இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Tourist Places
சுற்றுலாத் தலங்கள்

கஜீராஹோ கோயில்கள்

உ. தாமரைச்செல்வி


இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கஜீரோஹா நகரம் உலகப்புகழ் பெற்ற ஒரு நகரமாகும். இந்நகரில் உள்ள கோயில்களில் உடலியல் குறித்தும் பாலியல் உறவுகள் எனப்படும் உடலுறவு தொடர்பான பல வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. கி.பி. 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட இந்தக் கோயில்களின் சிற்பங்கள் பாலியல் தொடர்புடையதாக இருந்த போதிலும் இவைகளில் உள்ள கலை நுணுக்கம் உலகின் பல கலைஞர்களை வியக்க வைத்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பு கஜீராஹோவை உலகப் பழம்பெரும் சின்னங்களைக் கொண்ட, உலகச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக 1997 ஆம் ஆண்டில் அறிவித்தது. இதனால் இந்த நகரத்திற்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

கஜீராஹோ கோயில்கள்

1. கஜீராஹோ நகரில் உள்ள கோயில்கள் அனைத்தும் சண்டேலா அரசின் ஆட்சியாளர்களால் கி.பி 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. இந்தக் கோயில்களில் அதிகமான சிற்பங்கள் உடலியல் தொடர்புடையவையாகவே அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியிலுள்ள 85 கோயில்களில் 20 கோயில்கள் சற்று சேதமடைந்து விட்ட போதும் மீதமுள்ள கோயில்கள் இன்னும் உறுதியுடன் இருந்து வருகிறது. இந்தக் கோயில்கள் மண்ணாலான கற்துண்டுகளால் கிழக்கு - மேற்காகவே கட்டப்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இக்கோயில்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சிற்பங்களைப் பார்க்கும் போது மனிதன் பாலியல் குறித்த கற்பனைகளிலும், எண்ணங்களிலும் அதிகமான ஈடுபாடு கொண்டிருந்தான் என்பதை உணர முடிகிறது. இங்குள்ள சிற்பங்களில் பல்வேறு உறவுநிலைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

2. கஜீராஹோ கோயில்கள் அனைத்தும் இந்தியக் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகின்றன. இவை தரையில் மூன்று அல்லது ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெரிய கோயில்களில் அர்த்த மண்டபம் (முன்பகுதி), மண்டபம் ( அறை), மகாமண்டபம் ( முக்கிய அறை), அந்தரேல் (வரவேற்புப் பகுதி), சுவாமி அல்லது அம்மன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள கர்ப்பக் கிருஹம் (கடவுள் அறை) என ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் கட்டப்பட்டுள்ளது. சிறிய கோயில்களில் மண்டபம் (அறை) மற்றும் அந்தரேல் (வரவேற்புப் பகுதி) இல்லாமல் மற்ற மூன்று பகுதிகள் மட்டும் கொண்டதாக உள்ளது. கோயிலின் முக்கியப் பகுதி மட்டும் பிரமிடுகளைப் போல், மேல் நோக்கி வட்டவடிவில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.



3. கோயில்கள் அனைத்தும் இந்து மற்றும் சமண சமயத்தைச் சேர்ந்த கோயில்களாக உள்ளன. இவை கட்டிடக் கலைகளின் அடிப்படையில் மேற்குக் குழு, கிழக்குக் குழு மற்றும் தெற்குக் குழு எனப் பிரிக்கப்பட்டுள்ளது. மேற்குக்குழு பிரிவில் இந்து சமயக் கடவுள்களான சிவபெருமான், லட்சுமணன், தேவி ஜகதாம்பாள் கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. இப்பிரிவில் லட்சுமி, வராக மகாதேவ், சித்ரகுப்தா, பார்வதி மற்றும் மாதங்கேஸ்வரா கோயில்களும் சிறப்புடன் இருக்கின்றன. இங்குள்ள காளி கோயிலான சகலகலா யோகினி (அற்பத்து நான்கு கலைகளில் சிறந்தவள்) கோயில் கிரானைட் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

4. கிழக்குக் குழு பிரிவில் பர்சுவநாத் கோயில் எனும் ஜைன மதக் கோயில் மிகப்பெரிய கோயிலாக இருக்கிறது. இங்குள்ள அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள கோயில்களில் கிழக்குப் பிரிவில் 4.5 அடி உயரமுடைய ஆதிநாத் சிலை உள்ள சாந்திநாத் கோயில்தான் மிகவும் இளம் வயதுடையது. இப்பிரிவில் உள்ள இந்து சமயக் கோயில்களில் பிரம்மா, அனுமன் கோயில்களும் சிறப்புடையதாக இருக்கின்றன. இவை கிரானைட் மற்றும் மண்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. மேலும் விஷ்ணு, ஜவாரி, வாமனா கோயில்களும் இப்பிரிவில் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது.

5. தெற்குப் பிரிவு கோயில்களில் துலாதேவ் மற்றும் சதுர்பூஜா என்கிற இரு கோயில்கள் மட்டுமே சிறப்பானதாக உள்ளது.

விழாக்கள்

1. கஜீராஹோ பகுதியில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகப்பெரியது மகா சிவராத்திரி விழாதான். இந்த விழாவின் போது சிவபெருமான் - பார்வதி ஆகிய கடவுள்களது திருமண வைபவம் இந்து சமய முறைப்படி சிறப்பாக நடத்தப்படுகிறது.

2.இங்கு கஜூராஹோ நாட்டிய விழா வருடந்தோறும் பிப்ரவரி / மார்ச் மாதங்களில் நடத்தப்படுகிறது. இவ்விழாவில் இந்தியப் பாரம்பரிய நடனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

கஜீராஹோவைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

1. கஜீரோஹாவிலிருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் துபேலா அருங்காட்சியகம் உள்ளது. ஏரிக்கரை ஒன்றில் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால சிற்பங்கள், பல வகையான ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் ஓவியங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

2. கஜீரோஹாவிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் பெனிசாகர் ஏரி ஒன்று உள்ளது. இது படகுச் சவாரி செய்திட நல்ல இடமாக உள்ளது.



3. கஜீரோஹாவிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பாண்டவா நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது.

4. பண்டேலா அரசின் வரலாற்று சிறப்பு மிக்க தலைநகரான பன்னா கஜீரோஹாவிலிருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இங்கு கென் ஆற்றங்கரைப் பகுதியில் 546 கிலோ மீட்டர் சுற்றளவுடைய புலிகள் சரணாலயமான பன்னா தேசியப்பூங்கா உள்ளது. இது இயற்கை அழகு நிறைந்த ஒரு இடமாகும்.

5. கஜீரோஹாவிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் சண்டேலா அரசால் கட்டப்பட்ட 688 மீட்டர் உயரமுடைய அஜய்கார் கோட்டை உள்ளது. மேலும் குப்த பேரரசால் கட்டப்பட்ட கலிஞ்சார் கோட்டை ஒன்றும் கஜீரோஹாவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பயண வசதி

1. மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹர்பல்பூர், மஹோபா ஆகிய ரயில் நிலையங்கள் கஜீராஹோவிற்குச் செல்ல மிக அருகிலுள்ள ரயில் நிலையங்களாகும். ஹர்பல்பூரிலிருந்து கஜுராஹோ 94 கிலோ மீட்டர் தொலைவிலும், மஹோபாவிலிருந்து கஜுராஹோ 63 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

2. மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால், ஜபல்பூர், குவாலியர், இந்தூர், பன்னா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களிலிருந்து கஜீராஹோவிற்கு சாலை வழியில் போக்குவரத்து வசதி உள்ளது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/touristplace/p1.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License