இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

அலைகடல்

மலையாளம்: வல்சம்மா சிலம்பொலி

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


ஏர்வாடா செண்ட்ரல் ஜெயில். பெரிய கேட். அதன் நடுப்பகுதியில் ஒரு ஆள் மட்டும் உள்ளே நுழையக்கூடிய சிறிய வாசல். துப்பாக்கியுடன் நிற்கும் போலீஸ்காரன். காந்திஜியையும் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த சுதந்திரப் போராட்ட வீரர்களையும் அடைத்து வைத்து வரலாறு படைத்த ஜெயில்.

“நெக்ஸ்ட்டு ஸ்டாப்” கண்டக்டர் ஞாபகப்படுத்தினார்.

பெட்டியையும் சாமான்களையும் கதவுக்கு அருகில் எடுத்துக் கொண்டு போய் வைத்தேன். இறங்கத் தயார். பஸ் நின்றது. நாங்கள் இறங்கினோம். நான் சுற்றுமுற்றும் கண்களை ஓடவிட்டேன். ஐ டி கம்பெனிகள். மால்கள். பெரிய பெரிய கட்டிடங்கள். பல வர்ணக் கொடிகள் பறக்கவிடப்பட்ட ஸ்டார் ஹோட்டல்கள். பானி பூரியையும் ஊத்தப்பத்தையும் விற்கும் தகரக் கடைகள். எல்லாம் அஸ்தமன சூரியனின் செங்கதிர் பட்டு ஜொலித்தன. ஒரு ஹோட்டல் பக்கவாட்டில் இருந்த சாலை முடிந்த இடத்தில் எங்களுடைய ப்ளாட் இருந்தது. சாவியை வாங்கி உள்ளே நுழைந்தோம்.

மகனைக் கட்டிலில் கிடத்தினேன். சாமான்களை ஒதுக்கிவைத்தோம். “இனி மேல கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம். நாளைக்கு ஆபீசில் ரிப்போர்ட் செய்யணும்”

காலையிலேயேக் கிளம்பினேன். பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். சாலையின் அகலத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். நாலு வழிப் பாதை. இரண்டு வழி இடது பக்கம். இரண்டு வழி வலது பக்கம். இடது வலது பக்கங்களை கருங்கல்லால் கட்டப்பட்ட உயர்த்திய அகலம் உடைய மண் திட்டு பிரித்தது. குறிப்பிட்ட அகலத்தில் நட்டு வளர்க்கப்பட்டிருந்த அலங்கார ஈச்சமரப் பனைகள். பட்டுப்போர்வை விரிக்கும் புல்வெளிகள். இரண்டு பக்கங்களிலும் இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்கள். இரண்டு பக்கமும் நட்டு வளர்க்கப்பட்டுக் கொண்டிருந்த பூச்செடிகள். வெட்டி அழகாக்கப்பட்ட செடிகளுக்கு நடுவில் அழகான நடைபாதைகள். எட்டு அடி அளவுக்கு அகலம் உள்ள நடைபாதையில் இண்டர்லாக் டைல்ஸ் பதிப்பித்து அழகாக்கப்பட்டிருந்தது.


செடிகளுக்கு நீரூற்ற அவசியமான குழாய்கள். சாலையும் சுற்றுப்புறமும் சுத்தமாக இருந்தன. “க்ளீன் பூனா... க்ரீன் பூனா...” என்ற போர்டின் வாசகங்கள் அவ்வப்போது என்னை வரவேற்றன. சாலைகள் எவ்வளவு அழகாகப் பராமரிக்கப்படுகின்றன! என் சிந்தனைகளைத் தலைகீழாக மாற்றி குப்பைக்கூடங்கள் குவிந்து கிடக்கும் நம் ஊர் சாலைகள் என் ஞாபகத்துக்கு வந்தன. கால்நடையாகச் செல்பவர்களை முற்றிலுமாகப் புறக்கணிக்கும் நம் ஊர் சாலைகள். மூடியில்லாத சாக்கடைக்குள் விழுந்த குழந்தையையையும் அவளைச் சாகசமாக காலாலேயே காப்பாற்றிய தாயையும் பற்றிய செய்திகள் என்னுடைய நினைவுகளில் மின்னி மறைந்தன. நான் பஸ் ஸ்டாப்ப்பை அடைந்தேன். ஏராளமானவர்கள் பஸ்ஸுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆட்டோ ரிக்‌சாக்கள் பயணிகளுக்காக வரிசை வரிசையாகக் காத்துக் கிடந்தன. பலதரப்பட்ட ஆடைகளை அணிந்தவர்கள். பஸ் வருவதற்கு இருக்கும் நேரத்தைக் கூட வீணாக்காமல் மொபைல் போனில் கேம் விளையாடும் இளம் வயதுக்காரர்கள். சுற்றி இருப்பவர்கள் யாரென்று தெரியாமல் தொலைதூரத்தில் இருப்பவர்களோடு சாட் செய்து கொண்டிருக்கும் சிறிய வயதுக்காரர்கள். யாரும் யாரையும் கவனிக்கவேயில்லை.

பத்தாம் நம்பர் பஸ் வந்தது. மராத்தி மொழி தெரியாத எனக்கு பஸ்ஸின் நம்பர்தான் உதவியது. புதுமையான காட்சிகளை ரசித்து மூழ்கியிருந்த நான் சத்தம் கேட்ட திசையில் பார்த்தேன். கரியால் உருவாக்கப்பட்டது போல ஒரு உருவம். அவனுடைய முகமும் வேட்டியும் தார் நிறத்தில் இருந்தன. கை உயர்த்தி முஷ்டியை மடக்கிக் கொண்டு ஏதோச் சொன்னான்.

நீண்டு சுருண்ட முடி. அழுக்கு புரண்டு ஜடை போல் ஆகியிருந்தது. அது முகத்துக்கு நீண்டு வந்து கண்கள் மேல் படும் என்று ஆன போது இடது கையால் பின்பக்கம் ஒதுக்கினான். ஒட்டிய வயிறு. குழிந்த கண்ணம். வறுமையைப் பறை சாற்றியது. நல்ல கம்பீரமான குரலில் அவன் ஏதோ புலம்பிக் கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்தில் ஒரு தள்ளுவண்டி. வண்டி நிறையச் சாமான்கள். வண்டிக்காரன் அவனிடம் ஏதோ சைகை காட்டினான். சத்தம் நின்றது. அனுசரணையான மாணவன் ஆசிரியர் முன் இருப்பது போல அவன் நின்றான். அடுக்கி வைத்திருந்த பழத்தில் இருந்து ஒன்றை எடுத்து வண்டிக்காரன் அவனுக்குக் கொடுத்தான்.

அவன் அதை ஆர்வத்தோடு சாப்பிட்டான். பஸ் முன்னோக்கிச் சென்றது. நான் ஆபீஸ் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தேன். வேலையில் ஜாய்ன் செய்தேன். புதிய சக ஊழியர்களை தெரிந்துகொண்டேன். அறிமுகம் செய்து கொண்டேன். அவர்களுக்காக ஒரு தேநீர் விருந்தையும் கொடுத்தேன்.

சாயங்காலமானது. ஆபீஸ் வாகனத்திலும் சொந்த வாகனங்களிலுமாக எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பினார்கள். நான் ஒரு பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு வந்தேன். சிரித்துக் கொண்டு ஓடி வந்த மகனை வாரி எடுத்து முத்தம் கொடுத்தேன். புதிய ஆபீஸ் விசேஷங்களை மனைவியோடு பகிர்ந்து கொண்டு ஆவி பறக்கும் தேநீரை அருந்தினேன். அடுத்த நாளும் பஸ்ஸில் இருந்து நான் அவனைப் பார்த்தேன். மக்கள் கூட்டத்தில் இருந்து சற்று தூரம் தள்ளி அவன் நின்று கொண்டிருந்தான்.


தொண்டர்களுக்கு முன் ஆவேசமான தலைவனைப் போல முஷ்டியை மடக்கி முழக்கமிட்டுக் கொண்டிருந்தான். நான் சுற்றிலும் பார்த்தேன். என்னைத் தவிர, வேறு யாரும் அவனைக் கவனிக்கவேயில்லை. எனக்கு என்னவோ அந்த ஆளோடு விவரிக்க முடியாத ஒரு அன்பு ஏற்பட்டது. ஆபீசுக்கும் திரும்பி வரும் பயனங்களிலும் நான் அவனைப் பார்த்தேன்.

பஸ் ஏறியவுடன் அவனைப் பார்க்க வசதியாக இருக்கும் இருக்கையைக் கண்டுபிடித்து அதில் உட்கார ஆரம்பித்தேன். அவனின் மூலம் நான் பலரையும் பார்த்தேன். என்னுடைய அப்பாவை... அம்மாவை... சகோதரன்களை... அவனின் ஊடே நான் என் ஊரையும் ஊர்க்காரர்களையும் கண்டேன். நான் தவறாமல் பஸ்ஸில் போனதற்கும் ஆபீஸ் ஏற்பாடு செய்த வாகனம் வேண்டாம் என்று சொன்னதற்கும் முக்கியக் காரணம் அவனைப் பார்க்கலாம் என்பதே.

ஒரு சாயங்கால நேரம். வழக்கமாக நான் உட்காரும் இருக்கை எதுவும் கிடைக்கவில்லை. கூட்டம் அதிகமாக இருந்ததால் எவ்வளவு முயற்சி செய்தும் அவனைப் பார்க்க முடியவில்லை. எனக்கு என்னவோ போலிருந்தது. வீட்டை அடைந்தேன். செய்தித்தாளை எடுத்தேன். வாசிக்க முடியவில்லை. மீனா கொண்டு வந்து வைத்த தேநீர் ஆறிக் கொண்டிருந்தது.

“இதென்ன ஆச்சு? வந்ததுலேர்ந்து இப்படி ஒரு இருப்பு?” பதில் கிடைக்காமல் போன போது, அவள் மறுபடியும் என்னைக் கேட்டாள். “என்ன அப்படி ஒரு சோகம்? ஆபீஸ்ல ஏதாச்சும் பிரச்சனையா?”. “ஒன்னுமில்ல” உண்மையை மறைத்துக் கொண்டு சொன்னேன். ஜில்லிட்டுப் போன தேநீரைக் குடித்தேன்.

மகனுடன் விளையாடும் போது, அந்த முன் பின் தெரியாதவனுடைய ஞாபகம் வந்தது. நெஞ்சு விம்மியது. “நாளைக்கு ஆப்பீஸ்க்கு கொஞ்சம் லீவு எடுக்க முடியுமா? மகனுக்கு உடம்பு சரியில்ல. டாக்டரப் போய்ப் பாக்கணும்”. மீனாவின் குரல் கேட்டுதான் எழுந்தேன். “முடியாது... முடியாது... இன்னிக்குப் போயே ஆகணும். ரொம்ப அவசரமான வேல இருக்கு. நீ ஒரு ஆட்டோ ரிக்சாவப்‌ பிடிச்சுட்டுப் போய் மகனைக் காட்டிட்டு வா”.

நான் பட்டென்று வீட்டில் இருந்து இறங்கினேன். நல்ல வேளை வழக்கமாக உட்காரும் இருக்கை கிடைத்தது. ஏர்வாடாவை அடைந்தேன். அவனுடைய சத்தம் கேட்கவில்லை. வழக்கமாக இருக்கும் இடத்தில் அவன் இல்லை. “ஒரு வேள எங்கயாச்சும் உக்காந்திருப்பானா? ஓ. அப்படி ஒன்னும் இருக்காது. இத்தன நாளாப் பாத்திருக்கோம்னாலும் அவன் ஒரு சமயம் கூட உக்காந்திருக்கறத பாத்ததே இல்ல. என்ன ஆச்சு?”. பஸ் முன்னோக்கி நகர்ந்தது. ஆனால் என்னால் முன்னோக்கி செல்ல முடியவில்லை.

அடுத்த ஸ்டாப்பில் இறங்கினேன். திரும்பிப் போகும் ஒரு பஸ்ஸில் ஏறி ஏர்வாடாவில் இறங்கினேன். சுற்றிலும் பார்த்தேன். அந்த வண்டிக்காரனையும் காணவில்லை. இனி மேல் என்ன செய்வது? எங்கேக் கேட்பது? என்னவென்று கேட்பது? அவன் யார்? எதற்காக அவன் இங்கே நிற்கிறான்? எனக்கு எதுவும் தெரியவில்லை. நான் எதற்காக இங்கே வந்தேன்? எனக்கு என் மீதேக் கோபம் ஏற்பட்டது. பஸ்ஸில் ஏறினேன்.

வீட்டுக்குப் போனேன். மீனா குழந்தையோடு ஆஸ்பத்திரிக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்தாள். “ஆஸ்பத்திரிக்கு நானும் வரேன். தனியாப் போக வேணாம்”. “ஹோ! நல்லதாப் போச்சு. பாஷை கூட தெரியாத நான் என்ன செய்யறது?”. அவளுக்கு நிம்மதி ஏற்பட்டது. “ஹும். அவளாவது சந்தோஷமா இருக்கட்டும்”

நாங்கள் ஆஸ்பத்திரியை அடைந்தோம். டோக்கன் எடுத்து டாக்டரைப் பார்க்க வெளியில் காத்திருந்தோம். தேடிப் போன மூலிகைச் செடி காலில் சுற்றியது போல அதோ அந்தத் தள்ளு வண்டிக்காரன்! “ஃப்பையா” நான் உரத்த குரலில் கத்தினேன். ஓடிப் போனேன். அந்த ஆளைப் பற்றி விசாரித்தேன். என்னுடைய மலையாளம் கலந்த ஆங்கிலமும் அவனுடைய மராத்தி கலந்த ஆங்கிலமும் ஒன்று சேர்ந்து எங்கள் இருவருக்கும் எதுவும் புரியவில்லை என்றாலும் ஒன்று எனக்கு உறுதியானது. நான் தேடுகிற ஆள் இங்கே அட்மிட் செய்யப்பட்டிருக்கிறான். என்கொயரியில் விசாரித்த போது கூச்சம் கலந்த ஒரு புன்முறுவலோடு வெள்ளை நிற மூக்குத்தி அணிந்து கொண்டிருந்த இளம் பெண் வார்டு நம்பரைச் சொன்னாள். நான் வேகமாக அங்கேச் சென்றேன். அந்த ஆள் வெகுவாக மாறியிருந்தான்.

பழைய சத்தம் இல்லை. சைகைகளும் இல்லை. ஜடை பிடித்த முடி நன்றாக வெட்டப்பட்டிருக்கிறது. அழுக்கு புறண்டு கிடந்த வேட்டிக்கு பதில் வெள்ளை நிற வேட்டி. பலவீனமாக இருக்கிறான் என்று அவன் படுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தாலே தெரியும். அருகில் போய் அவனைப் பார்த்தேன். அவன் என்னையும். “என்ன ஆச்சு?”. நான் கேட்டேன். ஆச்சரியத்தோடு அவன் என்னைப் பார்த்தான். சத்தம் போட்டுச் சிரித்தான். அதைக் கேட்டு என் மனது குளிர்ந்தது.

என்னையும் அறியாமல் என் கண்கள் நிறைந்தது. தாய் மொழியின் வசீகரம். அன்பு. எல்லாவற்றையும் அந்த சிரிப்பின் வழியாக நான் உணர்ந்தேன். என் ஊர்க்காரனை... சகோதரனை... இல்லையில்லை என்னுடைய எல்லாமுமான மலையாளியை நான் கண்டுபிடித்துவிட்டேன்! அளவில்லாத ஆனந்தம் ஏற்பட்டது. அவனுக்குத் தேவையான மருந்துகளையும் உணவையும் வாங்கிக் கொடுத்துவிட்டு மகனுக்கு பக்கத்தில் போனேன். டாக்டரைப் பார்த்தாயிற்று. திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். பட்டென்று நான் கேட்டுக்கு அருகில் போனேன்.


நல்லவேளையாக அவர்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். ஆட்டோவுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். மீனா மெல்லியக் குரலில் கோபத்தோடு ஏதோ முனகினாள். குற்ற உணர்வால் என்னுடைய தலை தாழ்ந்தது. வீட்டை அடைந்தோம். கடைத்தெருவில் பார்த்த மலையாளியைப் பற்றியும் அவனுடைய முழக்கங்களைப் பற்றியும் ஆஸ்பத்திரியில் அவனைப் பார்க்க நேர்ந்ததைப் பற்றியும் எல்லாம் மீனாவிடம் விவரமாகச் சொன்னேன்.

அவளுடைய முகம் கோபத்தால் சிவந்தது. “அப்படின்னா நீங்க அவனோடயே போயிடுங்க. என்னையும் என்னோட மகனையும் என்னோட வீட்டுல கொண்டு போய் விட்டுடுங்க” அவள் அலறினாள். “கடவுளே! எனக்கு இப்படி ஒரு புருஷன் எதுக்கு? குழந்தையக் கூட கவனிக்காத துஷ்டன்!” அவள் வெடித்துச் சிதறினாள்.

மாலையான போது மகனின் காய்ச்சல் சரியானது. அவன் விளையாட்டும் சிரிப்புமாக வந்தான். நான் அவனை வாரி எடுத்து முத்தம் கொடுத்தேன். மீனா கோபத்தோடு ஓடி வந்தாள். குழந்தையை என்னிடம் இருந்து தட்டிப் பறித்தாள். “தொடக்கூடாது! தொடக்கூடாது என்னோட மகனை!” தப்பு செய்த அப்பாவுக்கு முன்னால் ஆக்ரோஷமான கோபத்துடன் இருக்கும் அம்மாவுடைய கட்டளை!

நான் இரண்டு பேரையும் சேர்த்து அணைத்து ஆறுதல்படுத்தினேன். பாவம் மீனாவுடைய கோபம் கரைந்து உருகியது. நாட்களும் மாதங்களும் கடந்து போயின. மீனாவிடம் பல விஷயங்களைப் பற்றிப் பேசுவேன் என்றாலும் அந்த மலையாளியைப் பற்றிய பேச்சு எங்களுக்கு இடையில் வராமல் இருக்க நான் கவனித்துக் கொண்டேன்.

ஆஸ்பத்திரியில் இருந்து வெளியில் வந்த அவனுடைய மன நிலை இயல்பாக மாறியது. அதற்காக கொஞ்சம் கூடுதலாகவே பணம் செலவழிக்க வேண்டி வந்தது. அதையெல்லாம் மீனாவுக்குத் தெரியாமல் கண்டுபிடிக்க வேண்டி நேரிட்டது. இன்று அந்த ஆள் ஒரு ஆபீஸில் வாட்ச்சர். ஒரு நாள் நான் அவனுடைய சிறிய அறைக்குப் போனேன். என்னைப் பார்த்த அவன் ஒரு குட்டிக் குழந்தையைப் போல துள்ளிக் குதித்தான். அவன் தன் கடந்த காலத்தை எனக்கு மனம் திறந்து சொன்னான். சங்கரன் அண்ணன் என்ற ஆள் அவனை தன் மகனைப் போல பாசம் காட்டி பராமரித்து வந்தான். அவனுடைய புத்திசாலியான மகளுடைய கல்விக்காக சங்கரன் கணக்கில்லாமல் பணம் கொடுத்து உதவினான். அந்தக் கடனை மீண்டும் திருப்பிக் கொடுக்க அவன் வங்கியில் கடன் வாங்கினான். பணத்தோடு சங்கரனைப் பார்க்கக் கிளம்பிய அவனை ஏதோ ஒரு வாகனம் இடித்துத் தள்ளியது. பணமும் உயிரும் மட்டுமல்ல. இருந்த சிறிய வீடும் அதனுடன் சேர்ந்து நஷ்டமானது. கடனைப் பற்றி யாருக்கும் தெரியாது. மனைவியைப் பற்றியோ மகளைப் பற்றியோ அவனுக்கு இப்போது எதுவும் தெரியவில்லை.


ஒரு வேலையைத் தேடித்தான் அவன் மகாராஷ்டிராவில் இந்த மகாநகரத்திற்கு வந்தான். பிறகு என்ன நடந்தது என்று ஞாபகப்படுத்திக் கொள்ள அவனால் முடியவில்லை. கதையைக் கேட்டு மனம் நொந்து நான் அவனை என் வீட்டுக்கு அழைத்தேன். “வரேன்”. அவன் சொன்னான். ஒரு இரண்டாவது சனிக்கிழமை.

“இன்னிக்கு அந்த ஆள் வருவான். நம்மைப் பார்க்க... என்னோட மகனைப் பார்க்க... வீட்டைப் பார்க்க...” இந்த விஷயத்தை நான் என்னிடமும் மகனிடமும் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த ஆள் வருவது மீனாவுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்றாலும் சுவையான சாப்பாடு தயார் செய்து வைத்திருந்தாள். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அவள் குளிக்கக் கிளம்பினாள். அழைப்பு மணி ஒலித்தது. நான் வாசல் திறந்தேன். கேரி பேஃப்குடன் சிரித்தபடி அவன் நின்று கொண்டிருந்தான். “வாங்க... வாங்க...”. அவன் உள்ளே வந்தான். மகனுடன் விளையாட ஆரம்பித்தான்.

மீனா குளித்து முடித்துவிட்டு வந்தாள். அந்த ஆள் அவளை உற்றுப் பார்த்தான். “நீ...! மீனாதானே...!?” “ஆமாமாம்!”. அவள் ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றாள்! ஒரு தந்தையின் பாசமும் ஒரு மகளின் பரிதவிப்பும் அதில் கலந்திருந்தது!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p76.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License