இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

தாராளம்

ஹ்ரிஷிகேஷ்


சற்றும் எதிர்பாராத வெற்றியைக் கொடுத்திருக்கிறது நான் எழுதிய சிறுகதை ‘தாராளம்’. தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற நாவலாசிரியரான ராம்மோகன் அவர்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது எனது சிறுகதை. அதுவும் ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுடன்... இதைவிட ஒரு எழுத்தாளனுக்கு ஆனந்தம் இருக்க முடியுமா...? இது வெறும் குருட்டு அதிர்ஷ்டமா...? இல்லை உண்மையாகவே என் திறமைக்குக் கிடைத்த வெகுமதியா...? என்று சற்றுக் குழம்புகிறேன். ஆதலால், அந்தக் கதையை ஒரு வரியில் உங்களிடமே கூறி விடுகிறேன். நீங்களே முடிவு செய்யுங்களேன்...

‘தாராளமாகப் பணத்தைச் செலவழித்து வீணடித்துக் கொண்டிருந்த கதாநாயகன், எப்படி, யாரால் திருத்தப்படுகிறான், அத்துடன் கடைசியில், அதே தாராளக் குணத்துடன் எல்லோருக்கும் உதவவும் செய்கிறான்’ என்பதே கதை.

இந்தக் கதை வெற்றியடைந்த காரணத்தினால், இதில் வரும் கதாநாயகனைப் போல நானும் இன்று முதல் தாராளமாக நடந்துக் கொள்ளப்போகிறேன். இந்தப் பரிசை அளித்த கடவுளுக்கு முதலில் நன்றி கூற வேண்டும். ஆதலால், நானும் என் மனைவியும் கோயிலுக்கு செல்லவிருக்கிறோம். உண்டியலிலும் அர்ச்சகர் தட்டிலும் காணிக்கை இடுவதற்காகச் சில நோட்டுகளை அவசரமாக எடுக்கும் போது, ஒரு பத்து ரூபாய் நோட்டு ஒன்று ஓரத்தில் கால் இன்ச் கிழிந்து விட்டது.

“அதை ஒட்டி விடலாமே...” என்றாள் மனிஷா.


அவள் சொன்னதைக் கவனிக்காதது போல் அதை எனது பர்ஸ்சுக்குள் திணித்தேன்.

நான் செய்ததை மனிஷா பார்த்துவிட்டாள்.

கோயில் ஒன்றும் அத்தனை தூரம் இல்லை எங்கள் வீட்டிலிருந்து, அடுத்த இரண்டாவது வீதியில் இருப்பதால் நடந்தே சென்று விட்டோம்.

கோயில் வாசலை அடைந்ததும், அங்கு பூ விற்கும் பெண்ணிடம் நூறு ரூபாய்க்கு நான்கு முழம் மல்லிகைப் பூ வாங்கினேன். குறிப்பாக மனிஷா என்னைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காகவே...

கோயிலில் நுழைந்தவுடன் முதல் வேலையாக உண்டியலைத் தேடி அதில் புத்தம் புதிய நான்கு ஐந்நூறு ரூபாய் நோட்டுகளைக் காணிக்கையாக்கினேன். இதை மனிஷா பார்த்தாளா என்றால், இல்லை. அவளது கவனம் முழுவதும் கம்பீரமாக நின்று தரிசனம் அளிக்கும் திருமாலிடமே இருந்தது. பின்பு சன்னதியை அடைந்து கண்களை மூடி மனதார எனது வெற்றிக்காகப் பெருமாளிடம் நன்றி கூறினேன். தீபாராதனை முடிந்து பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கத் தட்டுடன் அர்ச்சகர் வந்து கொண்டிருந்தார். அவரது தட்டில் ஐம்பது ரூபாய் நோட்டைப் புன்னகையுடன் இட்டேன். நல்ல வேளை... இதையாவது மனிஷா பார்த்தாளே... பெருமிதத்துடன் அவளைப் பார்த்தேன். ஆனால் அவள் கண்களோ வேறு ஒரு செய்தியை சொன்னது. அது எனக்கு அப்போது புரியவில்லை.

நல்ல தரிசனம் கிடைத்த நிம்மதியுடன் வெளியேறினோம். அப்போது மனிஷா, “எனக்குக் கொஞ்சம் கால் வலிக்குது. வீடு வரைக்கும் நடந்து வர முடியுமான்னு தெரியல” என்றாள் தயங்கியபடி.

“அட, அவ்வளவுதானே..! இங்க, பக்கத்திலேயே ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கு. ஆட்டோவிலேயே வீட்டுக்கு போயிடலாம்”

பதிலுக்கு அவள் தலையசைத்ததாள்.

ஆட்டோ நிறுத்தத்தில் முதலாவதாக இருந்த ஆட்டோக்காரனிடம், “ஏம்பா, ஆட்டோ வருமா? இங்கதான் பக்கத்துல ரெண்டு வீதி தள்ளி...”

“நூறு ரூவான்னா வரேன் சார்”

“என்னது! இங்கிருக்கிற வீதிக்கு நூறா?” என்று சற்றே முகம் சுளித்தேன்.

“சரி சார். எண்பது ரூபா குடுங்க போதும்”

இதற்கு மேல் குறைக்க மாட்டான் போலும். “சரி சரி” என்றபடி நானும் மனிஷாவும் ஆட்டோவில் ஏறினோம்.

சகஜமாக, “ஏம்பா, ஆட்டோ ஸ்டாண்ட்ல எல்லா ஆட்டோவும் இங்கேயே நிக்குதே, சவாரி சரியா வர்றதில்லையா?” என்று கேட்டேன்.

“எங்க சார்! இந்த கால் டாக்ஸினு ஒண்ணு வந்ததிலிருந்து எங்க பொழப்பு ரொம்ப மங்கிடிச்சு. அதனாலதான் சார், உங்ககிட்ட நூறு ரூவா கேட்டேன். சரி... முதல் சவாரி வேறயா, அதான் இருபது ரூபாய் குறைச்சிக்கிட்டேன்” “ம்... கஷ்டம்தான்...” என்றேன் போலியான ஆதங்கத்துடன்.

வீட்டை அடைந்ததும், தவறுதலாகக் காலையில் கிழித்த பத்து ரூபாய் நோட்டை, ஒரு ஐம்பது, ஒரு இருபது ரூபாய் நோட்டுகளுடன் மடித்து உள்ளே வைத்து ஆட்டோகாரனிடம் நீட்டினேன். அவன் பெறுவதற்கும், அவனுக்கு ஒரு போன் கால் வருவதற்கும் சரியாக இருந்தது. போனில் பேசும்போது பணத்தைச் சரியாக பார்க்க மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தாலும், மனிஷாவைக் கூட்டிக்கொண்டு விடுவிடு என்று நடக்க முற்பட்டேன்.

வாசலில் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்தவுடன் “எக்ஸ்க்யூஸ் மீ சார், நீங்கதான் மிஸ்டர் சம்பத்தா?” என்று வினவினான்.

“ஆமாம். நீங்க?”

“நான் ஒரு குறும்பட இயக்குநர். எம்பேரு அபிஷேக். எழுத்தாளர் ராம்மோகன் நடத்துன சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தாராளம்ங்கற கதை உங்க கதைதானே?”

“ஆமாம். அத நீங்க படிச்சீங்களா?” சிறிது ஆர்வத்துடன் கேட்டேன்.

“படிச்சிட்டுத்தான சார் உங்களைப் பார்க்க வந்திருக்கேன். ஃபஸ்ட் க்ளாஸ் சார். பத்திரிகையில உங்க முகவரியும் கொடுத்ததினால வசதியாப் போயிடுச்சு. நல்லநல்லக் கதைகளை குறும்படமா எடுக்கணுங்கறதுதான் என்னுடைய இலட்சியமே... இதுவரைக்கும் அஞ்சு குறும்படங்கள் இயக்கியிருக்கேன். இப்போ ஆறாவதா உங்க கதையை...”

“தாராளமா எடுங்க... மேற்கொண்டு உள்ள போய்ப் பேசலாமே...” என் மனதுக்குள் கொள்ளை மகிழ்ச்சி.

நான் கேட்டை திறந்து கொண்டிருக்கும்போது, அபிஷேக், “உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது சார், உங்க கதையில வர்ற அந்தத் தாராள கதாநாயகனும் நீங்களும் ஒண்ணுதான்னு” என்றான்.

நான் சற்றே வெட்கத்துடன் சிரித்தபோது, திடீரென்று அந்தக் குரல் கணீரென்று கேட்டது.

“என்ன பெரிய தாராளமானவரு...? சரியாச் சவாரியே கிடைக்காத ஆட்டோகாரன் கிட்டப் போயி இருபது ரூபாய்க்குப் பேரம் பேசினாரு. அதிலேயும் கிழிஞ்ச பத்து ரூபாய் நோட்டை உள்ள மடிச்சு வச்சுக்கொடுத்தாருங்க! என்ன தாராள குணமோ...” என்றபடி, அந்த ஆட்டோக்காரன் நான் தந்த பத்து ரூபாய் நோட்டை என்னிடம் மாற்றுவதற்காக கோபத்துடன் என்னை நெருங்கிக் கொண்டிருந்தான்.

“நீ எழுதின கதையை நீயே இன்னொரு தடவை படித்துப்பார்” என்று மனிஷாவின் கண்கள் சொன்ன செய்தி இப்போது புரிந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p331.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License