இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Tidbits
குறுந்தகவல்

சீனக் காதலர் நாள்


சீன நாட்காட்டியில் 7வது மாதத்தின் 7வது நாளில் “சீனக் காதலர் நாள்” (Chinese Valentine's Day) கொண்டாடப்படுகிறது. இந்நாள் கொண்டாட்டத்தை, “சீ ஷூ திருவிழா” என்று அழைக்கின்றனர். இத்திருவிழாவினை, குய்ஹியாவோ விழா (Qiqiao Festival), ஏழாவது இரட்டை விழா (Double Seventh Festival), ஏழுகளின் இரவு (The Night of Sevens), மக்பீ விழா (The Magpie Festival) என்று வேறு சில பெயர்களிலும் அழைக்கின்றனர். சீ ஷீ திருவிழாவின் தாக்கமானது, ஜப்பானின் தனாபதா விழா (Tanabata festival) மற்றும் கொரியாவின் சில்சோக் திருவிழா (Chilseok festival) ஆகியவற்றிலும் உள்ளது.


இந்நாள், சீனக் காதலர் நாளாகக் கொண்டாடப்படுவதற்கு ஒரு கதை இருக்கிறது.

நெசவு நெய்வதில் திறமை மிக்க ஜினு (Zhinu) என்ற பெண் தெய்வம், வானத்தில் இருந்து பூவுலக்கு வரும் போது, நியுலங் (Niulang) என்ற மாடு மேய்க்கும் இளைஞனைக் கண்டார். இருவரும் காதல் வயப்பட்டனர். காதலர்கள் இருவரும் காதல் மணம் புரிந்து, இரண்டு குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். பூலோகம் சென்ற மகள் திரும்பாததன் காரணமறிந்த சொர்க்கத்தின் ராணியான ஜினுவின் தாய், ஜினுவைத் தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். சொர்க்கத்தின் ராணி, ஜினுவின் கணவர் நியூலங் மற்றும் அவர்களிருவருக்கும் பிறந்த குழந்தைகளிடமிருந்து ஜினுவைப் பிரித்து, அவளை மீண்டும் சொர்க்கத்துக்கே அழைத்துச் சென்றார்.

ஜினுவைக் காணாத நியுலங்கும் அவனுடைய குழந்தைகளும், அவளது நினைவுகளால் வருந்தினர். அதன் பிறகு நியுலங், மனைவியான ஜினுவைத் தேடி அலைந்தார். அவருக்குக் கிடைத்த பறக்கும் காலணிகளின் உதவியோடு மனைவியைத் தேடிச் சொர்க்கத்துக்கு சென்றான். ஆனால், ஜினுவின் தாய் அவர்கள் சந்திக்க முடியாதவாறு, ஒரு பால்வெளியை உருவாக்கினார்.

அந்தக் காதலர்களின் அழுகுரலைக் கேட்ட ‘வால்காக்கை’ (Magpie) பறவைகள், அவர்களது அன்பைக் கண்டு, 7 வது சந்திர மாதத்தின் 7 வது நாளில் அந்தப் பால்வெளியைக் கடக்கப் பாலத்தை அமைத்து கொடுத்தன. இந்தப் பாலம் வால்காக்கைப் பாலம் (Magpie Bridge) என்றழைக்கப்பட்டது.


இந்தப் பாலத்தின் வழியாக ஜினுவுல் நியுலங்கும் சந்தித்துக் கொண்டனர். அதனைத் தடுக்க இயலாத ஜினுவின் தாய் காதலர்கள் இருவரும் ஆண்டுக்கு ஒருமுறை ‘சீ ஷீ’ நாளில் சந்திக்கச் சம்மதித்தார். அதன்படி, ஒவ்வொரு சீனப் புத்தாண்டுக்குப் பிறகு, ஏழாவது மாதத்தில் ஏழாவது நாளில் அந்த சந்திப்புக்கான நாளாக அமைந்தது. அவர்கள் சந்தித்த நாளைத்தான் சீனர்கள் காதலர் தினமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

சீனக் காதலர் நாளை முன்னிட்டு, அன்றைய நாள் மக்கள் வண்ணமயமான கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். வயது வேறுபாடு இல்லாமல் பெண்களும், குழந்தைகளும், அலங்கரிக்கப்பட்ட விளக்குகளை ஆற்றில் விட்டு மகிழ்கின்றனர். காதலர்கள் பலரும் சீன மரபு வழியிலான உடையுடன், கியூஜோவ் என்ற இடத்தில் உள்ள பழமையான ‘காதல் தேவன்’ கோயிலை நோக்கிச் செல்கின்றனர். அங்கு காதலர்களுக்குள் அன்பை வெளிப்படுத்தும் பல்வேறு விளையாட்டுகளும் நடத்தப் பெறுகின்றன. அப்போட்டிகளில் பங்கேற்று மகிழ்கின்றனர்.

உலகம் முழுவதும் காதலர் நாளாகக் கொண்டாடப்படும் பிப்ரவரி 14 ஆம் நாளும் சீனாவில் இளைய தலைமுறைகளிடையேத் தற்போது காதலர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், இது சீனாவில் சற்று வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக, பெண்கள் தாங்கள் விரும்பும் ஆண் நண்பர்களுக்கு சாக்லேட்டைப் பரிசாகக் கொடுத்து, அவர்களிடம் அன்பைக் காட்டிப் பேசுகின்றனர். ஒரு மாதத்திற்குப் பிறகு, அதாவது மார்ச் 14 அன்று அந்த ஆண் நண்பர், தனக்கு சாக்லேட் பரிசளித்த பெண்ணிற்கு வெள்ளை நிற சாக்லேட்டைக் கொடுத்து, அன்பையும் பல பரிசுப் பொருட்களையும் திரும்பத் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மார்ச் 14, வெள்ளைக் காதலர் நாள் என்றழைக்கப்படுகிறது. வெள்ளைக் காதலர் நாள் முதலில் 1970 ஆம் ஆண்டில் ஜப்பான் மிட்டாய் தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டு, கிழக்கு ஆசியா முழுவதும் பரவியது என்று சொல்லப்படுகிறது.


இதே போன்று, ஒப்பொலி (Homophone) என்பது ஒரு சொல் மற்றொரு சொல்லைப் போலவே ஒலிக்கக்கூடியது. ஆனால், வேறு பொருள் மற்றும் / அல்லது எழுத்துப்பிழை கொண்ட ஒரு சொல்லாக அது இருக்கும். உதாரணமாக, ஆங்கில மொழியிலான "Flower" மற்றும் "Flour" ஆகிய இரு சொற்களும் ஒப்பொலி என்றழைக்கப்படுகின்றன. ஏனெனில், அவை ஒரே மாதிரியாக உச்சரிக்கப்படுகின்றன.

சீனாவில் ஒப்பொலி சொற்கள் பல உருவாக்கப்பட்ட போது, மே 20 ஆம் நாள் மற்றும் 520 எனும் எண் ஆகியவை ஒரே மாதிரியான உச்சரிப்பைக் கொண்டிருந்தன. 520 எனும் எண் சீன மொழியில், “நான் உன்னை விரும்புகிறேன்” (I Love You) என்பதைப் போல் ஒலித்ததால், மே 20 ஆம் நாள், சீனாவில் மற்றொரு காதல் நாளாக மாறியிருக்கிறது. இந்நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுவதில்லை எனினும், காதலர்களுக்கிடையேத் தகவல் குறிப்புகள், பரிசுகள் போன்ற பரிமாற்றங்கள் செய்து கொள்ளும் நாளாக மாற்றம் பெற்றிருக்கிறது.

- உ. தாமரைச்செல்வி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tidbits/p316.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License
<