இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Tidbits
குறுந்தகவல்

டார்டிகிரேட்


புழுவைப் போன்ற உயிரினம் டார்டிகிரேட் (Tardigrade). பார்ப்பதற்கு ஒரு புழுவைப் போல் தோற்றமளித்தாலும், உயிரிகள் வகைப்பாட்டின் (Taxonomy) படி இது ஒரு விலங்கு ஆகும். டார்டிகிரேட் ஒரு நுண்ணிய விலங்காகும் (Microscopic animal). இதன் அளவு பொதுவாக 0.5 மி.மீ. சில டார்டிகிரேட் இனங்கள் 1.5 மி.மீ வரை வளரும். இந்த அளவைத் தாண்டி இவை வளர்வது இல்லை. இந்த நுண்ணிய விலங்கை நாம் நமது வெறும் கண்களால் பார்க்க இயலாது. இது எந்த அளவு நுண்ணியது என்றால், ஒரே ஒரு மணல் துகளின் மேல் ஒரு டார்டிகிரேடை அமர்த்தி வைக்க முடியும். அந்த அளவிற்கு ஒரு மிக நுண்ணிய அளவிலான விலங்கு இது. இந்த விலங்கை ஒரு எளிய நுண்ணோக்கியின் (Simple microscope) மூலம் பார்க்கலாம்.

இந்த விலங்கு முதன் முதலில் ஜோஹன் ஆகஸ்ட் எஃப்ராயிம் கோயஸ் (Johann August Ephraim Goeze) எனும் ஜெர்மன் விலங்கியலாளரால் 1773 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இந்த விலங்கினைச் சிறிய நீர்க்கரடிகள் (Little water bears) என்று அழைத்தார். இத்தாலிய உயிரியலாளரான லஸாரோ ஸ்பலான்ஸானி (Lazzaro Spallanzani) என்பவர், 1777 ஆம் ஆண்டில் இந்த விலங்கிற்கு டார்டிகிரேடா (Tardigrada) எனப் பெயரிட்டார். லத்தீன் மொழியில் டார்டிகிரேடா என்றால் மெது நடையாளர் (Slow walker) என்று பொருள். இந்த விலங்கு நகர்ந்து செல்வது, கிட்டத்தட்ட கரடியின் நடையை ஒத்திருப்பதால், இந்த விலங்கிற்கு நீர்க் கரடி, மெது நடையாளர் எனும் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.


டார்டிகிரேடா 4 இணைக் கால்கள் கொண்டுள்ளன. அவற்றின் ஒவ்வொரு காலிலும் 4 முதல் 8 வரையிலான இடுக்கிகள் போன்ற அமைப்புகள் உள்ளன. இதன் 3 இணைக் கால்கள் நகர்ந்து செல்வதற்கும், நான்காவது இணைக் கால்கள் பற்றிக் கொள்வதற்கும் இவற்றால் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நீர்க்கரடிகளின் முதன்மை உணவு பாசிகள், தாவரட் செல்கள் மற்றும் இதைப் போன்ற சிறிய அளவிலான உயிரினங்கள் (Small invertebrates). இவற்றின் முகத்தில் இருக்கும் உருளை வடிவிலான, உறிஞ்சு குழல் போன்ற வாயின் அருகே இருக்கும், சிறு சிறு கூர்மையான அமைப்பின் மூலம் தாவர செல்கள், பாசிகள், சிறு விலங்குகளைத் துளையிட்டு அதன் மூலம் இவைகள் தமது உணவினை உறிந்து உண்கின்றன. இவற்றிற்கு சுவாச அமைப்பு இல்லை, ஆனால் இவற்றின் உடலெங்கும் வாயுப் பரிமாற்றம் நடைபெற்று வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இவைகளால் நமது உயிர்க்கோளத்தில் (Biosphere) எங்கும் உயிர் வாழ முடியும். அதி உயர மலைச்சிகரங்களிலும், அதி ஆழமான ஆழ்கடலிலும் இவற்றால் உயிர் வாழ முடியும். இவற்றால் 100°C சூடு இருக்கும் புதைச்சேற்று எரிமலைகளிலும், -100°C யில் கடும் குளிர் நிலவும் அண்டார்க்டிக்கா பகுதியிலும் கூட உயிர்வாழ முடியும். கடும் மழை பொழியும் மழைக்காடுகளிலும், மழையேப் பொழியாத பாலைவனங்களிலும் கூட இவற்றால் உயிர் வாழ முடியும். அதீத வெப்பநிலைகளையும், உயர் மற்றும் தாழ் அழுத்தங்களையும், காற்றில்லாமலும், கதிர்வீச்சிலும், நீரில்லாமலும், உணவில்லாமலும் தாக்குப்பிடித்து உயிர் வாழ முடியும். உலகில் உள்ள வேறு எந்த உயிரினத்தாலும் இத்தகையக் கடினச் சூழல்களைத் தாக்குப்பிடிக்க இயலாது. இமயமலையில், கடல்நீர் மட்டத்திலிருந்து 20,000 அடி உயரத்தில் உள்ள ஒரு சுடுநீர் சுனையில் இந்த டார்டிகிரேட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதே போல், துருவப் பகுதியில் உள்ள பனிப்பாறைகளின் அடியிலும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றால், -200°C குளிர்நிலையில் சில நாட்களும், -20°C குளிர்நிலையில் 30 ஆண்டுகளும் இவற்றால் தாக்குப் பிடிக்க முடியும்.


டார்டிகிரேட்டால் 30 வருடங்கள் நீர் மற்றும் உணவின்றி தாக்குப் பிடிக்க முடியும். இதுவரை நமது பூமியானது 5 முறை அழிந்து மீண்டும் மீண்டும் உயிர்கள் தோன்றியதாக அறிவியலாளர்கள் நம்புகின்றனர். ஆனால், இந்த 5 அழிவிலும் தப்பிப் பிழைத்த ஒரே உயிரினமாக டார்டிகிரேட்கள் இருக்கக் கூடும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். 2007 ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளிக் கழகம் (European Space Agency) டார்டிகிரேட்களை விண்வெளிக்கு அனுப்பி வெளிப்பட வைத்து, மீண்டும் பூமிக்கு அவற்றைத் திரும்பி வரவழைத்து ஆய்வு செய்தது. விண்வெளிக்குக் கொண்டு சென்று வெளிப்பட வைத்த டார்டிகிரேட்களில் 68 % உயிர் பிழைத்திருந்தன. 2011 ஆம் ஆண்டு இத்தாலிய விஞ்ஞானிகள், டார்டிகிரேட்டிகளை விண்வெளிக்கு அனுப்பிய ஆய்வில், டார்டிகிரேட்களுக்கு புவியீர்ப்பு விசைக் குறைபாடு, அண்டக் கதிர்வீச்சு போன்றவற்றால் எந்தப் பாதிப்பும் நேரவில்லை என்று கண்டறியப்பட்டது.

தொகுப்பு: மு. சு. முத்துக்கமலம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tidbits/p304.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License
<