இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

முதுமைத் தோற்றம் மாறுமா?

வேந்தன் சரவணன்


அந்த மரத்தடியின் கீழ் இருந்த மேடையில் அவன் மட்டும் சோகத்துடன் அமர்ந்திருந்தான்.

இலையுதிர் காலம் என்பதால் கீழே உதிர்ந்திருந்த இலைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய தலைமுடி எல்லாம் வெளுத்துப் போய் இருந்தது. முகத்தில் நிறைய சுருக்கங்கள் காணப்பட்டன. முகத்தோற்றம் அவனுக்கு அதிக வயதைக் காட்டினாலும் "அவ்வளவாக வயதாகவில்லை" என்பதை அவனுடைய கைகளும் கால்களும் காட்டின.

"தம்பீ! யாரப்பா நீ?. இந்த சுடும் வெயிலில் இங்கே அமர்ந்து கொண்டு என்ன செய்கிறாய் ?"

திடீரென்று கேள்விக்கணைகள் வந்து தாக்கியதும் அவனுடைய சிந்தனை கலைந்தது. நிமிர்ந்து நோக்கினான். ஒரு முதியவர் கையில் ஊன்றுகோல் இல்லாமல் முகத்தில் புன்னைகையுடன் நின்றிருந்தார்.

"உன்னைப் பார்த்தால் எங்கள் நாட்டைச் சேர்ந்தவன் போலத் தெரியவில்லை. எங்கிருந்து வந்துள்ளாய்? யாரைக் காண வேண்டும்? சொன்னால் உனக்கு உதவ முடியுமா என்று பார்க்கிறேன்."முதியவர் விடாப்பிடியாய் கேட்டதும் அவன் கல்மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தான்.

"ஐயா! நான் பக்கத்து நாட்டைச் சேர்ந்தவன் தான். எனக்கு ஒரு பெரிய குறை உள்ளது. அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டி எங்கள் நாட்டில் பலரிடம் சென்றேன். ஒன்றும் பயனில்லை. தீர்வினைத் தேடிக்கொண்டே வந்ததில் உங்கள் நாட்டிற்குள் வந்துவிட்டேன் போலும்."

"குறையா?. என்ன அது? சற்று விளக்கமாகச் சொல்ல முடியுமா?"



"ஐயா! என் முகத்தைப் பாருங்கள். வயதானவரைப் போல எவ்வளவு சுருக்கங்கள்!. என் தலைமுடியைப் பாருங்கள். முழுவதும் நரைத்துவிட்டது. எனக்கு வயது இருபது தான் ஆகிறது. இதுவே என் குறை ஆகும். இதைப் போக்கும் வழியைத் தேடித்தான் வந்தேன்."

முதியவர் அவனுடைய குறையைக் கேட்டதும் சற்று யோசித்தார். பின் சொன்னார்.

"உன்னுடைய குறையைத் தீர்க்க வல்லவர் எங்கள் நாட்டில் ஒருவர் இருக்கிறார். கல்வி கேள்விகளில் வல்ல புலவர் அவர். பெயர் பிசிராந்தையார். உன்னுடைய குறையைப் போக்கும் வழியை அவரிடத்தில் பெறலாம்."

"பிசிராந்தையாரா?. புலவரா? ஒரு புலவர் எப்படி எனது குறையைத் தீர்க்க முடியும்?"

"தம்பீ! பிசிராந்தையாரை நீ நேரில் காணும்போது இதற்கான விடையினைத் தெரிந்து கொள்வாய். சரி. அவரது வீட்டிற்கான வழியினைச் சொல்லுகிறேன். இவ்வழியாக ஒரு காத தொலைவு சென்றால் ஒரு மக்கள் மன்றம் வரும். அதற்கு வலப்புறமாக ஒரு அரை காத தொலைவு சென்றால் அவரது இல்லம் வரும். அதன் முன்னால் ஒரு பெரிய பந்தல் போடப்பட்டு இருக்கும். அதுவே அவரது வீட்டிற்கான அடையாளம் ஆகும்."

"மிக்க நன்றி ஐயா! நான் சென்று அவரைக் கண்டு வருகிறேன்."

நன்றி சொல்லிவிட்டு அவன் நடக்கத் துவங்கினான். வழியில் அந்த மக்கள் மன்றம் வந்தது. அதில் இளைஞரும் முதியவருமாய் பலர் அமர்ந்திருந்தனர். அனைவரின் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி நிலவியதை அவன் கவனித்தான். அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து அந்நாட்டு மன்னன் மிகவும் நல்லவன் என்பதைப் புரிந்து கொண்டான்.

மன்றத்தைக் கடந்து செல்ல முயலும் போது ஒரு கல் தடுக்கியது. கீழே விழுந்தான். அடுத்த நொடியில் அவனைப் பல கரங்கள் தூக்கி நிறுத்தின. அவர்கள் அனைவரும் மக்கள் மன்றத்தில் அமர்ந்து இருந்தவர்களே என்று அறிந்து ஆச்சரியப்பட்டான்.



"மன்னிக்க வேண்டும் தம்பீ! இனிமேல் சாலையில் கற்கள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எங்கு செல்ல வேண்டும்?. சொன்னால் உங்களை அங்கு அழைத்துச் செல்கிறேன்."

ஒரு முதியவர் இவ்வாறு சொன்னதும் மிகவும் அகமகிழ்ந்தான் அவன். "ஆஹா! இந்நாட்டு மக்கள் எவ்வளவு பண்பானவர்கள்! பிறரது துன்பத்தைத் துடைக்க ஓடோடி வந்து உதவும் இவர்கள் அல்லவா சான்றோர்கள்!." மனதில் பாராட்டிக் கொண்டு முதியவரிடம் சொன்னான்.

"ஐயா! நான் பிசிராந்தையாரைக் காணச் செல்கிறேன். தாங்கள் இவ்வாறு கேட்டதே எனக்கு மகிழ்ச்சியாய் உள்ளது. நானே சென்று கொள்வேன். தங்கள் உதவிக்கு மிக்க நன்றி"

கீழே விழுந்ததில் அடி ஏதும் படாததால் நடப்பதில் சிரமம் தோன்றவில்லை அவனுக்கு. தூரத்தில் ஒரு வீட்டின் முன்னால் பந்தல் போடப்பட்டு இருப்பதைக் கண்டான். பிசிராந்தையாரின் வீடு அதுவாகத் தான் இருக்கும் என்று எண்ணி வேகமாய் நடந்து வீட்டை அணுகினான். இரண்டு பக்கங்களிலும் திண்ணை வைத்துக் கட்டிய வீடு அது. திண்ணையில் நான்கு பேர் உட்கார்ந்து இருந்ததால் அவன் சற்று தயக்கத்துடன் பந்தல் காலின் ஓரமாக நின்று கொண்டான். அவன் தயங்கியவாறு நிற்பதைக் கண்டதும் ஒருவர் திண்ணையில் இருந்து எழுந்து அவனருகில் வந்தார். கேட்டார்.

"தம்பீ! நான் பிசிராந்தையாரின் மூத்த மகன். தாங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?"

"ஐயா! நான் பக்கத்து நாட்டைச் சேர்ந்தவன். பிசிராந்தையாரைக் கண்டு எனது குறையைக் கூறி போக்கிக் கொள்ள வந்திருக்கிறேன்."

"உள்ளே வாருங்கள் தம்பீ! தந்தை வீட்டில் தான் இருக்கிறார்!"

இப்போது மற்ற மூன்று பேரும் அவனருகே வந்திருந்தார்கள். அவன் கைகால் முகம் அலம்ப ஒருவர் தண்ணீர் எடுத்துக் கொடுத்தார். துடைத்துக் கொள்ள துணி எடுத்துக் கொடுத்தார் இன்னொருவர். அவனை உள்ளே அழைத்துச் சென்று இருக்கையில் அமரச் செய்து விசிறியால் அவனுக்கு வீசினார் இன்னொருவர். குளிர்ந்த காற்று பட்டதும் சற்றே கண் மூடினான் அவன். திடீரென்று ஒரு இனிமையான குரல் கேட்டது.



"இந்த மோர் கலந்த கூழைப் பருகுங்கள்! வெயிலுக்கு மிகவும் நன்றாய் இருக்கும்"

கண்விழித்துப் பார்த்தால் ஒரு பெண்மணி கையில் பாத்திரத்துடனும் முகத்தில் புன்சிரிப்புடனும் அவன் முன்னால் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு கூழைப் பருகி முடித்தான் அவன்.

"வாருங்கள் தம்பீ! தந்தை உங்களுக்காகக் காத்திருக்கிறார்!"

மூத்த மகன் அவனை பிசிராந்தையாரிடம் அழைத்துச் சென்றார். பிசிராந்தையாரைக் கண்டதும் அவனது கண்கள் வியப்பில் விரிந்தன. அவரது வயதை மதிக்க முடியாமல் தடுமாறியவாறு நின்று கொண்டிருந்தவனை அவரது சொற்கள் கலைத்தன.

"தம்பீ! இருக்கையில் அமருங்கள்! நீங்கள் யார் என்று என் மகன் எனக்குச் சொன்னார். தாங்கள் என்னைக் காண வேண்டும் என்று வந்த காரணத்தை நான் அறிந்து கொள்ளலாமா?"

"ஐயா! வந்து.. வந்து.. உங்கள் வயது என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா?"

இதைக் கேட்டதும் பிசிராந்தையார் சிரித்தார். பின் சொன்னார்.

"இதைக் கேட்கவா என்னை வந்து பார்த்தீர்கள்?. எனக்கு வயது எண்பதைத் தாண்டி விட்டது"



"எண்பதைத் தாண்டிவிட்டதா?. என்னால் நம்ப முடியவில்லை ஐயா! உங்கள் தலையில் ஒரு நரைமுடியும் தென்படவில்லை. முகத்தில் ஒரு சுருக்கமும் இன்றி பளபளப்புடன் இருக்கிறீர்கள். இது ... இது ... எப்படிச் சாத்தியம் ஆகும் இந்த வயதில்?."

ஆச்சரியத்துடன் கேட்டவனுக்கு பதிலாக ஒரு பாடல் பாடினார் பிசிராந்தையார்.

யாண்டு பல ஆக நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே. - புறநானூறு பாடல் எண் - 191

இதன் பொருளானது "ஆண்டுகள் பல ஆனாலும் நரை இல்லாமல் எவ்வாறு இருக்கிறீர்கள் என்று கேட்டீர் என்றால் என் மனைவி (விருந்தோம்பலில்) மாட்சிமை பெற்றவள். என் மக்கள் நற்பண்பு நிறைந்தவர்கள். என் தம்பிகள் எனது எண்ணத்துடன் ஒத்துச் செல்வர். என் நாட்டு மன்னனோ தீமையே செய்யாமல் காப்பவன். அதைவிட இந்த ஊரில் அறிவு நிறைந்த அனுபவம் வாய்ந்த பணிவான சான்றோர்கள் பலர் உள்ளனர்." என்பது ஆகும். இவ்வாறு என் மனைவி, மக்கள், உடன்பிறந்தோர், மன்னன், பொதுமக்கள் என்று ஐந்து வழிகளாலும் எனக்குக் கவலை என்பதே இல்லை என்பதால் என்னை முதுமை வந்தடையவில்லை என்று நினைக்கிறேன். சரி. உங்களது குறை என்ன என்று கூறுங்கள்.?

"ஐயா! முதுமையான முகத்தோற்றமே எனது சிக்கல் ஆகும். திருமணமே ஆகாத இந்த இளம் வயதில் முதுமைத் தோற்றம் ஏன் வந்தது என்று கேட்கவே தங்களிடம் வந்தேன். தங்களது பதிலில் இருந்து அதற்கான விடையினைப் புரிந்து கொண்டேன். இனி அதற்கான செயலில் இறங்கி என் குறையைப் போக்கிக்கொள்வேன். தங்கள் உதவிக்கு மிக்க நன்றி. நான் வருகிறேன்."

கைகூப்பி அவரைத் தொழுது விட்டு நடந்து வரும் போது அவன் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p26.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License