இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

மாற்றம் ஏன்?

ஹ்ரிஷிகேஷ்


“அழகாய் இருக்கிறாய் என்று
சொன்னதைக் கேட்டு
கன்னம் சிவக்க வெட்கமடைந்தது
அந்திசாயும் வானம்”

இப்பொழுது இருக்கும் ஆகாயத்தைப் பார்த்து இப்படியொரு கவிதை சொல்லத்தான் தோன்றியது. எதையும் ரசிக்கும் திறன் இருந்தால் எங்கிருந்தாலும் கவிதை எழுதும் திறன் ஓடி வந்து நம்முள் ஒட்டிக் கொள்கிறதல்லவா? கடவுள் எப்படி இருப்பார்? எவ்வளவு அழகாக இருப்பார்? என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அவருடைய படைப்பில் எல்லாமும் எல்லோரும் விந்தையான அழகே.

கொரோனா என்னும் பேரிடர் சிறிது சிறிதாகத் தேய்ந்து, நாளடைவில் (மாதக்கணக்கில்) காணாமற் போனது, ஏதோ ஒரு பெரிய கனவு வந்து போனது போல இருக்கிறது. இந்த மாலை நேரப் பூங்காவில் முழுசாக இரண்டு வருடம் கழித்து இத்தனைச் சிரித்த முகங்களைப் பார்க்கிறேன். யாரையும் சற்று நேரம் பார்த்து ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அத்தனை இன்பமும் நிம்மதியும் ஒவ்வொரு முகங்களிலும் தென்படுகின்றது. ஏதோ ஒரு சொர்க்கப் பூமிக்குள் நுழைந்துவிட்டது போல் உணர்கிறேன். நாங்கள் அமர்ந்திரக்கும் இந்த மர பெஞ்ச் கூட தேவலோக வாகனமாய் இருக்கலாம்.

‘நாங்கள்’ என்று சொன்னேனல்லவா? ஆம், என்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் ஸ்ரேயாவும் என்னருகில் அமர்ந்திருக்கிறாள். இந்தப் பூங்காவில் எனக்கு தெரிந்த ஒரே நபர் ஸ்ரேயா என்பதால் அவளைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அதிர்ஷ்ட வசமாக (அல்லது துரதிஷ்ட வசமாக), நாங்கள் இருவரும் ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருக்கிறோம். பார்த்த மாத்திரத்திலேயே இன்னவர் இப்படிப்பட்டவர் என்பதை யூகித்து அவர்களுக்குச் சான்றிதழ் அடித்துவிடுவாள் ஸ்ரேயா. சில சமயம் அவளது யூகம் சரியாக இருந்தாலும், பல சமயம் தவறாகவே இருந்தது. வேலையில் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகியிருப்பதால், ஸ்ரேயாவை தோழி என்ற வட்டத்திற்குள் கொண்டு வரலாமா? வேண்டாமா? என்பதில் குழப்பம்.


‘வேர்ஹவுஸ்’ - இந்தப் பதத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏற்றுமதி - இறக்குமதிச் சாமான்களை ஆயிரக்கணக்கில் பதுக்கி வைக்கப் பயன்படுத்தும் மிகப்பெரிய குடோன். அப்படிப்பட்ட வேர்ஹவுஸ் ஒன்றில் ‘ஆர்டர் பாக்கிங்’(order packing) செக்சனில் ஸ்ரேயாவும் நானும் பணிபுரிகிறோம். இந்தக் கணினி யுகத்தில் எங்களது வேலை மிகவும் சுலபமானது. இந்த மாதத்திற்குள் இத்தனைப் பொருட்களை பாக் பண்ணவேண்டும், இதுவரை எத்தனை பேக் பண்ணப்பட்டிருக்கின்றன மற்றும் இன்று எத்தனை பேக் பண்ண வேண்டும் என்பதை அழகாகக் காட்டிவிடும் எங்கள் செல்லக் கணினி. இதில் எங்கள் வேலை என்னவென்றால், எங்கள் கையில் இருக்கும் பேக்கிங் ஸ்லிப்பை கணினியின் டேட்டாவுடன் தினமும் ஒரு முறையாவது சரிபார்க்க வேண்டும். அவ்வளவே... இத்தனை சவுகரியங்கள் இருந்தும் வேறு ஏதாவது டிபார்ட்மெண்டில் சேர்ந்தால் நல்லா இருக்கும் என்று கூட அவ்வப்போது தோன்றும். காரணம் புலப்படவில்லை.

ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுமுறை. சரி, வேர்ஹவுஸ் பாடம் போதும். பூங்காவிற்கு வாருங்கள். இத்தனை நேரம் ஸ்ரேயா அமைதியாய் இருக்கிறாள் என்றால் என்னைப் போலவே அவளும் இங்குள்ளவர்களை ரசித்துக் கொண்டுதான் இருக்கவேண்டும். அதோ அந்த மஞ்சள் டீ-ஷர்ட் சிறுவன் எத்தனை வேகமாக ஓடுகிறான். காற்றை மிஞ்சி விட வேண்டும் என்ற ஆவலோ என்னவோ! அவன் தந்தையோ, அவன் பின்னாலேயே அவனைத் துரத்திக் கொண்டிருக்கிறார். அவன் தாய் பூங்காவில் இருக்கும் செடிகளை ஒவ்வொன்றையும் நெருங்கி, சற்றுநேரம் தலையைச் சாய்த்துச்சாய்த்து ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தார். செடிகளின் மேல் அவர் வைத்திருக்கும் அன்பு, அவளது கணவனையும் மகனையும் சற்று பொறாமைப்பட வைக்கலாம்.

அடுத்து திசையின்றி குதூகலமாய் ஓடித்திரியும் குழந்தைகள். அவர்களில் யாருக்கும் பதினைத்து வயதிற்கு மேல் இராது. ஏன் எதற்கு என்று தெரியாமல், ஒரே ராகத்தில் (ராகம் பெயர் கேட்காதீர்கள்) அனைவரும் ஒன்று சேர்ந்து கூச்சலிடுவதில் அப்படி என்ன சுகம் கண்டுவிட்டனர் என்று புரியவில்லை. முடிந்த அளவு வேகமாக ஓட, சற்றுக் களைப்புத் தீர மூச்சிரைக்க வந்து ஓரிடத்தில் நிற்க, பின்புறத்தில் இருந்து இன்னொரு குழந்தை கத்த, மறுபடியும் முகமெல்லாம் அதிர்ச்சியும் சிரிப்புமாக ஓட்டம் பிடிக்க என்று தங்களது பிரத்தியேக உலகத்திற்குத் தனி அர்த்தம் வகுத்துக் கொண்டிருந்தனர்.

இவர்களை ரசித்தவாறேத் திரும்பிப் பார்த்தால் இன்னும் இரண்டு சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள். எங்களுக்கு எதிர்ப்புறம் அமைந்திருந்த இன்னொரு மரப் பெஞ்சின் ஓரத்தில் ஐம்பது, ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும், இன்னொரு ஓரத்தில் சுமார் இருபது வயதிருக்கும் வாலிபனும் அமர்ந்திருந்தனர். அந்தப் பெண்மணியின் கண்களில் அமைதியும் ஆனந்தமும் நிலவியது. அதேசமயம் அவர் கண்களில் இருந்த ஒருவித ஆர்வம் பூங்காவில் உள்ள குழந்தைகள், செடிகள், மலர்கள், பச்சை இலைகள், இளைஞர்கள், தம்பதிகள் என எல்லாவற்றையும் தழுவிக் கொண்டு இருந்தது. இத்தனை அழகாக, ஆழமாக இந்த வயதில் கூட உலகத்தை ரசிக்கிறார் என்பது வியப்பூட்டுகிறது.

அந்தப் பெண்மணியின் அருகிலிருந்த வாலிபன் கையில் ஒரு திறந்து வைக்கப்பட்டிருந்த நோட்டு புத்தகமும் பேனாவும் இருந்தன. கல்லூரி மாணவனாக இருக்கலாம். படிப்பதற்காக இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். சிறிது நேரம் அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்துவிட்டு, தலையைக் குனிந்து படிப்பது என்றிருந்தான். அப்போது சில வரிகள் எழுதவும் செய்தான். அவை கவிதை வரிகளாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதுவரை நான் பார்த்த அத்தனை முகங்களிலும் ஒருவிதக் கவலையோ பதற்றமோ அவசரமோத் தென்படவில்லை. இங்குள்ளவர்களின் முக மலர்ச்சியை ஆமோதிக்கும் வண்ணம் செடிகளும், மரங்களிலிருந்த இலைகளும் சீரான வேகத்தில் மென்மையாக அசைந்தாடிக் கொண்டிருந்தன. இயற்கையும் மனிதனின் சிரிப்பும் ஒன்று சேர்வது எத்தனை பெரிய வரம்!

இத்தனை நேரம் அமைதி காத்திருந்த ஸ்ரேயா திடீரென்று, “ஊரா இது? நம்ம ஜனங்கள் இப்படி மாறிப் போயிட்டாங்க பாரேன்...” என்றாள் சலிப்புடன்.

எனக்குத் துளியும் விளங்கவில்லை. “எல்லாம் நல்லாத்தானேப் போய்கிட்டு இருக்கு” என்றேன்.

“என்னத்த சொல்ல... அங்க பாரு அந்தாம்மாவை.. இயற்கையை ரசிக்குதாம். அதுக்காகப் பிள்ளையை மறந்துடறதா? அவன் அப்பா அவனைச் சமாளிக்க என்ன பாடுபடுறார்...? அவுங்க என்னடான்னா ஹாய்யா செடிகள் கூட டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க...” கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டு, “பத்தாததுக்கு இந்த பார்க்ல எங்க பார்த்தாலும் கன்னாபின்னான்னு கத்திட்டு ஓடுற குழந்தைங்க... அவங்க அம்மா அப்பாவெல்லாம் பார்த்துட்டுச் சும்மாவேதான் இருக்காங்க... அட இதெல்லாம் கூடப் பரவாயில்லை, நமக்கு எதிரில உக்கார்ந்திருக்கவங்களப் பாரு” என்றபடி குரலைத் தாழ்த்திக் கொண்டாள்.

“அவங்களுக்கு என்ன?” என்றேன் புரியாமல்.

“தனியா வந்திருக்காங்கன்னு நல்லாவே தெரியுது. இவுங்க பசங்கெல்லாம் ஃபாரின்ல செட்டிலாகி இருப்பாங்கன்னு நினைக்குறேன்... வயசான அம்மாவைத் தனியா இங்க விட்டுட்டு, அவங்க மட்டும் அங்க நல்ல வாழ்க்கையை வாழ்றாங்க...”

“அவங்க தனியாத்தான் இருக்காங்கன்னு எப்படிச் சொல்ற?”

“இல்லன்னா பேரன் பேத்தி கூடல்ல வந்திருக்கணும்.. அட்லீஸ்ட் இந்த பார்க்ல இருக்கற குழந்தைகளைப் பார்த்தாவது மனச ஆத்திக்க வந்திருக்கணும்...”

“அவங்க பக்கத்துல ஒரு பையன் உக்காந்திருக்கானே... அவனையாவது உன் யூகப் பார்வை விட்டு வெச்சுதா இல்லையா?”

“விடலையே... அவன் திருதிருன்னு முழிச்சிட்டு, திருட்டுத்தனமாப் பாக்கறத வச்சுச் சொல்றேன், நிச்சயமா அவன் காதல் கடிதமோ அல்லது காதல் கவிதையோதான் எழுத வந்திருக்கணும்...”

“சரி, எழுதிட்டுப் போகட்டுமே... அதனால நமக்கென்ன நஷ்டம்?”

“நமக்கு மட்டுமில்ல... இந்த நாட்டுக்கே இவன மாதிரிப் பசங்களால நஷ்டம்தான். படிக்கிற வயசுல ஒழுங்காப் படிச்சு, ஒரு நல்ல வேலையைத் தேடிக்கொள்ளாம, இப்படியாக் காதல் பண்ணிக்கிட்டு... சேச்சே...” என்று அர்த்தமின்றி அலுத்துக் கொண்டாள்.


ஸ்ரேயாவுடன் பழகியது வெறும் ஒரு மாதமே ஆனாலும், ஒரு வண்டி குறைகளையும் மற்றவர்களைப் பற்றிய தனது தவறான யூகத்தினையும் நிறையவே என்னிடம் திணித்திருக்கிறாள். இதுவரை அவள் புறம் பேசியது, உடன் வேலை பார்க்கும் தொழிலாளர்கள்தான். ஆனால் இன்றோ, இந்தப் பூங்காவில் உள்ள யாவரையும் சரியாகத் தெரியாமல், தனக்குத் தோன்றியதையெல்லாம் கொட்டி விட்டாள்.

என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை. சட்டென்று எழுந்து, “சரி, நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்றேன்.

“ஹேய் ஸ்வேதா, என்ன அதுக்குள்ள?”

“இல்லப்பா... எனக்குக் கொஞ்சம் டயர்டா இருக்கு... அதான்...” என்று அவளது பதிலுக்கு எதிர்பாராமல் விருட்டென்று நடந்து வந்தேன். உண்மையில் எனக்கு எந்தவித அலுப்பும் இல்லை, ஸ்ரேயாவின் வார்த்தைகளை கேட்கும் வரையில். அலுவலகத்தில் டிபார்ட்மெண்ட் மாற வேண்டும் என்ற நினைப்பிற்குக் காரணம் இன்று கிடைத்து விட்டது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p337.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License