இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Tidbits
குறுந்தகவல்

தாய்லாந்து புவாங் மாலை மற்றும் மூங்கில் மாலை


தாய்லாந்து நாட்டின் அலங்கார வடிவமைப்புடைய மலர் மாலையினை ‘புவாங் மாலை’ (Phuang Malai) என்கின்றனர். இம்மாலை பெரும்பான்மையாக நல்ல அதிர்ஷ்டத்திற்காகவும், காணிக்கையாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

புவாங் மாலையை முதலில் உருவாக்கியவர் யார்? என்பதற்கான எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், அரசர் சுலாலாங்கார்ன் ஆட்சிக் காலத்தில் புவாங் மாலைகள் இருந்ததாகக் குறிப்புகள் இருக்கின்றன. சுகோத்தாய் இராச்சியத்தில் நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட பன்னிரண்டு மாத அரச விழாக்கள் குறித்து, பரா ராட்ப்கிதி சிப் சாங் டியூன் என்ற மன்னர் எழுதிய ஒரு இலக்கியப் படைப்பு இருந்தது. அதில். 4-வது மாத விழாவில், மன்னரின் தலைமைத் துணையமைச்சர் தாவோ சிச்சுலலக் என்பவர் புதிய மலர் மாலைகளைத் தயாரித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர், இரத்தனகோசின் இராச்சியத்தில் புவாங் மாலை, ஒவ்வொரு விழாவிலும் ஒரு முக்கியமான அலங்காரப் பொருளாக மாறியது. அரண்மனையில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் புவாங் மாலை தயாரிக்கும் திறன்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ராணி சவோபா போங்ஸ்ரீ, பல்வேறு சிக்கலான வடிவமைப்புகளைப் புகுத்தி, பல புதிய புவாங் மாலைகளை உருவாக்கினார் என்கின்றனர்.


புவாங் மலாய் வடிவங்களை ஆறு குழுக்களாகப் பிரிக்கின்றனர்.

1. உயிரின மாலை - இம்மாலை விலங்குகளின் தோற்றத்தை ஒத்திருக்கும். பூக்கள் எலி, முயல், அணில் மற்றும் கிப்பன் போன்ற விலங்குகளின் வடிவங்களாக அமைக்கப்படும்.

2. சங்கிலி மாலை - இம்மாலை ஒரு தொடர் வட்டமுடைய மாலையாகும். இது ஒரு சங்கிலியை ஒத்திருக்கும்.

3. சடை மாலை - இரண்டு வட்டமான மாலை ஒன்றாக இணைக்கப்பட்டு, அதன் ஒவ்வொரு முனையிலும் பைன் வடிவ மாலை அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

4. கொடி மாலை - ஒரு கொடியின் வடிவத்தில் அமைக்கப்பட்ட அரை வட்ட மாலை ஆகும்.

5. சரிகை மாலை - இம்மாலை முழுவதும் உள்ளும் புறமும் இடையிடையே தங்கச்சரிகை மற்றும் வெள்ளிச் சரிகையைச் செருகி, அலங்கரிக்கப்பட்ட ஒரு மாலை ஆகும்.

6. ஆர்க்கிட் மாலை - ஆர்க்கிட் மலர்களால் மட்டுமேத் தயாரிக்கப்படும் மாலையாகும்.


புவாங் மாலையின் பயன்பாட்டினை மூன்று வகைகளாக வகைப்படுத்துகின்றனர். அவை;

1. மாலை சாய் தியோ

பொதுவாக, மரியாதையைக் காட்டக்கூடிய ஒன்றாகவும், காணிக்கையாகவும் இம்மாலை பயன்படுத்தப்படுகிறது. கோயில்களிலும் கல்லறைகளிலும், இந்த மாலையானது பௌத்தத் துறவி சிலைகளின் கைகளில் இருந்து பிரார்த்தனை மெழுகுவர்த்திகளுடன் தொங்குவதைக் காணலாம். சங்கிலி மாலை, சடை மாலை ஆகியவை மாலை சாய் தியோவின் எடுத்துக்காட்டுகளாகும்.

2. மாலை சாங் சாய்

பொதுவாக, ஒரு நபரின் முக்கியத்துவத்தைக் குறிக்க, அந்த நபரின் கழுத்தில் அணியப்படும் மாலையாகும். தாய்லாந்தின் திருமண விழாவில், மணமகன், மணமகள் என்று மணமக்கள் இருவரும் சாங் சாய் மாலையே அணிவார்கள்.

3. சாமுராய் மாலை

சாமுராய் மாலை என்பது அடையாளமான மாலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாலை சிறிய வடிவமுடையது. வழக்கமாக பெரிய மக்கள் குழு ஒன்றின் அடையாளத்திற்காக வழங்கப்படுகிறது. இந்த மாலை வழக்கமாக, ஒரு புரவலரால் வழங்கப்படுகிறது, உதாரணமாக, திருமண விழாக்கள், இல்ல விழாக்கள், பிறந்தநாள் விழாக்கள், பெயர் சூட்டு விழா ஆகியவற்றில் அணியப்படுகிறது. உயிரின மாலை இத்தகைய சாமுராய் மாலையாக அணியப்படுகிறது. ஹவாய் கலாச்சாரத்தில் அன்பைக் காட்டுவதற்காக அணியப்படும் லீ மாலை போன்றே இந்த சாமுராய் மாலையும் அன்பைக் காட்டும் அடையாளமாக அணியப்படுகிறது.

மேலும் புவாங் மாலைகள் காணிக்கைகள், பரிசுகள், நினைவு பரிசுகள் வழங்க என இன்னும் பல செயல்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. அரியணை, அரங்குகள் மற்றும் வீடுகளை அலங்கரிக்வும் அவை பயன்படுத்தப்படுகின்றன. தாய்லாந்தின் இசை நிகழ்ச்சிகளில் அந்தக் கருவிகளின் உரிமையாளர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும், அந்த இசைக்கருவிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், நிகழ்வில் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வெற்றிக்காகவும் தாய்லாந்து இசைக் கருவிகளில் புவாங் மாலை தொங்கவிடப்படுகிறது.


மூங்கில் மாலைகள்

தாய்லாந்தின் மூங்கிலால் நெய்யப்பட்ட அலங்கார மாலைகள் சில சமயம் காணிக்கையாகச் செலுத்தப்படுகின்றன. சில நேரங்களில், இந்த மூங்கில் மாலைகள் மலர் மாலைகளுக்கு மாற்றாகவும், மற்றப் படையல்களைத் தொங்கவிடவும் பயன்படுத்தப்படுகின்றன. தாய்லாந்தின் வடகிழக்கில் கலசின் மாகாணத்தின் குச்சினராய் மாவட்டத்தில் உள்ள குட் வா கிராம மக்களிடையே 'பூ தாய்' என்ற மரபு விழாவின் ஒரு பகுதியாக, மூங்கில் மாலைகள் அதிக அளவில் பயன்பாட்டிலுள்ளன. மேலும், தாய்லாந்தின் மழைக்காலத்தில் பௌத்தர்களின் நோன்புக்கால பண்டிகையிலும், மூங்கில் மாலைகள் பயன்படுத்தப்படுகின்றன, அவை “பன் காவ் பிரதாப் தின்” அல்லது “பன் புவாங் மலாய் பான் குட் வா” என்று அழைக்கப்படுகின்றன.

‘பூ தாய்’ விழாவைக் கொண்டாட, குட் வா கிராமவாசிகள் அலங்கரிக்கப்பட்ட மாலைகளை உருவாக்கி, வாட் கோக்கைச் சுற்றி ஊர்வலம் செல்வார்கள். தங்கள் கைவேலைகளைக் காண்பிப்பதற்காக, தாள இசையும் பாடலும் ஒலிக்க அதற்கேற்ப ஆடிக்கொண்டே இந்த ஊர்வலமானது நடைபெறுகிறது.

- உ. தாமரைச்செல்வி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tidbits/p320.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License
<