இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

அப்பத்தா

எஸ். மாணிக்கம்


வீட்டின் அழைப்பு மணிக்கான மின் பட்டனை அழுத்தினார் பரமானந்தம். உள்ளே மெல்லிய இசைச் சத்தம் எழுந்து ஓய்ந்தது. சற்று இடைவெளி விட்டு, இரண்டாவது தடவையாக அழுத்தினார்... அதே இசை தன் வெளியிடலைக் குறைத்துக்கொள்ளும் முன்... கொஞ்சமாய்க் கதவு திறக்கப்பட்டது.

அறுபது, அறுபத்திரண்டு வயது மதிக்கத்தக்க பெண்மனி எட்டிப் பார்க்க, வந்திருப்பவர் இன்னாரென அனுமானிக்க முடிந்தாலும் இவர்தான் என்று சட்டென வரவேற்க முடியாது யோசித்திருக்க,

“என்னக்கா தெரியலயா...? நான்தான் பரமானந்தம்” தன் பெயரை ஞாபகப்படுத்தவும்தான்...

‘அதான் நெனச்சேன்யா... பாத்து ரொம்ப நாளாச்சா... வாயா உள்ள வாயா' கதவை மொத்தமும் திறந்து, உட்கார சோபா காட்டி, மின் சுற்றி இணைப்பு பட்டனை அழுத்திவிட்டு, தண்ணீர் கொடுத்தவாறே...

‘இருயா காபி கலந்துட்டு வாறென்... சாப்பாடும் பண்றேன்யா' என்று, சமையலறைக்குள் நகர்ந்தபோது,

‘செய்தலில் அக்கா இன்னும் அப்படியே இருக்கு' இப்படி அவர் நினைத்து, தன்னிலிருந்து மீனாக்காவுக்கு ரெண்டு, மூணு வயசு கூடுதலாக இருக்கும், நல்லா தெம்பாயிருப்பாங்களே... இப்ப உடல் தளர்ந்து தெரியறாங்களே... யோசனையில் உட்காந்திருக்கையில்

“வீட்ல நல்லா இருக்காங்களாயா..?” காபி ‘கப்' நீட்ட,

“கடவுள் புன்னியத்துல குடும்பமே சவுக்கியங்கா, உங்க மகன், மருமக பேரெனெல்லாம் எப்படி இருக்காங்க...?” என்று கேட்டுக் கப்பை வாங்கிக்கொள்ள, எதிர் ஒற்றை சோபாவில் அவள் அமர்ந்த போது சமையலறையை அடுத்துள்ள அறைப்பக்கமிருந்து ஓடி வந்த சிறுவன் ‘பாட்டீ...' என கால்களைக் கட்டி முகம் தேய்க்க,

“ராசா கெளம்பிட்டாரா... இவருதான்யா மைனரு வெளியில போறாங்க... ஒரு கொறையும் இல்லயா” பேரனைக் கண்ட, கொஞ்சிய சந்தோசத்தில் மீனாம்மாள் சொன்னது பரமானந்தத்துக்கு துளியும் கேட்கவில்லை, சிறுவனின் ‘பாட்டீ...'என்ற மழலைக் குரல் தான் அவரின் காதுகளை கனமாக்கியது.

‘என்னக்கா பாட்டீ...னு..,' கேள்வி கொண்டு ஏறிட, அதைப் புரிந்து ‘காப்பிய குடியா' என்பதாய் சாடையுணர்த்திய மீனாம்மாளின் மனசில் ஏதோவொரு ஏக்கம், அழுத்தம் இருப்பது உணரமுடிந்தது. சின்னதான மவுனம் இருவரையும் அமைதியாக்கி வைத்திருக்க,


மீனாம்மாளின் மகனும்,மருமகளும் வந்தனர்...

பரமானந்தத்தை, அவர் குடும்பத்தை பரஸ்ப்பரம் விசாரித்து ‘கிளம்பலாமா...'என்றதும் பையனை கையில் பிடித்து

“அம்மா, மதியம் சாப்பாடு செய்யவேணாம் நாங்க சாயந்திரம்தான் வருவம்...” அவ்வளவுதான் கிளம்பி விட்டனர்.

மறுபடியும் கேள்வியாகவே பார்த்தார்...

காலியான கப்பை எடுத்துப் போய் சிங் தொட்டியில் வைத்ததும் வந்து, தலை நிமிராது “வாய் நிறைய அப்பத்தானு கூப்பிடவேண்டிய பேரன் பாட்டினு ஓடிவரானேனு நெனக்கிற என்னய்யா..,” னு ஒரு பெருமூச்சை வெளியாக்கி சோபாவில் உக்கார்ந்து கொள்ளவும்.

‘ஆமாக்கா...பாட்டீனு உங்க பேரன் கூப்பிட்டது என்னமோபோல இருக்கு,' என்பதாக அவர்...

மீனாம்மாளே தொடர்ந்து பேசினாள்.

“பேரன் பேச ஆரம்பிச்சதும் அப்பத்தான்னு கூப்பிடு... அப்பத்தான்னு கூப்பிடுன்னு ஆசை ஆசையாக் கொஞ்சுவேன் அவனும் கொழஞ்சி கொழஞ்சி கூப்பிட்டான் மருமக என்ன நெனச்சாளோ, அவனுக்கு நல்லா பேச்சு வரவும் அப்படி கூப்பிடக்கூடாதுனு அதட்டி அதட்டிப் பாட்டினுதான் கூப்பிடுனும்னு சொல்லிக் கொடுத்தாய்யா... ஏம்மா நம்மல்ல மகன் புள்ள அப்பத்தானு கூப்பிடுறது வழக்கம்னேன். நான் சொல்றத அவ காதுலயே வாங்கலய்யா, பச்ச மண்ணுக்கு என்ன தெரியும்... நாளடைவுல பாட்டினே கூப்பிடப் பழகிட்டது” பேரன் ‘அப்பத்தா'னு அழைக்கவில்லையே என்ற ஏக்கம் ததும்பிய ஆதங்கம் அந்த வார்த்தைகளில் பதிந்திருந்ததை உணர்ந்தவர்

“உங்க பையன் ஒன்னும் சொல்லையாக்கா..?” கேட்டார்.

“அது பெரிய கொடுமய்யா, எங்கடா மகன் ஆத்தாவ அப்பத்தானு கூப்பிட்டுவானோனு, அதனால பொன்டாட்டிட்ட தேவையிலாம பிரச்சனையச் சந்திக்கனுமேனு பாட்டிட்ட போ பாட்டிக்கு டாட்டா சொல்லு பாட்டிட்டப்போய் பால் பாட்டில் கேளு...னு மூச்சிக்கு மூச்சி ‘பாட்டிய' ஞாபகப்படுத்திக்கிட்டு இருந்தான், ஏப்பா பரமா... அப்பத்தானா அசிங்கமான வார்த்தையா..?” என்று, வெகுளியாக, வெள்ளந்தியாகவும் கேட்ட மீனாம்மாளை பரிதாபமாகப் பார்த்தார் பரமானந்தம்.

கைப்பிள்ளைக்காரியா கணவனை விபத்தில் இழந்து, சொந்தங்கள் ஆதரவற்று வாழ்க்கையில் நிறைய சிரமப்பட்டாள். ஒரே மகன் அவனுக்கென்று எதுவுமே இல்லை என்ற வேகத்தில் அவனுக்கு எல்லாவற்றிலும் நல்லவைகள் கூறியே வளர்த்தாள், நன்றாக படிக்க வைத்தாள், வேலையும் வாங்கிக்கொடுத்து, கல்யாணமும் செய்து வைத்தாள்.

அக்கம் பக்கத்து சனங்கள் ‘மனுஷினா மீனாதாம்பா...' என வாயாரிக்கொள்வார்கள்.

சின்ன வாழ்க்கையையும் சிறப்புடன் காலத்தோடு நகர்த்தலாம்... மீனாம்மாளைக் கவனித்தே பரமானந்தமும் குடும்பத்தில் இணக்கம் காட்டினார். பணிமுடிந்து மகள் வீட்டோடு மதுரைக்குச் சென்ற போதும், மனதோரத்தில் மீனாம்மாளின் நினைவு இருந்து, சமயம் கிடைக்கையில் நேரில் சென்று பார்த்து நலம் விசாரிக்கனும்...

ஞாபகத்தில் வைத்திருப்பார்.

நீண்டநாள் எண்ணம் நிறைவேறிது போல்,விருதுநகரில் நண்பர் வீட்டு திருமணவிழாவிற்கு வந்தவர் அப்படியே இங்கே வந்தார்

.
வாழ்க்கையில் பெருசா எதையுமே எதிர்பார்க்காத மீனாக்கா தன் ரத்ததொடர்பில் வந்த உயிர் சொல்லில் ‘அப்பத்தா' அழைப்பு இல்லையென்பதில் வருத்தமுட்டி, அதை வெளியிலும் காட்ட முடியாமலும் கனத்துப்போய் இருக்கும் இந்த மனிஷிக்கு என்ன ஆறுதல் சொன்னா மனசு லேசாகும்...

உறவு கொண்ட துடிப்பு, உணர்வு சம்மந்தப்பட்டது, அவ்வளவு இலகுவா அக்காவின் ஏக்கத்தை வேறு பேச்சு கலப்பில் மாற்றிவிட முடியும் என்று அவர் நம்பவில்லை. அமைதியாகவே இருந்தார்.

“தோச ஊத்துறேன் சாப்பிடுயா”

“இல்லக்கா வரும்போதுதான் சாப்பிட்டேன். மத்தபடி ஒண்ணும் பிரச்சனை இல்லைலக்கா..?”கொஞ்சம் தயங்கி, நெஞ்சுக்குழிக்குள் கட்டியாகக் கிடப்பதை வெளியேற்றினால் தேவலைபோல் தோன்ற,

“பையனுக்கு கல்யாணம் முடிச்சா எல்லா குடும்பத்தில் வரும் கசப்புகள்தான் இங்கேயும் வந்தது, அதுகூட நாளடைவில் பக்குவமாயிருச்சி ஆனா...பேரன் பாட்டினு கூப்பிடுறத்தான் ஏத்துக்கவே முடியலேயா, அவன் அப்படி கூப்பிடும்போதெல்லாம் மூணாம் மனுஷியாத்தான் என்னை நான் உணர்றேன், அப்பத்தானு வாய் நெறஞ்சி கூப்பிட்டா நம்ம மகன்வழி புள்ளனு அப்படியொரு ஒட்டுதல் இருக்கும்யா...” கடைசியாக அந்த வார்த்தையை ஏதோ பரவசமாகவே வெளிப்படுத்தி, முகம் மலர்ந்த மீனாக்கா, பேரன் அப்பத்தா... அப்பத்தா என்று அழைக்க வேண்டுமென்ற தனதின் உள்ளத்து ஆர்வத்தைக் கண்ணாடியாகக் காட்டிக் கொண்டிருக்க, சட்டென கதவு திறபட்டுது.

மருமகள் வீட்டுக்குள், வந்தாள்... பின்னாலேயே மகன் தன் மகனுடன்.

பரமானந்தத்திற்கு சங்கடமாயிருந்தது. இவ்வளவு நேரம் பேசிய பேச்சுக்களை கேட்டுருந்துவிட்டு, வந்திருப்பார்களோ...?

“என்னப்பா திரும்பிட்டீங்க..?” வாய் கேட்டதே தவிர, கண்களில் மிரட்சி நெஞ்சுக்குள் படபடப்புடன், மீனாம்மாள்.

“இல்ல...” ஒற்றை வார்த்தை உதிர்வு... அவர்கள் அறைக்குள் நுழைந்து, கதவு சாத்திக்கொள்ள,

“சரிக்கா நான்...” கிளம்பிவிட்டார், பரமானந்தம்.

அடுத்து வந்த ஒவ்வொரு நொடிப் பொழுதும் இறுக்கம் கொண்டே நகர்ந்தது உறக்கமின்றி இமைகள் மூடியிருக்க, எப்போது அசந்தது என்றே தெரியாது, கதவு தட்டும் சத்தம் கேட்டு அவசர கதியில் எழுந்தவளின் கண்களில் மணி எட்டு என சுவர் கடிகாரம் காட்ட, ‘ச்சே இம்புட்டு பொழுது ஒறங்கிட்டேனே...' ஓர்வித பதட்டத்துடன் போய் கதவு திறந்ததுதான் தாமதம்..?

‘அப்பத்தா... அப்பத்தா... அப்பத்தா...' இப்படியே மாறி,மாறி பேரன் அழைத்துக்கொண்டு நின்றிருந்தான்.

மீனாம்மாளுக்கு இருப்புக்கொள்ள வில்லை, இனம் புரியாதொரு தெம்பு அவளை நெம்பிவிட்டாற் போலே... வேகமாய்போய் வாசில் முகம் கழுவி, வாய் கொப்பளித்து, சேலை முந்தியால் துடைத்தவாறு வந்து பேரனைத் தூக்கி, ‘போதும் ராசா போதும்...' என்றபடியே தலை கோதினாள், உச்சி முகர்ந்தாள் முத்தமிட்டாள்... மனசுக்குள் அப்படியொரு ஆனந்தம், சந்தோசத்தை அந்த நிமிடத்தில் அனுபவித்தாள், நெகிழ்து, இதுவே போதுமென்பதாகவும் உணர்ச்சி கொண்டு பொங்கினாள்.

“ராத்திரி ரொம்ப நேரம் தூங்காம இருந்து உங்க பேரனுக்கு இத சொல்லிக் கொடுத்தோம் போதுமாம்மா...” அங்கே வந்த மகனும், மருமகளும்.

“போதும்... வேற என்ன எனக்கு வேணும்... இப்பவே செத்தாமும் பரவால” குமுறியேவிட்டாள்.

“என்னமா பேசுறீக உங்களுக்குள்ள இப்படியொரு தாக்கம் கனமாயிருக்கும்னு நாங்க நெனச்சுப் பாக்காம இருந்தது பெரிய தப்புதான் மன்னிச்சுருங்கம்மா...” என்றாள் மருமகள்.


“ஏமா அந்த வார்த்தலாம் சொல்ற... என்னோட அக்காளுக மகன் வயித்து புள்ளைக அவங்கள கட்டிக்கொண்டு ரொம்ப ஒட்டுதலா அப்பத்தானு கூப்பிடும் போதெல்லாம் நம்மளையும் இப்படிதான் பேரனோ பேத்தியோ கூப்பிடும்னு தோனிக்கிட்டே இருக்கும், அந்த நெனப்புக்கு மாறா நடக்குதேனுதான் வருத்தமா இருந்துச்சுமா... அது நாளாக நாளாக...” மீனாம்மாளுக்கு வார்தை வரவில்லை சந்தோசம் அவளை ஆட்கொண்டுவிட்டது.

“சரிமா இனிமே உங்க பேரன் ‘அப்பத்தா' னே கூப்பிடுவான் போய் டீயப்போடுங்க”, இது மகன்.

அப்போது, தனது பிடியிலிருந்து திமிறி பேரன் இறங்கிவிட்டது போலவே மீனாம்மாளை சுற்றியிருந்த இறுக்கம், கனம் காணாமல் போயிருந்தது. காற்றில் மிதப்பது போல் பூரிப்புடன், தேனீர் கலக்க சமையலறையை நோக்கிச் சென்றாள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p329.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License