இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

வாரிசுக எல்லாம்...!

அய்யனார் ஈடாடி


மழைக்காலம் தொடங்கி உழவு வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன. நாற்றங்காலில் விதைபாவுதலும், வரப்பு வெட்டுவதும் ,பரம்பு அடிப்பதுமாய் மனிதத்தலைகள் பூத்த விதை நெல்லாய் நீட்டிக் கொண்டிருந்தன. ஆடு,மாடு,எருமைகளுக்கு மேய்ச்சலாக இருந்த நிலங்களில் தண்ணீர் நிரம்பி வெண்கலச் சருவப் பானையாய் மின்னுகிறது. கால்நடைகளை காலாற விடுவதற்கு கண்மாய்க்கரையும்,மேகறைத் தோப்பும் தான் இருந்தது. கண்மாயில் தண்ணி நிறைந்து நெறமாத்த கர்ப்பிணியாய் இருந்தது. அலையடித்துக் கரையை மோதின. அரசாங்கத்திடம் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. உபரிநீரை கிருதுமாலில் திறந்து விட வேண்டுமென்று. பொன்னையனின் மேகறைத் தோப்புப் பச்சைப் பசேலென்றுக் குழைகளும் பாளைகளும் அப்பி மொய்த்துக் கிடக்கின்றன.

கிருதுமாலை ஒட்டி‌ பொன்னயனின் தோப்பு இருந்தாலும், ஒரு சொட்டுத் தண்ணி உள்ளே வராத படியான மேடு. கிருதுமால் வாய்க்கால் தூர் வாராமல் செடி கொடிகளும், முள்ளும்  மண்டி ‌தூர்ந்துப் போய்க் கிடக்கின்றன. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குப் பிறகும் வாய்க்கால்களைக் கிராமச் சம்சாரிகளே தூர் வாரிச் சுத்தம் செய்து வந்தனர். 

எப்பொழுது அரசாங்கத்தின் கையில் சென்றதோ. அப்பொழுதிலிருந்து கண்மாய்களும்,வாய்க்கால்களும்,கலிங்குகளும்,மடைகளும் பராமரிக்காமல் கிடப்பில் கிடந்து போனது. அதிகாரிகள் ‌கண்மாய் உடைந்து விடும் என்று தண்ணியைத் திறந்து விட்டனர். கிருதுமால் மூச்சுத் திணறித் திணறி ஒரு வழியாக தனது சேருமிடமான ‌இராமநாதபுரம் கடலை நோக்கிப் ‌போனாள்.

மழைக் காலங்களில் கால்நடைகளுக்கு இறை பாக்குறது மிகச் செரமம். 

“ஆடு,மாடு,இல்லாதவன் அட மழைக்கு ராசா, பிள்ளகுட்டி இல்லாதவன் பஞ்சத்துக்கு ராசா” ன்னு புலம்பிக் கொண்டு மூக்கனும் இருளாயிம் கண்மாய்க்கரைப் பாதை வழியாக மேகறைத் தோப்பிற்கு வந்தனர். 

சீலைப்புல்லும்,கொடியருகும், வரிக்கொரடானும், தோப்பு முழுவதும் பூத்துக் கிடந்தது. பொன்னயன் குடிசையைச் சுத்தி முள்ளு மொடிகளை வெட்டிச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான். 

“என்னடா மூக்கா, சம்சாரி வேலை இல்லையா”

“செத்த அசரக் கூடநேரமில்லை”

“ஒழவு வேலைகள் நடக்குது”

“மழையும் பேய்ஞ்ச ‌வாக்குல இருக்கு”

”வீட்டுலக் கெடக்குற , வாயில்லாச் சீவன்கள் பாவம் பட்டினியாக் கெடக்கு, ரெண்டு எறை பாத்திட்டுப் போகத்தேன் வந்தேன்” 

சரி சரி, கெழ மேற்கில அரைக்குறுக்கும் போட்டுட்டுப் புல்லுகளைப் புடுங்கிட்டுப் போங்க. எனக்கும் ரெண்டு காராம்புப் பசு கெடக்கு. மூக்கனும், இருளாயும் நாலு கட்டு ‌அளவுக்குச் சேர்த்தனர். மேகறைத் தோப்பிற்கும் வீட்டிற்கும் ரெண்டு நடை வந்து போயினர். 


மேய்ச்சலுக்கு வேறு இடம் இல்லை.‌ ஆடு,மாடு, எருமைகள் மேகறைத் தோப்பைப் பரம்படித்தன. பொன்னயனுக்குக் கோவம் உச்சிக்கு ஏறியது. அடித்து விரட்டி விரட்டிப் பாரத்தான் . சம்சாரிகளிடம் சண்டையும் போட்டான். 

“எங்க ஆடு, மாடு‌ போடுற சாணியில ஒங்க தோப்புதேன்  நல்லா காய் பிடிக்குது”

“வாயில்லாச் சீவன் உசரக் காப்பாத்துறதுக்கு வேற எங்க போறது”

பூராவும் நடுகையும் ஒழவுமாய்க் கெடக்கு. ஊரார்கள் ‌பொன்னயனின் வாயை அடைத்தனர்.பொன்னயன் இரவோடு இரவாகத் தோப்பிற்குள் ஆங்காங்கேக் குழிகளைத் தோண்டினான். மண் பானைகளைப் பதித்தான். மண்பானை நிறைய வடித்த கஞ்சித் தண்ணியும் விஷமும் கலந்து ஊத்தி வைத்தான். இரக்கமற்ற கல்நெஞ்சுக் காரனாக மாறினான். 

ஒவ்வொரு நாளாக ஆடுகளும்,மாடுகளும்,பறவைகளும்,துள்ளத் துடிக்கச் சாக ஆரம்பித்தன. பொன்னயனின் தோப்பிற்குள் மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகள் மேய்ந்து விட்டு, இவன் விஷம் வைத்தத் தண்ணியைக் குடித்துவிட்டுக் ‌கண்மாய்க்கரை, கிருதுமால் வாய்க்கால்,பெரிய வாக்கால், இப்படி ஆங்காங்கேச் செத்துக் கிடந்தன. 

சம்சாரிகள் தேடித் தேடிப் போய்ப் பார்க்கையில் செத்து வெறைத்துக் கெடந்தன. ஆடுகளை நரி பிடித்துத் தின்னும், மாடுகள் எப்படிச் சாகிறது என்று ஊரார்களுக்குப் பெருத்தச் சந்தேகம் கிளம்பியது. கிளிகளும், காக்கைகளும், குயில்களும், மயில்களும் தொடந்துச் செத்த படியே இருந்தன. விஷத்தண்ணியைக் குடித்த  மயில் ஒன்றுத் துடிதுடிக்கச் செத்தது பொன்னயனின் காலடியில். சுற்றி முற்றிப் பார்த்தான் யாரும் பார்க்கிறார்களா வென்று. யாருக்கும் தெரியாமல் முட்புதரை ஒட்டி  தோப்பிற்குள்ளேக் குழியைத் தோண்டிப் புதைத்து விட்டான்.

“பொன்னையனின் மனைவி கிட்டிணம்மாள் நிறைமாதக் கர்ப்பிணியாக‌ இருந்தாள். நிறை அமாவாசை இருட்டு. சாமக்கோடாங்கி ஒவ்வொரு வீடாகக் குறி சொல்லி வந்தான். கிட்டிணம்மாளும் பொன்னயனும் சட்டென முழித்து விட்டனர். கதைவை இறுக்கச் சாத்திவிட்டுச் சாமக் கோடாங்கியின் பாட்டைக் கேட்டனர். 

ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு மூன்று நிமிடங்களில் குறிசொன்ன சாமக்கோடாங்கி. பொன்னயனின் வீட்டின் முன்பு நின்று நெடுநேரமாக சொல்லியிருக்கிறான். 


“பாவத்தச் சொமக்கப் போறீங்க
வாயில்லாச் சீவன விட்டுடுங்க
இந்தப்பூமி ஒனக்குச் சொந்தமில்ல
வீட்டுலப் பெறக்கும் வாரீசுக எல்லாம்
இந்தப் பாவத்தைச் சொமக்கப் போகுது”

உடுக்கை அடித்துக் குறி சொன்னச் சாமக்கோடாங்கி, அடுத்த வீட்டிற்குச் சென்றிருக்கிறான்‌.

கிட்டிணம்மாளுக்கு நெஞ்சுப் பதைபதைத்து. ஒடம்பெல்லாம் வியர்வைப் பூத்தது. பொன்னயன் என்ன செய்வதென்று தெரியாமல், வீட்டிற்குள் சுத்திச் சுத்தி நடந்து வந்தான். விடிய விடியத் தூக்கம் வரவில்லை. லேசான விடியல் தட்டியது. விறுவிறுவென மேகறைத் தோப்பிற்கு வந்தான். குழி தோண்டிப் புதைத்து வைத்திருந்த மண்பானைகளும் அதில் கலந்து வைத்திருந்த விஷத்தையும் எடுத்து, குரல்வளை முட்ட ஓடிக் கொண்டிருக்கும் கிருதுமால் வாய்க்காலில் கரைத்து விட்டான்.

சாமக்கோடாங்கிகள் ராத்திரில குறி சொல்லிவிட்டுக் காலையில் தவசம் வாங்குவதற்கு வீடு வீடாக வருவார்கள். ராத்திரி குறி சொன்னச் சாமக்கோடாங்கியும் பொன்னையன் வீட்டிற்கு வந்தான். வீட்டில் கிட்டிணம்மாள் மட்டும் தான் இருந்தாள்.

“ஆத்தா,கோடாங்கி வந்திருக்கேன் ஏதாவது குடுங்க சாமி”

“பச்ச நெல்லைச் சொளகில் அள்ளிக் கொண்டு வந்துக் கோடாங்கியிடம் நீட்டினாள். கோடாங்கி வாங்கிக் கொண்டு, நான் போயிட்டு வாறேன் தாயினு” அடுத்த வீட்டிற்கு நகர்ந்தான்.

கிட்டிணம்மாள் பேறு காலத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். பொன்னயனுக்கு பயம் துரத்தித் துரத்தி வந்தது. சாமக்கோடாங்கி ராத்திரிலப் பாடியதை நினைத்து நினைத்துப் பார்த்தான். வீட்டில் யாரிடமும் சொல்லாமல் முண்டுவேலம்பட்டிக்குக் கெளம்பினான்.

முண்டுவேலம்பட்டிக் கோடாங்கி இந்தச் சுற்றுவட்டாரத்தில் பெயர் பெற்றவர். களவு, செய்வினை, துரோகம், துக்கம், கலியாணம் ஆகாதவர்களுக்குக் கலியாணம், பிள்ளையில்லாதவர்களுக்குப் பிள்ளை, குடும்பப் பிரச்சினை,வெள்ளாமை, புதிய வீடு கட்டுதல், தொழில் இப்படிப் பல்வேறுக் கோணங்களில் உள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். முண்டுவேலம்பட்டிக் கோடாங்கிச் சொல்லும் அருள் வாக்கினால். பட்டி தொட்டி, நகரத்துச் சனங்கள் வரிசையில் காத்துக் கிடக்கின்றன. 

பொன்னையனும் வரிசையில் ஒக்கார்ந்திருந்தான். பதினொரு ரூபாய் காணிக்கை, வெத்தலை,பாக்கு, எலுமிச்சை கனி ஒன்று. ஆட்களும் வரிசையும் நகர்ந்தது. முண்டுவேலம்பட்டிக் கோடாங்கி மேல் காளியாத்தாவும் ,கருப்பணசாமியும், முனியாண்டியும் துடியாக எறங்கியாடும்.

 ஒவ்வொருவரிடமும் , “நீ எந்தத் தெசையிலிருந்து வந்திருக்க, ஒங்க முப்பாட்டன் இவன் தான, ஒன்னக் காக்குறவன் இவன் தான” என்று உடுக்கை அடித்து, பிடித்த பிடியில் பாடுவார்.

பொன்னயன் தன்னுடைய குறியை வைத்தான். 

“சாமி ஓங்குறியை எடுப்பா, ஒனக்குப் பாரக்க முடியாதுப்பா… நீ செஞ்சப் பாவத்துக்குத் தலைமுறைத் தலைமுறையாக அதைச் சொமக்கனும். எடுய்யாக் குறியை... எடுய்யாக் குறியை...” என்று அதட்டினார்.

மொத்தக் கூட்டமும் பொன்னயனைப் பார்த்தது. பொன்னயன் மேலும் கீழும் பார்த்தான்.  சாமி நான் என்ன தப்பு செய்ஞ்சேன் என்று , எதுவும் செய்யாததைப் போல வெட்கிக் குறுகிப் போய் வீடு வந்தான்.

அப்போதுதான் வீட்டிற்கு வந்த மூக்கனிடம், தான் செஞ்சதைச் சொல்லி வருத்தப்பட்டான்.

அதைக் கேட்ட மூக்கன் படபடத்துப் போனான்.

“வாயில்லாச் சீவன்களை இப்படிக் கொல்லலாமா, அதுக என்னா செஞ்சுச்சு, தோப்புல அடையுறப் ‌பாதிப்பறவை பூராம் செத்திருச்சு, வீட்டுக்கொரு ஆடு மாடுகள் செத்திருக்கு, நீங்க நல்லாயிருப்பங்களா? ஒங்க வாரிசு வெளங்குமா” குமறினான் மூக்கன்.


ஊரார்களிடம் வந்துச் சேதியைச் சொன்னான் மூக்கன். கூட்டம் கூடியது.

“மந்தையில்.யாரும் ஆடு,மாடுகளை மேகறைத் தோப்புக்கு மேய்ச்சலுக்குக் கொண்டு போகாதீங்க. நம்மூரு ஆடு,மாடுகள் செத்ததெல்லாம், சாமிகுத்தம்னு எல்லாரும் நெனச்சுக்கிட்டு இருக்கேங்க, அது சாமிக்குத்தம் இல்லை, பொன்னையன் மேகறைத் தோப்புல மண்பானையில வடிச்ச கஞ்சியோடு‌ வெஷத்தைக் கலந்து வச்சு நம்மூரு வாயில்லாச் சீவன்களைக் கொன்னு குமிச்சிருக்கான்...”

கால்நடைகளைப் பறி கொடுத்தச் சம்சாரிகள் நொந்து போனார்கள். 

“அடச் சண்டாளப் பாவிப்பய மக்கா, புழுதியாப் போவடா, பொட்டலாப் போவடா, ஓன் வம்சம் நாசமாப் போகும்டா, வாயில்லாச் சீவன்கள், என்னா செய்ஞ்சுச்சு…?” என்று விம்மினார்கள்.

பொன்னையன் வீட்டிற்குள் போனான், அங்கு தென்னைமரத்திற்கு வாங்கி வைத்திருந்த அந்த மாத்திரையை எடுத்து வாயில் போட்டுத் தண்ணீரைக் குடித்தான்.

வயிற்றுக்குள் போன மாத்திரை தன் வேலையைத் தொடங்க, வயிற்றைப் பிடித்தபடிக் கீழே விழுந்து சுருண்டான்.

அவனது மனத்திற்குள், அந்தத் தோப்பிற்குள் இறந்து போன மாடுகளும், மயிலும் வந்து போயின... அப்படியேக் கொஞ்சம் கொஞ்சமாக அவனது உயிரும்... அவனுடைய உடலிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p364.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License