இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

ஊருக்காகச் சிலர்...

நாங்குநேரி வாசஸ்ரீ


எவ்வளவு நல்ல மனிதர், அவரை இனிமே பாக்கவே முடியாதுனு நெனச்சா நம்பவே முடியல. இந்த நாலு நாள சந்தோசமாக் கழிக்கணும்னு வந்தேன். வந்த ரெண்டாம் நாளே இப்படி ஆகிப் போச்சு. யோசித்துக் கொண்டே பால்கனியில் அமர்ந்திருந்தேன். எதிர் ப்ளாக் கிரவுண்ட் ப்ளோரில் தான் அவரோட வீடு.

அம்மா காபி கொண்டு வந்தாள்.

தலய நல்லா துவட்டினியா. சளி புடிச்சுடப் போகுது. என்ன யோசன. சாமிநாதன் மாமாவுக்கு எண்பத்திரெண்டு வயசுடா. அதோட இது ரெண்டாவது ஹார்ட் அட்டாக். அதான் பட்டுன்னு போய்ட்டாரு. சோமு அத்ததான் பாவம். இனி என்ன செய்யப் போகுதோ. வேலுவுக்கு சொல்லி உட்டுட்டாங்களா?. என்னமும் உதவி வேணும்னா கேட்டுச்செய்.

காபியை உரிஞ்சுக்கொண்டே வெளியேப் பார்க்க ஆரம்பித்தேன். நினைவு தெரிந்ததிலிருந்து இதே வீட்டில் தான் வாசம்.

எங்க ரெண்டு குடும்பமும் சொந்தக்காரங்களப் போலதான் பழகினோம். அதனால தான் அவங்கள உரிமையா மாமா, அத்தை னு கூப்பிடற பழக்கம். அவரோட மகன் வேலு என் கிளாஸ்மேட் தான். படிச்சு வெளிநாட்டுக்கு வேலைக்குப்போனவன். அப்பறம் வந்து கல்யாணம் கட்டிக்கிட்டு பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டுப் போனான். அவ்ளோதான். ஏதோ ரெண்டு வருசத்துக்கு ஒருக்க வரான் போல. அவன் புள்ளயும் என் மகளோட ஒட்ட தானாம்... என்ன... கொஞ்சம் மாச வித்தியாசம் இருக்கும்னு ஞாபகம். இதெல்லாம் அம்மா சொன்ன தகவல்...

இருந்தாலும் காலையில பாத்த விசயத்த நம்பவே முடியல. நினைவுகளை அசை போட்டேன். அத்த கூப்பிட்டப்போ காலங்காத்தால நாலு மணி இருக்கும்னு நெனைக்கறேன்.

தம்பி எனக்கு லேசா நெஞ்சு வலிக்குதுடா. என் கூட வாஷ்ரூம் வர வா. அப்புறம் டாக்டருக்குப் போன் பண்ணு. எப்பொழுதும்போல் நிதானமான குரலில் கூறினார் சாமிநாதன் மாமா.

கொஞ்சம் தண்ணி கொண்டு வரச் சொல்லு அத்தய. என அத்தையை அனுப்பிவிட்டு ரகசியக் குரலில் அத்த கிட்ட சொல்லாத கத்துவா. நேத்தைக்கு டூவீலர் ஓட்டிட்டு போறப்போக் கீழ விழுந்திட்டேன். குப்புற விழுந்ததுல நெஞ்சுல அடி. உடனே டாக்டர் கிட்ட போயிருக்கணும். அதான் இப்ப வலிக்குதுபோல. அவர் காண்பித்த இடத்தில் ரத்தம் கன்றியதைப் போல சிறிது நீலம் பாரித்திருந்தது. வாஷ்ரூம் கதவைத் தொட்டவர்தான் அங்கேயே சரிந்து விழுந்துவிட்டார். உடனே உயிர் போய் விட்டது. டாக்டரைஅழைத்து உறுதி செய்து கொண்டு அக்கம்பக்கத்து மனிதர்கள் உதவியுடன் அவர் பாடியை ஹால் வரை எடுத்து வந்தவுடன் அத்தை மெதுவாக ஆரம்பித்தாள்.

இப்ப நான் என்ன கண்ணு செய்யணும். முதன் முறையாக தாழ்ந்த குரலில் பேசுகிறாள்.

வேலுவுக்கு மொதல்ல சொல்லணும். அவன் மஸ்கட்லேந்து வரணுமில்ல. போன் நம்பரக் குடுங்க. நான் கூப்பிடறேன்.

எனக்கு நம்பர் தெரியாதுப்பா. எல்லாம் இவரோட மொபைல்ல தான் இருக்கும். இவர் குடுத்தப்போ நான் பேசுவேன் அவ்ளோதான்.

அத்தை எழுந்து தேட ஆரம்பித்தாள். கூடவே அம்மா, என் மனைவி யார் தேடியும் கிடைக்கவில்லை. ஒருவழியாக உள்ளூர் நண்பனிடம் மெயில் ஐடி வாங்கி மெயில் மூலம் தகவல் அனுப்பியாகிவிட்டது.

பணம் , கிரெடிட் கார்டு, எதைக் கேட்டாலும் அத்தைக்குத் தெரியவில்லை. அழுவதற்கு கூட மறந்து எல்லாவற்றையும் தேடிக்கொண்டே இருந்தோம்.

பக்கத்து வீட்டுக்காரர் உதவியுடன் ஐஸ் பெட்டி வரவழைக்க ஏற்பாடு செய்தாயிற்று.

அம்மங்கோவில் பூசாரியின் மகள் மஸ்கட்ல இருக்காளாம். அவள் மூலம் வேலுவுக்கு தகவல் சொல்லலாம் என பக்கத்து வீட்டுக்காரர் சொன்ன ஆலோசனைப்படி நம்பர் வாங்குவதற்காக நான் குளித்துவிட்டு ரெடியாகிறேன். அத்தை கூட என் மனைவி அமலா மட்டுந்தான் இருக்கா.

என் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டது போலவே அம்மா பேசினாள்.

நடக்கறது எதுவும் நம்பற மாதிரி இல்லடா சாமி. உங்க சோமு அத்த பொழுது விடிஞ்சதுலேந்து அடையறது வர சத்தமா பேசிக்கிட்டே தான் இருக்கும். எத்தன வருசமா நான் பாக்கறேன். பைய மாட்டிக்கிட்டு மார்க்கெட்டுக்கும் பையனோட பள்ளிக்கூடத்துக்கும் அவ தான் போவா. ஒருநாளும் உங்க மாமா குரல நான் கேட்டதே கெடையாது. என்னமோ உங்க அத்த முன்னாடி அவர் பயந்து பம்மிக்கிட்டு நிக்கற மாதிரி தான் தோணும். ஆனா எல்லார்கிட்டயும் பேசும்போது மாமாவ உட்டுக்கொடுக்காம அவருக்கு ஒண்ணுந்தெரியாது. ரொம்ப அமைதின்னு சொல்லும். காலையிலேந்து ராத்திரி வர தெனைக்கும் எம் மருமக அங்க என்ன செய்யறானு ஒண்ணுவிடாம எனக்குத் தெரியும்னு சொல்லும். எந்த முடிவு எடுக்கணும்னாலும் என்கிட்ட கேக்காம மகனும் மருமகளும் செய்ய மாட்டாங்க. நாம எப்படி அக்கறையா இருக்கோமோ அப்டிதானே அவங்களும் இருப்பாங்க. நீங்களும் என்னமாதிரி பாசமா இருங்க. மருமக கூட பிரச்சினையே வராதுனு பக்கத்துவீட்டுஅம்மாவுக்கு போனவாரம் அட்வைஸ் வேற குடுத்திச்சு. நான் கூட இவ்ளோ நாளும் சோமு அத்தை எல்லா வெவரமும் தெரிஞ்சவங்கன்னு நம்பினேன். இத நான் மட்டுமில்ல. பக்கத்து வீட்டுக்கார அம்மாவும் தான் சொல்லுது. இன்னிக்கு என்னடான்னா எனக்கு எதுவுமே தெரியாதுங்கறா. செத்தவரு எந்திரிச்சு வந்து எல்லாத்தையும் செஞ்சுகுடுத்துட்டு போய்ப் படுத்தாத் தேவல மாதிரி நடந்துக்கறா. எது நெசம்னு தெரியல.

அம்மா புலம்பிக்கொண்டிருக்கும்போதே அமலா வந்து விட்டாள்.

மொபைல் கெடச்சிருச்சு. ஐஸ் பெட்டிக்குள்ள வைக்கும்போது அவர் பாண்ட் பாக்கெட்ல இருந்ததப் பாத்துட்டாங்க. இப்ப போன எடுத்து வேலு அண்ணனுக்கு தகவல் சொல்லியாச்சு.

சரி நீ இங்க பாத்துக்கோ. நான் அவளுக்குத் தொணைக்குப் போறேன். அம்மா கிளம்பி விட்டாள்.

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா அமலா ஆரம்பித்தாள். அத்த சொன்னாங்க இவ்வளவு வருசமும் இந்த மனுசன் உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லிச் சொல்லி எல்லாப் பொறுப்பையும் தானே வச்சிக்கிட்டிருந்தது. அந்த ஆத்தாமையில மத்தவங்க என்னய குறைச்சலா நினைக்கக்கூடாது னு நெனச்சி வலியப் போயி இட்டுக்கட்டி நான் தான் எங்க வீட்ல எல்லாம் செய்யறேன். நான் இல்லேன்னா ஒண்ணும் நடக்காதுன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். உண்மையில வீட்டுக்குள்ள ஒரு பொறுப்பும் இல்லாம சந்தோசமாத்தான் இருந்தேன்... மத்தவங்க முன்னால நிரூப்பிச்ச நேரம் நேரடியா இந்த மனுசன்கிட்டயே சண்ட போட்டு பொறுப்ப பகிர்ந்துட்டிருந்திருக்கலாம்.

இப்ப நெசமாவே எனக்கு எதுவும் தெரியாதுனு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. இனிமே என்னய யாரு மதிப்பாங்கன்னு வருத்தப்பட்டாங்க.

இப்பவும் அத்தைக்கு தனக்கு ஒண்ணும் தெரியலங்கறதவிட அடுத்தவங்க முன்னால தன்னோட இமேஜ் போச்சேன்னு வருத்தந்தான்.

மனதில் நினைத்துக்கொண்டேன். சாகற வரை அப்பா கூட சோமு அத்தை கிட்டேந்து நெறைய விசயங்களக் கத்துக்கணும். எப்படி புருசன தாங்கறா பார்னு அம்மா கிட்ட சொல்லுவார்.

இந்த உலகத்தில சில பேர் உள்ள ஒண்ண வச்சிக்கிட்டு வெளில வேற வேசம் போட்டு தன் வீட்டுக்குள்ள அதுவும் குடும்பத்துகுள்ளேயே நடிச்சிட்டிருக்காங்க. இன்னும் பல பேர் வீட்டுக்கு வெளியில அக்கம்பக்கத்துல வேற வேசம் போட்டு நடிக்கறாங்க. இவங்க வாழ்க்கையோட குறிக்கோளே அடுத்தவங்ககிட்ட நல்லபெயர் வாங்கறதுதான். இவங்களயெல்லாம் எப்படி கண்டுபிடிக்கறது. ரொம்ப கவனிக்க ஆரம்பிச்சா கிறுக்குதான் புடிக்கும். அப்புறம் யாரப் பாத்தாலும் இவங்க நடிக்கறாங்களோன்னு சந்தேகப்படத்தோணும். நம்பிக்கைதான் வாழ்க்கை. அதனால என்னயச் சுத்தி இருக்கறவங்க எல்லாம் உண்மையாத்தான் இருக்காங்கன்னு நம்பிட வேண்டியதுதான். இப்போதைக்கு இப்படியும் சிலர் உள்ளனர் என்று இந்த விசயத்தைக் கடந்து போகணும். தீர்மானித்துக் கொண்டு எழுந்தேன் சோமு அத்தை வீட்டுக்குச் செல்வதற்கு.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p293.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License