இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

சுத்திகரிப்பு

மலையாளம்: மசீனா மாதவன்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


தினமும் காலை நடைப்பயிற்சி முடிந்து வீட்டுக்கு வரும் பாலன் மாஸ்ட்டர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காலை உணவையும் சாப்பிட்டு முடித்து நேராக செய்தித்தாள்களைப் படிக்கச் செல்வது வழக்கம். அன்று என்னவோ? வராந்தாவில் இருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி உட்கார்ந்து சிந்தனையில் மூழ்கியிருந்தார்.

அதைப் பார்த்த அவருடைய மனைவி சரோஜத்திற்கு அதில் ஏதோ விபரீதம் இருப்பது போலத் தோன்றியது. “இது வழக்கமான ஒன்று இல்லயே? என்ன ஆச்சு?”. லேசான பதட்டத்தோடு அவள் அவருக்கு அருகில் போய் கேட்டாள். “என்ன விஷயம்? எதப் பத்தி இவ்வளவு யோசனை? உடம்புக்கு ஏதாச்சும் சரியில்லயா?”

லேசான ஒரு புன்முறுவலுடன் சாய்வு நாற்காலியில் இருந்து எழுந்த அவர் மனைவியிடம் சொன்னார்.

“ஒன்னுமில்ல. இருந்தாலும்...!”. ஏதேதோ வேலைங்கள இன்னும் செஞ்சு முடிக்கறதுக்கு இருப்பது போல ஒரு தோணல். அதயும் ரொம்ப சீக்கிரமாவே செஞ்சு முடிக்கணும்”. சொல்லிவிட்டு அவர் குளியலறையை நோக்கி நடந்தார்.

சரோஜம் எதையும் புரிந்துகொள்ளமுடியாமல் வராந்தாவின் அரைச் சுவரில் இருந்த தூணில் சாய்ந்து நின்றாள்.

அவள் யோசித்தாள். “இந்த வயசுல இன்னும் என்ன செஞ்சு முடிக்கவேண்டிய வேலைங்க இருக்கு?. உழச்சு சம்பாதிச்ச காச வச்சு சின்ன வயசுலேயே பழய வீட்ட பெரிசாக்கி அம்மாவயும் அப்பாவயும் அங்கே குடியிருக்க வச்சு அவங்கள நல்ல விதமா பாத்துகிட்டு அவளுக்கு நல்ல ஒரு புருஷனா... குழந்தைங்களுக்கு நல்ல அப்பாவா இருந்து அவங்கள படிக்க வச்சு வேலைக்கும் போகச் செஞ்சாரு. மகன் இன்னிக்கு குடும்பத்தோடு சவுத் ஆப்பிரிக்காவுல இருக்கான். மகள நல்ல ஒரு இடத்துல கல்யாணம் செஞ்சு கொடுத்தாச்சு. பத்து வருஷ வெளிநாட்டு வாழ்க்கையை முடிச்சுகிட்டு ஊருக்கு வந்து குடும்பத்தோடு வாழ்ந்துகிட்டு இருக்கா. இதுக்கு அப்புறமும் செஞ்சு முடிக்க வேண்டிய வேலை இருக்குன்னு எத இவரு சொல்றாரு? ஒன்னும் புரியல”

காலை உணவையும் சாப்பிட்டு முடித்து வராந்தாவுக்கு வந்து உட்கார்ந்து செய்தித்தாள்களை கையில் எடுத்த அவரிடம் சரோஜம் கேட்டாள். “என்னோட கேள்விக்கு பதில் சொல்லிட்டு அப்புறமா செய்தித்தாளப் படிங்க”

அவர் செய்தித்தாளை மடக்கி வைத்து விட்டு சரோஜத்தின் கேள்வியை சாய்வு நாற்காலியில் இருந்தபடி கேட்டார்.


அவள் தொடர்ந்தாள். “உங்களுக்கு செஞ்சு முடிக்க இன்னமும் என்ன வேல இருக்கு?. கடமைங்கள ஒழுங்கா செய்யலைன்னு தோணுதா? என்னவோ எனக்கு அப்படி ஒன்னும் தோணல”

“நான் அத ஒன்னும் சொல்லல சரோஜம். இந்த வீட்டுல ஒவ்வொரு அறையிலயும் எத்தன எத்தன சாமானுங்கள பத்திரப்படுத்தி வச்சிருக்கோம்! அதுல பலதும் நமக்கு பயன்படாதவையே. ஆனால் அதெல்லாம் மத்தவங்களுக்கு பயன்படக்கூடியவை. அப்படிப்பட்டவங்களக் கண்டுபிடிச்சு அதயெல்லாம் அவங்ககிட்ட கொடுக்கணும். அதப் பத்திதான் நான் யோசிச்சுகிட்டு இருந்தேன். எதுவா இருந்தாலும் அதுங்கள நாம போறப்ப கொண்டு போக முடியாது இல்லயா?”

“நீங்க ஏன் திடீர்னு இப்படி யோசிக்க ஆரம்பிச்சீங்க? எங்கப் போறதப் பத்தி சொல்றீங்க? வீட்டயும் தோட்டத்தயும் வித்துக் காசாக்கி அப்பா அம்மாக்கள முதியோர் இல்லத்துல கொண்டு போய் விடற பசங்க ஊர்ல எத்தன பேரு இருக்காங்க? நம்ம பசங்களும் அப்படி செய்வாங்கன்னு பயப்படறீங்களா?

அவங்க அப்படி நினைப்பாங்களா? இல்ல. ஒரு நாளும் அவங்க அப்படிச் செய்ய மாட்டாங்க. போன மாசம் உங்களோட எழுபத்தி ஒன்பதாவது பிறந்த நாளைக்கு மகனும் மகளும் குடும்பத்தோட வந்தாங்க. அப்பாவும் அம்மாவும் மட்டும் இந்தப் பெரிய வீட்டுல இருக்கறது கவலையா இருக்குன்னு சொன்னாங்க. உடனே இதுக்கு ஒரு வழி செய்யணும்னு மகள் ஞாபகப்படுத்தினா. அப்படின்னா அங்கப் போறதப் பத்திதான் நீங்க யோசிச்சுகிட்டு இருந்தீங்களா? கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு நாள் திடீர்னு உங்களுக்கு தல சுத்தல் வந்துச்சு. ஆஸ்பத்திரியில ஒரு நாள் இருக்கற மாதிரி ஆயிடுச்சு. இனிம அதிக நாள் இருக்கமாட்டோமோன்னு ஒரு பயம்”

“அது...!”

“அதுதான் உங்க மனசுல இருந்திருக்கணும்”

“சில சமயத்துல...!”

“சரோஜம். நீ ஏன் திடீர்னு அப்படி நினைக்கற?”. செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருப்பதற்கு நடுவில் சரோஜத்திடம் கேட்டார்.

“நீ ஏன் இப்படி யோசிக்கற? நான் சொன்னது புரியலயா?”

“இல்ல. நீங்க எங்கப் போறதப் பத்தி சொல்றீங்க?”

“எங்கயா இருந்தாலும் நாமப் போற இடத்துல நாம எல்லாத்தயும் எடுத்துகிட்டுப் போக முடியுமா? நமக்கு வயசாகுது இல்லயா? எனக்கு எம்பது வயசாக இன்னும் அதிக நாள் இல்ல. பசங்களோட போகவேண்டி வந்தா எந்தெந்த சாமான்கள எடுத்துட்டுப் போக முடியும்? அவங்களோட புது வீட்டுல நவீனமா எல்லாம் உண்டு. அவங்க யாருக்கும் இந்த பழய சாமானுங்க தேவையும் இல்ல. அதனால இதயெல்லாம் வாடகைக்குக் கொடுக்கவோ அல்லது விக்கவோதான் செய்யணும். இந்தப் பழய சாமானுங்க பசங்களுக்கு ஒரு சுமை. ஆனா நமக்கு விலை மதிப்பு மிக்கது. புதுத் தலைமுறைக்கு இதெல்லாம் ஒரு வேண்டாத குப்பைதான். வீட்டப் பெருக்கி சுத்தப்படுத்தவே அவங்களுக்கு நேரமில்ல. அவங்க யாரும் இது வரைக்கும் நம்பளுக்கு எந்தக் கஷ்டத்தயும் கொடுத்தது இல்ல. அதனால நாமும் அவங்கள கஷ்டப்படுத்த முடியாது. யோசிச்சுப் பாரு. நான் சொல்றது சரிதானே?”


“சரிதான். பேரப் பசங்களோட ஓடி அலைஞ்சு கஷ்டப்படற எத்தனையோ வயசானவங்க நம்ம ஊர்லயே இருக்காங்க. பசங்க ஆபீஸ்க்குப் போறதே பெரிய கஷ்டமான வேலயா இருக்கு. குழந்தைங்களப் பாத்துக்க வயசானவங்க வீட்டுல இருக்காங்கன்னு அவங்க வேலைக்குப் போறாங்க. ஆனா... அம்மா அப்பாவோட கஷ்டங்கள அவங்க கண்டும் காணாத மாதிரி இருந்துடறாங்க. குழந்தைங்கள குளிப்பாட்டறதும் சாப்பாட்ட ஊட்டிவிட்டு ஸ்கூல்ல கொண்டு போய் விடறதும் எல்லாம் வயசான அப்பா அம்மாங்கதான். வீட்டு வேலய எல்லாம் முடிச்சு கொஞ்சம் ஓய்வா இருக்கலாம்னு நினைக்கற நேரத்துலதான் குழந்தைங்க ஸ்கூல் விட்டு வர்ற நேரமா இருக்கும். ஸ்கூல் பஸ் வரதுக்காகக் காத்துகிட்டு வெய்யில்ல போய் நிப்பாங்க. பலகாரம் செஞ்சு பாட்டி வீட்டுல இருப்பாங்க. அப்புறம் டியூஷனுக்குக் கொண்டு போய் விடணும். முடிஞ்சப்பறம் போய் கூட்டிகிட்டு வரணும். இதெல்லாம் முடியறப்பதான் மகனோ மகளோ ஆபீஸ்லேர்ந்து வருவாங்க. இந்த மாதிரி வயசான அம்மா அப்பாங்க எத்தனயோ பேரு இருக்காங்க. வளத்து ஆளாக்கி கஷ்டப்பட்ட பெத்தவங்கள அவங்களோட வயசான காலத்துல ஓய்வு எடுக்க விடற பசங்க ரொம்ப ரொம்பக் குறைவுதான். சரி. சாமானுங்க வேணும்னு கேட்டு யாராச்சும் வந்தாங்களா?”

சரோஜம் சொல்லி முடித்தபோது அவர் சொன்னார். “ஆள கண்டுபிடிக்கணும். வரவேற்பு அறையில நூத்துக்கணக்கான புத்தகங்க இருக்கு” சொல்லிவிட்டு அந்த அலமாரி அருகில் அவர் போய் நின்றார்.

சின்ன வயசுல பொக்கிஷம் மாதிரி சேர்த்துவைத்த புத்தகங்க அது. “நாம இதயெல்லாம் பல தடவை படிச்சிருக்கோம். பசங்கள வாசிச்சுப் பாக்கவும் சொல்லியிருக்கோம். செல்போனிலோ கம்ப்யூட்டரிலோ வாசிக்கற இந்தக் காலத்து பேரப் பசங்களுக்கு இதெல்லாம் தேவையில்லாதது. பாதுகாத்து வைக்கறதுல ஏதாச்சும் அர்த்தம் இருக்கா?”

“சரிதான். அப்ப என்ன செய்யலாம்?”

அவர் தொடர்ந்தார். “நம்ம வீட்டு வேலைக்கு வர்ற அந்த ராதாவோட ஒன்பதாவது படிக்கற பையன் இருக்கானே! அவனுக்கு புத்தகம் வாசிக்கறது ரொம்பப் பிடிக்கும். அதனால அவனுக்குக் கொடுக்கலாம். பழய அலமாரியையும் அவனுக்கேக் கொடுக்கலாம். அவனோட சின்ன வீட்டுல புத்தகங்கள வச்சுக்கறதுக்கு உரிய வசதி இல்ல. அதனால அவனுக்கு கொடுத்தா அது அவனுக்கும் சந்தோஷமாயிருக்கும். மீதிய கடைத் தெருவுல இருக்கற வாசகர் சாலைக்குக் கொடுக்கலாம். அப்ப வீட்டோட ஒரு பகுதி காலியாயிடும். அப்புறம் என்ன இருக்கு? ஏராளமான ஃபர்னிச்சருங்க. அக்கம்பக்கத்துல அத தேவைப்படறவங்க இருக்காங்க. வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தாங்கன்னா உக்காரறதுக்கு நாற்காலி கேட்டு வர்றவங்க இருக்காங்க இல்லயா? இதெல்லாம் அவங்களுக்கு நிச்சயமா உதவியா இருக்கும். அப்புறம் நான் பயன்படுத்திகிட்டு இருந்த அறையில நிறய விளையாட்டு சாமானுங்க இருக்கு. அத எல்லாம் கோயில் மைதானத்துல விளையாடற சின்னப் பசங்களுக்குக் கொடுக்கலாம். அப்புறம் என்ன இருக்கு? சமையலறையில கொஞ்சம் எவர்சில்வர் பாத்திரங்க. பாத்திரமே இல்லாத கஷ்டப்படறவங்களுக்கு அதக் கொடுக்கலாமே? அப்பறம் கொஞ்சம் துணிமணிங்க இருக்கு. தேவையானத மட்டும் வச்சுகிட்டு மீதிய ஏதாச்சும் ஒரு அனாதை இல்லத்துக்குக் கொடுத்துடலாம்”


அது வரை அவர் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மனைவியிடம் அவர் சொன்னார்.

“சரோஜம். நீ என்ன ஒன்னுமே பேசாம இருக்க? எல்லாத்தயும் இழக்கப் போறோம்னு தெரிஞ்சுதுனால மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கா? பழய சாமானுங்க எல்லாம் ஒவ்வொன்னும் பல நினைவுங்கள நமக்குத் தர்றது. ஆனா அதுங்க எல்லாத்தயும் இதுக்கு அப்புறமும் பத்திரமா பாதுகாத்து வச்சுக்கறதுல என்ன அர்த்தம் இருக்கு? எல்லாத்தயும் பொறுக்கி வாரி எடுத்து பழய சாமான் வாங்கற கடையில கொண்டு போய் கொடுக்க மனசு வரல. அதனால அவசியப்படற ஆளுங்களக் கண்டுபிடிச்சு அவங்க கிட்ட கொடுக்கலாம்னு நினைச்சேன். யாருக்காச்சும் இதெல்லாம் பயன்படும்னு நினைச்சு மனச சமாதானப்படுத்திக்க வேண்டியதுதான். வேற என்ன செய்யறது? இப்பவே ஞாபகங்க குறஞ்சுகிட்டே வருது இல்லயா? இருக்கற கொஞ்சம் நஞ்சம் நினைவுங்களும் இல்லாமப் போயிடுச்சுன்னா? இது எல்லாத்தயும் வச்சுகிட்டு ஒன்னும் செய்யமுடியாது. அதனால இந்தத் தீர்மானம் சரின்னு தோணுது இல்லயா சரோஜம். திடீர்னு ஒரு நாள் தெய்வம் நம்பளக் கூப்பிட்டாருன்னா இத எல்லாத்தயும் நம்மலால கொண்டு போக முடியுமா? இப்படி சிந்திச்சா துக்கம் ஏற்படாது. “இந்த வீடு?”

“இத வாங்க ஆளுங்க இருக்காங்க சரோஜம். அம்பத்து ரெண்டு வருஷம் நாம ஒன்னா வாழ்ந்த வீடு இது! நான் பிறந்த இடம். மூச்சுக் காத்து நிக்கற மட்டும் இந்த வீடு என்னோட ஞாபகத்துல இருக்கும். அந்த ஞாபகத்தக் கூட முடிவுல இங்கயே விட்டுட்டுப் போகணும்? இத மட்டும் ஒன்னும் செய்யக்கூடாது சரோஜம்”

சுவரில் மாட்டியிருந்த ஒரு போட்டோவின் மீது அவருடைய பார்வை பதிந்தது.

அம்மா. அப்பா. அவர். சரோஜம் எல்ல்லோரும் அந்த போட்டோவில் இருந்தனர். அவர் துண்டால் அதில் படிந்திருந்த தூசைத் துடைத்தார்.

“என்ன?! இதக் கொடுக்கறதுக்கும் யாராச்சுமிருக்காங்களான்னு தேடிக் கண்டுபிடிக்கணுமா?”

“ம்”. ஒரு முனகல் சத்தம் மட்டுமே அவருடைய இடறிய தொண்டையில் இருந்து வந்தது. மீதி எதையும் சொல்ல முடியாமல் வார்த்தைகள் அவருடைய தொண்டையில் ஒடுங்கின.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p72.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License