Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Verse
கவிதை

பிறிதொரு நாளில் பார்ப்போமெனில்!


காதல் வற்றிப்போன மனசு
காமம் ஆங்காங்கே –
முளைவிட முளைவிட தலைகொத்தித் தின்ற
பறவையின் மனோபாவத்திற்கிடையே தெரியும் முகங்களை
பெயர் சூட்டிடாததொருக் கவிதையின் வரிகள்
படித்துக் கொண்டிருக்க...

உயிர்வரை சுரக்குமந்த உணர்வில்
தன் புத்தகத்தில் எழுதிய பெயரிலிருந்து
டையிரியில் குறித்ததை தொடர்ந்து
நெஞ்சு கிழித்தெழுதிய உன் பெயரின்
நினைவாழம் வரை -

காதலின் வலி உன்னடையாளமாகவே பதிந்திருக்க
தலையில் கைவைத்துக் கொண்டு அமர்கையில்
திறக்கிறது அந்த பள்ளிக்கூடத்து வாசல் கதவும்
நீ நடந்துவந்த முதல் காட்சியும்...

இன்னும் சற்று நேரம் தலைநிமிராமல்
உள்ளே பார்க்கிறேன் –

நீ சிரிக்கிறாய்
பேசுகிறாய்
கண்சிமிட்டுகிறாய்...

அந்த நாட்கள் பசபசவென இதையத்திற்குள்
பசுமை பூக்கிறது...

திறக்காத உன்வீட்டு ஜன்னலின் ஓரம்
நான் நின்றிருந்த கால்வலி – உள்ளே இன்று
நெஞ்சுக்குள் வலிக்கிறது...

நீ பேசியதெல்லாம் உனக்கு
நினைவிலுண்டா..?

என்ன சொன்னாய் அன்று (?)
வானமும் பூமியும் பிரியும்
காற்றும் மழையும் பிரியும்
கடலும் அலையும் பிரியும் நாம் பிரியமாட்டோம் என்றாயே...?

எங்கே அந்த வார்த்தைகள்..?

யாருக்கேனும் காதல் வந்தால்
சிரிப்பார்கள்,
காதல் தோற்றுப் போனால்
அழுவார்கள் –
நாம் இறந்துவிடலாம் என்றாயே...?

எங்கிருக்கிறாய் இப்போது ?

காற்றுக்கும் கால் முளைக்கும்
ஒடித்துவிடுவார்கள்,
காதலுக்கும் கால்முளைக்கும்
ஒடிக்கப் பார்ப்பார்கள்,
நாம் அவர்களுக்குமுன் நமக்கான ஒரு தனியுலகில்
நம்மை துரத்திக் கொண்டே போவோம்
நிற்குமொரு புள்ளியில் நாம் பறப்பதற்கான சிறகுகள்
நிஜ காதலால் பூக்கும் கலங்காதே என்றாயே...?

கண்கள் ரத்தத்தில் கலங்குகிறது இப்போது
வருடங்கள் கடந்தும் வலிப்பதை
எப்படி உணராமல் போனாய் நீ ?

புத்தகத்திற்குள் மயிலிறகு வைத்து
எடுத்துப் பார்க்கையில் அதற்கடியில்
என்னைப் பிடிக்கும்
என்னைமட்டும் பிடிக்கும்
நிறைய பிடிக்குமென்று எழுதியிருந்த
அந்த ஒருசில வரிகளுக்குள்தானே
உயிர்சிக்கிக் கிடந்தேன் நான்...?

மதம் வேறு என்றாய்
கடவுளை வெறுத்தேன்,
ஜாதி வேறு என்றாய்
உறவுகளை விட்டுவந்தேன்,
உலகம் நம் காதலை ஏற்குமா என்றாய்
உலகத்தையே மறந்தும் கிடந்தேனே;
எனையெப்படி மறக்கத் துணிந்தாய் ?

அம்மா பார்த்துவிட்டு அழுத பின்னும்
உன்னை விட்டுபிரிய முடியாதெனச் சொல்லி
அம்மாவின் அழையை கூட
உனக்காக சகித்துக் கொண்டதை
நீ அறியாமலே நான் தாங்கிக் கொண்டேன் எத்தனையோ நாட்கள்..

அதற்குப் பிறகும் -
பச்சைகுத்தி
உன் பெயரெழுதி
வாழ்க்கையயை உனக்குள்
முடிந்துவைத்திருந்ததையெல்லாம்
பேசக் கூட உன்னிடம் அவகாசமில்லாத
அந்த நாட்களில் எத்தனை முறை நான்
இறந்திருப்பேன் தெரியுமா... ?

கடைசியாய்
கிழித்துப் போட்டுவிட்ட என் கடிதங்களோடும்
மனதோடும் நான் வெறுமனே
தனிமையில் புதைந்துப் போக –
எதற்கோ என்னைப் பார்த்த அந்த கடைசி நாளில்
‘பிறிதொரு நாளில் கண்டால் அன்று பேசு’ என்று சொல்லிவிட்டு
தலைகுனிந்துக் கொண்டே
விசும்பி விசும்பி ஓடினாய் -

அங்கிருந்து
சேகரித்து வைத்திருந்தால்
நானழுத அழையில்
எத்தனை பூமிப்பந்து நனைந்து சொட்டியிருக்கும் தெரியுமா?

அவள் பதில் சொல்ல இயலா
என் தனிமையின் கேள்வியை உடைக்குமொரு
ஈரத்தில் நனைந்து எழுகிறது ஒரு
பெருமூச்சு –

அதை நனைக்கும் கண்ணீரில்
பிரதிபலிக்கும் குரலாய் கேட்கிறது
‘அப்பா எனுமந்த சப்தம்’
நிமிர்ந்துப் பார்க்கிறேன் –

“ஏம்பா..” என்று கேட்டுக் கண்டே வந்து
கண்ணீர் துடைக்கிறாள் என் மகள்

நீ அந்த கண்ணீருக்குள் கரைந்த கதை
அவள் கைகளில் ஒட்டிக் கொண்டிருந்தது

ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு
அவளோடு எழுந்து நடக்கிறேன்..

நாம் கண்டுபிடித்துவிடுவோம்
கவலைபடாதீங்கப்பா என்று சொல்லிக் கொண்டே
தும்பிகளின் வால் பிடித்துக் கொண்டு அவள் ஓடுகிறாள்...

ஏதேதோ உன்னைப்பற்றி பேசிக் கொண்டே
போகிறாள் அவள்;

என்னால் உள்ளே அழ மட்டுமே முடிந்தது...!

- வித்யாசாகர்.




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/verse/p832.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                               


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License