இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்

மு​னைவர் சி.​சேதுராமன்

18. புங்க மரம்


புங்க மரம் வெயிலுக்கு நல்ல குளுச்சியான மரம். வேப்பம மரம் மாதிரியே அதனோட நிழல் ரொம்ப குளு குளுன்னு இருக்கும். இந்தப் புங்க மரத்தப் பத்தி ஒரு கத வழங்கி வருது. அது ஒரு நம்பிக்கையாவே இருந்து, அந்த மரங்களையும் மக்கள் வழிபடக் கூடியதா ஆக்கி அதை வழிபட்டுக்கிட்டு வர்றாங்க.

ஒரு பெரிய ஊரு இருந்துச்சு, அந்த ஊருல ஏழு அண்ணந்தம்பிக, அவங்களுக்கு ஒரே ஒரு தங்கச்சி. இந்த அண்ணனுக ஏழு பேரும் தங்கச்சி மேல ரொம்பப் பாசமா இருந்தாங்க. தங்கச்சிய விட்டுட்டு எதையும் சாப்புட மாட்டானுக. அதே மாதிரி அவளும் அண்ணனுக மேல ரொம்பப் பாசமா இருந்தா. இதப் பாத்துட்டு ஊரே ரொம்ப ஆச்சரியப்பட்டுப்போச்சு.

இப்படி இருந்துக்கிட்டு இருந்தப்போ ஒரு நாளு இந்த அண்ணனுக எல்லாரும் தங்கச்சியப் பத்திரமா இருக்கச் சொல்லிட்டு வேட்டைக்குப் போனாங்க. தங்கச்சிக்கிட்ட, ‘‘ஆத்தா நாங்க வேட்டைக்குப் போயிட்டு வர்றோம். நீ பத்தரமா இரு. எந்தக் காரணத்தக் கொண்டும் வெளியில போயிறாத. மனுசளத் திங்கற கிழவி ஒருத்தி இருக்கா. நீ கொஞ்சம் கவனமா இருக்கணும்னு’’ சொன்னாங்க. தங்கச்சியும் பத்திரமா இருக்கேன் நீங்க வேட்டைக்குப் போயிட்டு வாங்கன்னு சொன்னா.

தங்கச்சி சொன்னதக் கேட்டுட்டு இவனுக ஏழுபேரும் வேட்டைக்குப் போனாங்க. தங்கச்சிகாரி அண்ணனுக போனவுடனே, வேட்டைக்குப் போனவங்க சீக்கிரமா வந்துருவாகன்னு தங்கச்சிகாரி வேக வேகமா சமைச்சு வச்சிருவோம். அண்ணனுங்க வந்தாங்கான்னா பசியோட இருப்பாங்க. அப்படீன்னு சொல்லிட்டு அடுப்புப் பத்த வைக்கறதுக்காகப் போனா. ஆனா நெருப்பு அணைஞ்சி போயி இருந்துச்சு.

ஆகா நெருப்பில்லையேன்னு நெனச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு யோசிச்சா. அவங்க வீடு ஊரவிட்டுக் கொஞ்சந்தள்ளி காட்டுக்குள்ளாற இருந்துச்சு. அதனால பக்கத்துல வீடுக இல்லை.

தங்கச்சிகாரி, சரி ஊருக்குள்ளாற நெருப்பப் போயிக் கேட்டு வாங்கிக்கிட்டு வருவோம்னு நெனச்சி ஊருக்குள்ளாறப் போயி, ஒவ்வொரு வீட்டுலயா கேட்டா. ஆனா யாரு வீட்டுலயும் நெருப்பு கிடைக்கல. என்னடா பண்ணுறதுன்னு நெனச்சிக்கிட்டு திரும்பவும் வீட்டுக்கு வந்தவளுக்கு ஒரு யோசனை தோணுச்சி. நம்ம வீட்டுக்குக் கொஞ்சந்தள்ளி ஏதாவது களத்து வீடுக இருக்கும் அந்த வீடுகள்ள நெருப்புக் கிடைக்கும் அப்படீன்னு நெனச்சிக்கிட்டு அவ வரையோட்ட எடுத்துக்கிட்டு நெருப்பு அள்ளிக் கொண்டாறதுக்காக வீட்டுல இருந்து பொறப்புட்டா.

ரொம்ப நேரமாத் தேடியும் ஒரு வீடும் கண்ணுல தெம்படல. அப்ப ஒரு புங்க மரத்துல ஏறிப் பார்ப்போம் ஏதாவது வீடு தெரியும்னு நெனச்சிக்கிட்டு புங்க மரத்துல ஏறிப் பாத்தா. அப்ப கொஞ்சத் தூரத்துல ஒரு வீடு இருந்துச்சு. அந்த வீட்டுக்குப் போயி நெருப்ப எடுத்துக்கிட்டு வருவோம்னு தங்கச்சிகாரி நெனச்சா. அவ கௌம்பப் போறபோது அவளோட அண்ணனுக சொன்னது, அவளுக்கு நெனப்பு வந்துச்சு. ஒருவேளை அந்தக் கிழவி வந்து நம்மளப் புடிச்சிட்டான்னா என்ன செய்யிறதுன்னு நெனச்சிக்கிட்டு, எதுக்கும் இந்தப் புங்க மரத்துஅடியில நம்மளோட அடையாளமா அண்ணனுக தெரிஞ்சிகிறமாதிரி நம்மளோட காதோலையையும் கருகமணியையும் கழட்டி வச்சிட்டுப் போவோம். அந்தக் கிழவியால நமக்கு ஏதும் ஆயிருச்சுன்னா இந்தப் புங்க மரத்தடியில வந்து தேடுனாங்கன்னா நம்ம தங்கச்சி இந்தப் பக்கந்தான் போயிருக்கான்னு தெரிஞ்சுக்குவாங்கன்னு நெனச்ச்கிட்டு காதுல கழுத்துல கிடந்ததக் கழட்டி புங்க மரத்தடியில வச்சிப்புட்டு நெருப்பு எடுக்கறதுக்காக அந்த வீட்டப் பாத்து வேக வேகமாப் போனா.

அந்த வீட்டுக்கு யாரும் போகமாட்டாங்க. ஏன்னா அங்கதான் அவ அண்ணனுக சொன்ன கெழவி இருந்தா. அவ அழகா யாரு போனாலும் அவங்கள லேசுல விடமாட்டா. அவங்கள வசியப்படுத்தி கொன்னு சாப்புட்டுருவா. அவ மந்திர தந்திரமெல்லாம் தெரிஞ்சவ. அதனால அவ வீட்டுக்கு யாரும் போகமாட்டாங்க.

இந்தக் கிழவியப் பத்தி தெரியாததனால தங்கச்சிகாரி அங்க போயி நெருப்புக் கேட்டா. யார்ரா இங்க வந்திருக்கான்னு அந்தக் கெழவி வீட்டுக்குள்ளாற இருந்து வெளிய வந்து பாத்துச்சு. அங்க அழகான இந்தத் தங்கச்சிகாரி வரையோட்ட கையில வச்சிக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்தா.

அவளப் பாத்த அந்தக் கிழவி, ‘‘ஒனக்கு என்ன வேணும்னு கேட்டா?’’ அதுக்கு தங்கச்சிகாரி எங்க அண்ணனுங்க வேட்டைக்குப் போயிட்டாங்க, அவங்க திரும்ப வர்றதுக்குள்ளாற சோறு வடிச்சி வக்கணும். அதுக்கு நெருப்பு இல்ல. கொஞ்சம் நெருப்பு இருந்தாத் தாங்கன்னு’’ கேட்டா.



அதக்கேட்ட அந்தக் கிழவி, ஆகா நல்ல பிள்ளை வழியக்க வந்து மாட்டிக்கிட்டா இவள விட்றப்புடாதுன்னு நெனச்சிக்கிட்டு, சரி நெருப்புத் தர்றேன். உள்ளாற வந்து அடுப்புல இருக்கறத எடுத்துக்கிட்டுப் போன்னு சொன்னா.

அட இந்தக் கிழவி ரொம்ப நல்லவளா இருக்காளேன்னுட்டு வீட்டுக்குள்ளாறப் போனா. அவ வீட்டுக்குள்ளாறப் போனஉடனேயே இந்தக் கிழவி வேகமா வந்து கதவச் சாத்திக்கிட்டா. தங்கச்சிகாரி கெழவியப் பாத்து, ‘‘எதுக்கு நீ இப்ப கதவச் சாத்துற. கதவத் தொறந்து விட்டுரு. எங்க அண்ணனுகளுக்குத் தெரிஞ்சிச்சி ஒன்ன வகுந்து கூறு போட்டுருவாங்கன்னு’’ சொன்னா.

அதுக்கு அந்தக் கெழவி சும்மாதான் நாங் கதவச் சாத்துறேன் நீ பயப்படாத. நீ அடுப்படிக்குப் போயி நெருப்ப எடுத்துக்கிட்டு வான்னு’’ சொன்னா. அந்தக் கிழவி சொல்றத நம்பி தங்கச்சிகாரி நெருப்பெடுக்க அடுப்படிக்குப் போனா. தங்கச்சிகாரி அடுப்படிக்குப் போனவுடனேயே அவ பின்னாடியே வந்த கிழவி வேகமா அடுப்படிக் கதவையும் சாத்தி கொக்கி போட்டு கையில வச்சிருந்த ஒலக்கையால தங்கச்சிகாரி மண்டையில ஓங்கி அடிச்சா. அவ அடிச்ச அடியில சின்னப்புள்ளயான தங்கச்சிகாரி கீழ விழுந்து செத்துப் போயிட்டா. அந்தக் கிழவி ஒடனே அந்தப் புள்ளய சமைச்சிச் சாப்புட ஆரம்புச்சிட்டா.

வேட்டைக்குப் போன அண்ணந்தம்பிக ஏழுபேரும் வேட்டை முடிஞ்சி வீட்டுக்கு வந்தானுக. வீட்டுக்கு வந்து பாத்தா வீட்டுல தங்கச்சியக் காணோம். அங்கயும் இங்கயும் தேடுனாங்க. ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பக்கமாப் போயித் தேடிக்கிட்டு வந்தானுக. தங்கச்சியக் கண்ணுலயே காணல, என்ன பண்றதுன்னு நெனச்சிக்கிட்டு ஊருக்குள்ளாறப் போயி ஒவ்வொரு வீட்டுலயாக் கேட்டாங்க. அப்ப ஊருக்குள்ளாற அவங்க தங்கச்சி வந்து நெருப்புக் கேட்ட விசயத்த அங்கன உள்ளவங்க சொன்னாங்க.

அப்ப எங்க போனா நம்ம தங்கச்சின்னு நெனச்சிக் கவலப் பட்டுக்கிட்டு அவங்க ஏழுபேரும் திரும்பவும் வீட்டுக்கு வந்தானுக. வந்துட்டு கடைசித் தம்பிய மட்டும் வீட்டுல இருக்கட்டும் நாம ஆறுபேரும் போயித் தங்கச்சியத் தேடிக் கண்டுபிடிச்சிக்கிட்டு வந்துருவோம்னு மா வேகம் மழை வேகமாப் போனாங்க. அப்படிப் போயிக்கிட்டு இருக்கயில அவனுக எந்தப் பக்கம் போகனும்னு தெரியாமாக் கிடந்து அலைஞ்சு கடசியில தங்கச்சிகாரி போன பக்கமாவே போயி அந்தக் கிழவி வீட்டக் கண்டுபிடிச்சிட்டாங்க.

அவங்க போறதுக்குள்ளாற அந்த மந்திரக் காரக் கிழவி அந்தச் சின்னப்புள்ளயச் சமச்சுச் சாப்புட்டுட்டா. அண்ணனுங்க ஆறுபேரும் வீட்டுக்குள்ளாறப் போயிப் பாத்தா தங்கச்சியோட சட்டைதுணிகதான் ரத்தக்கறையோட கெடந்துருக்கு. அதப்பாத்த அண்ணனுங்க கதறிக் கதறி அழுதாங்க. அப்ப அங்க வந்த கிழவி அவனுகளப் பாத்துட்டு, ‘‘ஏப்பா நீங்கள்ளாம் அழறீங்க... அழாதீங்க... நான் காட்டுக்குள்ளாற வெறகு பெறக்கப் போனப்ப இந்தச் சட்டைத்துணிங்க கெடந்துச்சு அப்ப ஒரு சிங்கம் ஒங்களோட தங்கச்சியத் தின்னுக்கிட்டு இருந்துச்சு. சரி இந்தப் புள்ளயோட ஆளுங்க யாராவது வந்து கேட்டாங்கன்னா, நாம அடையாளத்தச் சொல்லி விசயத்தச் சொல்றதுக்கு ஏதுவா இருக்குமேன்னுட்டு இந்தச் சட்டைங்கள எடுத்துக்கிட்டு வந்தேன்னு’’ பொய் சொன்னா.

அதநம்பிட்ட அண்ணன்க ஆறுபேரும் ‘‘ஐயோ எங்களோட தங்கச்சி போன பிறகு, நாங்க இருக்கக் கூடாதுன்னு சொல்லிக்கிட்டே தங்களோட சூரிக்கத்திகள எடுத்து அவங்க அவங்க வயித்துல குத்திக்கிட்டு செத்துப் போனானுங்க. அந்தக் கெழவிக்கு ரொம்பச் சந்தோஷம். அந்த ஆறுபேத்தையும் தன்னோட சொந்தக்காரங்கள வரச்சொல்லி சமச்சுப் சாப்புடச் சொன்னா.



தன்னோட அண்ணனுங்க போனவங்க இன்னும் காணமேன்னு நெனச்சிக்கிட்டு இருந்த தம்பிகாரன் இனிமேலும் இருக்கக் கூடாது. நம்ம தங்கச்சிக்கும் அண்ணனுகளுக்கும் ஏதோ ஆகிப்போச்சு அப்படீன்னு நெனச்சிக்கிட்டு அவங்களத் தேடிக்கிட்டு இவனும் போனான்.

எந்தப் பக்கம் போறது என்ன செய்யறதுன்னு அவனுக்குப் புரியல. அப்ப ஒரு புங்கமரம் அவனோட கண்ணுல தெம்பட்டது. அந்த மரத்து மேல ஏறிப் பார்த்த அவனுக்கு ரொம்ப தூரத்துல ஒரு வீடு இருக்கறது தெரிஞ்சது. சரி, அந்த வீட்டப் பக்கம் போயிப் பாப்பம்னுட்டு மரத்த விட்டு கீழ எறங்கனவனோட கண்ணுல தங்கச்சிகாரி அவுத்து வச்சிருந்த காதோலையும் கருகமணியும் கண்ணுல பட்டுச்சு.

அதப் பார்த்த தம்பிகாரனுக்கு, ‘‘ஐயையோ இது நம்ம தங்கச்சியோட கதோலையும் கருகமணிமில்ல... நம்ம தங்கச்சி இந்தப் பக்கமாத்தான் போயிருக்கணும்னு’’ நெனச்சி அழுது மயங்கி விழுந்தான். கொஞ்ச நேரத்துல சில்லுன்னு காத்து அவனோட முகத்துல பட்டவுடனே அவன் எழுந்திருச்சுப் பாத்தான்.

அப்ப அந்தப் புங்கமரம் அவங்கிட்டப் பேசிச்சு. ‘‘சின்னத் தம்பி சின்னத்தம்பி. நீ அழுவாத... ஒன்னோட தங்கச்சியயையும் அண்ணன்களையும் கொன்னது அந்த மோசகாரக் கிழவிதான். அவ மந்திரம் தந்திரம் தெரிஞ்சவ. அவள அவ வழியில போயித்தான் கொல்ல முடியும். நீ என்னோட மரப்பிசினை எடுத்துக்கிட்டு தலை போற அளவுக்கு உள்ள ஒரு கொட்டானுக்குள்ளாரத் தடவி எடுத்துக்கிட்டுப் போயி அந்தக் கிழவியோட தலையில மாட்டிவிட்டுரு. அவளோட தலைமயிரோட இந்தக் கொட்டானும் எடுக்க முடியாம ஒட்டிக்கிரும். அவ தலையில இருந்து அத எடுக்கப்பாப்பா ஆனா அது முடியோட பிச்சிக்கிட்டு வந்துரும் அந்தத் தலைமுடியெல்லாம் வந்துட்ட அவளும் தானாகவே செத்துப்போயிருவா... நீ கவலப் படமாப் போ. அவ சொல்லறத எல்லாம் நம்பீராதன்னு சொல்லி...’’ தன்னோட மரப்பிசினையும் கொடுத்துச்சு.

புங்கமரத்தோட பிசினை எடுத்துக்கிட்டுக் கொட்டானுக்குள்ளாரத் தடவிக்கிட்டுப் போயி அந்தக் கிழவி வீட்டுக்குள்ளாரப் போனான்.

அவனப் பாத்த கிழவி இந்தப் பய செத்துப் போனவங்களோட சொந்தக்காரனாத்தான் இருக்கணும்னு நெனச்சி அந்தக் கிழவி, ‘‘தம்பி வாப்பா... வீட்டுக்குள்ளாற ஒக்காருன்னு’’ அன்பாப் பேசுறது மாதிரிப் பேசி ஒக்கார வச்சா.

வீட்டுக்குள்ளாற ஒக்காந்த தம்பிகாரன் அங்கன கெடந்த தன்னோட அண்ணனுகளோட வேட்டி சட்டைகளையும், தங்கச்சியோட பாவாடை சட்டையையும் பாத்துட்டுக் கதறிக் கதறி அழுதான். அவன் அழுகறதப் பாத்துட்டு, அந்தக் கெழவி அவனோட அண்ணன்கிட்ட சொன்னமாதிரியே சொன்னாள். அதுக்கு அவன், ‘‘அந்தச் சிங்கத்த நான் கொல்றதுக்குத்தான் வந்துருக்கேன்னு’’ சொன்னதக் கேட்ட கிழவி, அவன ராத்திரித் தங்கிட்டு பகல்ல போயி அந்தச் சிங்கத்தக் கொல்லுன்னு சொல்லி தங்கவச்சா. ராத்திரி நேரத்துல அந்தப் பய மெதுவா எந்துருச்சிப் போயி அந்தக் கொட்டானக் கிழவியோட தலையில மாட்டிவிட்டுட்டு வந்து பேசாமாப் படுத்துக்கிட்டான். விடிஞ்சி எந்திரிச்சுப் பாத்த கிழவி தன்னோட தலையில மாட்டியிருந்த கொட்டானக் கழட்டிக் கழட்டிப் பாத்தா. அந்தக் கொட்டான் சாமானியத்துல கழறல. அவ தன்னோட பலத்தக் காட்டி வேகமாப் புடுச்சு இழுத்தா. அப்படி இழுக்கயில கொட்டான் அவளோட தலைமயிரோட பிச்சிக்கிட்டு வந்துடுச்சு. தலைமயிரலெ்லாம் பிச்சிக்கிட்டு வந்ததால அவ செத்துக் கீழ விழுந்தா.



தம்பிகாரன் தன்னோட அண்ணனுகளோட துணிமணிகளையும், தங்கச்சியோட துணியைப் பார்த்துப் பார்த்து அழுதான். அவனுக்கு அதுக்குமேல ஒண்ணுஞ் செய்யத் தோனல. தன்னோட சூரிக்கத்திய எடுத்துத் தன்னோட நெஞ்சுல குத்திக்கிட்டு செத்துப் போயிட்டான்.

அந்த ஊருக்காரவுக என்னடா அண்ணன் தம்பிகளையும் அந்தப் பிள்ளையையும் காணலன்னுட்டு அவங்களத் தேடிக்கிட்டு வந்தாங்க. வந்த அவங்களுக்கு அந்தப் புங்கமரம் நடந்ததெல்லாம் சொல்லி வழியும் காட்டுச்சு. ஊர்க்காரங்க புங்கமரம் காட்டுன வழியில போயி அந்தக் கெழவி வீட்டப் பார்த்தாங்க. அதுக்குள்ளாற தம்பிக்காரன் செத்துப் போயிக் கிடந்ததப் பார்த்துட்டு அந்த ஏழு பேரோட துணிகளையும் அந்தத் தங்கச்சிகாரியோட காதோலை கருகமணியையும் எடுத்துக்கிட்டு வந்து அந்தப் புங்கமரத்துக்குக் கீழ வச்சிச் சாமியாக் கும்புட ஆரம்பிச்சாங்க. அன்னயிலருந்து புங்க மரத்த யாரும் இந்தப் பக்கம் வெட்டுனதே இல்ல. அந்தப் புங்கமரத்த எரிச்சா பாவம் வந்துரும்னு நெனச்சி அத அவங்க தொடரது இல்ல. இந்தக் கதை இன்னக்கி வரைக்கும் வழக்கத்துல வழங்கி வருது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/villagestories/p1r.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License