இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

40.மூணாம் நாளு கதை


எல்லாருக்கும் மரியாதை உண்டு. அந்த மரியாதையும் நாம் நடந்து கொள்கின்ற முறையை வைத்துத்தான் கிடைக்கும். முறை தவறிவிட்டால் அங்கு மரியாதை என்பது இல்லாமல் போய்விடும். எதுவும் ஒரு அளவுதான் என்று வழக்கில் கூறுவார்கள். அளவினை, அதாவது எல்லையை மீறி விட்டால் இருக்கின்ற மரியாதையும் போய்விடும். அதனால் அளவோடு எல்லாம் இருக்கின்ற போதே நாம் எதைச் செய்தாலும் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதைப் பற்றிய கதை ஒன்று புதுக்கோட்டை வட்டாரத்தில் வழக்கில் வழங்கி வருகின்றது.

பக்கத்து ஊருல ஒருத்தனுக்கு சம்பந்தம் பேசி முடிச்சாங்க. அந்த பக்கத்தூருக்காரங்களும் நல்லா தங்களோட பெண்ணுக்கு வேண்டிய சீர் செஞ்சி சிறப்பாக் கலியாணத்தைப் பண்ணி முடிச்சாங்க. மாப்பிளையும் பொண்ண நல்லாப் பாத்துக்கிட்டான். இப்படி இருக்கையில மறுவழி போறதுன்னு ஒரு சடங்கு இருக்கு. அதாவது பொண்ணும் மாப்பிள்ளையும் ஒண்ணாச் சேந்து மாமியார் வீட்டுக்குப் போவாங்க. அதுக்குப் பேருதான் மறுவழின்னு சொல்வாங்க. திருமணமானவங்களுக்கு விருந்தாக்கிப் போடறதுண்ணும் சொல்வாங்க. இந்த மறுவழிக்கு வந்து பக்கத்து ஊருல உள்ள மாமியாரும் மாமனாரும் வந்து மாப்பிள்ளைக்கிட்ட சொல்லிட்டுப் போயிட்டாங்க.

மாப்பிள்ளைகாரனும் தன்னோட அப்பங்காரனுக்கிட்ட, “அப்பா நான் மறுவழிக்குப் போயிட்டு வர்றேன்னு” சொல்லி அனுமதி கேட்டான். அவனோட அப்பா, “டேய் தம்பி நல்லாப் போயிட்டு வா. ஆனா ஒண்ண மட்டும் மனசுல வச்சிக்கோ. ஓம்முகம் ஒனக்குத் தெரியறதுக்குள்ள நீயி நம்ம வீட்டுக்கு மருமகளக் கூட்டிக்கிட்டு வந்துரு. அதுதான் நமக்கு மரியாதை. இதக் கவனமா மனசுக்குள்ள வச்சிக்க. போயிட்டு வா”ன்னு சொல்லி அனுப்பிச்சாரு.

மகனுக்கு ஒண்ணும் புரியல. என்னடா இது நம்ம அப்பா என்னமோ ஓம்மொகம் ஒனக்குத் தெரியறதுக்குள்ளாற வந்துருன்னு சொல்றாரேன்னு குழம்பிக்கிட்டே பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டு மாமனாரு வீட்டுக்கு மறுவழி விருந்துக்குப் போனான். அப்பாக்கிட்ட இதப்போயி என்னத்தக் கேக்குறதுன்னு அவருக்கிட்ட கேக்காமயே விட்டுட்டான்.

மாமியாரும் மாமனாரும் மகளையும் மருமகனையும் பார்த்துட்டு ரொம்பச் சந்தோஷப்பட்டாங்க. விழுந்துவிழுந்து மருமகனைக் கவனிச்சாங்க. மருமகனுக்கு ரொம்பரொம்ப சந்தோஷமாப் போயிருச்சு.



விருந்துக்குப் போன அன்னிக்கு வாழை இலைய வாங்கிக்கிட்டு வந்து மருமகனுக்குப் போட்டு கறிக்குழம்போட விருந்தாக்கிப் போட்டாங்க. மருமகனும் நல்லாச் சாப்புட்டான். மொதநாளு அவனே நெனச்சிப் பாக்காத அளவுக்கு அவனுக்கு மரியாதை செஞ்சாங்க. அவனும் மலைச்சிப் போயிட்டான்.

மறுநாளு வந்தது. மருமகன் தனக்கு மொதநாளு மாதிரியே மதிப்பும் விருந்தும் கிடைக்கும்னு நெனச்சிக்கிட்டு இருந்தான். அவனுக்குச் சாப்பாடு ஆக்கிப் போட்டாங்க. வாழை இலை இல்லைன்னு தைச்ச எலையைக் கடையில வாங்கிக்கிட்டு வந்து அதுல விருந்து பரிமாறுனாங்க. அவன் மாமனாரப் பாத்துட்டு, “ஏம்மாமா வாழை இலை இல்லியா”ன்னு கேட்டான். அதுக்கு மாமனாரு, “வாழை இலை கிடைக்கலை மாப்பிளே. தையலைதான் கிடைச்சது. அதனால அதையே நீங்க சாப்புடறதுக்காக வாங்கிக்கிட்டு வந்துட்டேன்னு” சொன்னாரு.

மருமகனும் சரி எதுல சாப்புட்டாத்தான் என்னன்னு நெனச்சிக்கிட்டுப் பேசாமச் சாப்பிட்டான். ஊருக்குப் போகணும்னு அவனுக்குத் தோனல. மாமனாரு வீட்டுல தங்கிட்டான். அப்பா சொன்னதெல்லாம் அவனுக்கு ஞாபகத்துக்கு வரல.

மூணாவது நாளாயிருச்சு. அப்ப மாமனாரு வீட்டுல எந்த விருந்தும் ஆக்கல. சரி கடையில வாங்கிக் கொடுக்கப் போறாங்க போலருக்குன்னு நெனச்சிக்கிட்டான். காலையில சாப்புட ஒக்காந்தான். இலைச்சாப்பாடு போடுவாங்கன்னு நெனச்சான். ஆனா இலை வரல. ஒரு கும்பாவுல (சாப்பிடும் தட்டு) சோத்தப் போட்டுத் தண்ணிய ஊத்தி அஞ்சாறு சின்ன வெங்காயத்தைப் போட்டுக் கொண்டுக்கிட்டு வந்து வச்சாங்க.

அதப் பாத்தவுடனே தன்னோட பொண்டாட்டியப் பாத்தான். அவ அவங்கிட்ட வந்து, “கோவுச்சிக்காதீங்க. இன்னிக்குச் சமைக்க முடியல அதனாலதான் வீட்டுல ராத்திரி வடிச்ச சோறு மிஞ்சிருச்சு. அதத்தான் தண்ணி ஊத்தி வச்சிருந்தோம். அதுதான் இன்னிக்கு எல்லாரும் சாப்பிடணும்னு” சொல்லிட்டுப் போனா.

மருமகன் கும்பாவப் பாத்தான். அதுல அவனோட மொகந் தெரிஞ்சது. அப்பத்தான் அவனோட அப்பா சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்துச்சு. ஆஹா... நம்ம அப்பா சொன்னது சரியாப் போயிருச்சு. நம்ம மொகந் தெரியறதுக்குள்ள ஊருக்கு வந்து சேருன்னு சொன்னாரு. நாமதான் புரியாம இத்தனை நாளு இங்கயே இருந்துட்டோம். இனி இங்க இருந்தா நமக்கு மரியாதை இல்லைன்னு முடிவு செஞ்சி பொண்டாட்டியக் கூட்டிக்கிட்டு சொல்லிக்கிட்டு தன்னோட வீட்டுக்கு வந்து சேந்தான்.



இதை வச்சித்தான், “மொத நாள் வாழை இலை, மறுநாளு தையலை, மூணாம் நாளு கையெலை”ங்கற பழமொழி இந்தப் பக்கம் வழக்கத்துல வழங்கிக்கிட்டு வருது. விருந்தும் மருந்தும் மூணு நாளைக்குத்தாங்குறது இதவச்சித்தான் வந்ததோன்னும் நெனக்கத் தோணுது. நமக்குள்ள மரியாதையை நாம காப்பாத்திக்கணும். இன்னைக்கு வரைக்கும் மாமனாரு வீட்டுக்கு விருந்துக்குப் போறவங்ககிட்ட இந்தக் கதையச் சொல்லுவாங்க.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1an.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License