இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

சந்நியாசினி நேர்காணல்

மலையாளம்: ஆதிநாடு துளசி

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


தேடும் விழிகளோடு அவன் தயானந்த ஆசிரமத்தின் முதண்மை வாசலைக் கடந்து சென்றான்.

“வணக்கம் அம்மா” கை கூப்பி வணங்கிய அவனை ஆசிரமத்தின் முக்கிய சந்நியாசினி வரவேற்றார். அவன் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“நான் யதீந்திர தாஸ். பத்திரிகையாளன்.உங்ககிட்ட ஒரு நேர்காணல் எடுக்கலாமென்று...” என்ற அவனது வார்த்தைகளை நிறைவு செய்யவிடாமல் அவர் சொன்னார்.

“கடந்த காலத்த மறக்க முயற்சி செய்யற ஒரு பாவம் துறவி நான். அதையெல்லாம் மறுபடியும் நினைவுப்படுத்த அல்லவா நீங்க வந்திருக்கீங்க? வேண்டாம். அது எனக்குப் பிடிக்கல. எனக்குன்னு ஒரு முழு ஆசிரம வாழ்க்கை இல்லைன்னு நம்ப நான் விரும்பறேன்” சொல்லிவிட்டுக் கைகளை கூப்பி ஆசிரமத்துக்குள் திரும்பிப் போக நினைத்த அவரிடம் அவன் கேட்டான்.

“வாழ்க்கையின் இருண்ட இடை வழிகளில்ல இருந்து ஆசிரமத்தத் தேடி வர்றவங்களுக்கு அடைக்கலம் தர்றதும், ஆத்ம வீரியத்தை இழந்தவங்களுக்கு அமைதி தர்ற மந்திரங்களா அன்பு காட்டறதயும் அர்ப்பணிப்போட செஞ்சுக்கிட்டு இருக்கற உங்களோட கடந்தக் காலத்தப் பத்தி ஜனங்க தெரிஞ்சுக்கறதுல என்ன தப்பு?” அவனுடைய கேள்வி அவரை அதிர்ச்சியடையச் செய்தது.

சிறிது நேரம் அவர் மௌனத்தின் கூட்டிற்குள் அடைபட்டது போல இருந்தார். சிறிது நேர யோசனைக்கு பிறகு மற்றொரு கேள்வி அவரிடம் இருந்து வந்தது. “கடந்த காலங்கள நினைவுப்படுத்தி பொறுக்கி எடுக்க நினைக்கறப்ப பலவீனங்களோட ஒரு பிடி கரிஞ்சு போன பூக்கள் மட்டுமே எனக்கு மிச்சமா இருக்கு. அதெல்லாம் என்னோடதா மட்டும்தான் இருக்கணும்னு ஆசைப்படறேன். ஆத்ம சாந்தியோட தீரத்துல தர்ப்பணம் செய்ய வர்ற தீர்த்தாடகருங்க என்னோட இதய காயங்கள ஏன் ஏத்துக்கணும்?”


ஆசிரமத்துக்குள் நுழைந்தது பற்றி அவன் விவரித்தான். அவருடைய விழிகளில் நீர்த்துளிகள் நிறைந்திருந்தன. அவர் அவன் சொல்வதை கேட்டார்.

மனதுக்குள்ள ஏராளமான கனவுங்களோட நான் இந்த நகரத்துக்கு வந்தேன். ஆனால், எனக்குக் கிடைச்சது சுட்டுப் பொசுக்கற அனுபவங்க. அப்ப அதிலிருந்தெல்லாம் விடுதல தந்ததும் வாழ்க்கையோட அமைதியான ஸ்பரிசத்த உணர வச்சதும் நகரத்துலேர்ந்து அதிக தூரத்துல இல்லாத இந்த ஆசிரமத்தோட ஆன்ம பலத்தாலதான். படிப்ப முடிச்சு காலேஜ்லேர்ந்து ஜர்னலிஸம் வகுப்போட படிகளக் கடந்து வெளியில வர்றப்ப மனசுக்குள்ள ஒரு ஆசை இருந்துச்சு”. தூய ஆடை அணிந்திருந்த அந்த துறவியின் முகத்தில் நிழலாடிய துக்கத்தின் திரைசீலைகள் ஒவ்வொன்றாக விலகி கடந்த காலத்தை நோக்கி நினைவுகள் பயணிக்க ஆரம்பித்தன.

“இளமையோட துடிப்புல எனக்குள்ள முளை விட்டு எழுந்த மோக மொட்டுகள கிள்ளி எறிய என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டிருந்தால் இப்போ நான் உங்ககிட்ட பேசிகிட்டிருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது”

நரைத்த வெள்ளி முடிகள் நிறைந்த தலையை லேசாக வருடி அகிலா என்ற அந்தப் பெண் என்றபடி நீண்ட ஒரு பெருமூச்சு விட்டார். அவர் தன்னுடைய நேற்றுகளின் ஜென்மப் பாத்திர மூட்டை முடிச்சுகளை அவனுக்கு முன்னால் அவிழ்த்துவிட்டார்.

ஒரு பத்திரிகையாளனுடைய அடக்கமுடியாத ஆர்வத்தோடு அந்தப் பெண் துறவி சொல்வதை கேட்க அவன் தயாரானான்.

செல்வச் செழிப்புல மிதந்துகிட்டிருந்தவர்தான் என்னோட அப்பா. அவரோட கூட்டுக்காரங்களுக்கு சமைச்சுப் போடறதுக்காக ஸ்கூல் டீச்சரா இருந்த என்னோட அம்மா வேலைய ராஜினாமா செஞ்சாங்க. அம்மாவோட கனவு, கூட்டுக்குள்ளதான் அப்பாவோட அசிங்கங்க போய் விழுந்துச்சு. ஆனா புருஷனோட வாக்குகளுக்கு முன்னால அனுசரணையுள்ள ஒரு மனைவியா அவர் தன் வாழ்க்கையத் தொடர்ந்துகிட்டு இருந்தார். அடுக்களை சாம்ராஜ்யத்தைத் தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட அம்மா புது வாழ்க்கைய ஆரம்பிச்சா.

“அங்க போகாத. இங்க போகாத” கட்டுப்பாடுகளோட எல்லை மதில்களை அப்பா என்னை சுற்றிலும் கட்டினார். இப்படிச் சங்கிலிகளுடன் வாழ்ந்து மூச்சு முட்டி இருக்க வேண்டிய நிலையில் நான் வளர்ந்தேன். இளமையின் குதூகலங்கள் எனக்குள் அந்நியமாயின. ஆதரவில்லாத அரங்கில் இருந்து காலேஜுக்கு போன நான் முதலில் தேர்ந்தெடுத்தது சுதந்திரத்தின் வண்ணக்கலவையைத்தான். அந்த நிழலில் இருந்து அளவில்லாத அன்பு துளும்பும் ஒரு இதயத்தின் ஸ்பரிஸத்தை நான் கேட்டேன். அப்படிதான் நூலகத்துல வச்சு சீனிவாசன் எனக்கு அறிமுகமானான்.


என்னோட சீனியர் மாணவன் அவன். காலேஜோட இலக்கிய அரங்கில் நிறஞ்சு நிக்கற ஒரு பிரபலப்புள்ளியா அவன் இருந்தான். அவனோட சிரிப்பு, பக்குவமான பேச்சு, பழகும் தன்மை என்னைக் வசீகரிச்சது. பெரும்பாலான நாள்லயும் நாங்க ஒருத்தர ஒருத்தர் சந்திச்சுக்குவோம். ஏராளமாப் பேசுவோம். பிரியற நேரம் வர்றப்ப எங்களோட மனசு துடிதுடிக்கும். காதல்ல நாங்கள் ராதாவும் கிருஷ்ணனுமானோம். லைலா மஜ்னுவானோம். அவனோட வார்த்தைகள அதிகமா நான் நம்பினேன். நம்பிக்கையோட பின்புலத்துல என்னை நானே மறந்தேன். அதோடு சேர்ந்து என்னுடைய ஜென்ம துக்கங்களையும்.

“அகிலா”. சீனிவாசன் சொன்னான். “என் வாழ்க்கையோட ராகமும் நாதமும் நீதான். இதயத்தோட துடிப்பே நீதான்” அந்த வார்த்தைங்கள்ல நான் மயங்கிட்டேன். தொடர்ந்து பேசமுடியாத அளவு வார்த்தைகள் தொண்டையில் இடறி விழும்போது தாஸ் கேட்டான். “இப்ப சீனிவாசன் எங்க?” கண்ணோரங்களின் வழியாக கீழே விழுந்த நீர்த்துளிகளை புடவைத் தலைப்பால் துடைத்து அகிலா தன் கதையைத் தொடர்ந்தார்.

“தூரத்துல எங்கயோ ஒரு அட்வகேட்டா இருக்கான். எனக்குப் பதிலா அவனோட வாழ்க்கையில தாளத்தையும் நாதத்தையும் வழங்கினது ஏதோ ஒரு வங்காளிப் பொண்ணு. பயணத்துக்கு நடுவுல சந்தித்த அவன் இப்போ ஒரு வக்கீல். வடக்கேப் போயிட்டான். யாரும் யாருக்காகவும் காத்திருப்பது இல்லைன்னு தெரியும். இருந்தாலும் நான் காத்துகிட்டிருக்கேன். எதிர்பார்ப்புங்க இல்லாத வெறும் காத்திருப்பு. இது என்னை பயமுறுத்திச்சு. அடுக்களையோட உலகம் அம்மாவை மத்தவங்ககிட்டேர்ந்து விலகிப் போகச் செஞ்சுடுச்சு. மத்தவங்களுக்காக அவங்க சுயம் எரிஞ்சு அடங்க ஆரம்பிச்சாங்க. கடைசியில ஒரு விடியல் காலைப்ப்பொழுதுல அடுக்களைய்லேர்ந்து ஒரு பெரிய இருமல் சத்தம் இடி போலக் கேட்டுது. அப்போ நான் பாத்தது மூக்கிலேர்ந்து ஒழுகிகிட்டிருந்த ரத்தத்தயும் ஒருபக்கமா படுத்து கிடக்கற அம்மாவயும்தான். செரிபரல் ஹெமரேஜ்.

பல நாள் அம்மாவ நிசப்தமா கிடத்தவேண்டி வந்துச்சு. வரவுகளக் காட்டிலும் செலவுங்க அதிகமாச்சு. வட்டிக் கடை எல்லைங்க விரிவாச்சு. கடங்கற இருட்டுல வாழ்க்கை மூழ்கி அமுங்கிக்கிட்டிருந்துச்சு. பெரிய வீட்டில் இருட்டு வழியா வந்த லேசான வெளிச்சத்துல நாக்கக் கூட அசைக்க முடியாமக் கிடக்கற அம்மா. ஒரு மூலையில கிடந்தா. பழைய கௌரவத்த விட மனசில்லாத அப்பா கூன் விழுந்த சாய்வு நாற்காலியில சாஞ்சு கிடந்தார். சிந்தனைகளோட சாளரங்கள திறக்க முடியாத தம்பி படிகளுக்கு அப்பால் இருந்து வியர்வையில குளிச்சுகிட்டிருந்தான். எல்லாத்தயும் சகிச்சுகிட்டு அப்பால இருந்தான். ஆனா தனிமையோட எங்கேயிருந்தோ அலறி கிட்டு வந்த ஒரு அவப்பெயரோட கொடுங்காத்து என்னை தளர்த்திச்சு. தம்பியப் பாக்க வர்ற பலரை வசீகரிச்சு காசு பறிக்கற ஒருத்தியா நிறய பேரு என்னை சித்தரிச்சாங்க. ஒரு நாக்குக்கு வேணும்னா தடை போடலாம். பல நாக்குங்க ஒன்னு சேந்தா என்ன செய்யறது?

ஆனா தற்கொலை செஞ்சுக்க எனக்கு பயமாயிருந்துச்சு. சாவப் பாத்து பயப்பட்டதுனால இல்ல. என்னன்னு தெரியல. ஒரு வேள என்னோட ஜாதகத்துல மரண மொழிங்க மங்கிப் போயிடுச்சோ என்னவோ! அந்த சிதைஞ்சு போன வீட்டோட வாசலத் திறந்து நான் முத்தத்துக்கு வந்தேன். அந்த ராத்திரியில மழை பெஞ்சுது. வழிகாட்ட வந்த மாதிரி மேகங்க தீட்டின மின்னலுங்க என்னோட ஈரமானத் தலைக்கு மேல வெளிச்ச வட்டம் போட்டு சுத்தி வந்துச்சு. எங்கேன்னோ எந்த வழின்னோ ஒன்னும் தெரியாம நான் நடந்தேன். கடைசியில நனைஞ்ச உடம்போடயும் காஞ்சு போன மனசுமா முட்டினது இந்த ஆசிரமத்தோட வாசக்கதவத்தான்.


திறந்த வாசல் வழியா ரெண்டு கைங்க என்னை ஆதரவா கூப்பிட்டு அடைக்கலம் தந்துச்சு. அந்த ஜில்லிட்டுப் போன ராத்திரியில என்னை அரவணச்ச அந்தக் கரங்கள நான் உணந்தேன். அது என்னோட குருவோட கைங்க. அதுதான் சத்தியம். அந்த நிமிஷத்துல எனக்கும் தெரியாம யாரோ என்னோட தல மேல திருநீறத் தூவிவிட்டாங்க. வாழ்க்கையோட அர்த்தத்தை புரிஞ்சுகிட்ட கடவுள் எனக்காக நிச்சயிச்ச ஒரு இடம்தான் இந்த ஆசிரமம். ஆன்மாவோட பாத்திரத்த திறந்துவச்சு என்னோட வாழ்க்கை இங்க தொடங்கிச்சு”

அவனுக்குப் பின்னால் சந்நியாசினி முற்றத்திற்கு வந்தார்.

நன்றியோடு நடந்து வாசலை நோக்கி சென்று கொண்டிருந்த அவனை அழைத்தார்.

“யதீந்திர தாஸ் ஒரு நிமிஷம் நில்லுங்க. இது வரைக்கும் யாருக்கும் தெரியாத என்னோட நேற்றுங்களப் பத்தியும் நீங்க எழுதணும். ஊகங்களோட உலகத்துலயும் புதிரான நிமிஷங்கள்லயும் சஞ்சரிச்சுகிட்டு இருக்கற இந்த சமுதாயத்துக்கு என்னோட இந்த கதை கொஞ்சமாச்சும் ஆறுதல் கிடைக்கும்னா கிடைக்கட்டும். ஆன்மாவுடைய ஆழத்தில் வாழும் அகிலா என்ற அந்த பெண் ஆசிரம முற்றத்தின் வாசற்படிகளில் இருந்து புன்னகை பூக்க முயற்சிக்கும்போது, உள்ளேயிருந்து ராக சங்கீர்த்தனங்களின் பிரார்த்தனை கீதங்கள் கேட்கத் தொடங்கின.

அப்போது அவர்களைத் தழுவி கடந்து போன காற்றுக்கு ஏதோ முன் ஜென்மாந்திரங்களுக்குத் தொடரும் அன்பின் சுகந்தமும் ஆதரவும் இருந்தது.

மணியோசைகளின் நாதமும் அப்போது கேட்டது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p64.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License