Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                                    இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...

Content
உள்ளடக்கம்


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Verse
கவிதை

இளவல் ஹரிஹரன் ’ஹைக்கூ’க்கள்


கடந்த கால பாடத்தை
நினைவுபடுத்துகிறது மீண்டும்
பெய்யும் கனமழை

*****

எவ்வளவு முயன்றும்
கற்க முடிவதில்லை
இயற்கை பாடம்

*****

பசித்த வயிற்றுடன்
ரசித்துப் பார்க்கிறான்
சிலந்திவலை

*****

மேய்ந்த பசு
அசைபோடுகிறது
கவர்ச்சிச் சுவரொட்டி

*****

அமர்ந்திருக்கும் புத்தனைவிட
அழகாய் இருக்கிறது
புத்தனின் நிழல்

*****

நகரும் ஒளியில்
மெள்ள நகர்கிறது
புத்தனின் உருவம்

*****

வெட்டப்படும் போதிமரம்
வீழ்கிறது போதித்தபடி
புத்த ஞானம்

*****

பறக்கும் பறவை
களைத்துப் போகிறது
நிழல் தேடி

*****

வெட்டப்பட்ட மரம்
தினமும் கதறுகிறது
கிரீச்சிடும் வீட்டுக்கதவுகள்

*****

வீடெங்கும் பரவிநிற்கும்
தாத்தாவின் வாசம்
சொல்லப்படாத கதைகள்

*****

இலவசம் பழகிய மக்கள்
இலவசமாய் அளிப்பதில்லை
வாக்குரிமைகள்

*****

முற்றுமாய் வளர்ந்து
நிற்கிறது வீட்டுமாடி
மாடிவீட்டுத் தோட்டம்

*****

கனவுகளுடன் செல்பவன்
கண்முழித்தபடி இருக்கிறான்
தூக்கம் வராமல்

*****

பாதைகளை அடைத்தவன்
பரிதவித்துப் போகிறான்
மழை வெள்ளம்

*****

வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்
ரசிக்க வைக்கிறது
புதிதாய்ப் பிறந்த ஹைக்கூ.

*****

அடிமாட்டு விலைக்கு வாங்கும்
பழைய புத்தக வியாபாரி
கொண்டாடும் உலக புத்தக தினம்.

*****

கட்டிமுடியும் வீடு
கலைந்து போகிறது
பங்காளிச் சண்டை.

*****

எரியும் தீபத்தின் அடியில்
எப்போதும் இருக்கிறது
சிறு இருள்

*****

ஒரே கடவுள்
மாறுபடும் தரிசனம்
வேறு வேறு கட்டணங்கள்

*****

இனிப்புப் பலகாரம்
இனிக்கவே இல்லை
விரல்களில் கந்தக வாசம்

*****

ஊர் கூடித்
தேர் இழுத்தும்
தொலைவில் சேரி

*****

தீபாவளி நாள்
நிம்மதியாய் உறங்கும்
சிவகாசிச் சிறுவன்

*****

பெற்றோர் நலம்
பேணுவதில் முன்னேற்றம்
பெருகும் முதியோர் இல்லங்கள்.

*****
விழுகின்ற விதை
ஆலமோ அரசோ
அறியாது காக்கை எச்சம்.

*****
எதிர்காலம் சொல்லும்
சீட்டுகளில் தெரிவதில்லை
கிளிசோதிடக்காரன் வறுமை

*****

குளம் நேற்று
குப்பைமேடு இன்று
அரசு அலுவலகம் நாளை

*****

ஒற்றை இலை நிழலில்
ஓய்வெடுக்கும் ஒதுங்கி
கறுப்பு எறும்புகள்

*****

ஆணியில் தொங்கும்
சந்தனமாலை
அறிவிக்கும் ஓய்வு

*****

தாழிக்கும் மணம்நுகர்ந்து
பசியாற்றிக் கொள்ளும்
அடுக்களையில் அம்மா

*****

பாரவண்டி இழுப்பவன்
பசியாறும் இடம்
தண்ணீர்ப் பந்தல்

*****

ஏழையின் கௌரவம்
எருக்கமலர் மாலை
சூடிக்கொள்ளும் பிள்ளையார்

*****
உதிரும் இலையோடு
உதிர்ந்து விழுந்தது
உயிரற்ற பட்டாம்பூச்சி

*****

எச்சமிட்டபடி பறவைகள்
பறந்து செல்லும்
வருந்தலைமுறைக்காக

*****

பாத்திரம் நிறைய
பால் கறக்கிறது
கன்றின் நினைவுகள்

*****
வேட்டையாடும் விழிகள்
விலகிநிற்கும் புத்தன்
வெட்டப்படும் போதிமரம்

*****

பெட்டியில் நிறைந்திருக்கும்
அவள் நினைவுகள்
காதல் கடிதங்கள்

*****

நின்ற இடம் நிற்கிறது
பெயர்பதிந்த மரம்
கண்களில் ஈரம்

*****

நகர்த்திக்கொண்டே
செல்கிறது காலம்
துடிக்கும் கடிகாரம்

*****

நல்ல பொழுதுகள்
வீணாகி விடுகின்றன
முகநூல் பார்வைகள்

*****

கிளிஞ்சல் பொறுக்கியபடி
பாடம் கற்கிறான்
மணல்மேல் எழுத்துகள்

*****

சுகம் காண்கின்றன
காதலர் குடைகள்
சுட்டெரிக்கும் வெயில்

*****

சேர்ந்தே காய்கிறது
ஒட்டிய வயிறு ஒருபாடு பசி
வெயிலில் மீன்வலை

*****

கூவிக்கூவி விற்கிறாள்
மீன் அங்காடியில்
பூக்காரக்கிழவி

*****

கருங்கற் சுவற்றில்
வளர்ந்து கொண்டிருக்கும்
காக எச்ச அரசு

*****

சந்தனப் பொட்டிட்டுச்
சாமி கும்பிடுகிறான்
மீன் கடைக்காரன்

*****

மயானம் நோக்கி
மறைவாய் இருக்கிறது
மதுக்கடை ஒன்று

*****

அசை போடுகிறது
முதுமைக் காலம்
முதல் முத்தம்

*****

மகளிடமிருந்து தாவும்
தந்தையிடம்
பறக்கும் முத்தம்

*****

பறக்கும் முத்தத்தில்
கரைந்து விடுகின்றன
தந்தையின் கவலைகள்

*****

அலைந்துகொண்டே இருக்கும்
கூடுகட்ட மரமின்றி
தூக்கணாங்குருவி

*****

இழுத்து இழுத்து
போர்த்திக்கொள்ள
துளைக்கும் மேஸ்திரி கண்கள்

*****

வறண்டுகிடக்கும் ஆறு
வாய்க்கால்வழிப் பாயும்
அணிற்பிள்ளை

*****
கடந்து போகும்
மாட்டுப்பொங்கல்
அடிமாடுகளுடன் லாரி

*****

பொங்குகின்றன
வெறும் பானைகள்
விவசாயிகள் கண்ணீர்

*****
உழுதவன் கணக்கு
உடனே தெரிகிறது
விவசாயி தற்கொலை

*****

கருவாட்டுக் கூடைக்காரி
மணக்க மணக்கச் செல்கிறாள்
தலைநிறை மல்லிகைப்பூ

*****

அரைபட்டுக் கொண்டிருக்கும்
கிழவியின் வெற்றிலை உரல்
ஊர்வம்புக் கதைகள்

*****

வெயிலில் காய்கிறது
வினைதீர்க்கும் பிள்ளையார்
வெட்டப்பட்ட அரசு

*****

மரத்தை வெட்டிவிட்டுப்
பெயர்மாற்றும் பக்தர்
வெயிலுகந்த பிள்ளையார்

- "இளவல்" ஹரிஹரன், மதுரை.




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/verse/p2475.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License