காலம் ஒரு கணந்தான்…!
மெழுகுவர்த்தியாய்
உருகி
வெளிச்சங்கொடு…
“சோனாமாரி”யிலும்
அணையாது!
மேக கணங்களாய்
உழை…
மழைத்துளிகளாக
சேவை செய்…
பூமியைப்போல
பொறுத்திடு…
அகழ்வாரை
அன்போடு நோக்கு…
மின்னலிடம்
வெளிச்சங் கேள்…
இடியைத் தாங்கும்
இதயம் பெறு…
காற்றிலே
கீதம் அமை…
கைப்பிடிக்குள்
உலகம் எடு…
கால வெள்ளத்தோடு
கல்லாக உருளாதே,
பாறையாய் நில்லு.,
சந்தோஷச் சிறகில்
பறவையாய்ப் பற…
பனித்துளியாய் வாழ
இலையிடம்
இடங்கேள்…
சூரியன் சுட்டாலும்
அழியாமல் வாழ்…
தேனீயாய் சுற்று…
எறும்பாய் உழை…
தென்றலாய் வீசு…
மழையாய்ப் பொழி…!
- ஜுமானா ஜுனைட், இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.