Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                                    இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...

Content
உள்ளடக்கம்


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Tidbits
குறுந்தகவல்

ஆளில்லா அரண்மனைகள் - செட்டிநாடு வீடுகள்

பேராசிரியர் நா. அருணாசலம்
அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி.


தமிழகத்தில் கம்பீரமும், கலை நேர்த்தியும், பாரம்பரியமும் ஆதிகாலத் தொழில்நுட்பங்களும் மிக்க மாளிகைகளைப் போல் உள்ள வீடுகளைக் கொண்டதுதான் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள செட்டிநாடு என்கிற பகுதி ஆகும். குன்றக்குடியை மையமாகக் கொண்டு இந்தப் பகுதி அமைந்துள்ளது. சோழ நாட்டின் காவிரிப் பூம்பட்டின - பூம்புகாரை ஆழிப் பேரலை கடல் கொண்ட போது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் புலம் பெயர்ந்து பாண்டிய மன்னன் சௌந்திர பாண்டியன் காலத்தில் குன்றக்குடியைச் சுற்றிக் குடியேறி தங்களுக்கும் தன் தலைமுறைகளுக்கும் கட்டிய வீடுகளே, செட்டிநாடு வீடுகள் ஆகும். “ஆயிரம் ஜன்னல் வீடு, இது அன்பு வாழும் கூடு" என்கிறப் பாடலில் சொல்லப்பட்டது போல் ஒரு வீட்டை நீங்கள் கண்டதுண்டா?. அதனைக் காண நீங்கள் விரும்பினால் காரைக்குடிக்கு வாருங்கள். ஆயிரம் ஜன்னல் கொண்ட ஒரே ஒரு வீடு மட்டும் இங்கே இல்லை, இது போன்ற சர்வதேசத் தரத்திலான சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இந்தியாவில் செட்டிநாடுப் பகுதியில் மட்டுமே உள்ளது. செட்டிநாடு வீடுகள் என்பவை 96 கிராமங்களை உள்ளடக்கிய செட்டிநாடு என்றழைக்கப்படும் பகுதியாகும். காலத்தின் மாற்றத்தாலும், சமூகப் பொருளாதார சூழலாலும், நகரிய நாகரீக பெருக்கத்தாலும், 96 ஊர்கள் தற்போது 72 முதல் 75 ஊர்களாய் இணைந்தும் சுருங்கியும் தன்னை மாற்றிக் கொண்டு பாரம்பரியத்தையும் பெருமையையும் தாங்கிக் கொண்டு உயர்ந்து நிற்கிறது.

இந்தச் செட்டிநாட்டு வீடுகளின் கட்டிடக் கலை உலகப் புகழ்பெற்றவை. தாங்கள் இருக்கும் இடத்தைக் கோட்டைகள் போல வீடுகள் கட்டி, நகரத்தைப் போல நிர்மாணித்து வாழ்ந்ததால், இந்த வீடுகளின் மனிதர்களைச் சாதியம் என்கிற அடைவு இல்லாமல் நகரத்தார் என்று அனைவராலும் அழைக்கப்படுகின்றார்கள். 1920 களில் க்யூபிசம் பாணியின் தாக்கத்தால் ஐரோப்பாவில் தோன்றிய அலங்கார கலையை ‘ஆர்ட் டெகோ’ என்றழைக்கிறார்கள். பளிச்சிடும் வண்ணங்களில் சதுரங்களையும், கோணங்களையும் கட்டிடங்களில் சேர்ப்பதே இப்பாணியாகும். செட்டிநாடு வீடுகள் இவ்வடிவத்தின் தாக்கத்தையே பிரதிபலிக்கிறது. இக்கட்டிடங்களுக்கான மூலப்பொருட்கள், கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் இறக்குமதி செய்து கட்டியிருக்கிறார்கள். இவர்கள் இத்தாலியின் மார்பில் கற்கள், பெல்ஜியத்திலிருந்து ஜன்னல்களுக்கான கண்ணாடி , தூண்களுக்கு பர்மாவிலிருந்து தேக்கு, விக்டோரியன் நாற்காலிகள், ஐரோப்பா மற்றும் பர்மாவிலிருந்து சரவிளக்குகள், சமைக்கும் பாத்திரங்களை இந்தோனேசியா மற்றும் செகோஸ்லோவியா போன்ற இடங்களிலிருந்தும் இறக்குமதி செய்திருக்கிறார்கள். பல்வேறு நாட்டின் கலைச் சங்கமமாக திகழ்கிறது செட்டிநாடு கட்டிடக்கலை. இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், பர்மா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இவர்கள் வணிகம் செய்து, பொருள் ஈட்டி கொண்டு வந்து, இது போன்ற வீடுகளைத் தங்களின் பூர்விகத்தில் கட்டிக் கொண்டார்கள்.


செட்டிநாட்டு வீடுகள் ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளன. வீட்டுக்கு முன்புற வாசல் ஒரு தெருவிலும் பின்புற வாசல் இன்னொரு தெருவிலும் இருக்குமாறு மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளன. வீடுகளின் தரைப்பகுதி தெருவை விட ஐந்து அடி உயரம்வரை கொண்டதாகக் கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நீள் செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ளன. பின்வாசலில் இருந்து பார்த்தால் முன்வாசலில் யார் இருக்கிறார்கள் என்பதைக் காண முடியும் வகையில் இரு வாசல்களும் நேர்க் கோட்டில் உள்ளன. வீடு முழுதும் பல தூண்கள் உள்ளன இந்தத் தூண்கள் பர்மா தேக்கைக் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நீளமான தேக்குமரங்களை இவர்கள் பர்மாவில் இருந்த காலத்தில் சங்கிலியால் கப்பல்களில் கட்டி கடலில் மிதக்கவிட்டு நாகப்பட்டிணம், தொண்டி துறைமுகம் வழியாக கொண்டு வந்த‍தாக கூறுகின்றனர்.

செட்டிநாடு வீடுகளை 4 அல்லது 5 கட்டுகளாக (பகுதிகளாக) பிரிக்கிறார்கள். முதலில் முகப்பு (வரவேற்பறை), இரண்டாவதாக ஆள் வீடு-ஆண்கள் இருக்கும் இடம், மூன்றாவதாக வளவு ( புழங்கும் இடம்-முற்றம்) நடுவில் திறந்த வாசலுடன் வீட்டின் அறைகளைக் கொண்டதாகும், நான்காவதாக பாகமாக இரண்டாங்கட்டு (சாப்பிடும் இடம்), பின்பு மூன்றாம் கட்டு (சமையலறை) கடைசியில் தோட்டமும் கிணறுகளும் உள்ளன. சில வீடுகளில் பந்திக்கட்டு என்கிற சாப்பிடும் இடம் தனியாக அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றுடன் மாடிகளிலும் அறைகள், பரண்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

வீட்டின் முன்புறம் அனைவரையும் வரவேற்கும் வகையில் கலையம்சத்துடன் அமைந்திருக்கும். வீட்டின் நுழைவு வாசலின் இருபுறமும் விசாலானமான திண்ணை இருக்கும். அதில் கம்பீரமான மரத் தூண்கள் இருக்கும். முன் வாசல் கதவும் நிலையும் நுட்பமான மர வேலைப்பாடுகள் கொண்டவையாக இருக்கும். இந்த நிலை ஒரு பண்பாட்டு அடையாளமாகவே மாறியுள்ளது. தெய்வச் சிலைகளை நிலையின் மேல் புறத்தில் செதுக்கியிருப்பார்கள். வீட்டின் முகப்பு பட்டாலை (திண்ணை) என அழைக்கப்படுகின்றது. வீட்டின் வரவேற்பு இடம் வீட்டின் முன் பகுதி. இது முகம் போன்ற வரவேற்கும் அழகு பொருந்திய பகுதி என்பதால், முன் கோப்பு அமைந்த பகுதி என்பதால், முகப்பு என அழைக்கின்றனர். வீட்டின் முகப்பில் வாசலுக்கு இருபுறமும் திண்ணை இருக்கும். இருபுறத்திலும் உள்ள திண்ணைகளில் ஒருபுறத்தில் சேமிப்பு அறை, இன்னொரு புறத்தில் கணக்குப்பிள்ளையின் அறை, திண்ணையின் அருகே கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய மரத்தால் ஆன கதவுகள் என கலை மிகுந்த கட்டிடமாக விளங்குகின்றன. கிணறுகளும் இதை ஒட்டி முன் புறக்கிணறுகளும் உள்ளன.

இந்தக் கதவுகளிலின் மேற்புறத்தில் பெரும்பாலும் லஷ்மியின் உருவம் அல்லது கும்பம் போன்றவை பதிக்கப்பட்டிருக்கும். முகப்பில் லெக்ஷ்மி, சரஸ்வதி அம்மன் சிலைகளும், கிருஷ்ணர் சிங்கங்கள் இருபக்கமும் காவல் காத்தும், துரை/ காவலர் சிலைகளும் இருக்கும். நிலைகளில் ரிஷப வாகன சிவ பார்வதி சிற்பங்களும் உள்ளன. மேலும் நிலைகளைச் சுற்றி தேக்கு மற்றும் தோதகத்தியில் செய்யப்பட்ட சூரிய மற்றும் சந்திரப் பலகைகள் சிற்பக்கலை நயம் கொண்டு செதுக்கி அமைக்கப்பட்டு உள்ளது. 16- 17 ஆம் நூற்றாண்டின் நாயக்கர் காலச் சிற்பக்கலை அமைப்புகளே செட்டிநாட்டின் கலைஞர்களுக்கும் முன் மாதிரியாக அமைந்துள்ளன. குறிப்பாக, கோவில்களில் காணப்படுவதைப் போலவே இங்குள்ள கதவுகளிலும் தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

பட்டாலையைத் தாண்டினால் வருவது பெரிய வானவெளி கொண்ட வளவு (முற்றம்) ஆகும். வீட்டுக்குள் காற்றையும் வெளிச்சத்தையும் இந்த வானவெளி கொண்டு வருகிறது. வீட்டின் முன்வாசலும் பின்வாசலும் வீட்டில் உள்ள மற்ற அறைகளும் இந்த வானவெளியில் வந்து சேர்வதாக இருக்கும். வீட்டில் தேக்குமரத்தால் ஆன பெரிய பெரிய கதவுகள், மர பீரோக்கள், ஊஞ்சல் என மரவேலைப்பாடு நிறைந்த பொருள்கள் கொண்டதாக உள்ளது. ஆங்காங்கு உள்ள நிலைகளில், இராமாயண, மகாபாரதக் காட்சிகளை வரிசையாகச் செதுக்கி உள்ளனர். கல்யாணம்,பொங்கல், இறப்பு, சடங்குகள் மற்றும் அனைத்து நிகழ்வுகளும் இங்குதான் நடைபெறுகிறது. பல வீடுகள் மாடியுடன் கட்டப்பட்டிருக்கும். மாடி முழுவதும் அறைகள் இருக்கும். சாமான்களைச் சேமிப்பதற்காக இவை உள்ளன. அந்தக் காலத்திலேயே மழைநீர் சேகரிப்புத்திட்டத்தை இங்குள்ள வீடுகளில் பின்பற்றி அமைத்து உள்ளார்கள். வீடு முற்றத்துல விழும் தண்ணியெல்லாம் முன் அல்லது பின் வீட்டுக் கிணத்துக்குப் போய் விழும் மாதிரி அமைப்பு உள்ளது.

அதற்கு அடுத்து இரண்டாம் கட்டு என்ற அமைப்பு உள்ளது. இது உணவு உண்ணும் அறை. இதையும் தாண்டினால் மூன்றாம் கட்டு மற்றும் நாலாம் கட்டும் அதற்கு பின்னர் தோட்டமும் இருக்கும். இதில் மூன்றாம் கட்டு பெண்கள் ஒய்வெடுப்பதற்காக பயன்படுத்தபடுகிறது. நாலாம் கட்டு - சமையலறை. தோட்டத்தில் கிணறும் ஆட்டுக்கல்லும் இருக்கும். மேலும் பசு மாடுகள் வளர்க்கக் கட்டுத்துறை என்கிற பகுதியும் உள்ளது.


இந்த வம்சாவழியினர் கல்யாணம், பேறுகாலம், நல்லது கெட்டது என்கிற பிறப்பு இறப்பு நிகழ்வுகள் தொடர்பான எல்லாவற்றையும் தங்களின் பூர்வீக வீட்டில் மட்டுமே இன்றும் நடத்தி வருகிறார்கள். வருஷத்துக்கு ஒரு நாள் முன்னோர்களுக்கு "படைப்பு" என்கிற வழிபாட்டைத் தவறாமல் தங்கள் வீடுகளில் அனைவரும் ஒன்று கூடி இன்றும் விட்டு விடாமல் நடத்திக் கொள்கிறார்கள். அது சமயம் வம்சாவழியினர் எந்த நாட்டில் இருந்தாலும் தவறாமல் வந்து கலந்து கொள்வார்கள். அன்று அந்த வீடுகள் உறவுகளின் பாசத்தால் மிளிரும், அந்த ஒரு நாளுக்காக நினைவுகளுடன் முதுமையைச் சுமந்த பல பெரியவர்கள் இன்றும் அந்த வீடுகளில் தனியாய் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த வீடுகளின் வம்சா வழியினர் இன்று காலத்தின் நிலைப்பாட்டால், உலகம் முழுவதும் பரந்து, பணியும் தொழிலும் ஆற்றி வருவதால், இந்தப் பிரமாண்ட வீடுகள் மனிதர்கள் இன்றி தனியாகத் தவித்துக் கொண்டு நிற்கிறது. நரைத்த மூத்த குடிமக்கள் ஒன்று அல்லது இருவர் மட்டுமே சில வீடுகளில் தனித்து வசித்து வருகின்றனர், பல வீடுகள் பூட்டியே இருக்கிறன. செட்டிநாட்டுக் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் கடல் போல பரந்து விரிந்து கிடக்கும் இந்த மாளிகைகள் இன்று கவனிப்பாரின்றி, பராமரிப்பின்றி பொலிவிழந்து கிடக்கின்றன. பல வீடுகள், சேதம் அடைந்துள்ளன, சேதமடைந்து வருகின்றன. இந்த நிலையில், இவற்றின் தொன்மையை அறிந்த யுனஸ்கோ நிறுவனம் பல வீடுகளை பழைய அழகு குறையாமல் புதுப்பிக்க தத்தெடுத்துள்ளது. தமிழக அரசு இந்தப் பகுதியை தொன்மை வாய்ந்த புராதனப் பகுதியாக அறிவித்து உள்ளது. தற்காலத்தில் சில வீடுகளை சற்று மாற்றியமைத்து நட்சத்திர விடுதிகளாக காரைக்குடி, கானாடுகாத்தான், கடியாபட்டி ஊர்களில் வெளிநாட்டினர் வந்து தங்கி பயன்படுத்துகின்றனர்.

மனிதர்கள் வாழும் வீடுகள் மட்டுமல்ல அதையும் தாண்டி தமிழ்நாட்டின் கட்டிடக்கலையின் அடையாளங்களாக பல பாரம்பரியத்தையும் கலைகளையும் உள்ளடக்கிய இந்த வீடுகள் இன்னும் பல நூறாண்டுகள் நிலைக்ககூடியவயாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும். இந்த வீட்டில் வாழ்ந்து வரும் ஒரு சராசரி மனிதன் என்கிற நிலையில் இதை வாசிக்கும் நீங்கள் மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு “எங்க வீட்டுக்கு வாங்க” என்று செட்டிநாட்டு ‘விருந்தோம்பல்’ கொண்டு அன்புடன் அழைக்கிறேன். செட்டிநாட்டு அன்பும் விருந்தும் இந்த வீடுகளில் உங்களின் வருகைக்காக மணம் வீசத் தொடங்கி விட்டது. தனியாக இருக்கும் அந்த ஆத்தா, அப்பச்சிகள் உங்களின் வருகையால் ஒரு நாள் மகிழட்டும்.

“வாங்க... வாங்க...”

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tidbits/p222.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License
<