தவித்துக் கொண்டே...!
அத்தனை லேசாக உன்னை
கடந்துவிட முடியவில்லை...
ஒரே தெருவில் எதிரெதிரே
சந்தித்துக்கொண்டப் பார்வைகள்
நீ பேசி நான் பேசிடாத
பொழுதுகள்
நீ காத்திருந்து
நான் கடந்துவிட்ட நாட்கள்
உன்னைத் தெரியாமலே
எனக்குள் வலித்த தருணம்
இப்பொழுதும் -
எனை நீ நினைப்பாய்
உனை நான் -
நினைத்துக்கொண்டே யிருப்பேன்
எல்லாம் உள்ளே
வலித்துக்கொண்டே யிருக்கும்
எப்பொழுதையும் போல
நிலா வரும்
நிலா போகும்
நாட்கள் செலவாகும்
வயதுகள் மாறி -
நீ வேறாக
நான் வேறாக ஆவோம்...
அப்போதும் -
இப்படியே
உனைக் கடந்துவிட
தவித்துக் கொண்டே இருப்பேன் நான்!!
- வித்யாசாகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.