இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

புது மாப்பிள்ளை

முனைவர் பி. வித்யா


கனி இந்த அழகிய பெயரின் சொந்தக்காரி, நல்ல பொன்னிறம் உடையவள். எலும்புகள் மட்டுமே அரசாளும் உடம்பைப் பெற்றவள். சதைப் பகுதி என்று அவள் உடம்பில் எந்த ஒரு பகுதியையும் பிரித்துச் சொல்லிவிட முடியாது. கச்சிதமாய் செய்தெடுத்த கிச்சென்ற சிலை என்று சொல்லலாம். வயது பதினெட்டு ஆனதும் கனியின் வீட்டில் திருமணப் பேச்சு தொடங்கியது. அவர்களின் தேடலில் பத்துப் பவுன் தங்கத்திற்கும் பத்தாயிரம் ரொக்கத்திற்கும் மாட்டியவன் மூக்கன்தான்.

மூக்கன் கனியின் உருவத்திற்கு நேரெதிர். கனமான உருவம். அடர்ந்த புருவக்கட்டு. அவன் கட்டும் எருமையின் நிறமும் அவன் நிறமும் ஒன்றெனச் சொல்லலாம். அது அவன் தப்பல்லவே, மூக்கனின் அம்மா சொன்னதைப் போல, வெயில் நேர வேலை அவனுடையது. ஆடு, மாடு மேய்த்து வீடு கட்டியாச்சு. வீடு கட்டுனதும் மாடு கட்ட ஆள் தேடினாள் மூக்கனின் அம்மா.

ஆத்தாளுக்கு ஒத்தாசையா வீட்டு வேலை செஞ்சு, சோறு ஆக்கி, குஞ்சும், குட்டியுமா இருக்க வீட்ட கோபுரமாய் மாத்த ஆள் தேடினான் மூக்கன்.

ஒரு வழியாகத் திருமணம் நடந்தேறியது. உரப்பனூர் பொண்ணு ஊமெச்சிகுளப் பெண்ணாகிப் போனாள். புது மஞ்சள் கயிறும், பவுடர் பூசிய முகமும் கொஞ்சம் கொஞ்சமாய் மாறத் தொடங்கியது. திருமணம் முடிந்த முதல் வாரம். குல தெய்வம் போய் வந்து, மறுவீடு போய் வந்து, கனிக்கு இன்னும் புது மினுப்பு கூடி அழகு மேனி எங்கும் பரவி இருந்தது.

தாம்பத்ய வாழ்க்கையும் இனிமையாகத்தான் போய்க் கொண்டிருந்தது. மூக்கனும் கனியின் மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருப்பதாகத்தான் தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மூக்கனின் அம்மா வெள்ளத்தாயின் ஆட்டக் கைகளுக்கு கனியின் வாழ்க்கை சென்றது.

மெது மெதுவாய்ப் பேசி லாவகமாக, கனியின் நகைகளுக்கு கண் வைத்தாள் வெள்ளத்தாயி. அவள் பேசிய பேச்சில், கனியின் நகைகள் செட்டியார் கடைக்குப் போய், பணமாய் மாறி, மாட்டுச் சந்தையில் ஐந்து ஆட்டுக் குட்டிகளாய் மாறிப் போனது.


நகை போய் ஆடு வந்ததிலிருந்து வீட்டு வேலை ஓய்ந்த பாடில்லை கனிக்கு, கூட்டி வந்த முதல் வாரம் கூரையைக் கிழித்துக் கொண்டு கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது ஆடுகள். ஆடுகள மேய்ச்சலுக்கு விடுறது, சாணி கூட்டிப் பெருக்கி, கொட்டம் கூட்டி ஓய்ந்து வீடு வந்ததும் வராததுமா திரும்ப அதுக்கு புல் அறுப்பது, அது பத்தலன்னு மூக்கனுக்கு சொந்தமான நெலத்து மொய் தண்ணிக்கு காத்துக் கிடந்து தண்ணி பாய்ச்சி, அவன் வரப்பு வெட்ட வந்தா சோறு சொமந்து, சொல்ல மறந்த அத்தனை வேளைகளுக்குள்ளும் அல்லாடி மல்லாடிக் கொண்டிருந்தாள் கனி.

“சரி வெள்ளத்தாயி நாங்க வாரோம்” ன்னு சொல்லி கூட்டுக்காரவங்க கிளம்பற வர உன் மருமக என்ன செய்யறா? என்ற கேள்வியில் தொடங்கி தொடங்கி, அடுத்த தெருவுல சமஞ்ச கொமரி ஒருத்தி ஓடிப் போனாளே அது தெரியுமா ஒனக்கு, என்று ஊரின் அத்தனை வீட்டு அடுக்களைகள் அந்தப்புரம் என்று அத்தனை ரகசியங்களையும் பேசி முடித்து, அந்த மேத்தெரு சீனிவாசன் தூக்குப் போட்டுக்கிட்டானான்டி”யில் இன்று அவர்கள் சபை களைந்தது. நாளை யார் வீட்டில் தொடங்கி எவன் வீட்டுச் சாவில் முடியும் என்று யாருக்கும் தெரியாது.

“கனி, காப்பித்தண்ணி போடு தாயீ ….” என்று ஆரம்பித்தாள் வெள்ளத்தாயி. “பேசிப்பேசித் தொண்ட வரண்டு போச்சு” என்று சலித்துக் கொண்டாள். சொன்னதும் கொண்டு வந்து வைக்கவில்லையெனில் மாமியார் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத ஒருத்தி பற்றிய கதை காலாட்சேபம் போல் வெள்ளத்தாயி சொல்ல ஆரம்பிப்பாள் என்று கனிக்கும் தெரியும்.

கனியின் மாமனார் அந்த அளவில் பெரும் தொந்தரவாக இருக்கவில்லை. கட்டிலில் படுத்த படுக்கையாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. படுக்கையைச் சுத்தம் செய்வது, மருந்து மாத்திரைகளை கணக்காக எடுத்துக் கொடுப்பது மட்டும்தான் அவள் வேலை. மற்ற எல்லாத் தேவைக்கும் வெள்ளத்தாயிதான் வேண்டும் அவருக்கு. காலையில் கோழி கூவுவது முதல் கூடடையும் வரை வெள்ளத்தாயி என்று அழைத்துக் கொண்டுதான் இருப்பார்.

காலையில எழுந்திருச்சு, வாசல் தெளிச்சு வேலய ஆரம்பிச்சா, இரவு பத்து மணிக்கு மாமனாருக்கு மாத்திர போட்டுக் குடிக்க ஒரு டம்ளர் பால், வெள்ளத்தாயி தொண்ட கணகணப்புக்கு சுக்கு மல்லிக் காப்பி, புருசனுக்கு பாலோ, சுக்கு மல்லியோ புடிக்காது, அதனால பால் காப்பி போட்டு தூங்க இடம் பார்த்து செத்த விழுந்திக்கிறனேன்னு உடல் கெஞ்சும் போதும், அப்படிச் சட்டென்று அவளால் படுத்து விட முடியுமா?

அப்பொழுதும் உடல் அலுப்பை மறந்து கட்டிய கணவனுக்காய் முந்தி விரித்து, அவன் இச்சைக்கு ஈடு கொடுத்து, எப்பொழுது தூங்கினோம் என்பதே மறந்து, தூங்கினோமா? என்பதும் மறந்து, அடுத்த நாளின் விடியலில் கொட்டம் பெருக்கிக் கொண்டிருப்பாள் கனி.

அத்தனைக்கும் மாடுக்கும் மனுசனுக்கும் ஆடுக்கும் கோழிக்கும் பறந்து பறந்துதான் வேலை செய்து பார்க்கிறாள் குறைந்தபாடில்லை. சிட்டுக்குருவியாய் இலந்தைப் பழம் பொருக்கித் திரிந்த அவளின் சிறு வயதுச் சேட்டைகள் அவ்வவ்போது அவள் மனதில் நிழலாடும்.

“கண்கள் கண்ணீருக்கு வாக்கப்பட்டதன் பின்னே, என்ன செய்ய, பட்டுத்தான் தீர வேண்டியிருக்கு” என மனதும் சலித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டது.

கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசந்தான் நூலா இருந்தவ காத்தாட்டம் ஆயிப்போனா, ஒருநாள் கனிக்கு உடம்பு நோவு எடுத்தது. எத்தனை எந்திரமாய் பறந்து திரிந்த ஒடம்போ படுத்துக் கொண்டு எழுந்திரிக்க மறுத்தது. திண்ணையில விழுந்தவளால கண்ணக்கூட தொறக்க முடியல.

கொட்டம் பெருக்காம கனி திண்ணயில கெடக்கிற பாத்ததும், வெள்ளத்தாயியிக்கு ஆத்திரம் தாங்க முடியல.

“ஏன்டி ஜமீன்தாரு மகளே, ஒன் வீட்டுல இப்படித்தான் பன்னண்டு மணி வரக்கும் பொளந்துகிட்டு படுப்பியா? எங்கயோ மேய்ஞ்சுகிட்டு திரிஞ்சவள எம் புள்ள தலயில கட்டி வச்சு. என் உசுர எடுக்கறானுக...” என்று கொஞ்சம் நெருங்கி கனியின் தலை முடியைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தாள் வெள்ளத்தாயி.

அவள் லேசாக கண்ணத் தொறந்து பாத்து, “அத்தை …” என்றதுதான் தாமதம் அவள் குலம் கோத்திரம் சொந்தக்காரன், பந்தக்காரன் பெண்ணை பெற்றவன் அவன் சொந்தக்காரன், மாண்டவன் என்று அத்தனை பேரையும் கெட்ட கெட்ட வார்த்தைகளால் கிழித்து தொங்க விட்டாள் வெள்ளத்தாயி.

கனி தட்டுத்தடுமாறி “எங் குடும்பத்த பத்தி எதுவும் சொல்லாதீங்க அத்தை” என்று சொல்ல வந்த வார்த்தையை முடிப்பதற்குள் ஏக வசனத்தில் எகிறிக் குதித்தாள் வெள்ளத்தாயி.

சந்தைக்குப்போன மூக்கன் வீடு திரும்புனதும் முதல் வார்த்தையை வெள்ளத்தாயி ஆரம்பித்தாள். “ஒம் பொண்டாட்டி என்ன எதுத்துப் பேசுறா, குடும்பப் பொண்ணுகளுக்கு இது சரிப்பட்டு வராது. வந்த ஆறு மாசத்துல ஒரு புழு பூச்சிக்கூட தங்கல, நானே சிவனேன்னு எங்காலத்தப் போக்கிக்கிட்டிருக்கேன். ஆனா இருந்தாலும் பொட்டச்சிக்கு இம்புட்டு வாய் நீளக் கூடாது. அம்புட்டுத்தான் சொல்லிபிட்டேன்” என்று இக்கன்னா வைத்து முடித்தாள் வெள்ளத்தாயி.

தாயைத் திட்டி விட்டாளே என்று கோபத்தில் கனியைத் தேடிச் சென்ற மூக்கன், அவள் தலை முடியைக் கூட்டிப் பிடித்து அடித்த அடியில், மரக் கதவில் மோதி கீழே விழுந்தாள். “நீ என் அம்மாவ எப்பிடி கொடுமக்காரின்னு சொல்லலாம்” என்று உச்சஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தான் மூக்கன்.

இப்படியெல்லாம் அவன் மட்டும்தான் கத்திக் கொண்டிருந்திருப்பான் போலும். கீழே விழுந்த கனி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

“பொம்பளன்னா அடக்க ஒடுக்கமா பெரிசுக பேசுனா... வாயத் தொறக்காம இருக்கணும்... அவதான் குடும்பப் பொண்ணு...” என்று பெண்ணின் லட்சணங்களையெல்லாம் பேசி முடித்துத் திரும்பிப் பார்க்கையில் அதிர்ந்து போனான் மூக்கன்.

அவன் முன்னே போன நிமிடம் போராடிய கனியின் மெல்லிய தேகம் உயிரற்றுக் கிடந்தது. இந்த நிமிடம் வரை தன்னைப் பற்றியோ தன் ஆசைகளைப் பற்றியோ சிந்திக்காத கணவனிடத்திலிருந்து, அவளும் ஒரு பெண்தானே என்று நினைக்காத மாமியாரிடமிருந்து, கட்டிக் கொடுத்து விட்டால் போதும் நம் சுமை குறைந்தது என்று ஒதுக்கியிருக்கும் பெற்றவர்களிடமிருந்து, என்ன காரணம் என்று அறிந்து கொள்ளாமலே பிதைக்கப்படப் போகும் தன் சவத்திடமிருந்தும் கூட விட்டு விடுதலையாகிப் போனாள் கனி.


கணவன் செத்தால் பொண்டாட்டி கைம்பெண் ஆவதும், பொண்டாட்டி செத்தா கணவன் புது மாப்பிள்ளை ஆவதும் சமூக நீதி. அது உங்களுக்கும் தெரியும்தானே?

இதோ இந்த மார்கழி மாதப் பனியில் ஆடுகளோடு ஆடாக குனிந்து கொட்டம் பெருக்கிக் கொண்டிருக்கிறாளே அவள்தான் மூக்கனின் ரெண்டாவது மனைவி...

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p343.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017



வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License