ஒரு பிரளயத்தின் கனவு
(கன்னடத்தில்:கவிஞர் மூட்னாகூடு சின்னசாமி)
ஏன்
இந்தச் சக்கரம்
நிற்பதில்லை
அல்லது
விபத்துக்கும் உள்ளாவதில்லை
சரக்குந்தும் பேருந்தும்
ஒன்றையொன்று இடிப்பது போல்
சூரியனும் சந்திரனும் மோதினால்
பளீரென்று விழுகின்ற
விண்மீன் துண்டுகளை
நான் கண்டு ஆட வேண்டும்.
கிரகங்கள் தடம் புரண்டால்
ஆகாயத்தை நிரப்பும்
புகையில்
படைப்பை
நான் தேட வேண்டும்.
என்ன ஒரு வியப்பு – எள்ளல்!
படைத்தலை அழித்தால்
உருவமெல்லாம் அழிந்து
அருவம்.
மீதமிருக்கும் என்பதே
என்னுடைய
இந்தக் கனவாக இருக்கும்.
- முனைவர் கே. மலர்விழி, பெங்களூர் & கவிஞர் பா. தென்றல், காரைக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.