இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Tidbits
குறுந்தகவல்

மது அருந்தகங்கள்


ஆல்ஹகால் கலந்த மதுபானங்கள், வடிகட்டி முறையில் தயாரித்த சாராய வகைகள், பீர், ஒயின் மற்றும் காக்டெய்ல்கள் வகைகள் என்று பல்வேறு வகையிலான மதுபானங்களை அருந்துவதற்கென்று தனியாக அமைக்கப்பட்ட இடங்களை ‘மது அருந்தகம்’(Bar) எனலாம். வணிக விரிவாக்க நோக்கில் அமைந்த இந்த இடம், நாற்காலிகளும் சாயும் இருக்கைகளும் அல்லது சொகுசு இருக்கைகளும் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றுடன் இருக்கலாம். இவ்விடங்களில் மது பாட்டில்கள் மற்றும் கோப்பைகள் வைப்பதற்கான மேசைகளும் அமைக்கப்பட்டிருக்கும். உயர்வகை மது அருந்தகங்களில் பொழுதுபோக்கு நோக்கில், வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் மேடை இசைக்குழுக்களின் இசை, நகைச்சுவை நிகழ்ச்சி, கேளிக்கை நடன மங்கைகளின் நடனம் போன்றவைகளும் சேர்ந்து இடம் பெற்றிருக்கும்.

இந்த மது அருந்தகங்கள் வரலாறு முழுமைக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பெயர்களில் இருந்திருக்கின்றன. பொதுவாக, மக்கள் மது அருந்துவதற்காக ஒன்றாகக் கூடிய இடங்களைப் பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டு வந்திருக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் ஆல்கஹால் கலந்த பானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்ட விரோதமாக மது அருந்தகங்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றை அவர்கள் "SPEAKEASIES" என்றும், "BLIND PIGS" என்றும் சங்கேத வார்த்தைகள் வைத்து அழைத்திருக்கின்றனர்.

பல்வேறு நாடுகளில் மது அருந்தகங்களில் வயது வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. சிறுவயதினருக்கு அனுமதி கிடையாது என்கிற நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. பெரும்பாலும் மாநகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் இருக்கும் அருந்தகங்கள் இந்தச் சட்டத்தினை மதித்து நடக்கின்றன. புருனை, ஈரான், லிபியா, சவுதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜா போன்ற சில இஸ்லாமிய நாடுகளில் மதங்களின் கட்டுப்பாடுகளினால் மது அருந்துதல் கிடையாது. எனவே அங்கெல்லாம் மது அருந்தகங்களுக்கு அனுமதி இல்லை.


உலகில் மது அருந்துவதற்கான வயது வரம்பு நாடுகளுக்கேற்ப வேறுபடுகிறது. ஆஸ்திரியா, சாட், லிச்சென்ஸ்டீன், மொராக்கோ, பாலஸ்தீனம், ரஷ்யா எனும் 6 நாடுகளில் மது அருந்துவதற்கான குறைந்த வயது 16 என்று இருக்கிறது. சைப்ரஸ் மற்றும் மால்டா என்று 2 நாடுகளில் குறைந்த வயது 17 என்றும், அல்பேனியா, ஆஸ்திரேலியா, பஹாமாஸ், வங்காளதேசம், பெலிஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், கேப் வெர்டே, கேமன் தீவுகள், சிலி, கொமொரோஸ், கோஸ்டா ரிகா, எஸ்டோனியா, எஸ்வதினி, எத்தியோப்பியா, பால்க்லாந்து தீவுகள், பரோயே தீவுகள், பிஜி. பின்லாந்து, கிரீஸ், இந்தியா, ஈராக், அயர்லாந்து, இஸ்ரேல், ஜோர்டான், கஜகஸ்தான், லாவோஸ், லாட்வியா, லெசோதோ, லிதுவேனியா, மெக்சிகோ, மைக்ரோனேஷியா, மொசாம்பிக், நெதர்லாந்து, நைஜர், வட கொரியா, பப்புவா நியூ கினியா, புவேர்ட்டோ ரிக்கோ, ருமேனியா, ருவாண்டா, சுலோவாக்கியா, சிரியா, தைவான், டோகெலாவ், துருக்கி, உகாண்டா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்க கன்னித் தீவுகள், வனுவாட்டு, வியட்நாம், சாம்பியா என்றுமொத்தம் 50 நாடுகளில் குறைந்த வயது 18 என்றும், பஹ்ரைன், கம்போடியா, கேமரூன், எக்குவடோரியல் கினியா, குவாம், இந்தோனேசியா, கிரிபட்டி, மார்ஷல் தீவுகள், மங்கோலியா, நௌரு, வடக்கு மரியானா தீவுகள், ஓமான், பலாவ், சமோவா, அமெரிக்கா என்று 15 நாடுகளில் குறைந்த வயது 21 என்றும் இருக்கிறது.


அல்ஜீரியா, அங்கோலா, ஆன்டிகுவா & பார்புடா, அர்ஜென்டினா, ஆர்மீனியா, அஜர்பைஜான், பார்படாஸ், பெலாரஸ், பெல்ஜியம், பெனின், பூட்டான், பொலிவியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, போட்ஸ்வானா, பிரேசில், பல்கேரியா, புர்கினா பாசோ, புருண்டி, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சீனா, கொலம்பியா, குக் தீவுகள், குரோஷியா, கியூபா, செக் குடியரசு, காங்கோ ஜனநாயக குடியரசு, டென்மார்க், டொமினிகா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், எகிப்து, எல் சால்வடார், எரித்திரியா, பிரான்ஸ், காபோன், காம்பியா, ஜார்ஜியா, ஜெர்மனி, கானா, ஜிப்ரால்டர், கிரெனடா, குவாத்தமாலா, கயானா, ஹைதி, ஹோண்டுராஸ், ஹாங்காங், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, ஐவரி கோஸ்ட், ஜமைக்கா, கென்யா, கிர்கிஸ்தான், லெபனான், லைபீரியா, லக்சம்பர்க், மக்காவ், மடகாஸ்கர், மலாவி, மலேசியா, மாலி, முவாரிஷியஸ், மால்டோவா, மொனாக்கோ, மொண்டெனேகுரோ, மியான்மர், நமீபியா, நேபாளம், நியூசிலாந்து, நிகரகுவா, நைஜீரியா, நியுவே, வடக்கு மாசிடோனியா, நோர்வே, பனாமா, பராகுவே, பெரு, பிலிப்பைன்ஸ், போலந்து, போர்ச்சுகல், காங்கோ குடியரசு, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சான் மரினோ, சாவோ டோம் மற்றும் பிரின்சிப்பி, செனகல், செர்பியா, சீஷெல்ஸ், சியரா லியோன், சிங்கப்பூர், ஸ்லோவேனியா, சாலமன் தீவுகள், தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, தெற்கு சூடான், ஸ்பெயின், இலங்கை, சுரினாம், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தஜிகிஸ்தான், தான்சானியா, தாய்லாந்து, டோகோ, டோங்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துனிசியா, துர்க்மெனிஸ்தான், டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள், துவாலு, உக்ரைன், ஐக்கிய இராச்சியம், உருகுவே, உஸ்பெகிஸ்தான், வெனிசுலா, ஜிம்பாப்வே என்று 117 நாடுகளில் வயது வரம்பு ஏதுமில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தது.

மது அருந்துதல் என்பது மனிதக் குலத்தின் பழமையான பழக்கங்களில் ஒன்றாகும். மேலும், அது இன்று வரை அதன் முக்கியத்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பல்வேறு கலாச்சாரங்களில், மக்கள் பல்வேறு சூழல்களில், மற்றும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் பல்வேறு வகையான மதுபானங்களை அருந்துகிறார்கள். மதுபானத்தின் குறிப்பிட்ட விளைவுகள், இலேசான அளவு முதல் கடுமையான விஷம் மற்றும் மரணம் வரை இருக்கலாம். இதனை மது அருந்துபவர்கள் பலரும் அறிந்திருந்தாலும், மது அருந்தும் வழக்கத்தைக் கைவிடுவதாக இல்லை என்றே ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

- உ. தாமரைச்செல்வி.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tidbits/p350.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License
<