இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Tidbits
குறுந்தகவல்

தமிழின் முதல் சங்கத்தினைத் தேடி...


தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்திலுள்ளது ஆதிச்சநல்லூர். இந்த ஊர்தான் உலக நாகரீகத்தின் தொட்டில். இந்தியாவில் முதன்முதலில் அகழாய்வு நடத்தப்பெற்ற இடம். சுமார் 144 வருடங்களுக்கு முன்பு ஜெர்மன் நகரிலிருந்து வந்த டாக்டர் ஜகோர் இங்குத் தோண்டியெடுத்த எலும்பு, மண்பாண்டம், முதுமக்கள் தாழி, வெண்கலம் உள்படப் பல பொருட்களை ஜெர்மன் நாட்டு பெர்லின் நகர் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு சென்று விட்டார். அவர் எந்த நாட்டுக்குச் சென்று அகழாய்வு செய்தாலும் அதை நூலாக்குவார். ஆனால் ஆதிச்சநல்லூரின் துரதிஷ்டம் நூல் ஆக்கப்படவில்லை. அதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. இவர் கொண்டு சென்ற நமது முன்னோர்களின் எலும்புக் கூடுகள் சாக்குப் பையில் அடைக்கப்பட்டு, பெர்லின் நகரில் ஏதோ ஒரு அருங்காட்சியகத்தில் அடைபட்டுக் கிடக்கிறது. அதை மீட்டெடுக்கவேண்டிய கடமை தமிழர்களுக்கு உள்ளது. இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், அது பெரிய அளவில் வெளியே தெரியவில்லை. அதன் பின் 1902 ல் இந்தியத் தொல்லியல் கழகம் சார்பில் அலெக்ஸாண்டர் இரியா செய்த ஆய்வில் நூற்றுக்கணக்கானப் பொருள்கள் எடுக்கப்பட்டன. அவை யாவும் மாட்டு வண்டிகளில் ஏற்றப்பட்டு, நெல்லையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.


ஆதிச்சநல்லூர் அகழாய்விற்காக உயர்நீதி மன்றத்தில்
வழக்கு தொடுத்த முத்தாலங்குறிச்சு காமராசு

அதில் கிடைத்த பொருள்கள், தமிழனின் தொன்மையையும் அவன் சுகாதாரத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும் அறிவதுடன் நம்மையெல்லாம் மெய்சிலிர்க்க வைத்தது. இதற்கிடையில் 1920 ல் சிந்துச் சமவெளியில் ஆய்வு மேற்கொண்ட டாக்டர் பானர்ஜி, சிந்துச் சமவெளி நாகரீகத்துக்கும் முந்தைய நாகரீகம் தாமிரபரணிக் கரை நாகரீகம் என்றார். இது தமிழர்களின் புகழை உலக அரங்கில் நிலை நிறுத்தும் வண்ணம் சிறப்பான பதிவாகப் போற்றப்பட்டது. அதன் பிறகு, இந்த பதிவுகளையெல்லாம் சேர்த்து வைத்து சாத்தான் குளம் ராகவன் என்பவர், "ஆதித்த நல்லூரும் பொருநை வெளி நாகரீகமும்" என்ற நூலை வெளியிட்டார்.


ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தோண்டி எடுக்கப்பட்ட பொருட்கள்
(அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி)


ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தோண்டி எடுக்கப்பட்ட நாணயங்கள்

2004ல் இந்தியத் தொல்லியல் துறை, டாக்டர் தியாக சத்திய மூர்த்தி தலைமையில் ஒரு அகழாய்வு மேற்கொண்டது. ஆனால் இந்த அகழாய்வு அறிக்கை 17 வருடங்களாகியும் வெளியே வரவில்லை. இது என் மனதுக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது. இதற்கிடையில் 2010 ஆம் ஆண்டு எனக்குக் கிடைத்த தகவல்களையெல்லாம் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கதை சொல்வது போல "ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்" என்றவொரு நூலை நான் எழுதினேன். காவ்யா பதிப்பகம் அந்த நூலை வெளியிட்டது. அதன் பிறகு யார் ஆதிச்சநல்லூர் வந்தாலும் அவர்களை அழைத்துக் கொண்டு போய்க் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்டம் துவங்கி 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆதிச்சநல்லூர் பரப்பு அருகில் உள்ள புளியங்குளத்தில் முதுமக்கள் தாழி தகவல் மையம் ஒன்றை ஆட்சியர் ஆஷிஷ் குமார் உருவாக்கினார். அழகிய முன் வளைவு அமைக்கப்பட்டது. சுற்றுப்புறச்சுவர், விளையாட்டு திடல், ஆற்றுக்குள் இறங்கப் படித்துறை, சிமெண்ட் ரோடு உள்படப் பல திட்டங்கள் சுமார் 50 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இங்குக் கண்காட்சிக்கு எந்தவொரு பொருளும் வைக்காத காரணத்தினால் தகவல் மையம் அடைக்கப்பட்டு, பின்னர் அவ்விடமே பாழடைய ஆரம்பித்து விட்டது.


2004 அகழாய்வில் முதுமக்கள் தாழி
(மூடியில்லாமல் மற்றும் மூடியுடன்)

அந்த வேளையில் தினத்தந்தியில் கட்டுரை எழுத வந்த அமுதன் அவர்கள் “மண் மூடிய மகத்தான நாகரீகம்” என்ற தலைப்பில் தொடர் எழுதி அதை நூலாக்கினார். அதில் ஆதிச்சநல்லூர் புகழ் பாடிய பெருமக்கள் என என்னுடைய பெயரையும் சேர்த்து இருந்தார். அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்து இருக்கும் அன்பர்களுக்கு நான் என்ன நன்றிக் கடன் செய்யப்போகிறேன் என நினைத்து இருந்தேன். அந்த வேளையில் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் என்னுடைய நண்பர் வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி மூலமாக நான் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தேன். அந்த வழக்கில், ஆதிச்சநல்லூர் 2004ல் நடந்த அகழாய்வு அறிக்கை நமக்குத் தரவேண்டும் என்றும், மீண்டும் இங்கு அகழாய்வு செய்ய வேண்டும் என்றும், ஆதிச்சநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியம் ஒன்று அமைக்க வேண்டும் என்றும் மூன்று கோரிக்கைளை முன் வைத்தேன். தற்போது அந்த மூன்று கோரிக்கையையும் மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றிவிட்டன. அதோடு மட்டுமல்லாமல் வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம், சிவகளைப் பரம்பில் அகழாய்வுக்கு உகந்த பல இடங்கள் உள்ளன என மனு செய்து கொண்டே இருந்தார். நான் தொடுத்த வழக்கின் படி சிவகளை, கொற்கை ஆகிய இடங்களிலும் தற்போது அகாழ்ய்வு நடந்து வருகிறது.


கொற்கை துறைமுக முகப்புத் தோரண வாயில்


2500 வருடப் பழமை வாய்ந்த வன்னி மரம்

இதில் கொற்கை துறைமுகம், 2500 வருடங்களுக்குப் பாண்டிய மன்னரின் துறைமுகமாக இருந்துள்ளது. நாணயங்கள் அச்சடிக்கும் பாண்டிய மன்னரின் அக்கசாலை இங்குள்ளது. 2500 வருடம் பழமையான வன்னிமரம் ஒன்றும் இங்குள்ளது. இங்குள்ள அக்கசாலை விநாயகர் கோயிலில் நிறையக் கல்வெட்டுகள் உள்ளன. தற்போது சங்கு அறுக்கும் தொழிற்சாலை இங்குக் கண்டு பிடிக்கப்பட்டதால், இதுதான் தமிழர் இடைச்சங்கம் என உணர்த்தப்படுகிறது. "சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம்" என்று நக்கீரன் பேசினார். சங்கறுக்கும் இடம் கொற்கையில்தான் உள்ளது . கடைச்சங்கமான மதுரையில் சங்கறுக்கும் தொழில் இருக்க வாய்ப்பு இல்லை. அதே வேளையில் கொற்கை அருகே ஆத்தூர் பகுதியில் கீரனூர் என்ற ஒரு ஊர் உள்ளது. இது நக்கீரனைக் குறிக்கும் வகையில் உள்ளது. மேலும் இங்கு, பாண்டிய மன்னருக்குச் செங்கோல் கொடுத்த செங்கோல் மட ஆதினம் பெருங்குளத்தில் உள்ளது. பெருங்குளம் திருவழுதீஸ்வர் ஆலயத்தில் உள்ளே ஓரிடத்தில் திருவள்ளூர் சிலை ஒன்றுள்ளது. திருவள்ளுவர், திருக்குறளை அரங்கேற்றிய இடம் இந்த சிவன் கோயில் என்பர். பொதிகை மலையை இருப்பிடமாகக் கொண்ட அகத்தியப் பெருமான் இடைச்சங்கத்தில் இருந்ததற்கான சான்று உண்டு. தாமிரபரணியைத் தோற்றுவித்த அகத்தியப் பெருமான், தாமிரபரணி படுகையில் உள்ள கொற்கை தமிழ்ச்சங்கத்தில் இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

தூத்துக்குடி மாவட்டத்தினை பொறுத்தவரை தாமிரபரணி ஆற்றங்கரை நெடுகிலும் பழங்கால தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் பல இடங்களில் புதையுண்டு கிடக்கின்றன என்பதை 1902 ல் ஆய்வு செய்த அறிஞர் அலெக்ஸாண்டர் இரியா என்பவர் கண்டுபிடித்தார். ஆதிகால மக்கள் வாழ்ந்த இடம் தாமிரபரணி ஆற்றங்கரையே என்பதை அறிந்த அவர் அங்கே மொத்தம் 37 இடங்களில் தொல் பொருள் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதோடு அந்த இடங்களில் எல்லாம் சிறிய அளவில் ஆய்வுகளையும் மேற்கொண்டார். இவர் இந்த 37 இடங்களுக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று 100 வருடங்களுக்கு முன்பே வரைபடமும் தாயரித்து அதை ஆவணப்படுத்தியுள்ளார். அதில் வசவப்பபுரம் பரம்பு குறித்து எழுதப்பட்டுள்ளது. அவர் குறிப்பிடும் 37 இடங்களில் வசவப்பபுரம், மற்றும் கிருஷ்ணாபுரம் பரப்பு என இரு இடங்களையும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இவ்விடத்திலும் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. அதை இவ்வூரைச் சேர்ந்த தமிழ் முருகன் வெளியுலகிற்குக் கொண்டு வந்தார். ஏற்கனவே அலெக்ஸாண்டர் இரியா கூறிய 37 இடங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் மனுதாராக உயர் நீதி மன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன். அதற்காகக் கடந்த வருடம் தமிழ்நாடு அரசு ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட ஆய்வும், கொற்கையில் முதல் கட்ட ஆய்வும் நடத்தப் பணம் ஒதுக்கீடு செய்தது. அதுபோலவே தாமிரபரணி கரையில் அலெக்ஸாண்டர் இரியா அடையாளம் கண்ட தொல்லியல் தலங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவித்து அதற்கான பணமும், தனி அதிகாரியையும் நியமித்து உள்ளனர். ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த வேலை தடைப்பட்டுள்ளது. இதற்கிடையில் வருகிற செப்டம்பர் மாதம் வரை இவ்விடத்தில் ஆய்வு செய்ய மாநில அரசுவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தற்போது நமக்கு முதல் சங்கத்தினைத் தேடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுதான் குமரிக் கண்டம். இந்தக் குமரிக் கண்டத்தினை பற்றிய ஆய்வில் ஒரிசா பாலு ஈடுபட்டு வருகிறார். மேலும் தற்போது. கடல் ஆராய்ச்சியாளர்கள் சிலரும் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடைச்சங்கமான கீழடியில் கிடைத்த அற்புதங்கள், இடைச்சங்காலமான ஆதிச்சநல்லூர் கொற்கை பகுதியில் கிடைத்துக் கொண்டிருந்த அதிசயங்களையும் தாண்டி, முதல் சங்கமான குமரிக்கண்டத்தில் நமக்குத் தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் எச்சங்கள் கிடைக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. அதைத் தேடி நாம் பயணிப்போம்...

- முத்தாலங்குறிச்சி காமராசு.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tidbits/p236.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License
<