இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மொழிபெயர்ப்புக் கதைகள்

இப்படியும் ஒரு இராத்திரி

மலையாளம்: ஏழங்குளம் மோகன்குமார்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


இன்று இராத்திரிக்கு என்ன ஆயிற்று என்று ஏகநாதன் பல தடவை யோசித்துப் பார்த்த போதும் ஒரு பதிலைக் கண்டுபிடிக்க அவனால் முடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு நினைப்பு இப்போதுதான் முதல்முதலாக அவனுக்குத் தோன்றுகிறது. மழை பெய்வதும் குளிர் உடம்பைத் தாக்குவது இப்போது பிரச்சனை இல்லை. எங்கேயிருந்தோ எப்படியோ சிலிர்த்து எழுந்த சிந்தனையின் தொடக்கம். இரவு சாப்பாட்டுப் பொட்டலத்துடன் வீட்டிலிருந்து கிளம்பும் வரை ஒரு பிரச்சனையும் இல்லை. நகரத்தின் வெளிப்புறப்பகுதியில் சிறிய ஒரு மருத்துவமனையில் செக்யூரிட்டி அறையில் அவன் இருந்தான். கிழக்குப் பக்கமாகப் போகும் சிறிய வழியை மறுபடி ஒரு தடவை பார்த்தான். மின்சார விளக்கும் எரிந்து கொண்டிருந்ததால், கன்ணுக்கு எட்டிய தூரம் வரை வழி தெளிவாகத் தெரிந்தது. காட்சிகள் முடிகின்ற ஒரு புள்ளியில் ரோடிற்கு அருகில் ஆலமரமும் மாமரமும் இருந்த இடத்துக்குப் பின்னால்தான் அவனுடைய வாடகை வீடு. வீட்டில் மனைவி மட்டுமே இருந்தாள். பனி ஊசி போல உடலைக் குத்திக் கொண்டிருந்த இந்த நேரத்தில் போர்வையை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு அவள் சுகமாகத் தூங்கிக் கொண்டிருப்பாள். நேரம் பதினொரு மணி. மூன்று நிமிடம் நடந்தால் போதும். வீட்டிற்கு போய்ச் சேர்ந்துவிடலாம்.

போன் செய்துவிட்டுப் போனால் அவள் தூக்கத்தில் இருந்து எழுந்து வெளிவிளக்கைப் போட்டு ஜன்னல் கண்ணாடி வழியாகப் பார்த்துக்கொண்டு நிற்பாள். ரோடில் உருவத்தைப் பார்த்தால் ஓடிவந்து கேட்டைத் திறப்பாள். ஜில்லென்று ஒரு காற்று பாய்ந்துவந்து அவனைத் தாக்கியபோதுதான் அப்படி ஒரு யோசனை அவன் மனதில் தோண்ரியது. “வீட்டுக்குப் போய் கொஞ்சநேரம் மனைவியுடன் இருந்துவிட்டு வந்தால் என்ன?” அவளுக்கு அது சில சமயங்களில் சந்தோஷமாக இருக்கும். தூக்கத்திற்கு இடஞ்சல் வந்தால் சில சமயங்களில் புலம்புவாள். கோபப்படுவாள். அதைக் கொஞ்ச நேரத்திற்குள் சரிசெய்துவிடலாம். அது சிறிய மருத்துவமனைதான் என்பதால் நாலைந்து படுக்கை நோயாளிகள் மட்டுமே இருந்தார்கள். இரண்டு நர்ஸ்கள் டியூட்டியில் இருக்கிறார்கள். இராத்திரி டியுட்டிக்கு டாக்டர் இல்லை என்பதால் நோயாளிகள் யாரும் அப்போது வரமாட்டார்கள். அரை மணி நேரம் செக்குயூரிட்டி இல்லை என்றாலும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது என்று அவன் உறுதியாக நம்பினான். அவன் கேட்டைப் பூட்டி சுற்றுமுற்றும் கவனமாக ஆராய்ந்தான். குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை. உடனே வீட்டிற்குப் போய்ச் சேரவேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாக நடந்தான்.


வீட்டுக்கு அருகில் போனபோதுதான் மனைவிக்குப் போன் செய்யவில்லையே என்று தோன்றியது. கூப்பிட வாயைத் திறந்தான். அப்போதுதான் மருத்துவமனை பக்கத்தில் இருந்து சில உரத்த குரல்கள் கேட்டது. போன அதே வேகத்தில் ஏகநாதன் திரும்ப வந்தான். ஒரு வாரத்துக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவம் அவன் ஞாபகத்திற்கு வந்தது. அதை நினைத்தால் இப்போதும் பயமாக இருக்கிறது. சிகிச்சை செலவு அதிகம் என்று குற்றம் சாட்டி ஒரு நோயாளியுடைய சொந்தக்காரர்கள் கூட்டமாக வந்தார்கள். டாக்டரை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தார்கள். ஒரு நர்ஸை அடிக்கப் போனார்கள். அறிமுகமான ஒன்றிரண்டு ஊர்க்காரர்களுடைய குறுக்கீட்டால் மருத்துவமனையில் இருந்தவர்கள் வந்தவர்களை ஒருவிதமாக சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள். பிரச்சனை அதோடு நிற்கவில்லை. இராத்திரி சில பேர் வந்து ரகளை செய்தார்கள். மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்தார்கள். ஆறுதலாக பேசி அவர்களை திரும்பப் போகும்படி செய்து விட்டார்கள் என்றாலும் மருத்துவமனையில் இருந்தவர்கள் எல்லோரும் மனதளவில் சோர்ந்து போயிருந்தார்கள். மறுபடியும் அவர்கள்தான் வந்துவிட்டார்களோ என்ற எண்ணம்தான் இப்போது அவனைப் பயமுறுத்தியது.

ஏகநாதன் மருத்துவமனை கேட்டுக்கு முன்னால் போய்ச் சேர்ந்தான். அவன் நினைத்தது மாதிரி அங்கே எதுவும் நடக்கவில்லை. இரண்டு குடிகாரர்கள் உரத்த குரலில் பேசி ரகளை செய்து அந்த வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் வெகுதூரம் போனபிறகும் உரத்த சத்தத்தை அவனால் இப்போதும் கேட்க முடிந்தது. அவன் மருத்துவமனையை மறுபடியும் ஒரு தடவை பார்த்தான்.

ஒரு படுக்கை நோயாளி பெரிய சத்தத்துடன் இடைவிடாமல் இருமிக் கொண்டிருந்தாள். அந்த நோயாளியுடன் கூட அவளுடைய மகளும் இருந்தாள். சுற்றுமுற்றும் இன்னொரு தடவை பார்த்தப் பிறகு மனைவியின் ஞாபகத்துடன் வீட்டை நோக்கி நடந்தான். இப்போதும் போன் செய்யாமல் வந்தது பற்றி அவனுக்கு குற்ற உணர்வு ஏற்பட்டது. வீடு நெருங்கியபோதுதான் இன்னொரு சிந்தனை அவனைக் கவலைப்படுத்தியது.

“இருமிக்கொண்டிருந்த நோயாளிக்கு நோய் அதிகமானால் என்ன செய்வது?” என்ற பயத்தில் அவன் ஒரு நிமிடம் நின்றான். மூச்சு விடக் கஷ்டமாக இருக்கும். அப்படி நடந்தால் சில சமயங்களில் டாக்டரைக் கூப்பிடுவார்கள். வேறு மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு போக அவருடையச் சொந்தக்காரர்கள் வரவும் வாய்ப்பு உண்டு. அப்போது செக்யூரிட்டிகாரன் இல்லையென்றால் நிலைமை மோசமாகும். கேட் பூட்டப்பட்டிருக்கிறது.


எல்லாம் தலைகீழாக மாற அதிக நேரம் தேவையில்லை. அரசியல்வாதிகள் வருவார்கள். ஊர்க்காரர்கள் வருவார்கள். போலீஸ் வரும். வசவுகளும், அடிதடியும், கல் வீச்சும் ஏற்படும். வேலை போகும். வீட்டில் இருக்க வேண்டி வரும். அரைமணிநேரம் டியூட்டியில் இருந்து விலகி வாங்கும் சம்பளத்திற்கு உண்மையில்லாமல் ஏமாற்ற நினைத்தால் அதன் விளைவுகள் மாதக்கணக்கில் நீளும். வீட்டிற்குப் பக்கத்தில் இருந்து ஏகநாதன் அவசரமாக மருத்துவமனையை நோக்கி நடந்தான். கேட்டுக்குப் பக்கத்தில் போய் நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். நோயாளியின் இருமல் அதிகமாகியிருக்கிறது. அதன் வலிமை உயர்ந்திருக்கிறது. நிராசையுடன் செக்யூரிட்டி அறைக்குள் நுழைந்தான். “இன்னிக்கு ராத்திரி இதுக்கு மேலயும் வீட்டுக்குப் போகறதில்ல”என்று முடிவு செய்தான்.

“ஒழுங்கா டியூட்டியப் பாக்கறதுக்குத்தான் சம்பளம் தர்றாங்க. நாளைக்கு டியூட்டி இல்ல. அப்ப வீட்டிலேயே இருக்கலாம்”. மெத்தையை விரித்து படுக்க போனபோதுதான் மனைவியிடம் இருந்து போன் வந்தது. பளபளப்புடன் மின்னிய போன் திரையில் மனைவியின் பெயரைப் பார்த்தவுடன் அவன் பதட்டமடைந்தான். “இந்த நடுராத்திரியில அவளுக்கு என்ன ஆச்சு? தூக்கத்தில் இருந்து எழுந்து அவசரமாக அழைக்க என்ன பிரச்சனை ஏற்பட்டது?”. படபடக்கும் இதயத்துடன் அவன் போனை எடுத்தான்.

“அலமாரிக்குப் பின்னால ஒரு பாம்பு! சீக்கிரமா வாங்க!”. அவளுடைய குரலில் லேசான நடுக்கம் தெரிந்தது. அவன் அப்போது வேறெதையும் பற்றி யோசிக்கவில்லை. கேட்டைப் பூட்டி வேகமாக வீட்டை நோக்கி நடந்தான். வெளி விளக்கைப் போட்டுக்கொண்டு அவள் வெளியில் நின்றாள். அவளுடைய முகத்தில் பதட்டம் இருந்தது.

“ அப்பதான் ரூமுக்குள்ளப் போனேன்”. நடுங்கிய குரலில் அவள் சொன்ணாள். “டாய்லெட்டுக்குப் போக எந்திரிச்சு லைட்டப் போட்டேன். அலமாரியோட பின்பக்கம் என்னமோ ஊர்ந்து போற மாதிரி இருந்தது. பார்த்தப்ப நடுங்கிப் போயிட்டேன். எப்படி உள்ள வந்ததுன்னு தெரியல’

ஏகநாதனுக்கு ஐந்து நிமிடம் மட்டுமே தேவைப்பட்டது. பாம்பைக் கொன்று குழி தோண்டி புதைத்தான். அப்புறம் ஒரு ஹீரோவைப் போல அவளைப் பார்த்துச் சிரித்தான். வீட்டுக்குள் போய் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போகலாம் என்று நினைத்து கதவை மூடப் போனபோதுதான் நர்ஸிடம் இருந்து அந்த போன் வந்தது.

“ஒரு பேஷண்டுக்கு சீரியஸ். டாக்டர் இப்ப வந்திடுவாரு. பேஷண்ட்டோட சொந்தக்காரங்களும் வருவாங்க”. வீட்டின் கதவை பூட்ட மனைவியிடம் சொல்லிவிட்டு அவன் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தான்.

கேட்டுக்கு அருகில் போய் நின்றபோது டாக்டர் வந்தார். ஐந்து நிமிடம் ஆனபோது நோயாளியுடைய சொந்தக்காரர்களும் வந்தார்கள். அரை மணி நேரத்திற்குள் அவர்கள் நோயாளியை ஆம்புலன்சில் ஏற்றி வேறு ஏதோ பெரிய மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள்.

டாக்டரும் உடனே திரும்பிப் போனார். “இன்னிக்கு ராத்திரி இதுக்கு அப்புறம் சீரியஸான பிரச்சனை எதுவும் வராது” என்று நன்றாகத் தெரிந்த போதும் வீட்டுக்குப் போவதில்லை என்று அவன் தீர்மானித்தான். “அவ சுகமாத் தூங்கட்டும்”. அவன் செக்யூரிட்டி ரூமில் படுக்கையில் சாய்ந்தான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p7.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License