இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Verse
கவிதை

சோக்கிரட்டிஸின் இறுதிப் பயணம்.


உங்கள் மனதில் பதிந்துள்ளதா?
சோக்கிரடிஸின் இறுதிப் பயணம்.
என் அறிவுக்கு எட்டியவரை
ஆராயந்தெடுத்த சொற்கள் கொண்டு
இயற்றுகிறேன் ஓர் கவிதை
சொப்ரோனிக்கஸ் மகனுக்காய்.

சிற்பியின் மகனாய்,
மெய்யியலின் செல்வமாய்
கிரேக்ககாலமதில் உதித்தார்
சோக்கிரட்டிஸ்.
செயல்களில் துணிவும்,
குணத்திலே நேர்மையும் கொண்ட
ஒரு மாமனிதர்.

உருவத் தோற்றம்
குள்ளமாய் பருத்தசரீரம்
விநோதமாய் இருந்ததுவோ?
எள்ளி நகையாடினர்
எத்தனையோ பலர்.

இருபது வயதினில்
சிந்தனைப் பணியை
எதேன்ஸில் தொடங்கினார்.
சிந்தனையின் வாகனமாய்
கல்வியூட்டும் அணுகுமுறையாய்
அவர் கையாண்டது
உரையாடல் முறைதனை.
கடவுள் கொள்கை
புதிதாய் அமைத்தார் என்றும்,
இளைஞர் மனதைக்
கெடுத்தார் என்றும்
குற்றம் பலதொடுத்தார்.
அரசமுறைப்பாட்டாளர் மிலட்டஸ் அவர்களும்.

இருண்டகற்களாய்
சூரியனும் சந்திரனும்
இது சோக்கிரட்டிஸின் வாதம் என
குறையும் கூறினார்.
நாஸ்திகன் எனவும்
பொய்ப்பட்டம் வழங்கினார்.

அரசியல் சதிகளினால்
அரங்கேறிய நீதிமன்றம்
செவி சாய்க்கவில்லை
உண்மையின் பக்கம்.
பொய் குற்றங்கள் தனைஏற்றுவிட
சோக்கிரட்டிஸ் என்ன
குற்றவாளியா?
தன் சார்ந்த உண்மைகளை
தலைக்கணம் பிடித்தவர்க்காய்
எடுத்துரைத்தார் அவைதனில்.

இருப்புடையஒரு பொருளை
இல்லையென்று கூறிவிட
இவ் உலகினில் யாருமுண்டா?
வினாவுகிறார் சோக்கிரட்டிஸ்
நீதிமன்றம் முன்னிலையில்.

தெளிவாக ஓர் பதில்
“இல்லை”என்று
மிலட்டசும் கூறுகிறார்.
ஆதாரம் இதுவல்லவோ
நான் நாஸ்திகன் அல்ல என்பதற்கே
உறுதியாய் கூறுகிறார்
சோக்கிரட்டிஸ் அவர்களுமே
உண்மைகள் புதைக்கப்படுகிறது.
பொய்யுரைகள் ஏற்கப்படுகிறது.
ஜீரி சபை வாக்குகளில் அதிகம்
சோக்கிரட்டிஸிக்கு எதிராய்
வீசப்படுகிறது.

குறைந்தபட்ச தண்டனை
பெற்றுவிட வாய்ப்பிருந்தும்
விரும்பவில்லைஅவரும்
அந்நிலைப்பாடுதனையும்.

நான் குற்றவாளி இல்லையே
நான் சுற்றவாளிதான்.
உறுதியாய் உண்மை உரைத்த
அக்குரல்
ஒடுக்கப்பட்டது.
அரசியல் சூழ்ச்சியினால்.

மிலட்டஸின் குற்றச்சாட்டு
முறையாக இல்லையெனினும்
சூழ்ச்சிகள் பலவும்
சோக்கிரட்டிஸை
குற்றவாளியாய் ஆக்கியது.
ஆதி கிரேக்க காலம் முதல்
கருத்து பல மொழியப்பட்டது
கடவுள் கொள்கைக்காய்.

தண்டனை வழங்குவதெனில்
அன்று அங்கேயே
வழங்கப்பட்டிருக்கலாமே.
ஏன்? இன்று மட்டும்
கிரேக்கக் காலமதில்
சோக்கிரட்டிஸிக்காய்
இந்த நிலைமை.

முப்பது நாட்களில்
மரண தண்டனையை
உத்தரவிடுகிறது ஜீரி சபை.
சோக்கிரட்டிசம்
மரணம் சார் போதனையை
அழகாய்க் கூறிவிட்டு
ஏற்கிறார் மரணத்தை
பயமேதுமின்றி.

குடியாட்சிக்குத் தலை சாய்க்காமல்
குற்றங்களைச் சுட்டிக் காட்டியவர்.
விமர்சனம் பல தொடுத்தார்
அக்கால அரசியல் தலைவர்களுக்காய்.
இறுதிப்பயணம் வேகமாய்ச் சென்றது
சோக்கிரட்டிசின்
மரணப் பாதைவழியே.

சிறையில் அடைபட்டார்.
சிந்தனையாளர் சோக்கிரட்டிஸ்.
தப்பிக்க வழியிருந்தும்
அவர் தவறிழைக்கவில்லை.
நாட்டின் பற்றை
நிலைநாட்டவே
மரணத்தையும்
தழுவிடத் துணிந்தார்.

முப்பது நாட்கள்
உறவகளைப் பிரிந்து
கூண்டுக்கிளி போல்
சிறை வசித்தார்.
கடவுள் அப்பலோவின் திருவிழா
அவருக்கான மரணத்ததை
நீடித்தது.

அன்று பயணத்தின் இறுதிநாள்.
சிறைவாசல் சோகமாய்
சொல்லொண்ணாத் துயரத்துடன்.
மனைவி, மக்கள், நண்பர்கள்
கண்ணீர் மல்கக்
கதறுகின்றனர்.

சோக்கிரட்டிஸ்
இறுதி நாளில்
ஸ்நானம் செய்து வந்தார்
விஷப் பானம்
அருந்துவதற்காய்.

நெஞ்சில் உருக்கத்துடன்
மனைவி, மக்கள்
சோக்கிரட்டிசின் முன்
வரவழைக்கப்பட்டனர்.

பார்வையில் ஓர் பரிதாபம்.
சிந்தனையாளன் எதுவுமே
பேசவில்லை.
திருப்பி அனுப்பி விட்டார்
மனைவி, மக்களை.
அது இறுதி நேரம்
தயாரானது விஷப் பானம்.
இரவாகவில்லையே
பானம் அருந்த
சற்று பொறுக்கலாமே என்றார்
சீடன் கிரிட்டோ.

அருந்துவது விஷப் பானம்.
எப்போதுஅருந்தினால் என்ன?
எடுத்து வாருங்கள் அதனை
நான் விடைபெற்றுச் செல்லவென்றார்.
பானமும் வந்தது.
புன் புறுவல் பூத்து
விருப்புடன் அதை வாங்கி
பருகினார் லாவகமாய்.
கிரிட்டோ கதறுகிறார்
சிந்தனையாளன்
பிரியும் நேரமதில்.
அழுகின்ற ஓலம்
அமைதியான மரணத்தை
அழிக்காது என்றல்லவா
அனுப்பி விட்டார்
அவர் மனைவி, மக்களை.
உடல் பூராய் விஷம்
ஏறிவிட்ட நிலைதனில்
அவர் பாதங்கள் இரண்டும்
நிலை தடுமாறின.
சோக்கிரட்டிஸ்
சாய்ந்து வீழ்கிறார்.
பூமித் தாயவள் மடி மீது.
நா தடுமாறியது.
வார்த்தைகள் ஏதோ
மெதுவாய் ஒலித்தன.
“கிரிட்டோ”-என்று
ஓர் ஒலி தலைசாய்த்தான் சீடனும்.

அண்டை வீட்டுக்காரனிடம்
கடனாய் பெற்றேன் ஓர் கோழி
அடைக்க முடியவில்லை
அக் கடனை.
நீயும் திருப்பிஅழிப்பாயோ?
இல்லை மறந்துபோவாயோ?
சீடன் வாயில் ஓர் வார்த்தை
உடனே அழிப்பேன்
அக்கடனை என்று.
இன்னும் ஏதுமுண்டா?
கிரிட்டோ வினவுகிறார்.

விடையளிக்கப் பதிலுண்டோ?
சோக்கிரட்டிசின் உள்ளமதில்.
இறுதி மூச்சில்
என்ன நினைத்தாரோ?
நா விடையளிக்க எழவில்லை.

உயிர் துறந்தது.
உடலினை விட்டு.
கிரிட்டோகண்களை மூடிவிடுகிறார்.
என்ன செய்வதென அறியாதவராய்.

மரண ஓலம்.
அன்று கிரேக்கம் முழுவதும்.
அழுதாலும் என்ன பயன்?
போன உயிர்
மீண்டு வருமோ?.

உயிர் பிரியும்
இறுதி நேரம்
ஒழுக்கவாதியாய்
உயிர் துறந்தார்.
அவரைப் போல் சிந்தனையாளன்
இன்னும் இப்புவி மீது
பிறக்கவில்லை.

வரலாற்றில் ஓர் சான்றாய்
அவர் இன்று வரை நிலைத்திருக்கிறார்.
புவி என்ற ஒன்று
புறம் நீங்கிப் போகும் வரை
வரலாற்றில் என்றும்
அழியாது
அவர் நாமம்.

- வினாயகமூர்த்தி வசந்தா, வந்தாறுமூலை, இலங்கை..




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/verse/p2438.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License