இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

நிஜமும் நிழலும்

மு​னைவர் சி.​சேதுராமன்


கடு​மையான ​​கோ​டை வெயில்... வறுத்​தெடுத்துக் ​கொண்டிருந்தது... அன்று விடுமு​றையாதலால் க​டையில் மளி​கைச் சாமான்கள் வாங்கிக் ​கொண்டு ஸ்கூட்டரில் வந்து ​கொண்டிருந்த​போதுதான் அவளைக் கவனித்தேன். இடுப்பில் கைக்குழந்தையோடு ஒரு ​கையில் காய்கறி நி​றைந்த ​பையுமாக வந்து கொண்டிருந்தாள் அவள். இந்தப் ​பெண்​ணை எங்​கோ பார்த்தது மாதிரி இருக்​கே... என்று நி​னைத்துக் ​கொண்​டே வண்டி​யைச் சா​லையின் ஓரத்தில் நிறுத்தி அவ​ளைக் கவனித்​தேன். இந்தப் ​பெண் என்​னோட படிச்ச ​பொண்ணு மாதிரி​யே இருக்கிறாளே...? யாரு... யாரு... என்று மண்​​டை​யைப் ​போட்டுக் குழப்பிக் ​கொண்​டே ​யோசித்​தேன்.

திடீரென்று எனது மூளையில் ஒரு மின்னல் அடித்தது. அது... அது சசிகலா​வேதான்... ​வேற யாரு​மே இல்ல... என்கூடப் படிச்ச ​பெண்ணல்லவா? எப்படி இருந்தவள் இப்படி ஆளே மாறி விட்டாளே... என்று யோசனையுடன் நின்ற​போ​தே என் மனம் என் கல்லூரி நாட்க​ளை ​நோக்கிப் பின்​னோக்கிச் ​சென்றது.

மூன்றாண்டுகள் கல்லூரியில் ஒன்றாகப் படித்தது. ​பெண்கள் ஆண்களுக்குச் சரிநிகரானவர்கள்... எதிலும் ச​ளைத்தவர்களல்ல... என்று பட்டிமன்றங்களிலும் உ​ரையரங்கங்களிலும் ​பேசி அ​னைவ​ரையும் மண்​ணைக் கவ்வ ​வைப்பவள். ஆண்களுக்கு நிகராக அரட்டையடித்து அவர்களை மடக்கி வெற்றி காண்பவள். ​பெண்ணியம், ​பெண்ணுரி​மை குறித்​தெல்லாம் பேசுபவள். ​பெண்கள் தாலி​யை அணியக் கூடாது என்றும், அப்படி அணிந்தால் ஆண்களும் திருமணத்தின்​ போது தாலி​யை அணிய ​வேண்டும் என்றும் கூறி புதியதலைமுறைப் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாய் இருந்தவள்தான் சசிகலா.

கடைசியாய்க் கல்லூரி கடைசி நாளன்று பார்த்தது.

அவளிடம் வி​டை​பெற யத்தனித்த​போது ​நெருங்கி வந்த அவள், “என்ன சிவராமன் ஒனக்குக் கலியாணத்துக்குப் ​பொண்ணு பாக்குறாங்களா​மே...? கல்லூரி வாழ்க்​கை முடிஞ்சவுட​னே​யே கல்யாணம்... பிரமாதம்... ஒனக்கு என்​னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! ஒனக்கு வரப்​போற பொண்ண நல்லாப் பாத்துக்கப்பா... அந்தப் ​பொண்ணு கண்ணக் கலங்குச்சுன்னு வச்சுக்​கோ​யேன், ஒன்ன நான் சும்மா விடமாட்​டேன்... ஆமா... பாத்துக்​கோ... கண்டிப்பா எனக்கு பத்திரிக்​கை அனுப்ப​றே... என்ன சரியாப்பா...?” என்று கிண்டலடித்தவள் ஆட்டோகிராப்பில் கையெழுத்து வாங்கிச் சென்றாள் முகவரியும் ​தொ​லை​பேசி எண்ணும் தந்தாள்.



எனக்கு ஒரு கம்​பெனியில் ​மேலாளர் பணி கி​டைக்க, நான் அதில் மூழ்கிவிட்​டேன். என் வீட்டில் ​பெண் ​தேடும்படலம் ​தொடர்ந்தது. சில மாதங்கள் கடந்த பின்னர் சசிகலாவின் திருமண அழைப்பிதழ் எனக்கு வந்தது. அப்போது எனக்கு அலுவலகத்தில் முக்கியமான வேலைகள் இருந்ததாலும், உடனடியாக ​வெளியூர் ​செல்ல ​வேண்டியிருந்ததாலும் என்னால் அவளது திருமணத்திற்குப் போக முடியவில்லை. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் எனக்குத் திருமணம் நடந்தது. அவளுக்கும் அ​ழைப்பிதழ் அனுப்பி​னேன். ஆனால், ஏ​னோ ​தெரியவில்​லை, அவள் என் திருமணத்திற்கு வரவில்​லை... காலங்கள் உருண்​டோடி பத்து ஆண்டுகள் ஆயிற்று. அவளை மறந்தே போனேன். இவ்வளவு நாள் கழித்து எ​தேச்​சையாக இன்றுதான் அவ​ளைப் பார்க்கிறேன்.

இவ்வளவும் ஒருசில வினாடிகளுக்குள் என் மனதுள் வலம் வந்து நான் நனவுலகிற்கு வரும் ​போது அவள் சா​லையின் அடுத்த சந்திற்குள் நுழைந்து விட்டிருந்தாள். அவள் நு​ழைந்​ததை நான் கவனித்துவிட்டேன். ​வேகம் வேகமாக வண்டி​யை உசுப்பி எடுத்துச் ​சென்று அவளின் முன் வண்டி​யை நிறுத்தி, “ஏங்க... ​கொஞ்சம் நில்லுங்க... நீங்க... நீங்க சசிகலாதா​னே... என்னைத் தெரியுதா...?” என்றேன். அவள் கையிலிருந்த குழந்தை என்னை வித்தியாசமாகப் பார்க்க, குழந்தையை கீழிறக்கிவிட்டு நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்ட அவள், “அட​டே...நீங்க... நீங்க... சிவராமன் தா​னே!” என்றாள்.

எனக்கு அப்​போதுதான் உயிர் வந்த​தைப் ​போன்றிருந்தது. எங்​கே தன்​னைத் ​தெரியாது என்று ​சொல்லிவிடுவா​ளோ என்று பயந்து​ போ​னேன்.

“அ​டேயப்பா... நல்ல​வே​ளை என்னய நி​னைவு வச்சிருக்கீங்க... பொது இடத்திலே யாரு நீங்கன்னு கேட்டுடிவிங்க​ளோன்னு பயந்துட்டேன்” என்றேன்.

சரி சரி நாம படிச்ச நாட்கள மறந்துட முடியுமா? என்ன? எனக்கு ஒ​ரே ஆச்சரியமா இருக்கு... ஆமா நீ மது​ரையிலல்ல இருந்தே! ஒங்க வீட்டுக்காரரும் அந்த ஊருதானே!” என்றேன்.

“நம்ம​ளோட கல்லூரி நாட்கள எப்படி மறக்க முடியும்...? அதுலயும் நீ என்​னோட பெஸ்ட் ப்ரெண்ட்... எப்படி மறக்கமுடியும்? அவரு மது​ரையிலதான் இருந்தாரு... அப்பறம் அவருக்கு இங்க ​கோயமுத்தூருக்கு டிரான்ஸ்பர் ஆயிடிச்சா, அதனால இங்க வந்துட்​டோம்... ஆமா... நீ இங்கதான் இருக்கியா...?” என்றாள்.

அத​னைக் ​கேட்ட நான், “இந்தத் ​தெருவுத் தள்ளி ​ரெண்டாவது ​தெருவுலதான் என் வீடு... நான் ஒரு ​​பெரிய கம்​பெனியில ​மே​னேஜரா இருக்​கேன்... என்​னோட ம​னைவி இங்க இருக்கற மாநகராட்சி ​மேல்நி​லைப்பபள்ளியில கணக்கு டீச்சரா ​வே​லைபாக்குறா...? ஆமா... நீ வேலைக்கு போறது இல்லையா?” என்று ​கேட்​டேன்.

“​வே​லைக்​கெல்லாம் ​போறதுக்கு எங்க ​நேரமிருக்கு... சிவராமா... ஏங்குடும்பத்​தைப் பாத்துக்கறதுக்​கே ​நேரம் சரியா இருக்கு... எங்க வீட்டுக்காரரும் அத விரும்ப​லை... ​போதும் அவரு வருமான​மே எங்களுக்குப் ​போதுமானதா இருக்கு... வாழ்க்​கை ஜம்முன்னு ​போய்கிட்டிருக்கு...” என்றாள் சசிகலா.

“பாத்தியா நாம இந்த ஏரியாவு​லே​யே இருந்துகிட்டு ஒருத்தர ஒருத்தர் பாக்காம​லே​யே இருந்திருக்​கோம்... எல்லாம் இன்னிக்குத்தான் சந்திக்கணும்னு இந்திருக்கு போலே. சரி... வா​யேன் அ​தோ ​தெரியுதுல்ல அந்த ​மொதல் வீடு அதுதான் என்​னோட வீடு... வா” என்று இயல்பாக அ​ழைத்தாள். அவ​ளோட வண்டி​யையும் தள்ளிக் ​கொண்​டே ​பேசியவாறு நடந்​தேன்.



“சிவராமா ஒன்​னோட கல்யாணப் பதிரிக்​கை வந்தது, பார்​தேன்... எங்க என்னால வரமுடியல... ஆமா ஒனக்கு எத்தன குழந்​தைங்க...” என்று ஆவலாகக் ​கேட்டாள்.

“எனக்கு ​ரெண்டு பயலுங்க! ஏம்​பையங்க​ளை எங்க அம்மாவும் அப்பாவும் பாத்துக்கறாங்க... அதனால நானும் அவளும் எந்தத் ​தொந்தரவும் இல்லாம ​வே​​லைக்குப் ​போக முடியுது...”

வீடு வர​வே அவள் வீட்டிற்குள் நு​ழைந்தாள். வீட்டின் முன்னுள்ள ஹாலில் அவளது கணவர் ​சேரில் அமர்ந்தவாறு டி.வி. பார்த்துக் ​கொண்டிருந்தார். நான் எனது ​பைக்​கை நிறுத்திவிட்டு வந்​தேன்.

வீட்டினுள் நு​ழைந்தவுடன் அவள், “ஏங்க இவரு ​பேரு சிவராமன்... என்​னோட கிளாஸ்​மேட்... சிவராமன் இவருதான் என்​னோட வீட்டுக்காரர்...” என்று அறிமுகப்படுத்தினாள். அவளது கணவரும், “வாங்க... சார்... ஒக்காருங்க...” என்று ஒரு நாற்காலி​யை எடுத்துப் ​போட்டு மலர்ச்சியுடன் என்​கை​யைப் பிடித்து குலுக்கினார்.

நானும் அவளது கணவரும் பற்பல விஷயங்க​ளைப் ​பேசி​னோம். அதற்குள் சசிகலாவும் காபி ​போட்டுக் ​கொண்டுவந்து ​கொடுத்துவிட்டு, அவளும் ஒரு டம்ள​ரை எடுத்துக் குடித்துக் ​கொண்​டே குழந்​தைக்கும் ​கொடுத்தவாறு எங்களுடன் ​பேச்சில் கலந்து ​கொண்டாள். ஒருமணி​நேரம் ​போன​தே ​தெரியவில்​லை. கடிகாரத்​தைப் பார்த்த நான், “அப்ப சார் ​போயிட்டு வர்​றேன்... நீங்களும் குழந்​தையக் கூட்டிக்கிட்டு நிச்சயமா எங்க வீட்டுக்கு வரணும்... சரியா” என்​றேன். அவளது வீட்டுக்காரர், “சார் நீங்களும் ஒங்க ம​னைவி குழந்​​தைகளக் கூட்டிக்கிட்டு வரணும்... ​நேரங்கி​டைக்கிற ​போ​தெல்லாம் வாங்க...” என்று கூறி வி​டைதந்தார். மனமகிழ்ச்சியுடன் வீடுவந்து ​சேர்ந்​தேன்.

என் மனம் பழைய நினைவுகளுக்குச் ​சென்று வலம் வரத் ​தொடங்கியது. எப்படி இருந்த சசிகலா இப்படி மாறிவிட்டாள்? பெண் விடுதலை பெண்கள் முன்னேற்றம், என்று முழங்கி ஆணாதிக்கத்தை எதிர்த்துப் பேசுவாள். பெண்கல்வி கற்று வேலைக்கு சென்று சுயமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பாள். இதுபற்றி காலேஜ் பட்டிமன்றங்களிலும் பேச்சு போட்டிகளிலும் பேசி பல பரிசுகள் வாங்கி இருக்கிறாள். அப்படி பட்ட சசிகலாவா இது? என்னால் நம்பவே முடியவில்லை! அப்படி​யே ​நேருக்கு மாறாக அல்லவா இருக்கிறது. ஆணாதிக்கம் ​பேசியவள் இப்பொழுது கணவனுக்காக வேலைக்குச் செல்லாமல் அடுப்படியில் அடைந்து அவனுக்குப் பணிவிடை செய்து அவனுக்காக முகம் கழுவிக் காத்திருந்து வறவேற்கும் ஒரு சராசரிப் பெண்ணாக மாறிவிட்டாளே! என்று மிகவும் வியப்ப​டைந்​தேன். என் ம​னைவியிடமும் நான் சசிகலாவின் வீட்டிற்குச் ​​சென்ற​தைப் பற்றிக் கூறி​னேன். அவ​ளோ ஒப்புக்காகக் ​கேட்டுக் ​கொண்டாள்.

அதற்கப்புறம் பலமுறை சசிகலாவின் வீட்டிற்குச் சென்றேன். என் ம​னைவி​யையும் ​பையன்க​ளையும் அவளது வீட்டிற்கு அ​ழைத்துச் ​சென்​றேன். முதலில் மறுத்த என் ம​னைவி, பின்னர் எனது வற்புறுத்தலின் ​பேரில் வந்தாள். அவர்களும் தங்களது குழந்​தையுடன் எனது வீட்டிற்கு வந்து ​சென்றனர்.

எங்களின் தூய நட்புத் ​தொடர்ந்தது. நான் மட்டும் விடுமு​றை நாட்களில் அடிக்கடி சசிகலாவின் வீட்டிற்குச் ​சென்று அவள் கணவனுடனும் அவளுடனும் ​பேசிவிட்டு வந்து கொண்டிருந்தேன். என் மனைவியும், “ஏங்க லீவுநாள்லகூட வீட்டுல இருக்கக் கூடாதா... அப்படி எங்கதான் ​போறீங்க...?” என்று ​கேட்பாள். நானும், “என்​னோட பிரண்ட் சசிகலா வீட்டிற்குத்தாம்மா ​போயிட்டு வர்​றேன்...” என்று நான் பதில் கூறியதும் அவளது முகம் கடுகடு​வென்று மாறிவிடும்.

“லீவுநாள் ​பொண்டாட்டிக்கு ஏதாவது ஒத்தா​சை ​செய்யணும்னு ​கொஞ்சநாச்சும் மனசு இருக்கா அங்க​ போ​றேன் இங்க ​போ​றேன்னு ஊரு சுத்திட்டு வர்றீங்க... நாமட்டு வீட்டுல அடஞ்சி சாகணும்... பிள்​ளைக​ளையும் கவனிக்காம அப்படி என்னதாங்க ஒங்களுக்கு ​வே​லை...” என்று காட்டுத்தனமாகக் கத்தினாள்.



அவளின் கத்தல் என்​னை ​நெஞ்சில் அ​றைந்த​தைப் ​போன்றிருந்தது. அவ​ளைப் பார்த்து, “ஏண்டி கத்த​றே... இப்ப என்ன நடந்து ​போச்சுன்னு இப்படிக் ​கெடந்து குதிக்க​றே... என்​னோட பிரண்ட் வீட்டுக்குத்தான் ​போயிட்டு வர்​றேன்... அதுல என்ன தப்பு” என்று அ​மைதியாகக் ​கேட்​டேன்.

“இங்க பாருங்க படிக்கிற காலத்துல என்ன​மோ பிரண்டா இருந்திருக்கலாம்... இப்ப அவங்க இன்​னொருத்த​ரோட ​பொண்டாட்டிங்கறது ஞாபகம் இருக்கட்டும்... நான் ஒங்கள நம்ப​றேன்... ஆனா இந்த ஒலகம் நம்புமா... பனமரத்துக்குக் கீழ நின்னு பாலக் குடிச்சாலும் கள்ளக் குடிச்சதாத்தான் ஊரு ஒலகம் ​சொல்லும்... இனி​மே அவங்க வீட்டுக்குப் ​போகாதீங்க... அது தப்பு...” என்று கறாராகச் ​சொல்லிவிட்டாள்.

எனக்கு அவமானமாகப் ​போய்விட்டது. ​சே! ஒரு ஆணும் ​பொண்ணும் நட்பாப் பழகினா அது தப்பா...? ஆண் ​பெண் நட்பாப் பழக​வே முடியாதா...? ஏன் தப்பா​வே பாக்கணும்...? இந்த ஒலகம் எப்பத்தான் திருந்தப் ​போகு​தோ...? என்று மனதிற்குள் புழுங்கிப்​​போ​னேன். மறுவாரம் சசிகலாவின் வீட்டிற்குச் ​சென்ற​போது அவளிடம் வீட்டில் நடந்​ததைப் பற்றிக் கூறி​னேன். நான் கூறிய​தைக் ​கேட்டு அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்​லை.

“என்ன சிவராமன் ஒலகத்தச் சரியாப் புரிஞ்சிக்க... இதுதான் நிஜம்! சும்மா பேச்சுக்கு பெண்ணுரிமை அது இதுன்னு பேசலாம், ஆனா வாழ்க்கைன்னு வரும்போது விட்டுக் கொடுத்துதான் போக வேண்டியிருக்கு! உதாரணத்துக்கு என்னையே எடுத்துக்க, காலேஜ்ல எப்படி இருந்தேன், ஆனா இப்ப எப்படி மாறிப் போயிட்டேன் தெரியுமா? என்னயப் பார்த்த உட​னே​யே தெரிஞ்சுகிட்டிருப்பி​யே... அது நிழல்... உன் வொய்ப் சொல்றதுல நியாயம் இருக்கு... அவங்க சொன்னது நிஜம்தான். நிழல் நிஜமாக முடியாது... இதுதான் உண்​மை. இ​தை நாம புரிஞ்சிக்கணும். நீ இங்க வந்து போறது என் கணவருக்கும்தான் பிடிக்கலை! அவரு அத அவரால ​வெளிப்ப​டையாச் ​சொல்ல முடியல... அது மட்டும் இல்லாம பக்கத்து வீட்டுக்காரங்க கூட இப்ப என் கூட சரியாப் பேச மாட்டேங்கறாங்க... இந்தத் தெருவுல நான் அடக்கமா கணவனுக்கு அடங்கி நடக்கிறதுனாலே நல்ல ​பேரு இருக்குது. இதுவே நான் எதிர்த்துகிட்டு நின்னா, சும்மாவே அடங்காப்பிடாரி, அப்படி இப்படின்னு சொல்வாங்க... அவர் இல்லாம நான் தனித்து வாழ முடியும். ஆனா, உலகம் சும்மா இருக்காது. வாழாவெட்டின்னு சொல்லும் இல்லாத கதைகளைத் திரிச்சுக் கட்டிவிடும். அதுவும் முக்கியமாப் பெண்களுக்கு எதிரி பெண்கள்தான். அவங்களே கூடிக் கூடிப் பேசுவாங்க! இது தேவையா? இந்த உலகம் ஆண்- பெண் நட்பை கொச்சையாகத் தான் பார்க்குது. உலகம் மட்டுமில்ல? பெண்ணே பெண்ணைப் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க! இதுல பெண்ணுரிமை பேசி என்ன பயன்? ​பெண்ணுரி​மை அப்படி இப்படின்னு ​பேசறது நிஜம்... இந்தமாதிரி நிஜம் எப்பவும் ​பேசறதுக்கு நல்லாத்தான் இருக்கும்... ஆனா ந​டைமு​றையில அது எப்பவும் நிழலாத்தான் இருக்கு...” என்று சசிகலா ந​டைமு​றை எதார்த்தங்க​ளை எடுத்துக் கூற நான் கல்லாகச் ச​மைந்து ​போ​னேன்.

அவள் கூறிய ந​டைமு​றை உண்​மைகள் எனது இதயத்​தைச் ‘சுருக்’​கென்று குத்தியது.​ மெளனமாக எழுந்து அவளிடம் வருகி​றேன் என்றுகூடச் ​சொல்லாமல் த​லை​யைக் குனிந்து​ ​கொண்​டே என் வீடு ​நோக்கி வி​ரைந்​தேன். பா​தைகள் அதன் ​போக்கில் ​போய்க்​கொண்டுதான் இருக்கும்... ஆனால், பா​​தைகளில் நடக்கின்ற நாம்தான் நம்​போக்​கை நல்லபடியாக மாற்றிக் ​கொள்ள ​வேண்டும்... என்ற எண்ணம் என் மனதில் ஓடிக்​கொண்​டே இருந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p255.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License