இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

ரிக்‌ஷாக்காரன்

மலையாளம்: ஆதிநாடு சசி

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


அப்பு செட்டி தெருவில் நெரிசல் அதிகமாக இருந்தது. தூரத்தில் எங்கிருந்தோ வீசிய காற்றில் செவ்வந்திப் பூக்களின் வாசனையோடு அழுக்குச் சாக்கடையின் துர்நாற்றமும் கலந்து மிதந்து வந்தது. மஞ்சள் வர்ணம் பூசிய டாக்சிக்காரர்களுக்கும் ஆட்டோ ரிக்‌ஷாக்களுக்கும் இடையில் அந்த ஆள் சைக்கிள் ரிக்‌ஷாவை மிதித்துக் கொண்டிருந்தார்.

இடையிடையே வலது கையை தூக்கி நீண்டு வளர்ந்து நரைத்திருந்த தாடி உரோமங்களைத் தடவிக் கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்ற போது சிவந்த உதடுகளோடு வாடா மல்லிப் பூக்களை சூடிய பெண்களும் குழந்தைகளும் போடும் ஆரவாரச் சத்தம் கேட்டது. ஆங்காங்கே அலங்காரம் செய்த குடைகளுமாக நாட்டியமாடுபவர்களையும் காண முடிந்தது.

ஆச்சரியத்தோடு நான் நாலு பக்கமும் நோக்கினேன். அது எதையும் கவனிக்காமல் அந்த ஆள் தன் வேலையில் மும்முரமாக இருந்தார்.

நான் கேட்டேன். “இங்க இன்னிக்கு என்ன விசேஷம்?”

”அம்மன் கோயில் திருவிழா”

திரும்பிப் பார்க்காமல் அவர் சொன்னார். காட்சிகள் ஒவ்வொன்றாகக் கடந்து போய்க்கொண்டிருந்தன.

கோயில் திருவிழாவைப் பற்றியும் பூசைகளைப் பற்றியும் அவர் வாய் ஓயாமல் சொன்னார். நீண்ட நாள் பழகிய ஒரு நண்பனைப் போல அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் நான் ஆர்வத்தோடு கேட்டேன். திடீரென்று வளைவு திரும்பும் இடத்தில் அவர் ரிக்‌ஷாவில் இருந்து இறங்கினார்.


“கோயில்ல இந்த மாலய கொடுத்துட்டு சீக்கிரமா வரேன்”

என் சம்மதத்திற்கு காத்துக் கொண்டு நிற்காமல் அவர் மாலையுடன் கோயிலை நோக்கி ஓடினார். சிகரெட்டை நான் பற்ற வைப்பதற்கு முன்பே அவர் திரும்பி வந்தார்.

மறுபடியும் ரிக்‌ஷா ஓட ஆரம்பித்தது. தெரு முடியும் இடத்தில் நான் இறங்கவேண்டும். அந்தத் தெருவின் கடைசி வீட்டுக்குத்தான் நான் போகவேண்டும்.

அங்கேதான் எனக்குப் பிரியமான என் தோழன் பாலச்சந்திரனும் அவனுடைய மனைவியும் வாழ்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு முன்பு ஒரு தடவை கூட நான் போனதில்லை. இரண்டு வருஷத்துக்கு முன்பு அவனுக்கு மதராஸில் வேலை கிடைத்து அவன் வந்தபோது நான் அவனுக்குத் துணையாக வந்தேன்.

அப்போது விநாயகா என்ற பெயருடைய ஒரு லாட்ஜில்தான் நாங்கள் தங்கியிருந்ததாக எனக்கு ஞாபகம். அது நகரத்தின் எந்தப் பகுதியில் இருந்தது என்று கூட எனக்குத் தெரியவில்லை. அவன் வேலைக்குச் சேர்ந்த மூன்றாவது நாள் நான் ஊருக்கு திரும்பிப் போனேன். அப்போது அவனிடம் ஒரு விஷயத்தைச் சொல்ல நான் மறக்கவில்லை.

“லட்டர் போட மறந்துடாத”. அப்புறம் கடிதங்கள் மூலம்தான் அவனைப் பற்றியும் அவன் தங்கியிருந்த அப்பு செட்டி தெருவைப் பற்றியும் அங்கே கடைசியாக இருந்த 135 ஆவடு வீட்டைப் பற்றியும் நான் தெரிந்து கொண்டேன்.

கம்பெனிக்கு போகும் வழியில் அந்தத் தெருவில் இருந்த குப்புசாமி டீக்கடையின் மசாலா தோசையின் ருசியோடு சேர்ந்து அவர் மகள் சிவகாமியுடைய மனதையும் அவன் சொந்தமாக்கிக் கொண்டான்.

அவன் எழுதிய கடிதங்களில் சிவகாமியின் அழகைப் பற்றியும் அவள் தமிழில் பேசுவது பற்றியும் நிறைய இருந்தது. ஒரு சில கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் ஆதரவுடன் அருகில் இருந்த ஒரு அம்மன் கோயிலில் அவர்களின் திருமணம் நடந்தது. இரண்டு மாநிலக் கலாச்சாரங்களின் சங்கமம். ஆனால், அவனுடைய வீட்டுக்காரர்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

எனக்கு இண்டர்வியூ கார்டு கிடைத்தவுடனேயே நான் மதராசுக்கு வருவது பற்றி அவனுக்கு போன் மூலம் சொன்னேன். ஆனால் அவன் கடிதங்கள் வழியாகத்தான் எனக்கு பதில் அனுப்பியிருந்தான். அப்பு செட்டி தெருவைப் பற்றி வரைபடங்கள் மூலமாகவும் வார்த்தைகள் மூலமாகவும் அவன் எனக்கு விவரமாகக் கடிதம் எழுதியிருந்தான்.


என்ஜினியரிங்கில் டிப்ளமா வாங்கியதன் பலன் அந்த கடிதங்கள் முழுவதும் பிரதிபலித்தன.

“சார்”. அந்த ஆளுடைய குரலைக் கேட்டபோதுதான் அப்பு செட்டி தெருவின் கடைசி வீட்டு வாசற்படி அருகில்தான் ரிக்‌ஷா நிற்பதை என்னால் உணர முடிந்தது.

ஃப்ரீஃப் கேஸை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி பத்து ரூபாய் நோட்டை அவருக்கு நேராக நீட்டிக்கொண்டு நான் கேட்டேன்.

“உங்க பேரு என்ன?”

“சந்திரசேகர்” பதில் வந்தது.

கறை படிந்த பற்களைக் காட்டி என்னைப் பார்த்து சிரிக்க அவர் முயற்சி செய்தார்.

ரிக்சா வண்டி என்னை விட்டு மறைவதைப் பார்த்தபடி நான் நின்றுகொண்டிருந்தேன். அந்த உருவம் என் மனதில் மாயாமல் நிற்கிறது. எனக்கு நன்றாகப் பழக்கப்பட்ட முகம் அது. ஆனால், எங்கே பார்த்தேன் என்று ஞாபகம் இல்லை.

அவருக்கு ஏறக்குறைய ஏழடி உயரம் இருக்கும். கூர்மையான கண்கள். அன்போடு கலந்த பேச்சு. மலையாளம் கலந்த தமிழ். இந்த கறுத்த மனிதனை எங்கோ நான் பார்த்திருக்கிறேன். மறந்துவிட்டேன். அவரும் அவருடைய சைக்கிள் ரிக்‌ஷாவும் தெருவின் ஆரம்பத்திற்குப் போய் மறைந்தானர். என்றாலும் அந்த சந்தேகத்தை மனதில் வைத்துக் கொண்டு நான் அந்த கடைசி வீட்டின் மூடியிருந்த வாசல் கதவைத் தட்டினேன்.

வாசலில் வந்து நின்ற இளம் பெண்ணிடம் நான் கேட்டேன். “பாலனோட…”. வார்த்தைகளை நான் முழுமையாக்குவதற்கு முன்பே அவள் சொன்னாள்.

“வாங்க. அவரு சொல்லியிருக்காரு. இவ்வளவு நேரம் உங்களுக்காகக் காத்துகிட்டு இருந்தாரு. இதோ இப்ப வந்துடுவாரு. கோயிலுக்குப் போயிருக்காரு” தமிழ் கலந்த மலையாளத்தில் சொன்ன அவள் உள்ளே போனாள்.

பாலன் வார்த்தைகளின் மூலம் வரைந்து காட்டிய சிவகாமி இவள்தான்.

சோபாவில் உட்கார்ந்து சுவரில் மாட்டியிருந்த படங்களில் கண்களை ஓடவிட்டேன். திடீரென்று என் கவனம் டீப்பாயில் இருந்த செய்தித்தாளின் மீது சென்றது. பந்துடன் வாயுவில் எம்பி குதித்து நிற்கும் இளைஞனின் மங்கிய படம்! அதனுடன் சைக்கிள் ரிக்‌ஷாவை இழுத்துக் கொண்டு போகும் வயதான ஒரு மனிதனின் படமும். ஆமாம். அவர்தான் சந்திரசேகர்.

இளைஞர்களிடையில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த கூடைப் பந்து வீரர். இந்தியாவின் வலிமையான விளையாட்டு வீரர். படங்களுடன் இருந்த அந்தச் செய்தியை வாசித்தேன்.


என் நினைவுகள் விளையாட்டு மைதானங்களை நோக்கிப் பாய்ந்து சென்றன. அவருடைய ஆட்டோக்ராஃப்க்காக மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள். அந்த காலத்தில் நான் எனக்குப் பிடித்தமான விளையாட்டு வீரர்களின் படங்களை செய்தித்தாள்களில் இருந்து வெட்டியெடுத்து ஆல்பம் உண்டாக்கிய நினைவுகள். அதைப் பொக்கிஷமாக பாதுகாத்த ஒரு காலம் அது.

செய்தித்தாள்கள், விளையாட்டு ரசிகர்கள் வானளாவ புகழ் பாடிய சந்திரசேகர் என்ற அந்த விளையாட்டு வீரர்! இன்று இதோ இந்தத் தெருவின் வழியாக வாழ்வை மிதித்து மிதித்து ஓட்டுகிறார்! செய்தித்தாள்களைப் பார்த்துக் கொண்டிருந்த என் நிசப்தத்தை பாலனுடைய குரல் கலைத்தது. சிவகாமி பாத்திரத்தில் வடையும் கோப்பையில் தேநீருமாக வந்தாள்.

புன்சிரிப்போடு அவள் பாத்திரத்தையும் கோப்பையையும் டீப்பாயில் வைத்தாள். அவள் அணிந்துகொண்டிருந்த அந்த சிவப்புக் கல் மூக்குத்தியின் பிரகாசம் என் கண்களில் பட்டு என்னைக் கூசவைத்தது. கோப்பையில் இருந்த நிறைந்து ததும்பி வழிந்த சில தேநீர்த் துளிகள் செய்தித்தாள் மீது விழுந்தது.

அவருடைய வாழ்க்கையைப் போலவேச் செய்தித்தாளில் இருந்த அந்த கலர் போட்டோவும் நனைந்து ஈரமாகிப் போனது!

பாலன் வீட்டு விசேஷங்களை ஆவலுடன் என்னிடம் கேட்டு விசாரித்துக் கொண்டிருந்தான். ஆனால் என்னுடைய மனது கூட்டம் அலை மோதிய காலரிகளை புரட்டிப் போட்ட ரசிகர்களின் ஆரவாரங்களுக்கும் ஆனந்தங்களுக்கும் நடுவில் பந்துடன் வாயு மண்டலத்தில் உயர்ந்து நிற்கும் அவரில் பதிந்திருந்தது.

ஒரு காலத்தில் காலரிகளில் நிறைந்து நின்ற அந்த ஆரவாரங்கள் மீண்டும் ஒரு தடவை என் ஞாபகங்களில் கடந்து வந்தன.

அம்மன் கோயிலில் விழா கோலாகலங்கள். பெண்களின் நாட்டிய நிகழ்ச்சிகள். எல்லா சத்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன. காலம் தப்பி வந்த சாறல் மழை ஊஞ்சலாடி கடல் கடந்து வீசிய காற்றுடன் சேர்ந்து கடந்து போனது. அப்பு செட்டித் தெருவின் நெரிசல்களுக்கு நடுவில் சந்திரசேகரின் சைக்கிள் ரிக்‌ஷாவின் ஹாரன் முழங்கியது. அதோடு சேர்ந்து துளித்துளியாக விழுந்து கொண்டிருந்த மழைத்துளிகளின் அழுகை ஓசைகளும்!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p78.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License