Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                                    இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...

Content
உள்ளடக்கம்


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

இனி எதிர்காலம்.....!

"இளவல்" ஹரிஹரன்


இரயில் பயணிகளுக்கான காத்திருப்பு அறையில் காத்திருக்கிறேன். காலைப் பொழுது. ஏராளமான கூட்டம்.

காலைக்கடன்களை கழிக்கவும், அடுத்து வரும் தத்தம் வண்டியைப் பிடிக்கவும் அலைமோதுங்கூட்டம்.

"பாத்ரூம்லே தண்ணி வரலே..." யாரோ புலம்பும் சத்தம்.

" பைட்னே கி ஜகஹ் தே தோ பாயி" உட்கார இடங்கேட்கும் அந்த ஊர்வாசிகள்.

உட்காரும் இடங்களிலெல்லாம் மூட்டை முடிச்சுகளை அடைத்து வைத்திருந்தால் யார் தான் இடங்கேட்காமல் இருப்பார்கள்.

ஒரே கலவையான முகங்கள் ஒவ்வொருவர் கழுத்திலும் மாலையாய் மஞ்சள் பட்டியுடன் அடையாள அட்டைகள்.

விசாரித்ததில் தீர்த்த யாத்திரை முடிந்து அவரவர் ஊருக்குத் திரும்பக் காத்திருக்கிறார்கள்.

பிரயாணக் களைப்பு தென்பட்டாலும் எல்லோர் முகத்திலும் ஓர் ஆனந்தரேகை படிந்திருந்தது.

ஒருவேளை சுற்றுலா வெற்றிகரமாக முடிந்த மகிழ்ச்சியாக இருக்கலாம். எல்லோரும் அவரவர் வேலைகளில் மும்முரம்.

காத்திருப்பதில் அவர்களுக்கு அர்த்தமுண்டு. ஆனால் தனக்கு ... ... ...

இனி எதிர்காலம்.....!

திடீரென்று வரவில்லை. ஓரளவு எதிர்பார்த்தது தான்... ஆனால் இப்படி ஒரே நாளில் அழைத்து கையில் மூன்று மாத சம்பளம் ஒப்படைத்துவிட்டுத் தங்கக் குலுக்கலுக்கு ஆளாக்கி விட்டனர்.

அவ்வளவு தான்... இனி வேலை இல்லை. மூன்று மாத சம்பளம் எவ்வளவு தூரம் கைகொடுக்கும் எனத் தெரியாது.

சுற்றிலுங் கடன்... வேலைக்குச் சேர்ந்த புதிதில் கைநிறையச் சம்பளம் தந்து, அடுத்தடுத்து டூ வீலர், ப்போர் வீலர் கடன், வீட்டுக்கடன், தனிக் கடன், தங்கை திருமணக்கடன்... இப்படி எல்லாக் கடன்களைக் கொடுத்துவிட்டு கடனாளியாக்கி இருந்தார்கள்.



இப்போது வேலையைப் பறித்துவிட்டு நடுத்தெருவில் கடனாளியாய்...

இனிப் புதிதாய் மீண்டும் தொடக்கத்திலிருந்து... ... வேலைதேட வேண்டும்...முடியுமா...? முடியாது தான்... புதிதாய்ப் படித்துவிட்டு புதிதாய் வந்த கணிணிப் பாடங்களையெல்லாம் முடித்தவர்களுடன் போட்டி போட முடியாது. வேலையின்றி நிற்க வேண்டும். இல்லையேல் குறைந்த சம்பளத்தில் சேரவேண்டும். ஆனால், சேர்க்க மாட்டார்கள். அவர்களுக்குப் புதிய ரத்தம்தான் வேண்டும். அப்போது தான் மாங்குமாங்கென்று வேலை பார்ப்பார்கள்.

வீட்டிற்கு விஷயம் தெரியாது. பெண்டாட்டி பிள்ளைகளைக் காப்பாற்றியாக வேண்டுமே... அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதே உத்தமம். இல்லையேல் அவர்களும் பதறி, பதட்டத்தைக் கூட்டுவார்கள்.

அந்த எண்ணம் தனக்கு அப்போது ஏன் தோன்றியது எனத் தெரியவில்லை. அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால், மற்றவர் எதிர்காலம்... பொறுப்பற்ற செயலாகத் தூற்றுவார்கள். என்ன செய்ய...

"சாப்... பேக் கா டூட்டே ஜிப் பின் டால்னா ஹை...?" காலைச் சுரண்டி ஒருவன் கேட்டுக் கொண்டிருந்தான்.

கைநிறைய ஜிப் வளையங்கள், சின்னச்சின்ன ஆணிகள் நிறைந்த டப்பா, ஒரு தோல் பை.

காலை இழுத்தவாறுஂ நடந்து வந்திருப்பது தெரிகிறது. போலியோவால் தாக்கப்பட்டவன் போல...

அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அருகில் இருந்தவர் தன் பையைக் காட்டி ஜிப்பைப் போடச்சொன்னார்.

மூன்றே நிமிடத்தில் புதிய ஜிப் போட்டுவிட்டு இருபது ரூபாய் பெற்றுக் கொண்டான். அவனே வலியச்சென்று பை கொடுத்தவர் கால்களைப் பார்த்து செருப்பு அறுந்திருந்ததைச் சுட்டிக்காட்டி, இரு செருப்புகளையும் நன்கு தைத்துக் கொடுத்தான்.

" ஜீ..ஆப் கோ..." என என் முகம் நோக்க, அதற்குள் வேறு ஒருவர் தன் பையை நீட்டினார். அதற்கும் உடனே ஜிப் போட்டுக் கொடுத்து இருபது ரூபாய்...செருப்புக்கு இருபது ரூபாய் என வேலைக்குத் தக்கவாறு பணம் பெற்றான்.

என் பையையும் தைத்துக்கொண்டு, மற்ற அருகில் இருப்போர் இடமெல்லாம் ஜிப் போடவும், பேக் , செருப்பு ரிப்பேர் செய்து கொள்ளவும் எனச் சொல்ல அவனுக்கு மகிழ்ச்சி. சிறிது நேரத்தில் சுமார் ஐநூறு ரூபாய் அளவில் பணம் சம்பாதித்தான்.



நான் ஏதோ பெரிய உதவி செய்தது போல் என்னைப் பார்த்துப் புன்னகைத்தான். நான் நீட்டிய பணத்தையும் வாங்க மறுத்தான்.

"தன்யவாத் சாப்....ஆஜ் பஹூத் கமா லியா.....அவுர் பீ கமா லூங்கா...." (நன்றி அய்யா... இன்று நிறைய சம்பாதித்து விட்டேன், இன்னும் சம்பாதிப்பேன்)

நான் அவனையேக் கூர்ந்து பார்த்தேன். விடைபெற்றவாறு அவன் தவழ்ந்து செல்லச் செல்ல , எனக்குள் தோன்றியிருந்த தவறான எண்ணம் மெல்ல மெல்ல அழிய ஆரம்பித்தது.

ஒரு நல்லகாலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மனதில் தோன்றலாயிற்று. மனதைத் தெளிவாக்கிச் சென்ற அந்த உன்னத வேலைக்காரன் சென்ற திசையை நன்றியுடன் நோக்கினேன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p267.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License