இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

இட்லிக்கடை அன்னலட்சுமி

முனைவர் பி. வித்யா


காலை ஏழு மணி தொடங்கி சூரியனைப் போலவே கதகதப்பாய் அனல் கக்கிக்கொண்டே இருந்தது அன்னலெட்சுமியின் அடுப்பு. தினந்தந்தி, தினமலர், தினகரன், இடைஇடையே தீக்கதிர் என அரசியல் பேதமின்றி அன்னத்தின் கையில் நாளிதழ்கள் கிழிபட்டுக் கொண்டிருந்தன.

இட்லி, பனியாரம், ஆப்பம் என்று எது கேட்டாலும் கிடைக்கும். இடையிடையே முட்டையை உடைத்து ஊத்தி உள்ளூர் பிள்ளைகளுக்குத் தருவதுண்டு. சாவகாசமாய் டீக்கடைகளில் அரசியல் பேசும் ஆண்களைப் போல, அன்னத்தின் கடையில் பெண்கள் படும் அல்லல்கள் மையப்பொருளாய் இருக்கும்.

ஐம்பது, ஐம்பத்திரண்டு வயதாகும் அன்னம் இருபத்தைந்து வயதிலேயேக் கணவனை இழந்து தாலியறுத்தவள். பெரிதாய் கணவன் கட்டிவைத்த சாம்ராஜ்யம் என்று எதுவும் கையிருப்பில்லை.

மூன்று பிள்ளைகளைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு அழுது தீர்த்த கண்ணோடு அப்பொழுதிருந்த கௌப்பு(ஹோட்டல்) கடைகளில் வேலைக்குப் போனாள். பிள்ளைகள் வளரவும், சாலையோரமாக இரண்டு புளியமரங்களுக்கு இடையில் ஒரு சிறு அடுப்பு, மாவு பாத்திரங்கள், ஆப்பச் சட்டி, இட்லிச் சட்டி, பனியாரச்சட்டி போன்றவை சகிதமாக அமர்ந்து கடை போட்டாள். நன்றாகத்தான் ஓடுகிறது.

இன்று இந்தத் தொழிலை ஆரம்பித்து 22 வருடங்களுக்கும் மேலாகிறது. அவள் அடுப்புக் கூட்டுவது ஆறு மணிக்குத்தான். ஆனால், காலை சாப்பாட்டு வேலை முடிந்து எடுத்து வைக்க பன்னிரண்டு மணிக்கு மேலாகும். அதன்பின் அடுத்த நாளுக்கான வேலைகள் என ஆரம்பிக்க வேண்டி வரும்.

அசதியில் படுத்துறங்கிக் கூட பல வருடங்கள் ஆகியிருக்கும். அப்படித்தான் அன்றைக்கும் அன்னலெட்சுமி பாத்திரங்களைத் தயார்படுத்தி விட்டு எதிராய் இருக்கும் காளியாத்தாளிடம் எல்லா மனக்குமுறலையும் ஒப்படைத்துவிட்டு வந்தமர்ந்தாள். சாம்பார் தாளித்து, சட்னிகளைத் தாளித்து, அது அதற்குறிய சட்டிகளில் நிரப்பிவிட்டு, ஆப்ப மாவு, இட்லி மாவு, பனியார மாவு தயாராக வைத்துக்கொண்டு மூன்று அடுப்புகளிலும் மாறிமாறி உயிரைக் கொடுத்து நெருப்பைக் கக்க வைத்துக் கொண்டிருந்தாள். எட்டு மணியிலிருந்து வியாபாரம் சூடுபிடிக்கும்.

அவசர அவசரமாய் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு இங்குதான். அரக்கப் பறக்க ஆத்தா எனக்கு ரெண்டு இட்லி, எனக்கு மூணு, எனக்கு ஒரு ஆப்பம் என்கிற மெனுக்களோடு மனக்கணக்காக எல்லோர் தட்டையும் வயிறையும் ஒரு சேர நிரப்பிக் கொண்டிருக்கும் இந்த நேரம்தான். சிறிது படபடப்பாய் கைகள் தளர ஆரம்பித்தது. எப்பவும் போலத்தான் என்று நினைத்து வியர்வையோடு எண்ணத்தையும் துடைத்துவிட்டு, ஆப்பம் பனியாரமென அடுத்தடுத்து வருபவர்க்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.


மணி பத்தை நெருங்கிவிட்டது. ஆட்கள் வரத்துக் குறைந்துவிட்டது. சரியென்று பேத்தி எட்டு மணிக்குக் கொண்டு வந்த டீச்செம்பை அப்பொழுதுதான் கவனித்தாள். ஒரு மடக்கு டீயவாச்சும் குடிப்போம் என்று கங்கு அனலில் வைக்க, ஆப்பச் சட்டியை இறக்கி வைத்தாள்.

அப்பொழுதுதான் வேகவேகமாக ஆட்டோ டிரைவர் வந்து அம்மா ஒரு அஞ்சு இட்லி கொடுங்கன்னு சொன்னதும், இன்னும் ரெண்டு பேர் சாப்பிட வரவும் கங்கில் வைத்த டீ வற்றி கருப்பாவதும் மறந்து போனது. அவர்களின் வயிற்றை நிரப்பி அனுப்பிவிட்டு, கருகிய டீயின் சொச்சத்தை எடுத்து தொண்டையை நனைத்துக் கொண்டாள்.

தன்னிடம் வந்து வீட்டு அல்லல்களைப் பேசும் பெண்களை மனது சாந்தப்படுத்தி அனுப்பும் வேலையும் அன்னத்திற்குத்தான். நாளில் பகுதி நேரம் கடையிலேயே இருந்தாலும் ஊரில் நடக்கும் அனைத்து விசயங்களும் அவளுக்குத் தெரியாமல் இராது.

முடிந்தது மாவும் காலை உணவுக் கடையும் தகரத்தால் அடுப்பை மூடிவிட்டு கங்கை அணைத்துவிட்டு எல்லாத் தட்டு முட்டுச் சாமான்களையும் தேய்ப்பதற்காக எடுத்துப் போட வேண்டும். கொஞ்சம் மன சஞ்சலமாய் இருந்தது.

எல்லோர் வீட்டுப் பிரச்சனைகளையும் கேட்டுக் கொள்ள காதினைக் கொடுத்துவிட்ட காளியாத்தாவை நினைத்துச் சிரித்துக் கொண்டாள். அத்தனை வேலைகளையும் ஒத்தையாளாய்ச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். ரெண்டு மகன்கள் மருமகள்கள் ஏழு பேரன் பேத்திகள் என்று பெரிய குடும்பந்தான். இப்பொழுதுதான் ஒரு பேத்தியின் திருமணம் கூட அன்னத்தின் காசில் நடந்தது. வீட்டில் இருக்கும் பல பொருட்களும் இவளுழைப்பால் வாங்கியதுதான்.

நேற்றிலிருந்து அந்தச் சம்பவம் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. தான் இத்தனை வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்வது யாருக்காக…? என்ற நினைவு இன்றுதான் அவளுக்கு அதிகமாய் மேலெழுந்தது.

இவ்வளவு வேலைகளைச் செய்துவிட்டு வீட்டுக்குச் செல்லும்போது நிமிர்ந்து கூட நடக்க முடிவதில்லை. உட்கார்ந்தே 22 வருடங்களாகச் செய்த வேலையாலும், முதுமையாலும் முதுகில் கூன் விழுந்துவிட்டது. அத்தோடு யாரும் வீட்டில் இல்லை என்பதால் தலையணையைப் போட்டு சற்று இளைப்பாற காத்தாடியையும் போட்டுவிட்டு, டி.வி. பொட்டியைப் போட்டாள் அன்னம்.

இப்பொழுதுதான் டி.வி.பார்ப்பதற்கு என்னென்னமோ அமுக்க வேண்டியிருக்கே, போராடி போட்டதும் பழைய படம் போட்டார்கள். “நெஞ்சில் ஓர் ஆலயம்” நல்ல படம்தான் பாக்கலாமே என்று உட்கார முடியாமல் படுத்துக்கொண்டு எப்படி லயித்தேளோ தெரியவில்லை. அம்மா தன் பிள்ளை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என் கையிலும், அந்த டாக்டர் இறக்கும் போதும் கண்களில் நீர்நிறைய பார்த்துக் கொண்டிருந்தாள். எப்பொழுது மருமகன் வந்தானோ தெரியவில்லை. டி.வி பொட்டியை படக்கென்று அமத்திவிட்டான்.

இந்த வயசுல ஒங்களுக்கு டி.வியெல்லாம் தேவையா? என கேட்டும் விட்டான். மனது கொந்தளித்து விட்டது. ‘வீட்டை, இந்த டி.வி பொட்டியை, இந்தக் காத்தாடியை வாங்கிப் போட்டது நான். ஆனாலும் அதைப் பார்க்கவோ அனுபவிக்கவோ உரிமையில்லையா?’ என நொந்து கொண்டாளே தவிர ஒரு வார்த்தையும் மருமகனைப் பார்த்துப் பேசவில்லை.

மருமகள்கள் எடுத்தெறிந்து பேசினாலும் அதைப் பொறுத்துக் கொண்டே தான் வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருந்தாள். அன்னத்திற்கு, “இதுவரையில் எனக்குன்னு ஒரு சட்டத்துணி எடுத்துருப்பனா” என்று மனது அடித்துக் கொண்டது.

அப்பொழுதுதான் முதன்முதலாக தன் இல்லாமற் போன துணையை நினைத்துக் கொண்டாள். அவர் மட்டும் இருந்திருந்தால்…

காசுதான் இல்லை ஆனாலும் தன்னை வேலைக்கு அனுப்பியதில்லை. பிள்ளைகளை எப்பொழுதும் கண்ணின் மணிகளாய்த்தான் பார்த்தார் என்ற நினைப்பெல்லாம், இன்றும் தூக்கம் வராமல் இந்த பன்னிரண்டு மணிக்கு மேலாகவும் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.

அதற்குப் பின்தான் வாழ்க்கையில் எத்தனை ஏற்ற இறக்கங்கங்கள் அதன் பின்னே பிள்ளைகளை வளர்த்து முதலில் பெண்ணைத் திருமணம் செய்வித்து, பின் மகன்களுக்கு நல்ல பெண்களாகப் பார்த்து முடித்துவிட்டு, ஆளுக்கு ரெண்டு பிள்ளைகள், அவளுக்கு பெண் பிறந்துவிட்டது என்று எத்தனை முறை அவளை பிறந்த வீட்டிற்கு அடித்து விரட்டியிருப்பான் அவளின் கணவன்.

அனைத்தையும் சமாளித்து மூன்றாவதாய் அவள் கர்ப்பமானபோது காளியாத்தாவிலிருந்து கடற்கரை வேளாங்கண்ணி மாதா வரைக்கும் எத்தனை வேண்டுதல்கள் பெண்ணாய் பிறந்துவிடக் கூடாதென்று. அவளை பேறுகால ஆசுபத்திரிக்குக் கொண்டு சென்று சேர்த்தது முதல் கௌதமின் பிஞ்சு விரல்களைக் கையில் தொடும்வரை எத்தனைக் கவலைகள்... ஒரு பெண்ணை தானே மகனிடமும், மருமகளிடமும் திட்டு வாங்கிக்கொண்டு வளர்த்து வருவதும், அத்தனை பேரன், பேத்திகளுக்கும் தன்னுடைய வருமானத்தில்தான் அத்தனைப் படிப்புச் செலவுகளும் செய்வது தானாய் இருந்தும்… என்று நினைத்து மருகினாள்.

அப்பொழுதுதான் திடீரென பாசமாய் உருவி உருவி வளர்த்த குரும்பன் என்ற குரு எனும் மகனின் இழப்பு. அதுவும் அவள் கண்முன்னே, குருவுக்கு ரெண்டு பிள்ளைகள் அன்றும் இன்று போல்தான் கடையை எடுத்து வைத்து விட்டு வருகிறவர்களுக்கு சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள்.

“அம்மா பிள்ளைகளை கூட்டிட்டு வந்திடறேன்” என்று நேற்றுத்தான் புதிதாக வாங்கிய பைக்கை உசுப்பி கிளம்பி ஒரு விநாடிதான் இருக்கும். அதற்குள்ளாக எங்கிருந்தோ வந்த லாரி சட்டென்று மோதி குரு எங்கு போய் விழுந்தான் என்றே தெரியவில்லை. காளியாத்தாவின் கோவில் முன்னே சிறிய சதைப்பிண்டம் இரத்தத்தோடு கிடந்தது. என்னவென்று அன்னம் நிதானிப்பதற்குள் அவள் நினைக்கவே நடுங்கும் அந்த சம்பவம் நடந்தேறி விட்டது. பிள்ளையின் உடலைத் தேடி பதட்டத்துடன், அன்னம் நடக்கையில் கொஞ்சம் தள்ளி, குருவின் உடலில் எந்த இடத்திலும் அடியில்லை, என்று பார்த்து விட்டு முகம் பார்க்கையில் பிணமாகவே ஆகிப் போனாள் அன்னம்.



கண்ணைத் திறக்க இயலவில்லை. காதில் ஏதோ கொஞ்சம் கொஞ்சமாய் கேட்டு இப்பொழுது ஏதும் கேட்காத வெளிக்குப் போனாள் அன்னம்.

அவள் மகன் குரு இறந்த இடத்தில் நினைவுகள் ஊடாக குருவை மடியில் படுக்க வைத்து அணைத்துக் கொண்டு அவ்விடத்திலேயே பிணமாக வீழ்ந்து போனாள் இட்லிக்கடை அன்னலெட்சுமி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p304.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License