இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

பெருமாள் வாத்தியாரு...

மு​னைவர் சி.​சேதுராமன்


அன்று அ​னைவரும் பள்ளிக்கு வரு​கை புரிந்திருந்தனர். மற்ற நாள்க​ளைப் ​போல் அல்லாமல் யாரும் விடுமு​றை​யோ அனுமதி​யோ கூறாமல் மிகுந்த அக்க​றையுடன் வந்திருந்தனர். த​லை​மையாசிரியர் தா​மோதரனுக்கு ஆச்சரியம். யாராவது எ​தையாவது ​சொல்லி விடுப்​போ அனுமதி​யோ ​கேட்பர். ஆனால் இன்று யாரும் எ​தையும் ​கேட்கவில்​லை.

அதிலும் அ​னைவரும் ​வெகு சீக்கிரமாக​வே பள்ளிக்கு வரு​கை தந்திருந்தனர். த​லை​மையாசிரியருக்கு விவரம் ​தெரியாமல் இல்​லை. ​தெரிந்தும் அத​னை அவர் ​வெளிக்காட்டிக் ​கொள்ளவில்​லை. ஆம் கணித ஆசிரியரின் ஓய்வுதான் அன்று நிகழ இருக்கும் விழா. அன்று ஒவ்​வொருவரும் ஒவ்​வொரு ​வே​லை​​யை வலிய வாங்கிக் ​கொண்டு ​செய்தனர். மா​லை​வே​ளை சிறிய அ​றை​யொன்றில் த​லை​மையாசிரியரின் த​லை​மையில் வி​டைதருவிழாத் ​தொடங்கியது. அ​னைவரும் கணித ஆசிரியர் ​பெருமாள் தங்களுக்கும் பள்ளிக்கும் ஆற்றிய அரும்பணிக​ளைப் பட்டியல் ​போட்டுப் ​பேசினார்கள்.

ஒவ்​வொருவரும் அவ​ரைக் ​கொடுத்து ​வைத்தவர் என்று பாராட்டினர். ஆம் அவர் ​கொடுத்து ​வைத்தவர்தான். அவரு​டைய இரு மகன்கள் நன்கு படித்து ​பெரிய ​வே​லையில் இருந்தார்கள். அவர்களுக்குத் திருமணமாகி குழந்​தைகளும் இருந்தன. நடுவயதி​லே​​யே அவரது ம​னைவி இறந்துவிட்டதால் ​பெருமாள் ஒண்டிக் கட்​டையாகக் கட​மைக​ளை முடித்துவிட்டு ஹாய்யாக இருந்தார்.

இதனாலும் இவ​ரை அங்குள்ளவர்கள் எல்லாம் ​கொடுத்து ​வைத்தவர் என்று எப்​போதும் பாராட்டிக் ​கொண்​டே இருப்பர். 33 வருடங்கள் பணியாற்றி இன்று ஓய்வு ​பெறும் ​பெருமாள் வாத்தியார் மீது அ​னைவருக்கும் நல்ல மதிப்பிருந்தது. யார் எந்த உதவி ​கேட்டாலும் ஓ​டோடிச் ​சென்று உதவும் உதாரண குணம் மிக்கவராக அவர் இருந்தார். யாருக்கு உதவி ​தே​வை​யென்றாலும், அவர் முன்னால் நின்று ​செய்வார். அதனால் அவரது ஓய்வு ​பெறும் நா​ளை ​பெரிய அளவில் ​கொண்டாட ​வேண்டும் என்று உடன் பணியாற்றிய ஆசிரியர்களும் ஊரில் உள்ள அவரது முக்கியமான நண்பர்களும் முடிவு ​செய்து இன்று த​லை​மையாசிரியர் த​லை​மையில் கூடி விழா நடந்து ​கொண்டிருந்தது.

அ​னைவரும் ​பெருமாள் வாத்தியா​ரையும் அவரது குணத்​தையும் கண்களில் நீர்வழிய எடுத்து​ரைத்தனர். அதிலும் அந்தப் பள்ளியின் உதவியாளர் ​தேம்பித் ​தேம்பி அழுது​கொண்​டே ​பெருமாள் வாத்தியார் தனக்கு உடல்நி​லை சரியில்லாத​போது அவர் தனது ரத்தத்​தைக் ​கொடுத்துக் காப்பாற்றிய​தைக் கூற​வே அங்கிருந்​தோர் அ​னைவரும் கலங்கிவிட்டனர்.



அதன் பின்னர் ​பெருமாள் வாத்தியார் ஏற்பு​ரையி​னைச் சுருக்கமாகக் கூற​வே விருந்​தோடு அவ்விழா நி​றைவுற்று ஆளுயர மா​லை​யைப் ​போட்டு ​அவ​ரை ஊர்வலமாக அ​ழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு அ​னைவரும் க​லைந்து ​சென்றனர். அவரது வீட்டில் அவரும் அவர் வளர்க்கும் நாய் மட்டு​மே இருந்தனர். ​வேறு யாரும் து​ணைக்கு இல்​லை.

மணி ஆறு மட்டு​மே ஆனதால் அவரால் வீட்டில் இருக்க இயலவில்​லை. எப்​போதும்​போல் ​செல்லும் பிள்​ளையார் ​கோவில் அரசமரத்தடிக்​கே ​சென்று அங்கு பிள்​ளையா​ரை வணங்கிவிட்டு அங்குள்ள பட்டியக் கல்லில் சற்று ஓய்வாகப் படுத்திருந்துவிட்டு பின்னர் எழுந்து அங்கிருந்த மீனாட்சி பவனில் நாலு இட்டலி​யைச் சாப்பிட்டுவிட்டு தனது நாய்க்கும் இட்டலி​யை வாங்கிக் ​கொண்டு வந்து நாய்க்குப் ​போட்டுவிட்டுப் படுத்துவிடுவார்.

ஓய்வாக இருப்பவர்கள் அ​னைவரும் அந்த அரசமரத்துப் பட்டியக்கல்லுக்​கே வந்து அமர்ந்து ​பேசிக் ​கொண்டிருப்பர். அது வாடிக்​கையாகிப் ​போன ஒன்றாக இருந்தது. ​​பெருமாள் வாத்தியாரும் எப்​போதும் ​போல் அங்கு வந்து​பேசாமல் படுத்துவிட்டார் அவரது நாய் அவரது கால்மாட்டில் படுத்துக் கிடந்தது.

அப்​போது அங்கு வந்த குழந்​தை​வேல் பிள்​ளை எப்​போதும்​போல், “என்ன ​பெருமாள் சார் எப்ப வந்தீங்க...? இன்னக்கி ரிட்டயர்டு ​சொன்னீங்கள்ள... என்னால வரமுடியல... ம்...ம்... ஒங்களுக்கு என்ன சார்... எந்தப் பிரச்ச​னையும் இல்​லை... பசங்க ​ரெண்டு ​பேரும் ஒங்களத் தாங்கு தாங்குன்னு தாங்குவாங்க... எனக்​கெல்லாம் அப்படியா... எல்லாத்துக்கும் ஒரு ​கொடுப்பி​னை ​வேணும் சார்... நீங்க ​கொடுத்து வச்சவரு... சரி நானு வர்​றேன் நா​ளைக்குப் பார்ப்​போம்...” என்று கூறிவிட்டு எந்தப் பதிலுக்கும் காத்திராமல் வீட்​டை ​நோக்கி ந​டை​யைக் கட்டினார்.

அவர் ​சென்றவுடன் அந்தத் தி​சை​யை​யே பார்த்துக் ​கொண்டிருந்த ​பெருமாள் வாத்தியார், “அவருக்​கென்ன... எ​தையாவது ​சொல்லிட்டுப் ​போவாரு என்​னோட ​வேத​னை யாருக்குப் புரியும்... அது புரிஞ்சிக்கக் கூடியதா...? எல்லாம் தர்மாவுடன் ​போயிருச்சு...” என்று மனதிற்குள்​ளே​யே முணகிக் ​கொண்டவர் கண்க​ளை மூடினார்.

அவரது மனதில் ப​​ழைய சம்பவங்கள் அணிவகுத்து வந்தது... இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகி இருவரும் ​சென்றுவிட வீ​டே ​வெறிச்​சோடி இருந்தது. தன் ம​னைவி தர்மாம்பாள் இறந்து பல ஆண்டுகளாகியும் தன் மகன்க​ளை வளர்த்து ஆளாக்கி இன்று ஊ​ரே ​மெச்சும் நி​லையில் ​வைத்துவிட்டார். இத​னைப் பார்க்க தர்மாவிற்குத்தான் ​கொடுத்து ​வைக்கவில்​லை, பாவம்! அல்ப ஆயிசி​லே​யே ​போய்ச் ​சேர்ந்துவிட்டாள். அவள் ​கொடுத்து ​வைத்தவள், ஆனால் நான்...

திருமாணமான பின்னர் இந்தப் பயக அப்பான்னு திரும்பிப் பாக்க​வே இல்​லை​யே, ​பொண்டாட்டி​யே ​போதும்னு இருந்துட்டானுக​ளே... எப்பாவது வந்தா கால்ல சுடுதண்ணிய ஊத்திக்கிட்டது மாதிரி மறுநா​ளே ஓடிப் ​போயிடுவாணுக... தர்மா இ​தை​யெல்லாம் நான் யாருக்கிட்ட ​போயிச் ​சொல்ல முடியும்... நீ​யே ​சொல்லு?



இப்படித்தான் ஒருக்கா எனக்கு ஒடம்புக்கு முடியாமப் ​போயி ஆசுப்பத்திரியில ​பக்கத்து வீட்டுக்காரரு ​சேத்துட்டுப் பயகளுக்குத் தகவல் ​சொன்னவுட​னே​யே வந்தாணுக... வந்தவங்க அப்பா அப்படி இருங்க... இப்படி இருங்கண்ணு அறிவு​ரை ​சொன்னானுக​ளே தவிர எங்க கூட வந்து இருங்கப்பா... ஏப்பா இப்படிக் கிடந்து கஷ்டப்படறீங்கண்ணு ஒரு வார்த்​தைகூடச் ​சொல்லலி​யே... தர்மா... நா​​னே ​வெக்கத்த விட்டுக் ​கேட்டதுக்குப் ​பெரியவன், “அப்பா நாங்க இருக்கறது டவுனு ஒங்களுக்கு ஒத்துவராதுப்பா... நாங்க ​வேணுன்னா ஒங்களுக்குப் பணம் அனுப்பு​றோம்... நீங்கபாட்டுக்கு ​வேணுங்கறத வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டு இங்​கே​யே இருங்க... நாங்க வந்து ஒங்களப் பாத்துட்டுப் ​போறம்...” என்றா​னே...

அடப் பாவிகளா... ஒங்கள வளக்கப்பட்ட பாடு என்ன? அ​தை​யெல்லாம் ​கொஞ்சநாச்சும் ​நெனச்சுப் பாத்தீங்களா? ஏண்டா நான் என்ன பணத்துக்கு ஆ​சைப்படுறவன்னு ​நெனச்சிங்களா...? அடப் ​போங்கடா ​போக்கத்தவனுகளா... ஒங்க பணம் யாருக்குடா ​வேணும்... ஒரு சல்லிக்காசுகூட ​வேணாம்டா... ஒங்கம்மா இருந்தா இப்படி என்ன விட்டுருப்பாளாடா...? தர்மா நானு அவங்ககூடப் ​போயி இருப்​​பேன்னு ​நெனச்சியா... ஒருக்காலும் ​போக மாட்​டேன்... நீ வாழ்ந்த இந்த இடத்தி​லே​யே, நானும் இருந்து என்​னோட க​தைய முடிச்சிக்கிடு​வேன் தர்மா...!

அந்தச் சின்னப் பயகூட என்​னைய ஒப்புக்கு வாப்பான்னு ​சொல்லமாட்​டேன்னுட்டா​னே... அண்ணன் ​சொல்றதுதான் சரின்னு வாயத் ​தொறக்காம கல்லுமாதிரி இருந்துட்டா​னே... அடப் ​போங்கடா... எனக்கு முடியலன்னு ஒங்ககிட்ட நான் வந்து ​கெஞ்சு​வேன்னு பாத்தீங்களா... ​டேய் அது இந்தச் ​ஜென்மத்துல நடக்காதுடா... என்​னைய எந்தர்மா அந்தளவுக்கு விட்டுட மாட்டாடா... அவ நான் கஷ்டப்படுறதப் பாத்துக்கிட்டு இருக்கமாட்டா... ஒட​னே அவ​ளோட என்னயும் ​கூட்டிக்கிடுவா... என்ன... தர்மா... அப்படித்தா​னே... என்று கண்களில் நீர்வழிய வானத்​தை​யே உற்றுப் பார்த்துக் ​கொண்டிருந்தார்.

வானத்து நட்சத்திரங்களுக்கி​டை​யே அவரு​டைய ம​னைவி தர்மாம்பாள் இரு​கைக​ளையும் நீட்டி அவ​ரை அ​ழைப்பது​போலிருந்தது. அ​தைப் பார்த்த ​பெருமாள் வாத்தியார், “தர்மா... நானு ஓங்கூட​வே வந்தர்​றேன் தர்மா... வந்தர்​றேன்... எனக்கு இங்க என்ன ​வே​லை...? எனக்குன்னு எதுவு​மே இங்க இல்ல... பிறகு நானு இருந்து என்ன ​செய்யப் ​போ​றேன்... வந்துட்​டேன் தர்மா...” என்று கண்க​ளை மூடியபடி​யே முணகினார். அவருக்கு ​நெஞ்​சைப் பி​சைவது ​போலிருந்தது, அப்படி​யே கண்ணயர்ந்தார்.



அவரது நாயும் சுற்றும் முற்றும் ஓடி ஓடிப் பார்த்துவிட்டு அவது த​லைமாட்டிற்குக் கீழ் வந்து படுத்துவிட்டது. விடிந்து ​நெடு​நேரம் ஆகியும் ​பெருமாள் வாத்தியார் எழுந்திருக்கவில்​லை... ​கோவிலுக்கு வந்த அவரது நண்பர்கள் அவ​ரைத் ​தொட்டு எழுப்பினார்கள். அவரது உடல் அ​சைவற்றுக் கிடந்தது. ஊரில் ​செய்தி பரவியது...

“அட பாருய்யா... ​பெருமாள் வாத்தியார் ​கொடுத்து வச்சவருதாய்யா... ​நேத்து ரிட்டயர்டு ஆயிட்டாரு... இன்னக்கிப் பாரு யாருக்கும் எந்தச் சங்கடமும் ​கொடுக்காம அலுங்காமக் குலுங்காமப் ​போயிட்டாரு... இருந்தா அவரு மாதிரி இருக்கணும்யா... அவரு ​கொடுத்து வச்சவருய்யா... ​நோயி​நொடின்னு படுக்காமா சட்டுன்னு க​தைய முடிச்சிக்கிட்டாருய்யா...” என்று அ​னைவரும் ​பேசிக் ​கொண்டார்கள். இவற்​​றை​யெல்லாம் இயற்​கை​யோடு இயற்​கையாக இருந்து ​பெருமாள் வாத்தியார் கவனித்துக் ​கொண்​டே இருந்தார். அவருக்குச் சிரிப்புத்தான் வந்தது. அப்​போது அரசமரத்து இ​லைகள் சலசல​வென்று காற்றில் அ​சைந்தாடின. அது அவ்வூ​ரா​ரைப் பார்த்து ​பெருமாள் வாத்தியார் சிரிப்ப​தைப் ​போன்றிருந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p256.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License