இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​ சேதுராமன்

92.சிட்டுக்குருவியின் சபதம்


எதையும் உருவத்தைப் பார்த்து எடைபோடக் கூடாது. அவங்க அவங்களுக்குத் தகுந்த மாதிரி திறமையும் வலிமையும் அவங்க அவங்களுக்கு இருக்கு. அது மட்டுமில்லாமல் தான்தான் வலிமையானவன், தன்னால் எதையும் சாதிக்க முடியும் தன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது அப்படீன்னும் நெனைக்கக் கூடாது. அவ்வாறு நினைத்துக் கொண்டு அடாத செயலைச் செய்தால் அழிய நேரிடும். இது தொடர்பான கதை ஒன்று இந்த வட்டாரத்துல வழங்கி வருது.

ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் அடர்ந்த மூங்கில் மரங்கள் பல இருந்தன. அந்த மூங்கில்களில் இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டி அதுல முட்டையிட்டு குஞ்சு பொறித்து அந்தக் குஞ்சுகளைப் பாதுகாத்துக்கிட்டு வந்தது. குஞ்சுகளுக்கு இறகே முளைக்கவில்லை. அந்தக் குஞ்சுகளுக்குக் காவலா பெண் சிட்டுக்குருவி இருக்கும். ஆண் சிட்டுக்குருவி பறந்து போயி இரைதேடிக்கிட்டு வந்து குஞ்சுகளுக்கும் பெண் சிட்டுக்குருவிக்கும் கொடுக்கும்.

இப்படி இருந்துக்கிட்டு இருந்த சமயத்துல அந்தப் பக்கமா ஒரு பெரிய யானைக் கூட்டம் வந்துச்சு. அந்த யானைக இந்த மூங்கில் புதரத் தாண்டித்தான் போகணும். மூங்கில்கள் யானைகளுக்கு ரெம்பப் பிரியமான தீனி. அதனால அந்தச் சிட்டுக்குருவிக ரெண்டும் பயந்ததுங்க. அப்ப இந்த பெண் சிட்டுக் குருவி ஆண் சிட்டுக்குருவியப் பாத்து, “நீங்க நம்ம குஞ்சுகளப் பாத்துக்குங்க. நான் போயி அந்த யானைகளை வேறு பக்கமாப் போகச் சொல்லிட்டு வர்றேன்னுட்டு” போச்சு.

வேகமாப் பறந்து போயி புழுதி பறக்க வந்துக்கிட்டு இருந்த யானைக் கூட்டத்துக்கு முன்னால போயி, “போகாதீங்க… போகாதீங்க”ன்னு கத்துச்சு. யானைக் கூட்டத்துல இருந்த கொம்பன் யானை என்னடா நம்மைப் போகாதீங்கன்னு யாரோ தடுக்குறாங்க. யாருன்னு நின்னு பாத்தது.

கொம்பன் யானை நின்னதும் மற்ற யானைகளும் நின்னுருச்சுங்க. அப்ப கொம்பன் யானையைப் பாத்து பெண் சிட்டுக்குருவி, “யானைகளோட தலைவரே ஒங்களக் கெஞ்சிக் கேட்டுக்குறேன். நீங்க போற வழியில என்னோட கூடு மூங்கில் பொதருல இருக்கு. அதுல என்னோட குஞ்சுக இருக்கு. நீங்க இந்த வழியில போனா மூங்கில் பொதரத் தின்ன ஆரம்பிச்சிருவீங்க. என்னோட வீடும் குஞ்சுகளும் அழிஞ்சி போயிரும். அதனால தயவு செஞ்சி என்னையும் என்னோட குஞ்சுகளையும் காப்பாத்துங்க. வேற வழியில நீங்க போங்க”ன்னு அழுதுக்கிட்டே சொன்னது.

அதக் கேட்ட கொம்பன் யானை, “சிட்டுக்குருவியே நாங்க தண்ணி குடிக்கறதுக்காகத்தான் போறோம். உன்னையையும் உன் கூட்டையும் குஞ்சுகளையும் எதுவும் செய்ய மாட்டோம். நீ ஒன்னோட குடும்பத்தோட சுகமா இரு. நாங்க வேற பக்கமா போறோம். ஆனா ஒண்ணு எங்க கூட்டத்தோட சேராமா ஒரு முரட்டு யானை ஒண்ணு இருக்கு. அது யாரு சொல்றதையும் கேட்காது. அதுவும் இந்தப் பக்கமாத்தான் வந்துக்கிட்டு இருக்கு. அதைப் பாத்து நீ சொல்லிரு. நான் சொல்றதக் கேக்காததால அதை எங்க கூட்டத்தை விட்டே விலக்கி வச்சிருக்கோம். பாத்துக்க” அப்படீன்னு சொல்லிட்டு கொம்பன் யானை தன்னோட கூட்டத்தைக் கூட்டிக்கிட்டு வேற பக்கமா போயிருச்சு.


கொம்பன் யானைக்கும் மத்த யானைகளுக்கு சிட்டுக்குருவி நன்றி சொல்லிட்டு அந்த மொரட்டு யானைத் தேடிக்கிட்டுப் போச்சு. அது கொஞ்சதூரம் போன உடனேயே அந்த மொரட்டு யானை வேகமா வந்துக்கிட்டு இருந்துச்சு. அந்த மொரட்டு யானையப் பாத்த ஒடனேயே சிட்டுக்குருவிக்கு கொம்பன் யானை சொன்னது நினைவுக்கு வந்தது. சரி என்ன ஆனாலும் பாத்துக்கலாம்னுட்டு அந்த யானையோட முன்னால போயி பறந்து அதப்பாத்து, “ஐயா யானையாரே! நீங்க இந்தப் பாதையில போகாதீங்க. நீங்க போற வழியில நானும் என்னோட குஞ்சுகளும் குடியிருக்கோம். நீங்க இந்த வழியில போன அந்த என்னோட கூடும் குஞ்சுகளும் அழிஞ்சிபோயிரும். அதனால வேற வழியில நீங்க போங்க. ஒங்களுக்குப் புண்ணியமா போயிரும்”னு சொல்லிட்டு கும்புட்டுச்சு.

ஆனா அந்த மொரட்டு யானை எதையும் கேக்கல. “ஏய் சிட்டுக்குருவி நாம் அப்படியயத்தான் போவேன். நீ யாரு என்னைய வேற பாதையில போன்னு சொல்றதுக்கு. எனக்கு நீ புத்தி சொல்ல வேண்டாம். பேசாமப் போயிரு” அப்படீன்னு சொல்லிட்டு வேகவேகமா போயி அந்தச் சிட்டுக்குருவி தடுக்கத் தடுக்க அந்த மூங்கில் மரத்தையும் அந்த சிட்டுக்குருவியோட குஞ்சுகளையும் அதனோ ஆண்குருவியையும் கொன்னுட்டு இப்ப என்ன பண்ணுவே! அப்படீன்னு வீராப்பா புழுதியக் கிளப்பிக்கிட்டுப் போச்சு.

அதக் கேட்ட சிட்டுக்குருவி, “ஏய் மொரட்டு யானையே நான் சின்னக் குருவிதானேன்னு நினைச்சிக்கிட்டுத்தானே இப்படி அநியாயமா என்னோட வீட்டையும் குடும்பத்தையும் அழிச்சிட்டுப் போற. ஒன்னைய என்ன செய்யிறன்னு பாரு. ஒன்னைய அழிச்சிட்டுத்தான் மறுவேலை. அதுவரைக்கும் எனக்கு எந்த வேலையும் கிடையாது”ன்னு சொல்லிட்டுப் பறந்து போயிருச்சு.

யானை அந்தச் சிட்டுக்குருவியப் பாத்து எக்காளமா சிரிச்சிக்கிட்டுப் போயிருச்சு. வேகமாப் பறந்து போன சிட்டுக்குருவி அழுதுக்கிட்டே போச்சு. அப்ப ஒரு காகம் வேடன் விரிச்சிருந்த வலையில சிக்கிக்கிட்டு ரெக்கைய படபடன்னு அடிச்சிக்கிட்டு துடிச்சிக்கிட்டு இருந்துச்சு.

அதப் பாத்த சிட்டுக்குருவி மெதுவாப் போயி வலையில இருந்து காகம் தப்பிக்கிறதுக்கு ஒதவுச்சு. வலையில இருந்து தப்பின காகம் சிட்டுக்குருவிக்கு நன்றி சொன்னது. அப்பறம் அந்த சிட்டுக் குருவியப் பாத்து, “நீ என்னோட உயிரைக் காப்பாத்திட்டே. ஆனா நீ ரொம்ப வருத்தமா இருக்கியே. ஏன்?” அப்படீன்னு கேட்டது.

அதக் கேட்ட ஒடனே சிட்டுக்குருவி அழுதுக்கிட்டே, “காக்கையண்ணே காக்கையண்ணே என்னோட வீட்டையும் குடும்பத்தையும் இந்தக் காட்டுல இருக்குற ஒரு மொரட்டு யானை ஒண்ணு அழிச்சிடுச்சு. இப்ப எனக்குன்னு யாருமே இல்லை. என்னோட வாழ்க்கைய நாசமாக்கிய அந்த யானைய ஒழிக்கணும் நீ எனக்கு ஒதவி செய்வியா?” அப்படீன்னு கேட்டது.

அதுக்கு காகம், “நான் ஒதவி செய்யிறேன். நீ எதைப் பத்தியும் கவலைப் படாதே. நீ எப்போ என்னைய மனசுல நினைச்சிக்கிட்டு வான்னு கூப்புட்ட ஒடனேயே நான் அங்க வந்துருவேன்”னு சொல்லிட்டுக் காகம் பறந்து போயிருச்சு.

அதுக்கப்பறம் அந்த சிட்டுக்குருவி கொஞ்ச தூரம் பறந்து போயிக்கிட்ட இருந்தபோது அதுக்கு தண்ணித் தாகம் எடுத்தது. அதனால அங்க இருந்த ஒரு குளத்துக்குப் போயி தண்ணி குடிக்கறதுக்குப் போச்சு. அப்ப தண்ணியில விழுந்து ஒரு எட்டுக்காலு பூச்சி தத்தளிச்சிக்கிட்டு இருந்துச்சு. அதப் பாத்த சிடடுக்குருவி மரத்துல இருந்து ஒரு பெரிய எலைய எடுத்துக்கிட்டு வந்து அதத் தண்ணியில போட்டு எட்டுக்காலுப் பூச்சியக் காப்பாத்துச்சு.

வெளியில வந்த எட்டுக்காலுப் பூச்சி சிட்டுக்குருவியப் பாத்து, “நண்பா என்னைய நீ காப்பாத்திட்டே. ரொம்ப நன்றி. ஆனாலும் நீ ஏன் வருத்தமா இருக்கே”ன்னு கேட்டது.

அதக் கேட்ட சிட்டுக்குருவி நடந்ததை எல்லாத்தையும் சொன்னது. அதைக் கேட்ட எட்டுக்காலுப் பூச்சி, “நீ கவலைப் படாதே நான் ஒனக்கு ஒதவி செய்யிறேன். நீ என்னைய நெனச்சிக்கிட்டு எப்பக் கூப்புடுறியோ அப்போதே நான் ஒன்னோட முன்னால வந்து நிப்பேன். கவலைப் படாமப் போ”ன்னு சொல்லிட்டு தன்னோட இருப்பிடத்துக்குப் போச்சு.

அப்பறம் அந்த சிட்டுக்குருவி பறந்து போயிக்கிட்டே இருந்துச்சு. அதுக்கு ரெம்ப களைப்பா இருந்துச்சு. அதனால அது ஒரு ஆத்தோரமா பறந்து போயி கரை ஓரத்துல இருந்த பாறையில ஒக்காந்து இருந்துச்சு. அப்ப ஒரு தவளை கத்துறது மாதிரி இருந்துச்சு. என்னடா தவளை ஒண்ணு கத்துதேன்னு சிட்டுக்குருவி பாறையப் பக்கம் பாத்துச்சு. அப்ப ஒரு பாம்பு தவளையப் புடுச்சி முழுங்கப் பாத்துச்சு.

அந்த பாம்புக்கிட்ட இருந்து தவளைய எப்படியாவது காப்பத்தணும் நினைச்ச சிட்டுக்குருவி அந்தப் பாம்போட கண்ணப் பாத்து கொத்துச்சு. பாம்போட கண்ணுல சிட்டுக்குருவி கொத்துன வலி பொறுக்க முடியாத பாம்பு ஒடனே தவளைய விட்டுருச்சு. தவளை வேமாக ஆத்துத் தண்ணிக்குள்ளாற குதிச்சு தப்பித்து ஓடிருச்சு. சிட்டுக்குருவி பறந்து போயி ஒரு மரத்துல ஒக்காந்துக்கிருச்சு.

பாம்பு வலி பொறுக்க முடியாம வேற பக்கமாப் போயிருச்சு. பாம்பு போனபின்னால வெளியில வந்த தவளை சிட்டுக்குருவியக் கூப்பிட்டுச்சு. மரத்துல இருந்து பறந்து வந்த சிட்டுக்குருவியப் பாத்த தவளை தன்னோட நன்றியச் சொன்னது. அப்பறமா, சிட்டுக்குருவி சோகமா இருப்பதைப் பாத்துட்டு, “சிட்டுக்குருவியோ ஏன் சோகமா இருக்கே. எனக்கிட்ட சொல்லு நான் ஒனக்கு ஒதவி செய்யிறேன்”னு சொன்னது.


அதக்கேட்ட சிட்டுக்குருவிதனக்கு நேர்ந்த துன்பத்தைச் சொன்னது. அந்த மொரட்டு யானைய எப்படியாவது அழிக்கணும். அதுக்கு நீ எனக்கு உதவி செய்யறியா?” அப்படீன்னு கேட்டது.

அதக் கேட்ட தவளை, “நான் கண்டிப்பா ஒனக்கு ஒதவி செய்யிறேன். வா இப்பவே போயி அந்த யானையப் பழிவாங்கப் போகலாம்”னு சொல்லியது.

சரின்னு சிட்டுக்குருவி தவளையக் கூட்டிக்கிட்டு அந்த மொரட்டு யானை தங்கியிருந்த இடத்துக்குப் போச்சு. அந்த மொரட்டு யானை நல்லா தின்னட்டு சொகமா படுத்துக்கிடந்துச்சு. இந்த யானைய என்ன செய்யிறதுன்னு யோசிச்ச சிட்டுக்குருவி மனசுக்குள்ளாற ஒரு திட்டத்தை வகுத்துச்சு. அப்பறம் காகத்தையும் எட்டுக்காலுப் பூச்சியையும் நினைச்சது.

சிட்டுக்குருவி நினைச்ச ஒடனே ரெண்டும் வந்ததுங்க. சிட்டுக்குருவி அந்தக் காக்காயப் பாத்து, “நண்பா நீ இந்த மொரட்டு யானையோட கண்ணைக் கொத்தி வெளியில எடுத்துரு. அப்பறம் எட்டுக்காலுப் பூச்சி நண்பா நீ வந்து கண்ணு இல்லாத அந்த இடத்துல பெரிய கூட்ட கட்டிரு. கண்ணுத் தெரியாம இந்த யானை அங்கிட்டும் இங்கிட்டும் அலையும். அப்பப் பாத்து தவளை நண்பா நீ இந்த யானை தண்ணிக்கு அலையிறபோது இந்த காட்டுக்குள்ள இருக்கற உயரமான பெரிய மரணப் பாறைக்குக் கீழ இருந்து நீ கத்து. அந்தச் சத்தத்தைக் கேட்டு அந்த யானை தண்ணி இருக்கற இடம் அந்தப் பாறைக்குப் பக்கத்துலதான்னு நெனச்சிக்கிட்டு வரும். அதுக்குக் கண்ணுத் தெரியாததால பாறையில இருந்து அது கீழ விழுந்து செத்துரும். இந்த ஒதவியச் செய்யிங்க” அப்படீன்னு தன்னோட திட்டத்தைச் சொல்லி ஒதவி கேட்டுச்சு.

அதக்கேட்ட காக்கை சிட்டுக்குருவி சொன்னது மாதிரி செஞ்சது. எட்டுக்காலு பூச்சியும் யானையோட குருடாப் போன கண்ணுக் குழியில கூட்டக் கட்டிருச்சு. கண்ணு தெரியாததால அந்த யானை அங்கயும் இங்கயுமா அலைஞ்சது. அதுக்குத் தண்ணித் தாகம் எடுத்துச்சு.

அதனால தண்ணியத் தேடி போக ஆரம்பிச்சிருச்சு. அப்பப் பாத்து இந்தத் தவளை கத்திக்கத்தியே மரணப்பாறை இருக்கற எடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயி பாறையில இருந்து விழுகவச்சி யானையக் கொன்னுருச்சு. சிட்டுக்குருவி எல்லாத்துக்கும் நன்றி சொன்னது. அப்பறம் தன்னோட குடும்பம் இறந்து போன இடத்துல இருந்து கொஞ்ச காலத்துல அதுவும் எறந்து போயிருச்சு. அதனால எதையும் சாதாரணமா எடைபோட்டுடக் கூடாது. யாரோட உருவத்தைப் பாத்தும் மரியாதைக் குறைவா நடத்தக் கூடாது. அப்படீங்கற உண்மைய இந்தக் கதை நமக்குச் சொல்லுது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1cn.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License