Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                                    இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...

Content
உள்ளடக்கம்


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​ சேதுராமன்

96.பாம்பு நாக்கு பிளந்த கதை


நாட்டுப்புறத்துல ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கும். அவ்வாறு காரணம் இருக்கும் எல்லாத்துக்கும் பொருத்தமான கதையும் இருக்கும். பாம்புக்கு நாக்கு இருக்கின்றது. அது ஏன் பிளவு பட்டிருக்கின்றது. இந்தக் கேள்விக்குப் புதுக்கோட்டை வட்டாரத்தில் ஒரு கதை வழக்கத்தில் வழங்கி வருகின்றது.

காசியப முனிவர் என்ற பெரிய முனிவர் இருந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள். ஒருவரது பெயர் திதி. இன்னொருவரது பெயர் அதிதி. இதில் திதி ரொம்ப நல்லவள். அவள் தன்னுடைய கடைமைகளைச் செவ்வனே செய்து கொண்டு வந்தாள். எப்போதும், எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் நடந்து கொள்வாள்.

அவள் யாரையும் இழிவாகவோ மனம் புண்படும்படியாகவோ பேசமாட்டாள். எளியவராக இருந்தாலும் மரியாதையுடன் நடத்துவாள். மிகவும் பொறுமையானவள். ஆனால் அதிதி இதற்கு முற்றிலும் மாறானவள்.

எல்லோரிடமும் எரிந்து எரிந்து விழுவாள். யாரையும் மரியாதையாக நடத்தமாட்டாள். பொறாமைக்காரி. யார் வந்தாலும் அவர்களுடன் வம்பு சண்டை. அதனால் அவளை யாருக்கும் பிடிக்காது. அவளைக் கண்டாலே யாராக இருந்தாலும் விலகிச் சென்று விடுவார்கள். ஆனால் திதியைக் கண்டால் அன்பாகப் பேசிவிட்டேச் செல்வர்.

இதனைக் கண்ட அதிதி திதியைக் கண்டால் முகத்தைத் திருப்பிக் கொள்வாள். அவளிடம் சரியாக நடந்து கொள்ளமாட்டாள். அவளிடம் மரியாதைக் குறைவாகவே நடப்பாள். ஆனால் இதையெல்லாம் திதி பொருட்படுத்தாமல் அதிதியிடம் அன்பாக நடந்து கொள்வாள். காசியப முனிவரோ இருவரிடமும் சமமான அன்பினைக் காட்டுவார்.

இவ்வாறு இருக்கும்போது திதியும், அதிதியும் கருவுற்றனர். முனிவர் மகிழ்ச்சி அடைந்தார். இருவரையும் நன்கு கவனித்தார். சரியான காலத்தில் திதி தேவர்களைப் பெற்றறெடுத்தாள். அவர்கள் அழகானவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் விளங்கினர். ஆனால் குறித்த காலத்திற்குள் அதிதி குழந்தை பெறவில்லை. இருந்தாலும் உரிய காலத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக அவள் பொறுத்துக் கொண்டாள்.

காலம் கனிந்தபின் அதிதி குழந்தை பெற்றாள். ஆனால் அவள் பெற்றவை அனைத்தும் பாம்புகளாக இருந்தன. அவற்றைக் கண்ட அதிதி அதிர்ச்சியடைந்தாள். தனது கணவனைப் பார்த்து, ‘‘எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு பாம்புகள் குழந்தைகளாகப் பிறந்தன. இதைவிட எனக்குக் குழந்தைகள் பிறக்காமலேயே இருந்திருக்கலாம்’’ என்று பலவாறு கூறி அழுது புலம்பினாள்.

அதைக் கண்ட காசிப முனிவர், ‘‘நீ அழாதே! ஏனென்றால் அவரவர் எண்ணப்படியே எல்லாம் நடக்கும். உனது எண்ணங்களே இவ்வாறு பாம்புக் குழந்தைகள் பிறக்கக் காரணம். இவற்றை மனதில் வைத்துக் கொண்டு இனிமேலாவது அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்’’ என்று கூறி அவளைத் தேற்றினாள்.

இருந்தாலும் அதிதியின் மனம் அமைதியுறவில்லை. அவள் கலங்கினாள். அதைக் கண்ட அவளது குழந்தைகளான பாம்புகள், ‘‘அம்மா தாங்கள் கவலைப் படாதீர்கள். நாங்களும் பலசாலிகள் தான். எதற்காக நீங்கள் கவலைப்படுகிறீர்கள்? எங்களைக் கண்டவுடன் அனைவரும் பயந்து போய் ஓடுகின்றனரே. இது எங்களுக்கு எவ்வளவு பெருமை. அதனால் நீங்கள் மகிழ்ச்சியடையுங்ள்’’ என்று ஆறுதல் கூறின.

திதியையும் அவளது குழந்தைகளையும் எவ்வாறு அதிதிக்குப் பிடிக்காதோ அதைப்போன்று பாம்புகளுக்கும் பிடிக்காது. அதிலும் திதியின் குழந்தையான கருடன் பாம்புகளுக்குப் பரம எதிரியாக இருந்தான். அவனிடம் இருந்து தப்பிப்பதே அந்தப் பாம்புகளுக்குப் பெரும்பாடாக இருந்தது.


தன் தாயையும் சகோதரர்களையும் பாம்புகள் இழிவாகக் கருதி அவமரியாதையாக நடத்தியதால் கருடனுக்குப் பாம்புகள் மீது கோபங் கோபமாக வந்தது. அதனால் பாம்புகளைக் கண்டால் சகோதரர்கள் என்றும் பாராமல் அவர்கள் மீது சீறியது. அதனைக் கண்ட திதி கருடனிடம், ‘‘மகனே அவர்களும் உன் சகோதரர்கள். அதனால் அவர்களிடம் அன்பாக நடந்துகொள். அவர்கள் எது செய்தாலும் அதனைப் பொறுத்துக்கொள்’’ என்றார்.

அதனைக் கேட்ட கருடனோ, “அம்மா நான் பொறுமையாகத்தான் இருக்கின்றேன். நானாக அவர்களைத் துன்புறுத்தமாட்டேன். அவர்கள் எனக்குத் துன்பத்தைக் கொடுத்தால் நான் என்ன செய்வேன். முடிந்தவரை பொறுமையாக இருந்துவிட்டு என்னால் முடியாத நிலையில் தான் அவர்களை விரட்டுகின்றேன். என்னால் அவர்களுக்குத் துன்பம் வராது. அவர்களாக வந்தால் என்னால் இனிமேலும் பொறுமையாக இருக்க முடியாது’’ என்று கூறினான்.

அன்றிலிருந்து கருடன் பாம்புகள் தவறு செய்தாலும் அதனைப் பொறுத்துக் கொண்டு அவர்களிடமிருந்து விலகி விலகிச் சென்றான். இதனைக் கண்ட பாம்புகள் தங்களைக் கண்டு கருடன் பயந்துவிட்டான் என்று நினைத்துக் கொண்டு தங்களுக்குள் கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்தன.

காலங்கள் உருண்டோடியது. கருடன் திருமாலின் வாகனமானான். இவ்வாறு இருக்கும்போது தேவர்களும் அரக்கர்களும் சேர்ந்து அமுதம் பெறுவதற்காகப் பாற்கடலைக் கடைந்தனர். பாற்கடலைக் கடைந்தவுடன் அமுதக் குடம் கிடைத்தது. அதனை எடுப்பதற்குத் தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஒவ்வொருவரும் அமுதக் குடம் எனக்குத்தான், எனக்குத்தான் என்று போட்டி போட்டனர்.

அதனைக் கண்ட திருமால் குடத்தைக் கருடனிடம் கொடுத்துப் பத்திரமாகப் பாதுகாக்குமாறு கூறிவிட்டார். திருமாலிடம் அமுதக் குடத்தைப் பெற்ற கருடன் அதனை எடுத்துக் கொண்டு வேகமாக வானத்தில் பறந்தார். அவ்வாறு பறந்து வந்து யாரும் அணுக முடியாதவாறு ஒரு ஆற்றங்கரையில் தர்ப்பைப் புல் வளர்ந்திருந்த இடத்தில் அப்புல்களை வளைத்துப் போட்டு அதன்மேல் வைத்துப் பாதுகாத்தார்.

அமுதக் குடத்தை எடுத்துக் கொண்டு பறந்து வந்த கருடனை ஆற்றங்கரையில் இருந்த பாம்புகள் பார்த்து விட்டன. அப்பாம்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அமுதக் குடத்தைக் கருடனிடம் இருந்து பறிக்க நினைத்தன. அதற்காக கருடன் சோர்வடையும் வரைக் காத்திருந்தனர். ஆனால் கருடன் களைப்படையவோ சோர்வோ அடையவில்லை. கண்ணுங் கருத்துமாகக் கருடன் தனது கடமையைச் செய்து கொண்டிருந்தார்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பாம்புகள் கருடனை எதிர்த்துப் போராடி எப்படியாவது அமுதக் குடத்தைப் பெற்றுவிடவேண்டும் என்று முடிவு செய்தன. கருடனைச் சுற்றி வளைத்தன. இந்த எதிர்பாராத தாக்குதலைக் கண்டு கருடன் அஞ்சவில்லை. தனது சகோதரர்களான பாம்புகளைப் பார்த்து, ‘‘சகோதரர்களே இது திருமால் என்னிடம் கொடுத்துப் பாதுகாக்கச் சொன்ன அமுதக் குடம். அதனால் இதனை அபகரிக்க நினைக்காதீர்கள். கடவுளுக்குக் கட்டுப்பட்டு நடங்கள். கடவுளின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக நான் இருக்கின்றேன்’’ என்று பலவாறு எடுத்துக் கூறியது.

ஆனால் அதனைக் கேட்காத பாம்புகள் ஒன்று கூடி கருடனைக் கொன்று அமுதத்தைக் கைப்பற்றுவதற்காக வந்தன. கருடன் கோபமுடன் பாம்புகளைப் பார்த்தது. பாம்புகள் கருடனின் கோபப்பார்வைக்கு அஞ்சவில்லை. எப்படியாவது அமுதக் குடத்தைக் கைப்பற்றி விடுவது என்று நெருங்கி வந்தன.

கருடன் அனைத்துப் பாம்புகளையும் தன்னுடைய அலகால் கொத்திக் கொத்தித் தூக்கிப் போட்டுவிட்டு அமுதக் குடத்தைத் தூக்கிக் கொண்டு வானத்தில் பறந்தது. பாம்புகளால் பறக்க முடியவில்லை. கொஞ்ச தூரம் ஓடிச் சென்று பின்னர் திரும்பி அமுதக் குடம் இருந்த இடத்திற்கே வந்துவிட்டன.


அமுதக் குடம் இருந்த இடத்தில் அமுதம் தர்ப்பைப் புல்லில் சிந்திக் கிடந்தது. அதனைப் பார்த்த அனைத்துப் பாம்புகளும் தங்களது நாவால் நக்கி அந்த அமுதத்தைக் குடித்தன. அவ்வாறு நாவால் நக்குகின்றபோது அவற்றின் நாக்கைத் தர்ப்பைப் புல் அறுத்துவிட்டது. பாம்பின் நாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டுப் போய்விட்டன.

இதுதான் பாம்பின் நாக்குப் பிளவுபட்டதற்கான காரணம். அமுதக் கலசத்தைப் பறிக்கப் பார்த்த பாம்புகளைக் கண்டால் கருடனுக்குக் கடுங்கோபம் வந்து அவைகளைத் துரத்தும். அன்றிலிருந்து கருடனுக்குப் பகை பாம்பு என்ற சொலவடையும் வழக்கத்தில் வந்துவிட்டது. இக்கதை இந்த வட்டாரத்தில் வழக்கத்தில் இருந்து வருகின்றது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1cr.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               




இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License