இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

வாச(க)ம்

முனைவா் நா. கவிதா


ஆழ் மனசுல ஒருவிதமான கலக்கம்... துக்கம்... பயம்... இன்னைக்குக் காலையில வந்த கலக்கமான்னா, அதான் இல்ல... பல வருசமாவேக் கருவண்டாகத் துளைச்சு மனசை உடம்ப இயங்க விடாமா ஆட்டிக் கொண்டிருந்தது. என்னன்னு யார்கிட்டயும் சொல்லவும் முடியாம! கடந்து செல்லவும் முடியாம! கலகக் குரலை கேட்டபடியே... தினந்தினம் வேலையோட இயந்திரத்துடன் இயந்திரமாக.... இதுக்கு மத்தியிலே அப்பாவின் நினைவுகள் தூக்கத்துல கூட, நீங்காம மனசுக்குள்ள மல்லுக்கட்டி நிக்குது. அப்பா! எங்களை எப்பவுமே இயற்கையின் மொழியைச் சொல்லி சொல்லி ஆளாக்கி வளா்த்த உசுரு.

இந்த பூமில மொத்தம் மனுசப்பசங்க இரண்டே இரண்டு தான், ஒன்னு நல்லவன்... “அவனுக்கு எல்லாரும் நல்லா இருக்கனும்னு” எண்ணம் இருக்கும். இன்னொருத்தன் இதுக்கு எதிர்மாறா யோசிக்கிறவன்... “ நான் மட்டும் நல்லா இருக்கனும் நினைச்சாக் கூட ஒன்னும் இல்ல... இவன் அடுத்தவன் அழியனும்னு நினைப்பான் பாரு” இது போல நாம வாழவேக் கூடாதுன்னு, சொல்ற அப்பாவோட மண் கலந்த வாசகம்... வாசம்... மாமரத்துக் காத்துல கலந்து வரும்...

இந்த வாசமும் வாசகமும் கொஞ்ச நாளவே திரும்பத் திரும்ப மனசத் தொட்டு தொட்டுச் செல்லுது... அப்பா காத்தோடு கலந்து மறைஞ்சு பல வருசமாகியும்... அப்பாவின் நினைவுல மனசு கிடந்து புலம்பித் தவிக்கும் போதெல்லாம் அப்பத்தாவின் முகம் கனவுல வந்து வந்து நிழலாடுது... எங்க வீட்டுத் திண்ணையில என்னையத் தூக்கி வளா்த்த அப்பத்தா போல, எந்த ஒரு பாசக்கார ஜீவனும் இந்த பூமியில இனி பிறக்கப் போறது இல்ல...


பாசத்தோட பண்பையும் ஒரு ஓரமாச் சொல்லிக் கொடுத்து வளா்த்தவ... நீ மட்டுமே எல்லாத்தையும் சாப்பிடனும் நினைக்காத... உன்னச் சுத்தி இருக்கும் ஜீவனெல்லாம் பசியில்லாம இருக்கானு பார்த்துப்புட்டுதான்... ஒரு வா சாப்பாடு நீ சாப்பிடனும்... வள்ளலார் பத்தித் தெரியாத அப்பத்தா வாழ்க்கைப் பண்பாட்டை மூச்சாச் சொல்லிச்சொல்லி வளா்த்தா... ராசா என்று வாய் நிறைய, என் பேரைக் காட்டிலும் ஆத்தா கூப்பிடும் ஒத்த சொல்லு போதும்... உலகமே என்னோட காலுக்குக் கீழ தான்... என்னோட நலன் மட்டுமே, அவளது ராசா என்ற சொல்லில் கடைசி வரை இருந்தது... கடைசி மூச்சுக்காத்துலயும் ராசா முகத்த ஒரு தடவ பார்க்க முடியலயேன்னு ஏங்கியே... எங்கள விட்டுச் சாமியா மாறிப்போச்சு... எங்க அப்பத்தா மாரியம்மாள்...

இந்த நினைவுகளோடப் போராட முடியாம தோத்துப் போயி, நேரத்தை ஏற்படுத்தி அழகான வயலும், ஆறு ஓடும் வாய்க்காலும், உயரமா பல கதை சொல்லும் மரங்களும் தோப்புகளும் நிறைஞ்ச எங்க ஊா் நோக்கிப் பயணமானேன் 20 வருடத்திற்குப் பின்...

பல நேரம் கடந்து... பல தூரத்தில் இருந்த... எந்தன் ஊரின் வாசத்துடன் என் வீட்டின் நினைவலைகளுடன் மாமரத்து காத்துல அப்பாவின் மணமெல்லாம் மனதில் மணக்க வந்து சோ்ந்தேன். இதோ அம்மாங்கற அன்பு கிடைக்க முடியாம, நான் வளா்ந்த சிறிய வீடு, கேட்காமலே எல்லாமே கிடைக்கிற பெரிய மாளிகை.... காரணம் என்னோட அப்பா! அப்பா! மட்டுமே... பல கடினச்சூழலிலும் பெரிய படிப்பு படிக்க வைச்சு, கண்ணு குளிரப் பார்க்காமலேச் சென்று விட்ட அப்பாவின் நினைவுத் துக்கத்துல நிழலாடி நின்னேன்... ராசான்னு கூப்பிட நாதியத்த மனுசனா, சொந்தப் பூமியில கால் வைப்பது போல கொடும எதுவும் இல்லப்பா சாமி! என்று மாரியாத்தா சொல்லு தேடி அலைஞ்சது மனசு...

ஆறு ஓடிய வாய்க்காலும் கதை சொல்லி மரமும் தோப்பும் இருந்த இடத்தில் மிகப் பிரம்மாண்டமா ஒரு தொழில்நுட்பம் வளா்ந்து பூதமாக காட்சித் தர குழப்பத்தோடு, அருகே நின்ற சிறுவனை நோக்கி, என்னப்பா பள்ளிக்கூடம் போகல? என்று கேட்க, இப்பலாம் இங்க இருக்கும் பெரிசுக வயக்காடுக்கும் போகல! .... சிறுசுக பள்ளிக்கூடமும் போகல!... எல்லாரும் எப்ப ஊர விட்டு, உசுரோடு போவோமுன்னு இருக்காய்ங்க... ஆமா நீ யாரு.... எல்லாரும் கிளம்புனா நீ இங்க வர....


நான் பதில் சொல்ல வார்த்தையைத் தேடிய பொழுது, தூரத்தில் சொர்ணம்மா பாட்டி வீடு தெரிய ஓடோடினேன்.... என்னைப் பார்த்ததும் பாட்டி அடுத்த நொடி கூறி விட்டாள்.. மேலத்தெரு இராசப்பன் மவன் சின்ராசுதானப்பா நீ... உன் அப்பன் பொசுக்குனு உசுர விட்டுப் போயிட்டான்... நல்ல வேள நம்ம ஊரோட நிலையப் பார்க்கல... உன் அப்பத்தா சாவும் போது கூட, கடைசி வர என் ராசா வருவானு மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கிட்டேத்தான் போய் சோ்ந்துச்சுய்யா... நல்ல உசுரு... போவும் போது வானம் அழுது! அழுது! புலம்பில போயிடுச்சு...

நான்தான் இன்னும் இங்கன காத்துக்கிடக்கேன்... எப்படியாச்சுலும் இந்த மண் வாசனையிலே மூச்சு போயிடனும்னு .....என்று புலம்பித் தீா்த்தாள். பெரும் மூச்சுடன், வெறும் பத்து வருசத்துக்கு முன்னாடி வந்த இந்த பிசாசுக் கட்டிடம் காட்டுச் சிங்கம் போல வந்து நம்ம மக்க எல்லாத்தையும் காவு வாங்கி வவுத்துக்குள வச்சிக்கிடுச்சு... மனுசனுக்கு பணத்தாச அதிகமாச்சுதா... நீக்கு போக்கு இல்லாம விவசாய நிலத்த வித்துப்புட்டான்... இரத்த வெறி பிடிச்ச சிம்மம் போல வேகமாக வளா்ந்த இந்த கட்டிடம் வாழ வைக்கும்னு தப்பு கணக்கு போட்டுப்புட்டான்... அது என்ன வீட்டுப் பூனையா சொல் பேச்சு கேட்க... மனுச உசிர எடுக்குற கொடூர விலங்குனு தெரியாம ஊருக்குள்ள நுழைய விட்டுவிட்டான்... இப்ப எல்லாம் தினம் தினம் பலியாகி கா உசுரா வாழுதான்...


மீதி இருக்கும் கொஞ்ச மனுசங்களும் எப்ப கிளம்பலாம்னு கிடக்காவுக.... ஏதோ... கமிக்கலோ கெமிக்கலோ அத செய்யுற இடமாம்... மண்ணு வளத்த நாசமா ஆக்கினதோட மனுசங்களையும், பிறக்கிற சின்ன உசுருகளையும் காவு வாங்குது... மண்புழு கூடச் சாவக்கூடாதுன்னு மண்ணுல உழுத மனுசனெல்லாம்... மனுசங்க முழுசா மண்ணுல சாயுறதப் பார்க்க முடியமா கிளம்பிட்டாவுனுக... என்று சொர்ணம்மா பாட்டி எழுந்து போக... பாட்டியின் பின்னால் வெயிலில் இருளாகத் தெரிந்தது... நான் வெளிநாட்டில் பணி புரியும் வணிக நிறுவனத்தின் பெயா்...

நான் தொலைத்த என் அப்பத்தாவின், தந்தையின் மண் வாசத்தையும் வாசகத்தையும் தேடினேன்... என் மூச்சு பிறந்த என் பூமியிலே தான் இனி என் வாசம் என்று...

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p363.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License