இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Tidbits
குறுந்தகவல்

பெண்மையின் திருவிழா


இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இராஜா (Raja) எனும் பெயரில் மூன்று நாட்கள் பெண்மையின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை இராஜா பர்பா என்றும், மிதுன சங்கராந்தி என்றும் அழைக்கின்றனர். இத்திருவிழா பருவமழையின் வருகையை கொண்டாடும் வகையிலேயே அமைந்திருக்கிறது.

ராஜா என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையான ராஜாஸிலிருந்து வந்தது, அதாவது, இதற்கு மாதவிடாய் என்று பொருள், மாதவிடாய் பெண் ராஜாஸ்வாலா என்று அழைக்கப்படுகிறார். இத்திருவிழாவில் விஷ்ணுவின் மனைவிகளில் ஒருவரான பூமாதேவி எனும் பெண் தெய்வத்திற்கு, முதல் மூன்று நாட்களில் மாதவிடாய் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. நான்காவது நாள் வசுமதி ஸ்னானா எனப்படும் வசந்தக் குளியல் அல்லது பூமியின் சடங்குக் குளியல் என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் திருவிழா ஜூன் மாதம் நடுப்பகுதியில் வருகிறது, முதல் நாள் பஹிலி ராஜா என்றும், இரண்டாம் நாள் மிதுன சங்கராந்தி என்றும், மூன்றாம் நாள் பூதாஹா அல்லது பாசி ராஜா என்றும் அழைக்கப்படுகிறது. கடைசியாக நான்காவது நாள் வசுமதி ஸ்நானம் (வசந்தக் குளியல்) என்று அழைக்கப்படுகிறது,

முதல் நாளுக்கு முந்தைய நாள் சஜபாஜா அல்லது ஆயத்த நாள் என்று அழைக்கப்படுகிறது, இந்நாளில் பெண்கள், மூன்று நாட்களுக்குத் தேவையான மசாலாப் பொருட்கள் அரைத்து வைத்து விட்டு, வீடு, சமையலறை, அரைக்கும் கற்கள் உள்ளிட்டவைகளைச் சுத்தம் செய்து வைக்கின்றனர். திருவிழாவின் முதல் நாளில், அதிகாலையில் எழுந்து, தங்கள் உடலில் மஞ்சள் பூசி, எண்ணெய் தடவிக் கொண்டு, நதி அல்லது நீர்நிலையில் குளிப்பார்கள். அடுத்து வரும் மீதமுள்ள இரண்டு நாட்களுக்கு குளிப்பது இல்லை.


இந்நாட்களில் அவர்கள் வெறுங்காலுடன் நடக்க மாட்டார்கள், பூமியைக் கீற மாட்டார்கள், அரைக்க மாட்டார்கள், எதையும் கிழிக்க மாட்டார்கள், வெட்ட மாட்டார்கள், சமைப்பதும் இல்லை. இந்த மூன்று நாட்களிலும் பெண்கள் வேலையில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்கின்றனர்.

கருவுறுதலைக் குறிக்கும் அடையாளமாக பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது போல, பூமாதேவித் தாய்க்கும் மாதவிடாய் ஏற்படுகிறது. எனவே, திருவிழாவின் மூன்று நாட்களும் அன்னையின் மாதவிடாய் காலமாகக் கருதப்படுகிறது. இம்மாதவிடாய் நாட்களில் பூமிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்த நாட்களில் அனைத்து விவசாயப் பணிகளும் நிறுத்தப்படுகின்றன.

இதில் பெண்கள் பூமியின் அடையாளமாக அரைக்கும் கல்லை மஞ்சள் பூச்சுடன் நீராட்டுகிறார்கள், அதன் பிறகு பூ, குங்குமம் போன்றவைகளைக் கொண்டு அர்ச்சனை செய்கிறார்கள். இத்திருவிழாவின் போது, அனைத்து வகையான பருவகாலப் பழங்களும் பூமித்தாய்க்குப் படைக்கப்படுகின்றன.

திருமணமாகாத குடும்பப் பெண்கள் இந்தத் திருவிழாவின் முதல் நாளில் புதிய புடவை, மேலாடை மற்றும் ஆபரணங்களை அணிவார்கள். பூமித்தாய் மழையை எதிர்பார்த்துக் காத்திருப்பது போல, தங்களுக்கு வரவிருக்கும் கணவர் நல்லவராக அமைந்திட வேண்டும் என்கிற எண்ணங்களோடு, மூன்று நாட்களையும் மகிழ்ச்சியான திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். இக்காலத்தில் பெண்கள் சமைக்காத மற்றும் ஊட்டமளிக்கும் உணவை மட்டுமேச் சாப்பிடுகிறார்கள், ஒடிசா மாநிலத்தின் மரபு வழி உணவான போடாபிதா, உப்பு போன்றவைகளைச் சாப்பிடுவதில்லை.


வருங்காலத்தில் வரப்போகும் கணவருடன் சேர்ந்து நல்ல உடல் நலத்துடன் குழந்தைகளைப் பெற்றெடுப்போம் என்று உறுதி செய்து கொள்ளும் நிகழ்வும் நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்று நாட்களும், அவர்கள் சிறந்த ஆடைகள் மற்றும் அலங்காரங்களில், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் இனிப்புகள் மற்றும் நல்ல உணவுகளை உண்பது, நீண்ட மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவது என்றிருக்கின்றனர். குறிப்பாக, பெரிய ஆலமரங்களில் ஊஞ்சல் கட்டி அதில் அமர்ந்தாடுவதுடன், இயற்கை சார்ந்த நாட்டுப்புறப் பாடல்களையும் பாடி மகிழ்கின்றனர்.

இத்திருவிழாவிற்காக, ராம் ஊஞ்சல், சர்க்கி ஊஞ்சல், பட்டா ஊஞ்சல், தண்டி ஊஞ்சல் என்று பல்வேறு வகையான ஊஞ்சல்கள் அழகிய வடிவமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. இத்திருவிழாவிற்கென்று உள்ள சில பாடல்களுடன், அன்பு, பாசம், மரியாதை, சமூக நடத்தை மற்றும் சமூகத்தின் நன்மை போன்றவைகளை வெளிக்கொணரும் பாடல்களைப் பாடி மகிழ்கின்றனர்.

பெண்கள் இத்திருவிழாக் காலங்களில் மகிழ்ச்சியோடு இருக்கும் வேளையில், பருவமழை தொடங்கும் தருவாயில், இளைஞர்களும் கடுமையான விளையாட்டுகளை விளையாடி மகிழ்கிறார்கள். அடுத்து விவசாயத்தின் மூலம் வரும் அறுவடைக்கான நம்பிக்கையுடன் அவர்களின் உற்சாகம் அதிகமாக இருக்கும். அனைத்து விவசாய நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு, ஒடிசா மாநிலம் முழுவதும் ஆண்களும் பெண்களும் இந்த மூன்று நாட்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இரவு வேளைகளில், பல்வேறு கலை நிகழ்வுகளும், பொழுது போக்கு நிகழ்வுகளும் ஏற்பாடுகள் செய்து நடத்தப்படுகின்றன.

இது பெண்மையின் திருவிழா என்றாலும், ஆண்களுக்கும் மகிழ்ச்சியான திருவிழாவாகத்தான் இருக்கிறது.

- உ. தாமரைச்செல்வி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tidbits/p312.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License
<