இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

கதையுள்ள தோழமை!

மலையாளம்: டி. ஆர். ரகு நந்தனன்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


தற்செயலாகத்தான் சுவர்ணனைப் பார்த்தேன். வடக்கு ஸ்டாண்டில் இருந்த இண்டியன் காபி ஹவுஸில். வெளியில் மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. ஒரு ஆறுதலுக்காகத்தான் காபி ஹவுஸுக்குப் போனேன். வழக்கம்போல... எதிர்பார்த்தது போல... இருக்கைகள் எல்லாம் காலியாகக் கிடந்தன. காபி ஹவுஸில் அப்படித்தான். அது பொழுது போகவோ, வெறுமனே பேசிக் கொண்டிருக்கவோ, தமாஷ்கள் பேச ஆட்கள் கூடும் ஒரு இடம்.

ஒரு காபியை ஆர்டர் செய்துவிட்டு மணிக் கணக்கில் அங்கே இருக்கலாம். உரத்தக் குரலில் நகைச்சுவைகள் சொல்லிக் கொண்டிருக்கலாம். அரசியல் பற்றிப் பேசி நேரத்தைப் போக்கலாம். அதுவும் இல்லையென்றால், அப்போது ரிலீஸ் ஆன படத்தைப் பற்றிப் பேசலாம். ஒவ்வொரு படத்தையும் அதன் இயக்கத்தை பூதக்கண்ணாடி வைத்து அலசி ஆராயலாம். காபியைக் குடித்துவிட்டு சும்மா இருக்கும்போது சர்வர் வந்து நின்றால், இன்னொரு காபியையும் ஆர்டர் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கலாம்.

எதிர்பக்கத்தில் இருந்த இருக்கையில் உட்கார்ந்துகொண்டு ஆவேசத்தோடு கட்லெட் சாப்பிடும் ஆளைக் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. சுவர்ணன்.

சுவர்ணன் புதுக்காடு.


ஆவி பறக்கும் கட்லெட்டை ருசித்து சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அவனுடைய முக பாவத்தில் ஏற்படும் மாறுதல்களை ரசித்தபடியே சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். முகத்தைப் பார்த்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள்வதற்காகக் கேட்டேன். “சுவர்ணன். சுவர்ணன் புதுக்காடுதானே?”

”சாப்பிடுவதற்கு இடைவேளை கொடுத்துவிட்டு அவன் ஆச்சரியத்தோடு பதில் சொன்னான்.

“எப்படி தெரிஞ்சது?”. “எனக்கு அப்படி ஒரு திறமை இருக்கு. ஒரு ஆளோட முகத்தப் பாத்தா பேரு சொல்லமுடியும். கூடுதலா வேற எதாச்சும் சொல்லணுமா? கடவுள வேண்டிகிட்டு சாப்பிடுங்க”. நகைச்சுவையோடு கூடிய என்னுடைய பதிலை கேட்டுவிட்டு அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

“பாத்து எத்தனை நாளாச்சு?” அவனுடைய உற்சாகத்தோடு கூடிய பதில் என்னை ஒரு புனிதப் பயணத்திற்கு அழைத்துக்கொண்டு போனது.

ஏறக்குறைய நாற்பது நாற்பத்திரண்டு வருடங்கள். நினைவுகள் பட்டென்று மின்னி மறைந்தன. அகில இந்திய வானொலியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்த சமயம். இளைஞர்களுக்காக நான் நிகழ்ச்சிகளை தயாரித்துக் கொண்டிருந்தேன். ஸ்டுடியோவில் சோக முகத்தோடு இருக்கும் ராஜசேகரனைப் பார்க்க அப்போது நேரம் கிடைக்கவில்லை.

குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை அவர் தயாரிக்கும் வேலையில் இருந்த அவருடைய அறைக்கு நான் சிறிது நேரம் போய் நின்று கொண்டிருந்தேன்.


ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாக வேண்டிய குழந்தைகள் நிகழ்ச்சிதான் அவருடைய அப்போதைய பிரச்சனை. அந்த நிகழ்ச்சியின் ஒரு முக்கிய அம்சமாக இருந்த ஒரு குட்டிக் கதையுடைய ஸ்கிரிப்ட் காணாமல் போய்விட்டது.

அவர் நிகழ்ச்சியின் எடிட் செய்யாத டேப்புடன் ஸ்கிரிப்டையும் அறையில் வைத்திருந்தார். இப்போது காணவில்லை. ஸ்டுடியோ முழுவதும் நானும் அவரு ஒரு இம்மி இடம் கூட விடாமல் தேடினோம். ஒரு பயனும் ஏற்படவில்லை.

பதட்டம் அதிகமானது. அதைக் குறைப்பதற்காக நான் கேட்டேன்.

“நூலகத்தில இன்னொரு தடவ பாக்கலாமா?”

“ஒரு பயனும் இல்ல. எங்கயும் இல்ல. என்ன செய்யணும்னு யோசிக்கக்கூட முடியல”

அவருடைய இடறிய குரல் என் நிம்மதியை குலைத்தது. நிலைமை புரிந்தது. தளர்ந்து போயிருந்த அந்த முகத்தில் அது நிறைந்திருந்தது.

நிலையத்தில் எப்போதும் தனியாளாகவே வேலை பார்த்தார். சக ஊழியர்களுடன் ஒரு யந்திரம் போலவே பழகினார். ஆனால் என்னிடம் பாசமாக பழகினார். தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்த அவருடைய இந்தப் பிரச்சனை அவருடைய வயிற்றுப்பிழைப்பிற்கே உலை வைக்கக்கூடியது.

விஷயத்தை ஆழமாக விசாரித்தேன்.

காணாமல் போன அந்த கதை சுவர்ணன் எழுதியது. அவருக்கும் சுவர்ணனுக்கும் நல்ல நட்பு இல்லை. பெயரைக் கேட்டபோது எனக்குச் சற்று ஆறுதல் ஏற்பட்டது. கொளுத்தும் கோடை வெப்பத்தை தனிக்க வரும் மழை போல அந்தப் பதில் இருந்தது. கேண்டீனுக்குப் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து ஒரு இளம் காற்று வீசியது.

சுவர்ணனை எனக்குப் பல வருடங்களாகத் தெரியும். திருவல்லா சுங்கத்தில் இருந்த எலக்ட்ரிசிட்டி ஆபீசில் வேலை பார்த்து வந்தான். ஊரில் இலக்கிய மேடைகளில் மும்முரமாக ஈடுபட்டதால் அவனை எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். ஒரு சமயம் ஒரு கவியரங்கு நிகழ்ச்சியில் அவனை எனக்கு யாரோ அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

“நான் எப்படியாச்சும் கதய வாங்கித் தரேன்”

மனதில் ஊற்றெடுத்த உற்சாகம் வாயில் இருந்து வார்த்தைகளாக வெளியில் வந்து விழுந்தன. அந்த நேரத்தில் எனக்கு தைரியத்தைக் கொடுத்தது யாரென்று தெரியவில்லை.

ராஜசேகரனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. சுவர்ணன் எங்கே இருக்கிறான் என்று கூட எனக்குத் தெரியவில்லை.

சுவர்ணனுடன் எனக்கு இருந்த தோழமை தன்னம்பிக்கையைக் கொடுத்தது.

ராஜசேகரனுக்கு உத்தரவாதம் தந்த பிறகும்ம் அந்தத் தைரியத்தைக் கொடுத்தது யார்? என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய வேலைகளை முடிக்க ராஜசேகரன் உதவினார்.

டேப்பை நூலகத்தில் கொடுத்ததற்குப் பிறகு பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கப் போனோம். ஒலிபரப்ப வேண்டிய விஷயம் காணாமல் போய்விட்டது என்று தெரியவரும்போது கிருஷ்ணமூர்த்திக்கு ஏற்படப் போகும் உணர்ச்சிகளை என்னால் ஊகிக்க முடியவில்லை. இதனால் உருவாகப்போகும் பூகம்பத்தைப் பற்றி அவர் பயந்து போனார்.

இது போல முன்பும் ஒரு தடவை நடந்துள்ளது. இதே எழுத்தாளருடைய கதைதான் அப்போதும் காணாமல் போனது. கவலையோடு இருந்த கிருஷ்ணமூர்த்தியையும் நான் ஆறுதல்படுத்த முயற்சி செய்தேன். முழு நம்பிக்கையோடு “பிரச்சனய நல்ல விதமா தீக்கலாம்” என்றும் வாக்குறுதி கொடுத்தேன். அப்போது அவருடைய முகத்தில் ஆச்சரியத்தை விட அவநம்பிக்கைதான் அதிகமாக இருந்தது.

தமிழ் கலந்த ஆங்கிலத்தில் அவர் என்னைப் பாராட்டினார். ராஜசேகரன் மதிய உணவுக்கு என்னை அழைத்தார். பசியில்லை என்று சொல்லிவிட்டு அந்தக் கோரிக்கையை நிராகரித்தேன். எடுத்துக் கொண்ட வேலையின் தீவிரத்தன்மை என் பசியை அமுக்கிவிட்டது. நிலையத்தில் இருந்து இரங்கி நடக்கும்போது நிகழ்ச்சி துணைப் பொறுப்பாளர் ஐ பி ஜி மேனன் ஸ்கூட்டரோடு வந்தார்.


பஸ் ஸ்டாப் வரை லிஃப்ட் கொடுத்தார். ஆபீசில் இருந்து வந்த சுவர்ணனைப் பார்த்தேன். மாலை நேரம். அவனிடம் நான் விஷயத்தை சொன்னேன்.

“என்னைக் காப்பாத்தணும். எனக்கு ஒரு தப்பு நடந்துபோச்சு” ஒரு நாடகம் போல நான் விஷயத்தை ஆரம்பித்தேன். அந்த சம்பவத்தைப் பற்றிய எந்த ஒரு உருவமும் இல்லாததால் சிரிப்புடன் அவன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

“என்ன ஆச்சு ரகு? பரிகாரம் இல்லாத பிரச்சனை இருக்கா? விஷயத்த சொல்லு”. நான் அவனிடம் முழுவதையும் விவரமாக சொன்னேன். அவனுடைய முகத்தில் மின்னி மறைந்துகொண்டிருந்த முக பாவங்கள் என்னை லேசாக அச்சுறுத்தியது. பதிவிறக்கம் செய்து நான் கலந்து சொன்ன பொய்களை அவன் ஆரம்பத்தில் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தான் என்றாலும் பிறகு கலவரத்தோடு கூடிய கோபம் அவனுக்குள் நிறைந்து நின்றது.

மறுபடியும் பலவீனத்தோடு அதற்கும் மேலாக நாடகத்தை இயக்குபவர் அதைக் கொண்டு செல்வதைப் போல மீண்டும் ஒரு தடவை சொன்னேன்.

அவனுடைய முக பாவம் மாறியது. பிறகு சிந்தனையில் மூழ்கினான்.”நீ சொல்றத நான் நம்பல. ரகு நீ யாரையோ காப்பாத்த முயற்சி செய்யற. நான் ஒத்துக்க மாட்டேன். எல்லாரையும் கோர்ட்டுக்கு இழுப்பேன்”

அவனுடைய வார்த்தைகளில் கண்டிப்பு நிறைந்திருந்தது. என்னுடைய மனம் துடித்தது. நம்பத்தகுந்த ஒரு சூழ்நிலையை உருவாக்கி ராஜசேகரனுக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் வாக்குறுதி கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன்.

“பகவதி! கருணை காட்டு தாயே!”. மனமுருகி நான் பிராத்தனை செய்தேன்.

அவனுடைய முகத்தில் மாற்றங்கள் மெதுவாக ஏற்பட்டன.

“ஸ்க்ரிப்ட் எப்படியோ தவறுதலா தொலைஞ்சுபோச்சு. என்னுடைய வாக்குறுதிகள் பொய்யாகிப் போனால் அது எத்தனை பேரை பாதித்துவிடும்?! கடவுள்தான் உண்மை. நான் கதையை மாற்றி சொன்னது கடவுளுக்குத் தெரியும். மறுபடியும் பிரார்த்தனை செய்தேன். சுவர்ணன் மீண்டும் என்னை ஆதரவோடு பார்த்தான்.

அவனுடைய மனம் கரைந்துவிட்டது என்று எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

முக பாவத்தில் இருந்து அதை நான் வாசித்து எடுத்தேன். போயிருந்த கரண்ட் வருவது போலத் தெரியவில்லை. “வா ரகு. நாம போய் கொஞ்சம் மண்னெண்ணை வாங்கிட்டு வரலாம்”. சிறிது நேரத்தில் திரும்பி வந்தோம்.

அவனுடைய கையில் கதையின் ஒரு காப்பி இருக்கும் என்று நினைத்தேன்.

“இல்ல. கையெழுத்துப் பிரதியதான் ரேடியோ ஸ்டேஷனுக்கு அனுப்பிவச்சேன்”

மண்னெண்ணையின் மங்கிய வெளிச்சத்தில் சுவர்ணன் மறுபடியும் கதை எழுதினான். அவனிடம் விடைபெற்று கொண்டு நான் நிலையத்திற்கு திரும்பும்போது ராத்திரி ஆகியிருந்தது.

பஸ் ஸ்டாப்பில் இறங்கி வேகமாக நடந்தேன். வெற்றியாளனுடைய பாவத்தோடு உள்ளே நுழைந்தேன். டிரேன்ஸ்மிஷன் எக்சிக்யூட்டிவ் நம்பூத்ரியுடைய இருக்கைக்கு அருகில் ராஜசேகரன் நின்று கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும் அவருடைய முகத்தில் பிரகாசம் படந்தது. கிருஷ்ணமூர்த்தி சார் என்னைப் பார்த்து சிரித்தபடி சொன்னார்.

“தேங்க் யூ”. ராஜசேகரனிடம் சொன்னார்.

“ரகு பெரிய ஆளுதான்”

அந்த நாட்கள் என்னுடைய நினைவில் சட்டென்று மின்னி மறைந்தன. நான் வெளியில் பார்த்தேன். மழை நின்றிருந்தது. ஆரவாரங்களும் கொண்டாட்டங்களும் தீர்ந்த ஒரு மைதானம் போல சுற்றுப்புறம் அமைதியாக இருந்தது. “ரகு. என்ன யோசிச்சுகிட்டு இருக்கற?”. சுவர்ணன் என்னுடைய நினைவுகளை கலைத்தான்.


“கரை “கடந்து பொங்கும் தோழமை எல்லையில்லாத தன்னம்பிக்கைக்கு வழிவகுக்கும். என் வாழ்க்கைப் பயணத்தில் இந்த அனுபவத்தை நினைத்துப்பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதை ஒரு தோழமையுள்ள மனிதனால் மட்டுமேப் புரிந்து கொள்ள முடியும். இதைச் சொன்ன சுவர்ணனுடைய முகத்தையே நான் உற்றுப் பார்த்தேன்.

அவனுடைய தத்துவரீதியான அந்தப் பேச்சு என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

அவன் சொன்னான். “ரகு. அன்னிக்கு நீ சொன்ன பொய்க்குக் கூட சத்த்தத்த விட பளபளப்பு உண்டு. அதனாலத்தான் நான் தோத்துப்போனேன். நான் வேண்டி விரும்பி வாங்கிகிட்ட தோல்வி அது”

அவனுடைய முகத்தைப் பார்க்க எனக்கு வெட்கமாக இருந்தது.

நான் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு காபி ஹவுசில் இருந்து இறங்கினேன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p74.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License