இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

54. அடங்காத மனசு


நாம எல்லாத்தையும் அடக்கி விடலாம். ஆனா இந்த மனச அடக்க முடியுமா? இந்தக் கேள்விக்கு பல காலமா விடையைத் தேடிக்கிட்டு இருக்காங்க. சிலர் மனச அடக்கி அதை வென்றிருக்காங்க. அவங்க மகான்கள். ஆனா சாதாரணமா இருக்கற நாம அதைச் செய்ய முடியுதான்னா? விடை மீண்டும் கேள்விக் குறியாய் வந்து மனசே நிற்கின்றது. மனசு அடங்கிடுச்சின்னா நிம்மதி, அமைதி மகிழ்ச்சி தானா வந்து நம்மைச் சேரும்.

பணங்காசு இருந்தும் எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தும் பலருக்கும் நிம்மதிங்கறது இல்லையே? அந்த நிம்மதியைத் தேடித்தேடி எங்கே கிடைக்கும் எங்கே கிடைக்கும்னு அலையறாங்களே! அலைஞ்சு அலைஞ்சு கடைசியில நிம்மதியைப் பெறாமலேயே போயிடறாங்க. மனசு அலைபாயாம அடங்கிடுச்சுன்னா நாம நினைக்கிற நிம்மதி கிடைச்சிடும். அலைபாயற மனச அடக்க முடியாமா நாம அலைஞ்சிக்கிட்டே இருக்கிறோம். இதைப் பற்றிய ஒரு கதை ஒண்ணு இருக்கு. அந்தக் கதையக் கேளுங்க.

ஒரு ஊருல பெரிய பணக்காரர் ஒருத்தர் இருந்தார். அவரு எங்க போனாலும் கூட ரெண்டு வேலைக்காரங்க வருவாங்க. அவரு என்ன நினைக்கிறாரோ அதைச் செய்வாங்க. அப்படிப்பட்ட பணக்காரருக்கு நெறைய நிலம் சொத்துன்னு இருந்துச்சு.

ஆனா அவரோட மனசுல ஒருவிதமான விரக்தி நிறைஞ்சு இருந்துச்சு. அவருக்கு நிம்மதிங்கறதே இல்லாம இருந்துச்சு. வீடு, மனை, மனைவி, மக்கள், சொத்து, சுகம் அனைத்தும் இருந்தாலும் அவருக்கு எதுலயும் மகிழ்ச்சியே கிடைக்கல. அமைதியும் கிடைக்கல. மனசு எதுலயும் ஒட்டல. அவரும் என்னென்னமோ செஞ்சி பாத்தாரு. ஆனா மனசுல நிம்மதி வரல. என்ன காரணம்னு அவருக்கும் தெரியல.

இதனால அவரு பிரம்மை புடிச்சவருமாதிரி வீட்டுல இருக்க ஆரம்பிச்சாரு. வீட்டுல இருக்கறவங்களுக்கு ஒண்ணும் புரியல. அதுமட்டுமில்லாம நிம்மதியைத் தேடி ஒவ்வொரு ஊரா அலைஞ்சும் திரிஞ்சாரு. ஆனா மன நிம்மதி மட்டும் அவருக்குக் கிடைக்கல. என்னடா பண்றதுன்னு அவரு யோசிச்சிக்கிட்டு இருந்தாரு.

அந்தச் சமயத்துல அந்த ஊருக்கு ஒரு பெரிய மகான் வந்தாரு. அவரு ஊருக்கு ஒதுக்குப் புறமா இருந்த அரசமரத்தடியில தங்கியிருந்தாரு. அவர் வந்த சேதி ஊரு முழுக்கத் தீயாட்டம் பரவிருச்சு. அதைக் கேள்விப்பட்ட அந்தப் பணக்காரரு அந்தச் சாமியாரப் பாக்குறதுக்குப் போனாரு.

அந்தச் சாமியாரப் பாத்து பணக்காரரு, "சாமி எனக்கு நிம்மதியே கிடைக்கமாட்டேங்குது. எல்லாம் இருக்கு. ஆனா என்னோட மனசு அமைதியில்லாம அலைஞ்சிக்கிட்டே இருக்குது. அதக் கட்டுப்படுத்திடணும்னு நானும் கடும் முயற்சி பண்றேன். ஆனா முடியல. படுத்தா தூக்கம் வரமாட்டேங்குது. எதையாவது நினைச்சிக்கிட்டே இந்த மனசு இருக்குது. என்ன செய்யிறது. என்னோட மனசு நிம்மதியாவும் அமைதியாவும் இருக்கறதுக்கு நீங்கதான் ஏதாவது எனக்கு வழிகாட்டணும்னு" சொன்னாரு.

அவரப் பாத்த சாமியாரு, "அப்பா நீ இறைவனை நினைப்பியா? எவ்வளவு நேரம் இறைவனையே நினைச்சிக்கிட்டே இருப்பே?"ன்னு கேட்டாரு. அதுக்கு அந்தப் பணக்காரரு, "சாமி தெனந்தோறும் நான் சாமியக் கும்புட்டுக்கிட்டே இருப்பேன். சாமியக் கும்புடறபோது மனசு எங்கெல்லாமோ போகுது. அப்பறம் சாமியப் பத்தின நெனப்பே வரமாட்டேங்குது. நான் என்ன செய்யிறது?" கேட்டாரு.

சாமியாரு அவரப் பாத்து, "அப்பா கவலைப் படாதே. நான் சொல்றது மாதிரி செய்யி. நீ மட்டும் ஒரு அரையில சாமி முன்னால இருந்துக்கிட்டு அவரையே நினைச்சிக்கிட்டு இரு. அப்பறம் ஒன்னோட மனசு ஒனக்குக் கட்டுப்படும் போ. அப்படி இல்லேன்னா என்கிட்ட வா" அப்படீன்னு சொல்லி அனுப்பிச்சாரு.



அந்தப் பணக்காரரும் சரி சாமி சொல்றபடி செஞ்சி பாப்போம்னு வீட்டுக்கு வந்து தனக்குன்னு உள்ள பூசை அறையில ஒக்காந்து பூசைசெய்யிறதுன்னு முடிவு செஞ்சாரு.

மறுநாள் காலையில குளிச்சி முழுகி அந்தப் பூசையறைக்குள்ளாறப் போயி ஆண்டவன நெனச்சாரு. ஆனா கதவு தெறந்திருந்ததால அது வழிய வெளிச்சம் வந்துச்சு. கண்ணக் கூசிச்சு. ஒடனே அவரு அந்தக் கதவைச் சாத்திக்கிட்டு கண்ணை மூடிக்கிட்டு சாமி பேரைச் சொல்லிக்கிட்டே இருந்தாரு. கொஞ்ச நேரம் அப்படியே போச்சு.

அந்த நேரம் பாத்து அவங்க வீட்டுச் சமையலறையில இவருக்குப் புடிச்ச குழம்பத் தாளிச்சிக்கிட்டு இருந்தாங்க. அந்த வாசனை காத்துல மெதந்து வந்தது. அதச் சுவாச்சிச்ச அந்தப் பணக்காரருனால அதுக்கும்மேல பூசையறையில இருக்க முடியல. ஒடனே இதுக்கு ஒரு வழி பண்ணியாகனும் நெனச்சிக்கிட்டு எழுந்திருச்சிப் போனாரு.

போனவரு நல்லாச் சாப்பிட்டுட்டு, மனைவியக் கூப்புட்டு, “இனிமே சமையல இங்க செய்யாதீங்க. பக்கத்துல இருக்கற நம்மளோட இன்னொரு வீட்டுல செஞ்சி எடுத்துக்கிட்டு வாங்க”ன்னு சொன்னாரு. அந்தம்மாவும் சரின்னு சொல்லிட்டுப் போனாங்க.

இவருக்கு அப்பா இனிமே சமையல் வாசனையே வராது. அப்படீன்னு நெனச்சிக்கிட்டு, மறுநாளு அதேமாதிரி குளிச்சி முழுகிட்டு கதவையெல்லாம் சாத்திக்கிட்டு சாமியக் கும்புடத் தொடங்கினாரு. கொஞ்சநேரம் அப்படியே போயிக்கிட்டு இருந்துச்சு. சாமிய உச்சகட்டத்துல அவரு நெனக்கற நேரமாப் பாத்து அந்தப்பக்கமா அவரு வீட்டுல வேலை பாக்குற வேலைக்காரப் பொண்ணு நடந்து போச்சு. அந்தப் பொண்ணு கால்ல கொலுசு போட்டுருந்துச்சு. அது நடக்கிறபோது சல்சல்னு சத்தம் கேட்டது. இந்தச் சத்தம் இந்தப் பணக்காரரு காதுல விழுந்துச்சு. அவரால அதுக்குமேல சாமிய நெனக்க முடியல. இதுயாரு இந்த வேலைக்காரப் பொண்ணு நடந்து போற மாதிரில்ல இருக்குது. இந்தப் பிள்ளை ஒழுங்கா வேலை பாக்குதா. இல்லை நம்மள ஏமாத்துதா? அப்படீன்னு நெனக்க ஆரம்பிச்சாரு.

சாமிய நெனக்கல. ஒடனே சரி இதுக்கு ஒரு வழி செஞ்சிட்டு நாளைக்குச் சாமியக் கும்புடுவோம்னு நெனச்சிக்கிட்டு அவரு அன்னைக்கு பூசைய முடிச்சிக்கிட்டு வெளியில வந்தாரு. இதுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சாரு.

ஒடனே ஆளுகள வரச்சொல்லி ஒரு ஓட்டை இல்லாம அந்த அறைய அடைக்கச் சொன்னாரு. இனிமே எந்தச் சத்தமும் கேக்காதுன்னு தெரிஞ்சிக்கிட்டாரு.

அடுத்தநாளு வெள்ளனவே எழுந்திருச்சி குளிச்சிப்புட்டு சாமியறைக்குள்ளாற ஒக்காந்துக்கிட்டு சாமிகும்புடத் தொடங்கினாரு. எந்தச் சத்தமும் கேக்கல. எந்த வாசனையும் வரல. அமைதியா இருந்துச்சு. அவரு சாமியோட பேரச் சொல்லிக்கிட்டே இருந்தாரு.

நேரம் போயிக்கிட்டே இருந்துச்சு. அப்ப சரியா அவரோட மனசுல இந்த நேரந்தான நேத்துக் கொலுசுச் சத்தம் கேட்டது. அப்படீங்கற எண்ணம் ஓடிச்சி. அப்புறம் அவருனால சாமிய நெனக்க முடியல. சல்சல்ங்கற கொலுசுச் சத்தம் அவரு மனசுக்குள்ளாற கேட்டுக்கிட்டே இருந்துச்சு. என்னடா பண்றது. எல்லாத்தையும் அடக்கினாலும் இந்த மனச மட்டும் அடக்க முடியலயே. என்ன செய்யிறதுன்னு நெனச்சிக்கிட்டு சரி இனிமே இப்படி இருக்கக் கூடாது. நாமபோயி சாமியாரப் பாத்துட்டு வந்துருவோம்னு முடிவு செஞ்சு அவரப் பாக்குறதுக்காகப் போனாரு.

ஓட்டமும் நடையுமாப் போன பணக்காரரு சாமியாரக் கும்புட்டுட்டு நடந்ததெல்லாம் சொன்னாரு. சாமியாரு பொறுமையாக் கேட்டாரு. கேட்டு முடிச்ச பின்னால. “சரி ஏம்பக்கத்துல வந்து ஒக்காரு. நான் சொல்றதச் செய்வியா” அப்படீன்னு கேட்டாரு. அதுக்கு அந்தப் பணக்காரரு, “சாமி இந்த மனச அடக்கணும் அதுக்காக நான் எதுவேணுன்னாலும் செய்யிறேன். சொல்லுங்க”ன்னாரு.



சாமியாரும், “அப்பா எதுவுமே உன்னுடையதா இருக்கக் கூடாது. எல்லாத்தையும் விட்டுடணும். அப்படி விடுறபோதுதான் மனசு அடங்கும். மனசு அடங்கிருச்சுன்னா ஆண்டவன நீ நெருங்கிடுவே. அதனால ஒன்னால எல்லாத்தையும் ஒதறிட முடியுமா? அப்படி எல்லாத்தையும் துறந்திட்டியினா மனச அடங்கிரும். நீயி தேடிக்கிட்டிருக்கற நிம்மதியும் வந்துரும்”ன்னு சொன்னாரு.

அதக் கேட்ட பணக்காரரு, “சாமி இப்பயிருந்தே எல்லாத்தையும் துறந்து ஒங்களோட சீடனா இருக்கறேன். எனக்குத் தீட்சை கொடுத்து என்னையக் கரையேத்துங்க”ன்னாரு. சாமியாரும் அவருக்குத் தீட்சை கொடுத்து அவருக்கு இறைவனோட திருநாமத்தை உபதேசிச்சாரு. எல்லாத்தையும் துறந்து துறவியா ஆனாவருக்குக் கொஞ்சங் கொஞ்சமா மனசு லேசா ஆயிடுச்சு. நிம்மதியும் குடியேறுச்சு. மனசு அடங்கவும் தொடங்கிடுச்சு. மனச அடக்கறதுக்கு இந்தக் கதை இன்னைக்கு வரைக்கும் வழக்கத்துல வழங்கப்பட்டு வருது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1bb.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License