இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

மணியின் மேல் காதல்?

பாரதி தேவராஜ்


ஏழு மணிக்கே வெய்யில் சுர்ர்ரென்று உறைத்தது.

சீதாவை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போகவேணடும். மாதத்தில் இரண்டாவது புதன்கிழமை டாக்டரிடம் சீதாவை காட்ட வேண்டிய நாள். எது எப்படி இருந்தாலும் அன்றைக்கு ஒத்திப் போட முயலுவதில்லை. இது அவள் வாழ்க்கைப் பிரச்சனை, நான்காண்டுகள் ஒரு சடங்கு போல தவறாமல் நடந்து வருகிறேன்.

“சீக்கிரம் புறப்படும்மா. நாழியாறது. லேட்டா போனா டோக்கன் கிடைக்காது.”

“இதோ வந்துட்டேன்பா”- சமையல் அறையிலுருந்து சீதாவின் குரல் வந்தது.

செருப்பு மாட்டிக் கொண்டு வாசலுக்கு வந்த போது எதிர்வீட்டில் ஆட்டோ ஒன்று படபடப்போடு வந்து நின்றது. அதிசயமாய் யாரென்று நிமிர, எதிர் வீட்டு மணி நாலைந்து சூட்கேசுகளுடன் தோளில் ஒரு ஜோல்னா பை தொங்க இறங்கியது தெரிந்தது.

சட்டென்று முகம் மாறியது உள்ளே போகலாமா என்று தயங்கிய போது, குட்மார்னிங் அஙகிள்“ அவன் பழசை அடியோடு துடைத்து விட்டுச் சொன்னான்.எனக்கும் தயக்கம் குறைந்தது.

“குட்மார்னிங் மணி. சௌக்கியமா?”

“நல்ல சௌக்கியம். எங்கியோ புறப்பட்டீங்க போலிருக்கு.”

நடையில் சீதா செருப்பை மாட்டிக் கொண்டிருந்தாள்.

“ஆமா மணி. டாக்டர்கிட்ட போகணும். சாயந்திரம் பாப்போம்.”

அவனை அப்போதைக்கு கழட்டி விட்டேன்.



“ஓகே! அஙகிள் சீயு.” அதற்குள் அவன் அம்மா பெட்டிகளைத் தூக்கிப் போனாள். அவன் ரொம்பவும் இங்கிதமானவன்தான். சீதா அவனைப் பார்க்கும் முன் உள்ளே போய்விட்டான்.

மணி ரொம்பவும் நல்ல இளைஞன்தான்.வயது இருபத்தெட்டிருக்கும்.

சிவந்தமேனி. சுருட்டையாய் முடி.அகன்ற முகம். எடுப்பான மூக்கு. தேக்குக்கட்டை போன்ற அகன்ற தோள்கள் உயரம்கூட இப்போது கூடி விட்டான்.யாரிடமும் பழகும் வெள்ளை உள்ளம்.

ஐந்தாணடுகளுக்கு முன்பாக முதல்முதலாய் இந்த வீட்டுக்கு வந்த போது அறிமுகமானவன் ஐம்பது வயது நிரம்பிய என்னோடு மிக நெருங்கிய நண்பனாகிப் போனான். ஏதோ கம்பெனியில் சேல்ஸ் எக்ஸிக்யுட்டாக பணிபுரிகிறான். கணிசமான சம்பளம். புதுப் படம் ஏதாவது ரிலீஸானால் போதும் உடனே ரிசர்வ் செய்து விடுவான். கச்சேரி காலச்சேபம் இலக்கியவிழா நாடகம் என எங்கு போனாலும் ஜோடியாக சுற்றினோம்.

சீதாவுக்கு அவன் மேல ஒருகண் என ரொம்பவும் தாமதமாகத்தான் எனக்குத் தெரிந்தது. அது கூட நானாகத் தெரிந்து கொள்ளவில்லை.

பெங்களுரிலிருந்து வந்த என் தங்கைதான் கண்டுபிடித்தாள்.

மணி என்னதான் நல்லவனானாலும் காதல் என்றாலே சீறும் சொந்தக்காரர்களுக்குப் பயப்பட்டேன். இதைத் துண்டிக்க நினைத்தேன்.

மணி ரொம்பவும் முன்னெச்சிரிக்கைக்காரன் என்பதை அதில்தான் கண்டேன். காலையில் நான் ஏதாவது சமாதானம் சொல்லி அவன் வரவைத் துண்டிக்க எண்ணினேன்.

ஆனால் மாலையில் அவனே வந்தான்.



“அங்கிள் எனக்கு சென்னைக்கு டிரான்ஸ்பர் வந்துடுச்சு. நாளைக்கே அங்க போய் ஜாயின் பண்ணனும். ராத்திரி சேரன்லே ரிசர்வ் பண்ணியாச்சு. உங்களோட ரொம்ப பழகிட்டேன். பிரியறதுக்கு மனசு ரொம்ப கஷ்டப்படுது. என்றான்.

என்னுடைய கணகளிலும் ஜலம் பெருகியது. என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவன் போய்விட்டான்.

அவன் போன பிறகு எங்கெல்லாமோ வரன்கள் வருவதும் போவதுமாய் நாட்கள் கழிந்தன.ஒன்று கூட குதிரவில்லை. ஒன்று ஜாதகம். இல்லையென்றால் சீர்செனத்தி. ரெண்டும் விட்டால் வரன் லடசணமாயில்லாதது. இப்படி ஒரு வருஷம் முடிந்தது. அந்தத் தீபாவளியை ஏதோ சொரத்தில்லாமல்லாமல் கொண்டாடினோம்.

கொல்லையில் புடவை காயப்போட்டுக் கொணடிருந்தாள் சீதா. திடீரென்று எங்கிருந்தோ ஒரு ராக்கெட் வெடி அவள் முகத்தில் மோதி வெடித்தது.வெறும் காயம் எனறு ஏதோ ஆயின்மெணட் வாங்கிப் போட்டோம். புண் சரியாகிப் போனது. ஆனால் அந்த இடம் மட்டும் கன்னம் முழுக்க மேரி பிஸ்கட் அளவுக்கு வெள்ளைத் திட்டாக நின்று போனது.

டாக்டரிடம் காட்டிய போது ஸ்கின் ஸ்பெஷலிஸ்டை கன்சல்ட் பண்ணச் சொன்னார். ஸ்பெஷலிஸ்ட்டிடம்தான் இநத நான்கு வருடமும் மாதம் தவறாது இரண்டாவது புதன்கிழமை போய் காட்டி வருகிறோம்.ஆயின்மெணட்டும் பில்சுமா எழுதிக் கொடுப்பார். நான்கு வருட மருத்துவத்தில் லேசாய் குணம் தெரிந்த மாதிரி இருக்கிறது. வெள்ளை வட்டத்தைச் சுற்றி லேசாய் பழுப்பு படர்கிறது.

“இது நல்ல அறிகுறி நாளடைவில் சரியாகிவிடும் என்று டாக்டர் சொன்னார். இப்படியானதிலிருந்து சொந்தபந்தம் முழுக்க இவளுக்கு இப்படியானதையே பேசினார்கள் எந்த வரனும் அமையவில்லை.

மனசு முழுக்க சோகத்தை தேக்கியபடி இதோ நாட்களை கடத்துகிறேன்.

“அப்பா டோக்கன் எட்டுன்னு கூப்பிடறாங்க நாமதானே?”

தூக்கத்திலிருந்து விடுபட்டவனாய் “ஆமாம்மா வா போகலாம்.” என்றேன்.

டாக்டரின் அறை பளிச்சென்று வெள்ளையிலிருந்தது.



“உக்காருங்க சார். வாம்மா இப்படி சீதா தானே? இம்ப்ருவ்மெனட் என்னான்னு பார்ப்போம்.”

டாக்டர் பரிசோதனை செய்தார்.

“நல்லா இம்ப்ரூவ் ஆகியிருக்கு. இன்னொரு ஆயின்மென்ட் மாத்திப் பார்போம். இன்னும் ரெண்டொரு வாரத்திலே குணமாயிடும்.

வெளியே வந்தோம்.

மாலையில் மணியின் வரவை என்னால் தடுக்க முடியவில்லை.பழையபடி எங்கள் நட்பு துளிர்த்தது. இப்போது அவன் சீதாவை பார்ப்பது கூட இல்லை.

டாக்டர் சொன்னபடி ஒரே வாரத்தில் அது காணாமல் போனது. சீதா இப்போது பழைய முகத்தோடு மலர்ச்சியாயிருந்தாள். அநத வாரத்தில் ஒரு கல்யாணம் வந்தது. குடும்பத்தோடு போனோம் முன்பு பெண் பார்த்து விட்டுப் போனவர்கள் சீதாவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். மறுபடி சம்பந்தம் பேச வருவதாகச் சொன்னார்கள்.

நான் சரியாக பதில் சொல்லவில்லை.

மறுநாள் மணியைப் பார்த்தேன்.



“மணி ஒரு விஷயம் சீதா உன்னே விரும்புறா.இல்லையா?”

“ஆமா சார்”

“உனக்கும் விருப்பம்தானே.?”

“ஆமா சார்” சலனமில்லாமல் சொன்னான்.

“ஆறுமாசத்துக்கு முன்னேயே நான் இந்த முடிவுக்கு வந்துட்டேன். மணி ஆனா அப்போ நான் கல்யாணத்துக்குச் சம்மதிச்சிருந்தா மத்தவங்க என்ன நினைப்பாங்க? ஏதோ பொண்ணுக்கு வியாதி. கன்னம் கூட வெள்ளையாயிருக்கு அதான் உன் தலையிலே கட்டி வச்சுட்டேன்னு பேசுவாங்க. இப்போ முழுசுமா குணமாயிடுச்சு அதான் உன்னைக் கேட்டேன்.” என்றேன்.

மணியின் கண்கள் பனித்திருந்தன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p83.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License