இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

நம்பிக்கையில்...!


முனைவர் நா. சுலோசனா

எங்க கரிசல் பூமி எல்லோருக்கும் வாழ்வு தரும் பூமி. பூமிதான் மழை இல்லாமல் வறண்டு இருக்குமே தவிர, மக்களின் மனசு எப்போதும் பிசுபிசுப்பாகவே இருக்கும். கரிசல் மண்ணில் தேங்கியிருக்கும் நீரைப்போல காளியம்மாவின் மனசும் எப்போதும் ஈரம் நிறெஞ்ச மனசுதான்.

காளியம்மா கடைசி வீட்டு சின்னாத்தாவின் மகள். பேருதான் சின்னத்தாள். அவள் மனசெல்லாம் பெருசு.

காளியம்மா காடு கழனினு இருப்பா. விடிஞ்சா காடு அடஞ்சா வீடு இதுதான் அவ பொழப்பு. கோழி கூப்புட கழனிக்கு வந்தா பொழுது சாயத்தான் வீடு சேருவாள்.

கழனி கழனினு வம்பாடுபட்டு உழைப்பா. அவ உழைப்புலதான் அவ மொத்தக் குடும்பமும் பசியாறுது.

காலங்காத்தால குனிஞ்ச தலை எப்போ நிமிரும்னே தெரியாது. அப்படிப்பட்டவ மேல பக்கத்து பிஞ்சையில் ஆடு மேய்க்கிற மாரியப்பனுக்கு ஒரு கண்ணு. ஆடு மேய்க்கிற மாதிரியும் இருக்கணும் தனக்குப் பொண்ணு பாத்த மாதிரியும் இருக்கணும்னு அவென் நினப்பு.

ஆடுகளை ஒரு பார்வையும் காளியாத்தாவை ஒரு பார்வையுமாக அவன் பொழுது கழிஞ்சது.

ஒரு நாள் கேட்டே விட்டான் மாரியப்பன்.

ஏன் ஆத்தா காளியம்மா… வேகாத வெயிலிலும் மழையிலும் கிடந்து காடே கதினு மாடு மாதிரி உழைக்கிறயே. உனக்கு நான் ரெஸ்ட் கொடுக்கணும்னு நினைக்கேன். நீ என்ன சொல்லுத.. மனசுல நீண்ட நாள் கேக்க நினைச்சதைப் பட்டென்னு கேட்டுப்புட்டான். அந்தப் புள்ள என்ன நினைக்கும்னு கூட யோசிக்கல. தெளிவாப் பேசினாத்தானே விளங்கும். பொடி வெச்சுப் பேசுனா எப்புடி?


இதெல்லாம் என்கிட்ட ஏன் கேக்குறீக? எங்க சின்னாத்தாவிடம் கேளுங்க. அது என்ன சொல்லுதோ அதுதான் எங்க வீட்டுல.

அய்யய்யோ! அது உன்னைப் பெத்த ஆத்தானா கேட்டிருப்பேன். உங்க அப்பனுக்கு வாக்கப்பட்டு வந்த இரண்டாம் குடி தானே. அதுக்கு ஏது மூத்தகுடி பெத்த பிள்ளை மேல அக்கறை.

ஏற்கனவே எங்க சின்னாத்தாவுக்குத் தூரத்துச் சொந்தம் யாரோ இருக்காகளாம். அவுக வெடி ஆபிஸ்ல சரம் பின்னுற வேலை செய்றாவுகளாம். அவுகளுக்குத்தான் என்னைக் கொடுப்பாகளாம். அப்படியாவது நெழலு கிடைக்கட்டும்னு. எங்க சின்னாத்தாவுக்குப் அவ்வளவு பிரியம் என்மேல.

ஒரு ஆவணி மாசத்துல காளியம்மாவுக்குக் கண்ணாலம் நடந்தது. அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகளைப் பெத்தா. காளியம்மாவும் கட்டிக்கிட்டவனுக்கு ஒத்தாசையாகத் தெரியாத வெடி வேலையையும் நேக்குப் போக்காகக் கத்துக்கிட்டு அதுதான் விதினு புருஷனும் பொஞ்சாதியுமாக சைக்கிள்ல போறத பார்த்து தெருக்காரங்கல்லாம் மூக்கு மேல விரல் வச்சிப் பார்த்துட்டே இருப்பாங்க. அவங்களுக்கு வேலையே யாரு யாருகூட , எங்கெ, எதுல போறாங்கனு வேடிக்கை பாக்குறதுதான்.

மாரியப்பனுக்கு இதைப் பார்க்கும் போது மனசுக்குள்ள ஒரு ஏக்கம், தவிப்பு, இல்லாமையுமாக இருந்தான்.

தான் கண்ணாலம் கட்டிக்கிட்டவளை அன்பா அனுசரணையா உயிராப் பாத்துக்கிட்டான். தன் பொஞ்சாதி மசக்கையாக இருக்கான உடனே தாங்கு தாங்குனு உள்ளங்கையிலேயே பொத்தி வைச்சிருந்தான். அவளும் அவனுக்குப் பிள்ளையைக் கொடுத்துட்டு மகராசியா போய்ச் சேர்ந்துட்டா.

மாரியப்பனே ஒத்தையாளா தன் கைச் சாப்பாடு தான் பொங்கிச் சாப்பிட்டுக் காலத்தைக் கழிச்சான். எத்தனையோ தடவ மறு கல்யாணம் பண்ணிக்கோ… நீ ஆம்பள உனக்குன்னு ஒரு குடும்பம் வேணும். துணை வேணும்னு எவ்வளவு சொல்லியும் கேட்கல.

ஒரு நாள் மாரியப்பன் ஆடு மேய்க்கையில ஏன் மாரியப்பா நீ அந்தக் காளியம்மா மேல எம்புட்டு ஆசை வெச்சிருந்த. நீ அந்தப் புள்ளையைக் கல்யாணம் பண்ணியிருக்கலாம்ல. நீ போய் அவ சின்னத்தா கிட்ட கேட்டிருந்தா கொடுத்திருப்பா. என்னவோ நீ தான் அப்படியே மசிஞ்சி மசிஞ்சி இருந்துட்டனு உருத்து இருக்கிறவங்க கேட்கும் பொழுது தலை குனிஞ்சிட்டு அமைதியாக இருப்பான்.


காலம் கழிந்தது. கடிகாரம் முள்ளை விட வேகமாக. காளியம்மா புருஷன் வெடி ஆபிசுல மும்முரமா தீவாளி வெடி செஞ்சுட்டு இருந்தப்ப ஆடி மாச மேக்காத்துல மருந்து உரசி, நீத்துப் போய் வெடிச்சிடுச்சாம். காளியம்மா புருஷனோட அந்த ரூம்ல இருந்த நாலு பேரும் கரிக்கட்டை ஆயிட்டாங்களாம். காளியம்மா கையில் ஒன்னும் இடுப்புல ஒன்னும் வச்சுட்டு எப்படித்தான் பொழப்பை நடத்தப் போறாளோ பாவி மக. தெரியலையேனு ஊரே ஒரே கூச்சலும், கூப்பாடுமாக இருந்தது.

பொறந்த வீட்டுலயும் நாதியில்ல. வாக்கப்பட்டுப்போன வீட்டுலயும் ஒன்னுமில்ல. காளியம்மா நாதியத்தவளாகிப் போனா. வீட்டிலேயே இருந்தா வவுத்துப்போட்டுக்கு என்ன செய்றது. எல்லாத்தையும் கெட்ட கனவா நினைச்சு மறந்துடனும்னு மனசுக்குள்ளே சபதம் எடுத்தா.

கான்ட்ராக்ட் சண்முகத்திடம் வாங்கிய கடனுக்கு அவெனும் நீ வேலை செஞ்சு அடன்னு ஒத்தக் காலுல வீட்டுல வந்து நின்னான்.

ரோச மானத்துக்குக் கட்டுப்பட்ட காளியம்மா சிண்டும் சிறுசுமாக இருந்த பிள்ளைகளை வீட்ல விட்டுட்டு வேலைக்குப் போனா. புருஷன் இறந்த கண்ணீரும் சோகமும் காயுறதுக்குள்ள. அங்கனெ ரெண்டு பொம்பளைக பாரேன் மயினி, இந்தக் காளியம்மா புருஷன் செத்துக் காரியம்கூட முடியல அதுக்குள்ள வேலைக்கு வந்துட்டா. இவளைக் கேட்க ஆள் இல்ல இந்த ஊர்ல.

ஒரு நாள் காளியம்மா வேலைக்கு ஒத்தையடி பாதையில போறப்ப மாரியப்பன் அந்தாள ஆடு பார்க்கப் பக்கத்து ஊரு போயிட்டு இருந்தான். எதேச்சையாகப் பார்த்தவன் மனசுக்குள்ள அப்படியே மருகிப் போனான். இந்தப் புள்ள பொழப்பு இப்படி ஆச்சேன்னு. என்ன செய்றது எல்லாம் அவ வாங்கி வந்த வரம். தலைவிதி.

என் வாழ்க்கையும் இப்படி ஆகிப் போச்சு. அந்தப் புள்ள வாழ்க்கையும் ஒன்னுமில்லாம ஆகிப்போச்சுன்னு மனுசுக்குள்ள ரொம்ப வெசனப்பட்டான்.

காளியம்மாளின் காலடிச் சுவடும் மாரியப்பனின் காலடிச் சுவடும் இணைந்தே சென்றன அந்த ஒத்தையடிப் பாதையில்….

விடியல் வரும்னு நம்பிக்கையில்...!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p382.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License