ஆனந்தத் தீபாவளி
கொண்டாடுவோம்...
தீபவொளியுடன் தீபாவளி
அறிவொளியும் ஏற்றி.
*****
பூரிப்போம்...
புத்தாடைகள் உடுத்தி.
புதிதாவோம்...
புத்தகங்களைப் படித்து.
*****
மகிழ்வோம்...
இனிப்புகள் வழங்கி.
மலர்வோம்...
இன்சொல் சொல்லி....
*****
பழகுவோம்
மதுவில்லாப் பண்டிகை
உதவுவோம்...
இல்லார்க்கு இயன்றதை.
*****
சுத்தம் காப்போம்...
வெடிகளைத் தவிர்த்து.
சொர்க்கம் காண்போம்...
மரங்களை வளர்த்து.
*****
கொண்டாடுவோம்
தீபவொளியுடன் தீபாவளி
அறிவொளியும் ஏற்றி.
- ம. கவிக்கருப்பையா, பூதிப்புரம், தேனி மாவட்டம்.
பட்டங்கள்
மேற்காணும் கவிதையில் காணும் எம்.ஜி.ஆருக்கான பட்டங்களும் அதை வழங்கியவர்களும்:
* புரட்சித் தலைவர் - கழகத் தோழர்கள் கொடுத்த பட்டம்
* மக்கள் திலகம் - கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் கொடுத்த பட்டம்
* வாத்தியார் - நெல்லை ரசிகர்கள் கொடுத்த பட்டம்
* பொன்மனச்செம்மல் - கிருபானந்த வாரியார் கொடுத்த பட்டம்
* இதய தெய்வம் - பொதுமக்கள் கொடுத்த பட்டம்
* கொடுத்துச் சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள் கொடுத்த பட்டம்
* கலியுகக் கடவுள் - பெங்களூர் தலைமை நகர விழாவில் கொடுக்கப்பட்ட பட்டம்
(நன்றி: டாக்டர் எம்.ஜி.ஆர் ஆய்வடங்கல் - மல்லிகா பிரபாகரன்)

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.