இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

நோன்புக் கஞ்சி

மலர்மதி


புனித ரமலான் மாதம்.

பள்ளிவாசலில் நோன்பு திறப்பதற்காகக் கஞ்சி தயாராகிக்கொண்டிருந்தது. முக்கோண வடிவில் மூன்று பெரிய கற்களைச் சமமாக வைத்து, காய்ந்த விறகுகளை அடுக்கி, தீமூட்டி, ஒரு பெரியா குண்டாவை ஏற்றி அதில் களைந்த அரிசி, நெய், புதினா, தக்காளி, வெங்காயம், வெந்தயம், இலவங்கம், பட்டை, ஏலக்காய், இஞ்சி, பாசி பருப்பு, ஆகியவற்றை எப்போது, எவ்வளவு போடவேண்டும் என்பதை தலைமைச் சமையல்காரார் விளக்கிக் கொண்டிருக்க, அதை அப்படியே கடைப் பிடித்து மும்முரமாய் பணியாற்றிக் கொண்டிருந்தனர் உதவியாளர்கள்.

பள்ளிவாசலின் அலுவலக அறையிலிருந்து வெளிப்பட்ட ஜமாத் தலைவர் ஜக்கரியா, தயாராகிக் கொண்டிருந்த கஞ்சிப் பணிகளை மேற்பார்வையிட அருகில் சென்று நின்றார்.

“ஸ்டோர் ரூம் திறந்துதான் இருக்கு. என்னென்ன தேவையோ எடுத்துக்குங்க.” என்றார்.

“சரிங்க ஐயா.” என்றார் தலைமை சமையல்காரர்.

சாப்பிட்டு இரண்டு நாட்களாகிவிட்டன. கையிலிருந்த இருபது ரூபாயும், பன்னும், டீயும் வாங்கிச் சாப்பிட்டதில் கரைந்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார் முனுசாமி.

தனக்கே இவ்வளவு பசி மயக்கம் இருக்கிறதே, குடிசையில் இருக்கும் மனைவி, குழந்தைகளின் நிலை எப்படியிருக்கும் என்றெண்ணியபோது ஒரு கலக்கம் உண்டாயிற்று.

‘எப்படியாவது ஒரு வேலை தேடி வருகிறேன்.’ என்று மனைவி கௌசல்யாவிடம் கூறி கிளம்பியவர்தான், இரண்டு நாட்களாய் வேலை தேடி அலைகிறார். ஒன்றும் கிடைக்கவில்லை.

நடந்து வந்து கொண்டிருந்தவருக்குத் தலைசுற்றியது. மயக்கம் வருவது போல் தெரிய, ‘சட்’டென பள்ளிவாசல் படிகட்டுகளில் அமர்ந்துவிட்டார்.

பள்ளிவாசலுக்குள்ளிருந்து கிளம்பி, காற்றில் கலந்து பரவிய நோன்புக் கஞ்சியின் மணம், அவர் நாசிக்குள் நுழைந்து, பசியை மேலும் கிளறிவிட்டது.

“கடவுளே... ஒரு வாய் கஞ்சி கிடைக்காதா..?’ என ஏங்கியது மனம்.


இஸ்லாமியர்களிடம் எப்படிக் கேட்பது? அவர்கள் கொடுப்பார்களா? நோன்பாளிகளுக்காக உண்டாக்கியிருக்கும் கஞ்சி மற்ற மதத்தினருக்குக் கொடுப்பார்களா? என்பது போன்ற பல கேள்விகள் அவரைக் குழப்ப, அப்படியே தன்னையுமறியாமல் கண்ணயர்ந்தார்.

எவ்வளவு நேரம் அவ்வாறு சாய்ந்திருந்தார் என்று தெரியவில்லை,

“முனுசாமி... முனுசாமி...” என்று யாரோ அழைக்க, பதறிக் கண் முழித்தார்.

“ஜக்கரியா... நீயா..?”

“ஆமாம். நானேதான். இது என்ன கோலம்? ஏன் இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கே? என்ன பிரச்சினை உனக்கு?”

ஜக்கரியா கேட்ட கேள்விகளுக்கு அவனால் பதில் சொல்ல இயலவில்லை.

தட்டுத் தடுமாறி, எழுந்து நின்றார்.

“சரி, வா...” என்று அவரை பள்ளிவாசலுக்குள் அழைக்க, அவர் தயங்கினார்.

அவர் தயக்கத்தைப் புரிந்து கொண்டவர், “அட, வாய்யா. உள்ளாறத்தான் என் ஆபீஸ் இருக்கு” என்று அவரை அழைத்துக் கொண்டு போய் அலுவலக அறையில் அமரச் செய்தார்.

அலுவலகத்தில் இருந்த ஒருவரை ஏவி, கஞ்சி கொண்டுவரச் செய்தார்.

‘கம கம’ மணத்துடன் சூடான நோன்புக் கஞ்சியை ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனார் ஒருவர்.

“ம். குடி”

முனுசாமி கஞ்சி குடிக்காமல் ஜக்கரியாவையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ன?”


“இது நோன்பு வைத்தவர்களுக்குண்டான கஞ்சி. இதை எப்படி நான்..? அதுவும் நான் இந்து. நோன்பு திறப்பதற்க்கான நேரமும் இன்னும் நெருங்கலை. அதுக்குள் இதை நான் குடிக்கலாமா?” தயங்கிக் கேட்டார் முனுசாமி.

“இதோ பாரு, முனுசாமி... உன்னைப் பார்த்தால் நீயும் ஒரு நோன்பாளியாத்தான் தெரியுறே. சாப்பிட்டு எத்தனை நாளாச்சோ. அது மட்டுமில்லை, ஓர் இந்து இதைக் குடிக்கலாமான்னு கேட்டே, இந்த கஞ்சி உண்டாக்கினதே நம்ம அரசு அனுப்பிய அரிசியிலிருந்துதான். தெரியுமா? மொதல்ல சாப்பிடு. அப்புறம் பேசலாம்” என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியே சென்றுவிட்டார் ஜக்கரியா.

பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்தார் ஜக்கரியா.

கஞ்சி பாத்திரம் முழுக்க காலி செய்திருந்தார் முனுசாமி.

இப்போது அவர் முகத்தில் ஒரு தெளிவும், உற்சாகமும் தெரிந்தது.

“ம். இப்பச் சொல்லு முனுசாமி. உனக்கு என்ன பிரச்சினை?” என்று கேட்டார் ஜக்கரியா.

“தோல் தொழிற்சாலையில் வாட்ச் மேனா வேலைப் பார்த்துக்கிட்டிருந்தேன். கம்பெனி நஷ்டத்துல ஓடுதுன்னு இழுத்து மூடிட்டாரு ஓனரு. என் வேலை போயிருச்சு. வேறு வேலை தேடி, தேடி அலைஞ்சுக்கிட்டிருக்கேன். ஒண்ணு கூடக் கிடைக்க மாட்டேங்குது. வீட்ல பொண்டாட்டி, ரெண்டு குழந்தைங்க வேறு இருக்காங்க”

தன் சோகக் கதையை விவரித்தார் முனுசாமி.

“எந்த கம்பெனியில வேலை பார்த்தே?”

சொன்னார்.

ஆழ்ந்து யோசித்தவர், “உனக்குத்தான் சைக்கிள் ரிப்பேர் வேலையெல்லாம் தெரியுமே?” என்றார்.

“ப்ச். தெரிஞ்சு என்னப்பா பிரயோஜனம்? வேலைதான் கிடைக்கலையே?”

“அந்த ஆண்டவனாப் பார்த்து உன்னை இங்கே சரியான சமயத்துலதான் அனுப்பியிருக்கான்”

“நீ.. நீ என்னப்பா சொல்ற?”

“எனக்குச் சொந்தமா ஒரு சைக்கிள் கடை இருக்கு. அதைச் சரியாப் பார்த்துக்க ஆள் இல்லாம நான் திண்டாடிக்கிட்டிருக்கேன். நீ என்ன பண்றே, நாளையிலிருந்து அந்தக் கடையை உன் முழு பொறுப்புல எடுத்து நடத்துற. இந்தா அட்வான்ஸ்” என்று சொல்லி இரண்டாயிரம் ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தார் ஜக்கரியா.

நடப்பது, கனவா? நிஜமா? என்று புரியாமல் அவர் கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டார் முனுசாமி.

ஒரு சிறிய வாளி நிறைய நோன்பு கஞ்சியைக் கொடுத்து, “இதை குழந்தைங்களுக்குக் கொடு.” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார் ஜக்கரியா.

வீட்டில் இருந்த பொருட்களை வைத்து எப்படியோக் குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டு, தண்ணீர் மட்டும் பருகிய கௌசல்யா, கணவனைக் காணாது பதறிப் போனாள். இதுவரை இப்படி இரண்டு நாட்கள் வரை முனுசாமி காணாமல் போனதில்லை.

குழந்தைகளைப் படுக்க வைத்துவிட்டு, வாசலில் வந்து வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தாள்.

தூரத்தில் புள்ளியாய் தெரிவது முனுசாமி மாதிரி இல்லை?

அவரேதான்...

அவளுக்குப் போன உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது.

எழுந்து அவரை நோக்கி ஓடினாள்.

“எங்கேயா போனே? இப்படியா என்னை பயமுறுத்தறது?” என்று சொல்லிக் கொண்டே அவரிடமிருந்த கஞ்சி வாளியை வாங்கிக் கொண்டாள்.

“என்னய்யா இது?”

“வீட்டுக்குள்ளாற வா, சொல்றேன்.” என்றவர், பெரிய பையை ஒரு மூலையில் வைத்துவிட்டு தரையில் அமர்ந்தார்.

நடந்ததை விவரித்தார்.

“ஜக்கரியா என்னோடு ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவன். எனக்குத்தான் படிப்பு ஏறலை. அவன் நல்ல படிச்சு இப்ப பெரிய ஆளாயிட்டான். நம்ம ஊர் பள்ளிவாசல்ல தலைவனா இருக்கான். அதுமட்டுமில்லை, பல கடைகளையும் வெச்சு நடத்தறான். அவனைப் பார்த்து பல நாட்களாகியும், அவன் என்னை அடையாளம் வெச்சி கண்டுபிடிச்சிட்டான். என்னை அவனுடைய சைக்கிள் கடையைப் பார்த்துக்கச் சொல்லி அட்வான்ஸ் சம்பளத்தையும் கொடுத்தான். இதோ அவன் கொடுத்த பணத்துல அரிசி, பருப்பு, மளிகை சாமான் எல்லாம் கொண்டு வந்திருக்கேன். குழந்தைங்களுக்கு ஆக்கிப் போடு.” என்றார்.


“வாளியில என்னய்யா அது?”

“நோம்பு கஞ்சி புள்ளே. சாப்புடு”

“நீ…?”

“நான் சாப்டுட்டுத்தான் வந்தேன்”

அதற்குள் மூத்தவள் எழுந்து கொண்டாள்.

“அம்மா... பசிக்குது...”

“எழுந்து வா, கஞ்சி தர்றேன்.” சொன்னவள், ஒரு பாத்திரத்தில் கஞ்சியைக் கலக்கி, ஊற்றிக் கொடுத்தாள். தானும் சாப்பிட்டாள்.

“நல்லா இருக்கும்மா. இன்னும் கொஞ்சம் குடும்மா.” என்று கேட்டு வாங்கிக் குடித்தாள்.

அரவம் கேட்டு சின்னவனும் எழுந்து கொள்ள, அவனுக்கும் கஞ்சி ஊற்றிக் கொடுத்தாள் கௌசல்யா.

“அந்த புண்ணியவான் நல்லா இருக்கணும். நீடுழி வாழணும். சரியான சமயத்துல உதவியிருக்கிற அந்த நல்ல உள்ளம் பல்லாண்டு வாழணும்.” என்று மனதார வாழ்த்தினாள் கௌசல்யா.

இன்னும் இரண்டே நாளில் ரமலான் பெருநாள்.

முனுசாமியை அழைத்தார் ஜக்கரியா.

“என்னப்பா?”

“இந்தா...” என்று ஒரு பார்சலைக் கொடுத்தார்.

“என்னப்பா இது?”

“குழந்தைங்களுக்கு புது ட்ரெஸ். உனக்கு கைலி. அண்ணிக்கு சேலை”

முனுசாமி தயங்கினார்.

“அட, சும்மா வாங்கிக்கப்பா”

“நீ இவ்வளவு செய்வேன்னு நான் எதிர்பார்க்கலைப்பா..”

அவர் கொடுத்த பார்சலை வாங்கிக்கொண்டார்.

“ஒருவிதத்துல இது நான் உனக்குக் கொடுக்கிற நஷ்ட ஈடா எடுத்துக்கப்பா”

“நஷ்ட ஈடா? என்னப்பா சொல்றே? எனக்கு ஒண்ணும் புரியலையே?”

“நீ வேலை பார்த்த கம்பெனி இழுத்து மூடிட்டதாச் சொன்னியே, அந்த கம்பெனியோட முதலாளி வேறு யாருமில்லை, என் பையன்தான். ஒரு வேளை, நீ வேறு கம்பெனியில வேலை பார்த்திருந்தாலும், இந்த உதவியை நான் கண்டிப்பா உனக்கு செய்திருப்பேன். எதுக்கு சொன்னேன்னா, எதைக் கொடுத்தாலும் நீ வாங்கத் தயங்குறே, அதனால்தான் அந்த உண்மையைச் சொன்னேன். இப்பப் புரியுதா? என்னுடைய உதவிகளை ஏத்துக்க இனி உனக்குத் தயக்கமில்லையே?” சொல்லிவிட்டுச் சிரித்தார் ஜக்கரியா.


முனுசாமியின் மனம் இப்போது லேசானது போலிருந்தது.

வீட்டிற்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்தார் ஜக்கரியா.

அவருக்காக இஞ்சி டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தாள் மனைவி பாத்திமா.

வாங்கி பருகிக்கொண்டே முனுசாமி பற்றி சொன்னார் ஜக்கரியா.

“எல்லாம் சரி. ஆனா, அவர் வேலை பார்த்த கம்பெனி ஓனர்தான் நம்ம மகன்னு ஏன் பொய் சொன்னீங்க?” என்று கேட்டாள் பாத்திமா.

“அதுவா? முனுசாமி ஏழையா இருந்தாலும் கூச்ச சுபாவம் படைச்சவன்.உழைத்து சம்பாதிக்கணும்னு நினைக்கிறவன். பிறர் உதவியை ஒருபோதும் ஏற்கமாட்டான். அதனால்தான் அப்படி ஒரு பொய்யைச் சொன்னேன். அவன் வேலை பார்த்த கம்பெனி முதலாளி கொடுத்த இழப்பீடுன்னு சொன்னதால்தான் அவன் அதை ஏத்துக்கிட்டான்.” என்றார் ஜக்கரியா.

நண்பர்கள் இருவரின் சித்தாந்தங்களை எண்ணி வியந்து நின்றாள் பாத்திமா.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p358.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License