ச் சொன்னார்.

"‘ஒரு வழி இருக்கிறது. இந்தக் காமம் இருக்கிறதே அது நோயினைப் போலன்றி கூடவோ குறையவோ செய்யாது. யானையின் மதம் போல காலவரையறைக்கு உட்பட்டதே ஆகும். யானைக்கு மதம் பிடிப்பதைப் போல காமம் திடீரென்று தோன்றும். உண்ண உணவு கிடைத்ததும் யானையின் மதம் அழிந்து போவதைப் போல காமமும் திடீரென்று அழிந்து போகும். அதாவது காமத்திற்குக் காரணமான பெண் கிடைத்துவிட்டால் காமம் உடனே அழிந்துவிடும். உங்கள் மகன் காதலிக்கும் பெண்ணைக் கண்டறிந்து, முடிந்தால் அவளை அவனுடன் சேர்த்து வையுங்கள். இதுவே இந்த சிக்கலுக்கான தீர்வு ஆகும்." தனது மகனின் சிக்கலுக்குத் தீர்வு கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் முதியவரை கைகூப்பித் தொழுதார் தந்தை. பின்னர் கேட்டார்.

"ஐயா!. தங்களது உதவிக்கு மிக்கநன்றி. தங்களது பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?"

"என் பெயர் கந்தன். எல்லோரும் என்னை ‘மிளைப்பெருங்கந்தன்’ என்றே அழைப்பார்கள். இந்த மலையின் கீழே தான் நான் தங்கி இருக்கிறேன். சரி, எனக்கு நேரமாகி விட்டது. வருகிறேன்"

சொல்லிவிட்டு முதியவர் மெதுவாக வீட்டிலிருந்து வெளியில் வந்தார். மலைக்காற்று அவரது முகத்தை வருடிக்கொண்டு சென்றது. காமத்தின் தன்மைகளைப் பற்றி அருமையான சொற்களால் இவ்வாறு பாட ஆரம்பித்தார்.

காமம் காமம் என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்
முதைசுவல் கலித்த முற்றா இளம்புனம்
மூதா தைவந்தாங்கு
விருந்தே காமம் பெரும் தோளோயே. - குறுந்தொகை - 204.

காமம் காமம் என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகு மென்று ஆள் மதம் போல
பாணியும் உடைத்தது காணுநர்ப் பெறினே. - குறுந்தொகை - 136.

பாடி முடித்துவிட்டு தெருமுனையைக் கடக்கும் முன்னர் திரும்பிப் பார்த்தார் முதியவர். இன்னும் அவரை நோக்கிக் கைகுவித்து வணங்கியவாறு நின்று கொண்டிருந்தார் தந்தை. அவ்வளவுதான்! அதுவரை முதியவர் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் "மடைதிறந்த தண்ணீர் போல" கட்டுப்பாட்டை மீறி வெளிப்பட்டன. முகத்தைத் திருப்பிக்கொண்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்தார்; கண்ணீர் பெருகி வழிந்தது. நடந்த நிகழ்வுகள் மனதில் நிழலாக ஓட உள்ளுக்குள் இறைவனை உருக்கமுடன் தொழுது வணங்கினார்.

"‘கடவுளே! இவர்களை நீ தான் இனி காக்கவேண்டும்! இவரது மகன் உயிருக்குயிராய்க் காதலித்தது எனது மகளைத் தான் என்பதையோ இதை அறியாமல் நான் எனது மகளை வேறொரு ஆடவனுக்கு மணம் முடித்து வேற்று நாட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டேன் என்பதையோ இவர் அறியமாட்டார். அறியாமையால் விளைந்த இந்தத் தவறு இப்போது தான் எனக்குத் தெரியவந்தது. இந்த உண்மையை அவரிடத்தில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறேன். என்னை மன்னித்து அருள்வாயா?"

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p25.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License