குழந்தைப்பேறு
சொத்துத் தகராறு
வருமெனக் கருதி
பெற்றுக் கொள்ளவில்லை
இரண்டாவது குழந்தை
நாற்பதைக் கடந்ததால்
வேண்டாம் என்றனர்
இரண்டாவது குழந்தை
முதல் குழந்தைக்கு
சிசேரியன் என்பதால்
இரண்டாவது
பெற விரும்பவில்லை
குழந்தையைக் கவனிக்க
ஆள் இல்லை என்று
பெற்றுக் கொள்ள மறுத்தனர்
அடுத்த குழந்தை
நாற்பத்தைந்துக்கு அதிகம் என்பதாலும்
குழந்தையின் எதிர்காலத்தை
எண்ணி அஞ்சியும்
இரண்டாவதுவேண்டாமாம்
அன்பைப்
பகிர்ந்தளிக்க மனமின்றி
வேண்டாம் என்று
பணியிடம்
பணிப்பளு காரணமாக
வேண்டாம் என்று.
பெண் குழந்தை என்பதால்
வரதட்சிணையை எண்ணி
தம் வருமானம் கருதி
தவிர்க்கப்பட்டது
இரண்டாவது
இப்படி இப்படிப்
இன்னும் பல
காரணங்கள்
மறுபுறம்...
ஐம்பதைத் தாண்டியும்
ஒரு குழந்தை பெற
இயலாமல் தவிக்கும்
தம்பதிகள்
வாடகைத்தாய்
வகையறாக்கள்
கரு
உருவாகியப் பின்
அதைக் கலைக்கும் அன்னைகள்
கருக்கலைப்பை
வாடிக்கையாகக் கொள்ளும்
சில
மணமாகா மங்கைகள்
குழந்தைப்பேறில்
வாணிகம் செய்யும்
மருத்துவமனைகள்
வேடிக்கையாகி விடுகிறது
அவ்வப்போது
வாழ்க்கை...!
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.