இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

இன்றைய விருந்தினர்

மலையாளம்: எம். எஸ். உஷாதேவி

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


அம்மா. இன்னிக்கு நம்ம வீட்டுக்கு ஒரு விருந்தாளி வராரு. மகள் பிந்துஜா அம்மா சாரிகாவிடம் சொன்னாள்.

“யாரும்மா அது?”. “அதச் சொன்னா சஸ்பென்ஸ் இருக்காது. ஒரு ஆள். ஒரு ஆம்பள”

“உன்னோட பாய் ஃரெண்டா?”

“இல்ல. அதுதான் சொன்னேன் சஸ்பென்ஸ்னு”

“இதுக்கு மேலயும் நீ எங்கிட்ட பேசிகிட்டு இருந்தீன்னா உன்னோட காலேஜ் பஸ் அது பாட்டுக்கு போயிடும். “பை... பை...”. பிந்துஜா அம்மாவுடைய கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து பாடித்திரியும் பட்டாம் பூச்சியைப் போல சட்டென்று எழுந்து கிளம்பினாள்.

சாரிகாவுக்கு பெரிய குழப்பம்.

“வரப்போறது. காலேஜ்ல அவளுக்குப் பிடிச்சப் பேராசிரியரா இருக்கும். இந்தப் பொண்ணுக்கு யாருன்னு சொன்னா என்னவாம்? நம்பள எதுக்காக டென்ஷனாக்கறா? வர்ற ஆளு விஜிட்டேரியனா இல்ல நான் வெஜிட்டேரியனா? யாராயிருக்கும்? எதுவா இருந்தாலும்” எல்லாத்தயும் சமாளிக்கலாம்”

சாரிகா சமையலறைக்குப் போனாள். உதவிக்கு இருந்த தங்கமணியிடம் சொன்னாள்.

“இன்னிக்கு சாப்பாட்டுக்கு ஒரு ஆள் கூடுதலா வர்றாங்க. ஏதாச்சும் ஸ்பெஷலா வைக்கணும். சரியா?”

“ஒரு ஆளு மட்டும்தானே அக்கா?”

“அப்படித்தான் மக சொல்றா. ஒரு பால் பாயசம் கூட சேத்து வச்சுடலாம்”

“ம்”


தங்கமணி ஒரு தலைவனைப் போல வேலைகளைச் செய்யத் தயாரானாள். சமையலறையில் சிறிய சிறிய உதவிகளை அவளுக்குச் செய்து கொடுத்துவிட்டு சாரிகா குளித்து கண் மையிட்டு நெற்றியில் பொட்டு வைத்து முடியைக் கொண்டை போட்டுக் கட்டி பட்டுப் புடவையை உடுத்திக் கொண்டாள்.

பட்டுப் புடவையில் அம்மாவைப் பார்ப்பதற்கு மகளுக்கு மிகப் பிடிக்கும்.

“சரி. அவளாவது சந்தோஷமா இருக்கட்டும்” சாரிகா நினைத்துக் கொண்டாள்.

ஒரு மணி நேரம் கழிந்தபோது சாரிகா மகளுக்கு செய்தி அனுப்பினாள்.

“கெஸ்ட் எத்தனை மணிக்கு வராரு?”

“ரெண்டு மணிக்கு வராரு அம்மா. அவரோட கார்லதான் வராரு”

சாரிகா வெறுமனே டி வியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான் ஹாரன் சத்தம் கேட்டது. சாரிகா சட்டென்று எழுந்தாள். ஆர்வத்தோடு ஜன்னல் வழியாகப் பார்த்தாள். பார்க்க அழகாக இருந்தான் அந்த ஆள்.

“அவளோட பேராசிரியரா இருக்குமா?” சாரிகா வேகமாகப் போய் வாசல் கதவைத் திறந்து வைத்து காத்துக் கொண்டு நின்றாள்.

மகளும் அவரும் உள்ளே நுழைந்தார்கள். ஆளை சாரிகா உற்றுப் பார்த்தாள்.

அவளுக்குள் ஒரு எரிமலை வெடித்துச் சிதறியது! “ஜெயதேவன்! ஜெயதேவனுக்கு எப்படி என்னோட பொண்ணைத் தெரியும்?” புன்சிரிக்க மறந்து உள்ளே வரச்சொல்லி அழைக்கும் அடிப்படை மரியாதையையும் மறந்து அவள் ஸ்தம்பித்து நின்றாள்!

“என்னம்மா இது? ஒரு மேனர்ஸ் கூட இல்ல. வர்ற விருந்தாளிய வான்னு கூப்பிடறது இல்லயா?” மகளுடைய குரல் கேட்டு அவளுடைய சிந்தனைகள் முறிந்தன.

அவள் அதிர்ச்சியில் இருந்து மீண்டாள். அதற்குள் மகள் அவரை ஹாலுக்கு அழைத்துச் சென்றிருந்தாள்.


ஜெயதேவனுடைய முகம் உணர்ச்சிகளுடன் இருப்பதாகவும் பரவசத்துடன் இருப்பதாகவும் சாரிகாவுக்குத் தோன்றியது. அவள் விக்கி விக்கி அவனிடம் கேட்டாள். “ஜில்லுன்னு குடிக்க ஏதாச்சும் தரட்டுமா?”

மகள்தான் அதற்குப் பதில் சொன்னாள்.

“வேணாம்மா. நல்ல பசி. சாப்பிட்டாப் போதும்”

அந்தச் சூழ்நிலையில் இருந்து பின்வாங்கிச் செல்ல விரும்பிய சாரிகா பட்டென்று உள்ளே போனாள். ஆயிரமாயிரம் எண்ணங்கள் அவள் மனதில் கடந்து சென்றன. “ஜெயதேவங்கற பிரபலமான எழுத்தாளனை இவளுக்கு எப்படித் தெரியும்? எல்லா விஷயமும் தெரியுமா?”

அவளுக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது. “மகளுக்கு ஏதாச்சும் தெரிஞ்சிருக்குமா?”

“சாப்பாடு பரிமாறட்டுமா அக்கா?”

தங்கமணியின் கேள்வி அவளை மீண்டும் அதிர்ச்சியடையச் செய்தது.

“பரிமாறு”

தங்கமணி பரிமாறினாள். சாரிகா ஜெயதேவனை சாப்பிட அழைத்தாள்.

“வாங்க. சாப்பிடலாம்”

மகளும் ஜெயதேவனும் ஒன்று சேர்ந்து சாப்பிட வந்தார்கள்.

கடைசியாக பால் பாயசம் பரிமாறப்பட்ட போது ஜெயதேவன் அவளை ஒரு இரகசியப் பார்வையோடு பார்த்தான்.

“இது என்னோட ஃபேவரைட் ஐட்டம்”

“என்னோட மகளுக்கும் இது ரொம்பப் பிடிக்கும். அதுதான் செஞ்சேன்”

“நல்லது”அவன் சொன்னான்.

அவளின் உள்ளுக்குள் அலை கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. ஜெயதேவனும் அவளும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரியில் நடக்கும் எல்லா இலக்கியப் போட்டிகளிலும் அவளுக்கும் ஜெயதேவனுக்கும்தான் முதலிரண்டு இடங்கள். விருப்பங்கள் ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு பேர் நெருங்குவது இயல்புதானே? அப்படி ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழக ஆரம்பித்தார்கள். அது காதலாக மாறியது. பிரிய முடியாத நிலை! கால வெள்ளத்தில் எல்லாம் மாறிப்போனது!

“அம்மா. சார் கிளம்பறாராம்”

மகளின் குரல் கேட்டது.

மன இறுக்கத்தோடு ஒரு புன்முறுவலைக் காட்டி ஜெயதேவனை வழியனுப்பி வைத்தாள். அவன் கிளம்பிய பிறகும் அதைப் பற்றி மகளிடம் தான் எதுவும் கேட்கவில்லை என்று சிறிது நேரம் கழித்துதான் அவளுக்கு நினைவு வந்தது.

ஜெயதேவனை அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பி வந்த மகள் சொன்னாள்.

“வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தா இப்படி நடந்துப்பியா? அவரு பிரபலமான ஒரு எழுத்தாளராக்கும்”

மகளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் ஊமையானாள்.

“எனக்கு தாங்க முடியாத தலைவலி”

ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக சொன்னாள்.

“நான் கொஞ்சம் படுக்கட்டுமா?”. அவள் படுக்கையறைக்குச் சென்று கதவை மூடி படுக்கையில் விழுந்தாள். நினைவுகள் அவளை வேட்டையாடின. புயல் காற்றில் அகப்பட்ட சருகு இலை போல மனது நடுங்கியது.

“மகள்! அவளுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்குமா?”

எண்ணங்களின் துவம்ச யுத்தத்தில் அவளுடைய நிம்மதி காணாமல் போனது.

வாசல் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள்.

வாசல் கதவைத் திறந்தாள். மகள் நின்று கொண்டிருந்தாள்!

“என்ன ஒரு தூக்கம் அம்மா இது? எனக்குத் தெரியும்”

சாரிகா பதில் பேசவில்லை.

“அம்மாவுக்கு என்ன ஆச்சு? அவள் உள்ளே நுழைந்தாள்.

சாரிகாவுடைய கைகளைப் பற்றிக் கொண்டாள். உட்கார வைத்தாள்.

“தங்கமணி கிளம்பிட்டா. ஆறு மணியான பிறகும் அம்மா நீ எந்திரிக்காததுனாலதான் நான் எழுப்பினேன். அம்மா. உன்னோட மனச இப்ப என்னால நல்லாப் புரிஞ்சுக்க முடியும். உன்னோட மனசுக்குள்ள இருக்கற எண்ணங்க... கேள்விங்க... எல்லாம் எனக்குத் தெரியும். ஜெயதேவன்ங்கற என்னோட அப்பாவ நான் மனப்பூர்வமாத்தான் இங்க கூட்டிகிட்டு வந்தேன்!”

சாரிகா அதிர்ச்சியோடு மகளைப் பார்த்தாள். காதலுங்கற உணர்ச்சிப்ப்பெருக்குல என்னிக்கோ உங்களுக்கு சம்பவிச்ச ஒரு தப்போட மீதிதான் நானுங்கறதும் எனக்குத் தெரியும்! அப்பா இன்னும் கல்யாணம் செஞ்சுக்கல அம்மா! இப்பவும் இந்த என்னோட அம்மாங்கற செல்லத்த நினைச்சுகிட்டுதான் வாழறாரு. நீயும் அப்படித்தானே?”

எதையும் நம்பமுடியாமல்... காதுகள் அடைத்துக் கொண்டது போல... புத்தி மரத்துப் போனது போல... ஒரு மரப்பாச்சி பொம்மையைப் போல அசைவில்லாமல் இருந்தாள் சாரிகா!

“இனிமேலயாச்சும் நீங்க ரெண்டு பேரும் ஒன்ன்னா சேரணும். என்னோட அப்பா உசிரோட இருக்கறப்ப நான் எதுக்காக அப்பா இல்லாதவளா வாழணும்? அம்மா. நீ எதுக்காக புருஷன் இல்லாதவளா வாழணும்? நீங்க ரெண்டு பேரும் எனக்கு வேணும். இது என்னோட உரிமை. என்னோட உரிமை எனக்குக் கிடைச்சே ஆகணும்”

சாரிகாவுக்கு மீண்டும் அதிர்ச்சி! “நீ சந்தேகப்பட வேணாம். நான் அப்பாவோட எல்லாத்தப் பத்தியும் பேசிட்டேன். அவருக்கு முழுச்சம்மதம்”

வார்த்தைகள் கிடைக்காமல் சாரிகா பிரமை பிடித்தவள் போல இருந்தாள். தலைக்கு மேல் கடல் பொங்குவது போலிருந்தது.

“அம்மா”மகள் அவளை குலுக்கினாள்.

“நமக்கு விதிக்காதத நாம் வேணாம்னு வச்சுடணும் மகளே” சாரிகா பரிதவிப்போடு சொன்னாள்.

“யார் சொன்னாங்க கிடைக்காததுன்னு”

“அப்படி ஒரு விதி இருந்திருந்தா நாங்க அன்னிக்கே ஒன்னு சேந்திருப்போம்.. உறவுங்களோட மதிப்பு தெரிஞ்சவங்களுக்குதான் அது இல்லாமப் போகும் போது உண்டாகற வலியும் தெரியும்”


“அது அப்பாவுக்கும் தெரியும் அம்மா. நாம மூனு பேரும் சேந்து வாழணும்னு நான் ரொம்ப நாளா கனவு கண்டுகிட்டு இருக்கேன். உன்னால அது சிதையக்கூடாது. உனக்கு நான் மட்டும் போதுமா? அப்பா வேணாமா?. ப்ரியமா இருக்கறவங்க ஒன்னா சேர்றதுதானே நியாயம்? இதுக்கு மேலயும் நீங்க ரெண்டு பேரும் எதுக்காக வேதனையோட வாழணும்? அது எனக்கும் வேதனை”

அனுபவப் பாடங்கள் ஏராளமாக உள்ள... அறிவுள்ள... ஒரு தீர்க்கதரிசியைப் போல பேசும் மகளைப் பார்த்து சாரிகா ஆச்சரியப்பட்டாள்!

“இதயத்தாலதானே அம்மா இதயத்தப் பாக்கமுடியும்?”

சாரிகா மௌனமானாள். மனது விம்மியது.

“இந்த அளவுக்கு என் மேல அன்பு காட்டற என்னோட மகள... ஜெயதேவனை எப்படி வேணாம்னு சொல்றது?”

கண்களில் தளும்பி நின்ற நீருடன் சாரிகா மகளைக் கட்டிப் பிடித்தாள்.

சாரிகாவுடைய பரிதவிக்கும் இதயம் ஆறுதலின் நிழலுக்காக ஏங்கித் தவித்தது. அவளுடைய கனவுகள் வண்ணமயமாயின. அழகான வாழ்க்கையின் வசந்தத்தில்அது மீண்டும் துளிர்விட்டது. அற்புதங்கள் எல்லாம் எதிர்பாராமல் நடப்பதுதானே? அவள் மகளின் நல்ல மனதை மனதார வணங்கினாள்!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p77.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License