இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

புதுப்பொண்ணு

எஸ். மாணிக்கம்


'அப்படி என்ன ஒசந்த ரோமாபுரி பேரழகியோட குடி வந்திருக்கான் பொண்டாட்டிய வெளிய காட்டாம பொத்தி வெச்சுருக்கானே...'

கவனம் மொத்தமும் வாணிக்கு சிதைந்துப் போய் விட்டது. அன்றைய வழக்கமான தனது வீட்டு வேலைகளில் ஈடுபாடற்று, ஜன்னல் வழியாக அடிக்கடி பார்வையை ஓடவிட்டாள்.

உண்மையாகவே அழகு தூக்கலாகத்தான் இருப்பாளோ...? ஆமா, புதுப்பொண்டாடினு தன்ன நிமித்திக் காட்டுவா, அவனும் ஒருவித கிரக்கம் உள்ளுக்குள் புகுந்த மாதிரி சிலிர்த்துக் கிடப்பான். ‘ ம்...' ஜோடியாப் பார்க்க முடியலயே...' வருந்தினாள். அடுத்தவங்க விசயத்தை, தெரிந்து கொள்வதிலே அவளுக்கு அப்படியொரு ஆர்வம்...

அந்த இளைஞன்தான் வரண்டாவில் செப்பல் ஸ்டான்டை வைத்தது, போர்டிகோ கொக்கியில் ஒலியிசைக்கும் மணிக்கொத்து மாட்டியது, வீட்டு மாடியில் டிஷ் ஆண்டனா இணைப்புக் கொடுத்தது, என அவ்வப்போது தென்பட்டுக் கொண்டிருந்தான். ஆனா... அவள்...?

‘ஆபீஸ்ல தன்னோட வேலை செஞ்ச பொண்ணாம், மூணு வருசச் காதலாம், வீட்ல சுத்தமா சம்மதிக்காததால திடீர்னு ஒரு நாள் அவளையே கட்டிக்கிட்டானாம். அதுல ரெண்டு வீட்டுக்கும் ஏகமா சண்டையாம். ‘உனக்கும்,எனக்கும் வேலையிருக்கையில் எதுக்கு பின் வாங்க' ன்னு சேந்தாப்புல மாத்தல் வாங்கிட்டு இங்க வந்துட்டாங்க. ஏந்தம்பிக்கு நெருக்கமானவனாம் அதான் கூட வாடகை கிடைக்கும்னு பின்னாடியிருக்க சின்ன வீட்டுக்கு நான் போய்ட்டேன். இந்த காலத்துப் புள்ளைங்களுக்குத் தைரியம் அதிகம் வாணி. ஓ... வயசுப் பொண்ணுதான் வழியப் போயாவது பழகிக்கோ,'

‘வீட்டிக்காரக்காவுக்கு கடுகளவுகூட விவஸ்த கிடையாது, வழியப் போறளவுக்கு அவ என்ன பெரிய சினிமா நடிகையா? நம்ம மாதிரி சாமான்ய மனுஷிதான, தேவனா அவளா வரட்டுமே பார்த்துக்களாம்...'

“அக்கா,மினரல் வாட்டர் ஒரு ஜக் கொடுங்க, இந்த லையனுக்கு தண்ணி வண்டி வரவும் வாங்கித் தாறேன், என் ஒய்புக்கு சாதா தண்ணி ஒத்துக்காது. அதான்...”வாசலுக்கு வந்த வாணி, கையில் சில்வர் ஜக்கோடு நின்றவனை கவனித்ததை விட, கூட அவள் வரவில்லையே என்ற ஏமாற்றத்தை உணர்ந்து, கொஞ்சமாய் சிரிப்புக் காட்டி, தண்ணீர் தரும் உதவியில் ‘உங்க மனைவிய அனுப்பியிருக்கலாமே பொம்பளைங்க அறிமுகம் ஆகியிருப்போம்ல'ன்னு கேட்டு விட வேண்டியதுதான். தனக்குள் திட்டம் வகுத்தவாறே தண்ணீர் கொணர்ந்து கொடுக்கவும் ‘மோகன்...' ன்னு அவள் குரல் எதிர் வீட்டிலிருந்து வேகமாய் வர, அந்த இளைஞன் பதறியடித்து ஓடினான்!



மக்கிய காகிதத்தில் தீபற்றிய,பொசு,பொசுப்பானது வாணியின் எண்ணம்.

“ச்சி... ஆம்பளையப் பாரு ஓடுறான், ஒட்டிக்கிட்ட புது ஜோடில இப்ப மணக்க, மணக்கத்தான் விட்டுப் பிரியாம இருப்பாங்க” கொஞ்சம் சத்தமாக முணங்கியபடியே டிபனில் தயிர் சாதம் திணித்து, ஊறுகாய் கூட வைக்காது மூடியை மூட நிறைய சிரமப்பட்ட, மனைவியின் அருகில் சென்ற,செல்வம் “ஓ நெனப்பெல்லாம் எதிர் வீட்டு பொண்ணு அழகா, எடுப்பா இருப்பாளா, சேலை கட்டிருப்பாளா, சுடிதாரா, கழுத்து நிறைய நகை அணிந்திருப்பாளா, நல்லவளா, சிடுமூஞ்சிக்காரியானு தெரிஞ்சிக்கிறதுலதானே இருக்கு” இப்படிச் சொல்லவும், பார்வையில் நெருப்பு உதிர்த்து, ‘சாப்பாட்டை எப்படியும் எடுத்துப் போங்க' என்பது போல் வேகமுடன், விசுக்குனு கழுத்து வெட்டி, சமயக்கட்டுக்குள் நுழைந்து கொண்டாள்.

சலிப்பான வழக்கத்துடன் டிபனை மூடி கைப்பையில் வைத்துக் கொண்டு வேலைக்குக் கணவன் சென்று விட, முன் கிரில் கேட்டைப் பூட்டும் சாக்கில் வந்தவள், ஓரக் கண்ணால் அங்கே நோட்டமிட, அதே மோகன்தான் டூவீலரை வாசலில் நிறுத்தி, துணிப்பையுடன் கதவு திறந்து, நுழைந்ததும் பூட்டிக் கொண்டான். பார்சல் சாப்பாடு வாங்கி வந்திருப்பான் போல்.

வீட்டுக்காரக்கா இருந்தாலும் ‘வீடு வசதிப்படுதா'ன்னு கேட்பது போல், உளவு பார்த்து வரச்சொல்லி விசாரித்திருக்கலாம். இன்னிக்கீனு ‘மூத்த மக கூப்பிட்டாள்'ன்னு போயிட்டாங்களே.

வாணிக்கு தலை சுற்றாததுதான் குறை. கூடிய சீக்கிரத்தில் எதிர் வீட்டின் எல்லாம் அறிந்துவிட வேண்டும். இல்லையேல் சுற்றியே விடும்!

‘ஓ...இன்னும் இவளால் எதுவும் தெரிஞ்சிக்க முடியலயோ, 'செல்லவத்திற்கு ஆத்திரம் பொத்துக் கொண்டாலும், வெளிக்காட்டினால் சூறைக்காற்றில் மரமென ஆடிவிடுவாள். பெற்றோரின் விரும்பத்தகாத செயல்கள் வளரும் பிள்ளையை மனப் பாதிப்புக்குள் தள்ளிவிடும். இதையெல்லாம் வாணி சிந்திக்கவே மாட்டாள். செல்வம்தான் ‘அவளுக்கா நல்ல புத்தி வந்து திருந்தட்டும்' என்று பொறுமையைக் கடைப்பிடித்துக் கொள்கிறான்.

இன்றும் அதே நிலையில்தான், பள்ளி வேனில் மகனை அனுப்பியதும், தான் கிளம்ப அறைக்குள் செல்லவும்,

“அக்கா...” பெண் குரல்

“வாணி யாருனு பாரு” என்றான்.

வாசலுக்கு போனாள், வாணி அங்கே வலது கை கம்புக்கூட்டுக்கு அலுமினிய ‘ஸ்டிக்' கொடுத்து, முகச்சிரிப்பாக நின்றிருந்தாள், அவள்?

‘யார் நீங்...' கேட்க வாணி முயன்ற போது அவளாகவேச் சொன்னாள்,

“எதுத்த வீட்டுக்கு நேத்து குடி வந்தோம், என்பேரு கவிதா இன்று நல்லநாள்னு பால் காய்ச்சிறோம் கண்டிப்பா நீங்க வரனும்”



அவ்வளவுதான் வாணி, சட்டென சரிந்து, நெகிழ்ந்து, வெக்கித்தாள்... இப்படி இருப்பாளா...?அப்படி இருப்பாளா...? என்ற தனது தறிகெட்ட எண்ணங்களின் அவளா... இவள்! எச்சில் விழுங்கினாள், தரம் தாழ்ந்த கற்பனை,யோசனையை, ஆர்வத்தில், ஓர்வித வெறுப்பை, தன்னைச் சுற்றி வைத்திருந்ததை நினைத்துப் பார்த்து, ‘பெரியளவு ஊனத்தை உள்ளத்தில் வைத்திருந்திருக்கோமே...' தனக்குத்தானே முகம் சுழித்தாள்.

“இந்தாங்க அக்கா நேத்து வாங்கிப்போன மினரல் வாட்டர்” அவளின் ஆச்சரிய அதிர்ச்சிச் சிந்தனையைக் கலைத்த மோகன்,மேலும் அவனே “ரயில்வே ஸ்டேசனல இறங்கையில் பிளாட்பார இடவெளியில் ‘ஸ்டிக்' விழுந்துருச்சு ‘ஸ்டிக்' இல்லாம வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிட்டா கவிதா. உங்களிடம் தண்ணி வாங்க வந்தப்பகூட லேச விழுந்துதான் சத்தமிட்டா, அதான் ஓடினேன். உடனே நண்பனுக்குத் தகவல் சொல்லவும் இரவுதான் புது ‘ஸ்டிக்' வாங்கி வந்து கொடுத்துட்டுப் போறான்.‘ஸ்டிக்'இல்லாமத்தான் அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்களிடம் பால் காய்ச்சும் விசயத்தை முன் கூட்டியே சொல்ல முடியல அதுக்கு மன்னிக்கனும்” என்ற போது

“அதுக்கென்னப்பா இப்ப சொல்லிட்டீல” புன்னகைத்தாள், கவிதா.

“அக்கா, இன்னும் வீடுகளில் சொல்லிட்டு கையோட வீட்டுக்காரம்மாவ கூப்பிட்டுக்றோம்... நீங்க சாரோட வாங்க. நெருங்கிய உறவுகள் ஒதுக்கிட்டாங்க, இனிமே நீங்கதான் சொந்தங்கள் இந்த தண்ணிய ஊத்திக்கிட்டு ஜக்க தாங்கக்கா” மோகன் கை நீட்டவும், “இவ்வளவு நெருக்கமா பேசிட்டு வாங்கிய குடி தண்ணிய திரும்ப நீ தந்தாலும் நான் வாங்கறது நியாயமா? கொண்டுபோ தம்பி வாறேன்” வாணியின் மனசுக்குள்ளிருந்து வார்த்தைகள் வந்தன!

“ரொம்ப சந்தோஷம்க்கா” என்று அந்த இளம் தம்பதிகள் நகரவும்,

அங்கே வந்து நின்ற,கணவனிடம், “என்னங்க ஒரு ரெண்டு மணி நேரம் அனுமதி கேளுங்க நாமளும் அந்த வீட்டுக்குப் போகலாம்” என்ற வாணியிடம் முதல் முறையாக மாற்றம் உணர்ந்தான் செல்வம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p257.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License