வேந்தன் சரவணன்
பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் சந்தை மேலாளராகப் பணிபுரிந்து, பின்னர் அப்பணியிலிருந்து விலகி, சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டைக்குத் திரும்பிய இவர், தற்போது இ சேவை மையம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தமிழ் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட இவர், வேந்தன் சரவணன் மற்றும் திருத்தம் பொன் சரவணன் எனும் புனைப்பெயர்களில் தமிழில் அச்சில் வெளியாகும் இதழ்களில் துணுக்குகள், கதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வருபவர். எண்கணிதத் துறையில் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து முதல் முறையாக தமிழ் முறைப்படி பலன்களைக் கணித்துள்ள இவர் "தமிழ் நியுமராலஜி" என்னும் நூலையும் எழுதியிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. திருக்குறள் உரைகள், திருத்தம் பொன்.சரவணன், நூல் மதிப்புரை எனும் வலைப்பூக்களை உருவாக்கி, அதில் பல படைப்புகளைப் பதிவேற்றம் செய்து வருகிறார்.
கதை - சிறுகதை
கட்டுரை - தொடர் கட்டுரைகள்
ஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.