மழை
பொறுமையுள்ள பெண்ணின்
கோபம்
திடீர் மழை!
செல்லக் குழந்தையின்
சிங்காரச் சிணுங்கல்
சாரல் மழை!
அடாது
அடம் பிடிக்கும்
குழந்தையின் அழுகை
அடைமழை!
உற்றவன் பிரிந்ததன்
ஒப்பாரி
கன மழை!
தமையனை எதிர்பார்த்து
வாசலுக்கும் தெருவுக்குமான
பெற்றவளின் பரிதவிப்பு
தொடர் மழை!
ஆசையாய்க் கைபிடித்த
அழகு மனைவியின்
சில்மிஷம் தானோ
பகல் மழை!
ஆணும் பெண்ணுமான
பிறப்பு
வெயிலும் மழையும்
சேர்ந்த மழை!
யார் சொல்லியும்
அடங்க மறுத்த
என் மனம்
அடாத அடைமழைக்கு
அடங்கிப் போனதே!
புயல் மழை!
பேய் மழை!
இது அத்தனைக்கும் மேல்
என் இதயத்தில் பெய்யும்
வான் மழை நீ தானோ!
- முனைவர் நா. சுலோசனா, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.